Showing posts with label லக லக லக. Show all posts
Showing posts with label லக லக லக. Show all posts

Tuesday, 1 July 2008

"அஜக்-பஜக்" கதை

ஆஹா... என்ன செய்யிறது....

இவ்ளோ நாளும் தசாவதாரம், தசாவதாரம் என்று பல பதிவர்கள் பல அவதாரம் எடுத்து எழுதினார்கள். தசாவதாரம் படத்தில் தான் சுனாமி வந்து எல்லோரையும் காப்பாற்றியது, சிலரை கொன்று..... ஆனால் வலை உலகில் வந்த தசாவதார சுனாமியோ பலரை கொன்று சிலரை காப்பாற்றி உள்ளது. சரி நம்ம பங்குக்கு ஏதாவது எழுதி போடலாம்னு பார்த்தா, இந்த பாழா போன "கொயாசு" விதியினால் நம்ம விதி "கொயாசு" ஆகி விட கூடாதுன்குற பயந்தான், எழுதாமே விட்டேன்.

சரி திரும்ப வந்து பார்த்தா. அ. ஆ ( நன்றி: எஸ்.ஜே. சூர்யா) கதைகளா வருது. நாமளும் யாரும் பார்க்காமே கதைய படிச்சிட்டு போலாம்னு பார்த்தா, இங்கு எல்லாருமே பெரிய எஸ்.ஜே. சூர்யா-வா இருக்காங்க.... ஆமாங்க.....இருக்கு, ஆனா இல்ல.... இருக்கு, ஆனா இல்லை என்று சொல்லி..... திருப்பு முனை, பருப்பு முனை-ன்னு சொல்லி நம்மை கடுப்பின் முனைக்கே கொண்டு செல்கிறார்கள். அதனாலே நாமும் ஒரு "அஜக்-பஜக்" கதை எழுதி சங்கத்தில் சேர்ந்துவிடுவோம்னு சொல்லி எழுதலாம்னு நெனச்சு தயாராகி, சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று திரும்பி பார்க்கும் போது... என் அருகே என் குழுவை சேர்ந்த பரிசோதகர், "சோதனை செல்வி" நின்று, இந்த பதிவு எல்லாத்தையும் படித்துவிட்டு குறும்பாய் ஒரு பார்வை பார்த்து " அஜக்" என்று ஒரு அடி விட்டார், நானும் "பஜக்" என்று கையை பிடித்து, தப்பினேன், அடியிலிருந்து......

அப்பாடா... நாமும் ஒரு கதை எழுதியாச்சு...

Friday, 25 April 2008

புத்திசாலி புருஷன்

A wife mentioned to her husband that for her birthday, she would like something that accelerates from 0 to 100 in four seconds.
She was expecting something like this............

*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*

But her husband presented her with something very different...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

Thursday, 20 March 2008

உன் பிரச்சினை என்ன?

மச்சி,

உன் பிரச்சினை உனக்கு, என் பிரச்சினை எனக்கு, அவன் பிரச்சினை அவனுக்கு,ஆனா உனக்கு ஒரு பிரச்சினைனா அது எனக்கும் பிரச்சினைதான், எனக்கு ஒரு பிரச்சினைனா அது உனக்கும் பிரச்சினைதான். அவனுக்கு ஒரு பிரச்சினைனா அது நமக்கும் பிரச்சினைதான். அவனுக்கு வந்த பிரச்சினை நமக்கும்தான் என்று இருந்தா பிரச்சினை, பிரச்சினை என்று பெரிய பிரச்சினையாஹவே இருக்கும். அவனுக்கு வந்த பிரச்சினைய நம்ம பிரச்சினையா நினைக்கவில்லை என்றால் அது பிரச்சினை இல்லை ஆனா நமக்கு வந்த பிரச்சினையை அவன் பிரச்சினையா நினைக்கவில்லை என்று பிரச்சினை பண்ணுனா தான் பிரச்சிணையே.அடுத்தவங்களுக்கு பிரச்சினை உண்டு பண்ணுகிற பிரச்சினைகளை வைத்து போது இடத்தில் பிரச்சினை பண்ணினால் அது பிரச்சினைத்தான். அதுக்காக நாமளும் எல்லாத்தையும் பிரச்சினையா நினைக்க கூடாது. இப்ப என்ன பிரச்சினைனா, நம்ம கிட்டே பிரச்சிணையே இல்லாத ஆளு யாரு? சொல்லு பார்ப்போம். இதுக்கு நீ பதில் சொன்னேனு வைச்சுக்கோயேன். இந்த லோகத்தில் பிரச்சிணையே இல்லாத ஒரு ஆளு நீதான்.பிரச்சினை இல்லாததை நெனச்சு பிரச்சினை பண்ணாதே.சரி பிரச்சினை பண்ணாம விஷயத்துக்கு வா. உன் பிரச்சினை என்ன?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது