Showing posts with label கும்பர். Show all posts
Showing posts with label கும்பர். Show all posts

Tuesday, 21 July 2009

கும்பர்... சினிமாப்பாடல்கள்... பேதையழகு... சந்தம்...



டி.ராஜேந்தர் என்ற பெயரை கேட்டதும் நமது குழந்தைகளின் முகமோரம் ஒரு திகிலும்... அவரின் தாடியும் அதை கோதிவிட்டுக்கொண்டே வேலை மெனக்கட்டுன்னு அவர் "தட்டி பார்த்த கொட்டாங் கச்சி..." என்று அவர் சிலுப்பும் வார்த்தையும் நமது நினைவில் அரை நொடி "டெர்ரராக" வந்து போய்விடுகிறது. என்றாலும் அவரின் கற்பனை வளம் (தமிழ் எம்.ஏ)மிகவும் ஆழமானது.

வாடா என் மச்சி..
வாழைக்காய் பச்சி...


என்று ரயில் பயணங்களில் அவரின் விருந்தோம்பல் பண்பு புருவமுயர்த்த வைத்தது அனைவரையும்..

ஹே டண்டனக்க டனக்கு னக்க
ஹே டண்டனக்க டனக்கு னக்க


என்று அடுத்தடுத்த வரிகளில் ரைமிங்கோடான சந்தங்கள் மிக மிக அற்புதமாய் இருக்கும்.அதுவும் இன்றைய நாக்க முக்க பாடலுக்கான அட்சாரம் அவர் அன்றே போட்டது, பாடியது, ரசிக்கப்பட்டது.

“அன்ன பூர்ணாவா.... ஆர்ய பவனா....’ என அவ்வப்பொழுது பிற ஹோட்டல்களை ஒப்பிட்டு ஒப்பிட்டு,ஒரு கணவனின் பார்வையில், தானே கஷ்டப்பட்டு உண்டாலும் மனைவியின் சமையலை வர்ணிப்பது. இது ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, ஒவ்வொரு இல்லங்களிலும்.

"மில்லி லிட்டருக்கு கொண்டாட்டம் என்னைப் பார்க்கையிலே..."என குடிகாரர்கள் கொளரி, நாக்கை, உதட்டை கடித்து பாடும் பொழுது மனைவியர் வெட்கப்பட்டதை விட "மில்லி லிட்டர்" வெட்கப்படுவது போல தோற்றத்தை ஏற்படுத்திய வரிகள்..

"பாளையங்கோட்டை களிதானோ, கூழ் தானோ, புழல் ஜெயில் வார்டனும் நீதானோ.. என ஒரு பாதிக்கப்பட்ட பாடலாசிரியரின் சாரி.. சாரி.. மன்னிக்க, கணவனின் கற்பனையில் அனைத்து ஜெயிலையும் மனைவியுடன் ஒப்பிடப்பட்ட பாடலும் அந்த வகையே.

நவீன வாழ்க்கைக்கு ஏற்ப.. இந்த ஒப்பிடல் மாறிக்கொண்டே வந்து..

ஓல்ட்மாங் சுவை போல் புளிப்பவள் இவளா
ஓல்ட்காஸ்க் கலரில் முத்துன மகளா


என ஒப்பீடுகள் காலத்தோடு ஒத்து பயணித்துக்கொண்டே இருக்கிறது.

இது இன்று நேற்றல்ல..சங்க காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்ட பழக்கமாகவே படுகிறது.

இதோ ஒரு பேதையின் "அழகை" கும்பரின் வரிகள் சொல்லும் இந்தப் பாடல் அதற்கு ஒரு சான்று.

விளக்கம்.

பெருத்த இடையைக் கண்ட வஞ்சி நாட்டுக் கொடியானது நாம் அவள் இடை பற்றும் அளவிற்கு கூட இல்லையே என வெட்கப்பட்டு ஒதுங்கிக்கொள்ள, அட... இதை கூட விட்டு தள்ளுங்க அவள் நடை கண்டு களிறு என்று கூறப்படும் யானையும் மிரள, அவள் அடிக்கு, துறவிலே துவைக்கும் போது விழும் அடியே மென்மையானது, மேன்மையானது என எண்ணி இடுப்பு கச்சையும் நீரிலே மறைய, உழைத்து களைத்து வரும் நம்ம பயலுக்கு கஞ்சுடன் சில சொல்லடியையும் கொடுக்கும் பெண் நீராடினாள்.

பாடலின் சிறப்பு

பெண் நீராடும் அழகை வர்ணிக்கும் பாடல் என்ற போதிலும், தண்ணீரில் அரசியலை கலந்து நமக்கு தண்ணீர் தராது வஞ்சிக்கும் பக்கத்துக்கு நாட்டு கொடி நம் பெண்களின் இடையை விட சிறிதானது என்றும் எள்ளி நகையாடுவது, களிரையும் விரட்டும் தளிர் எங்கள் பெண்கள் என்பது, கச்சையே மிரளும் அடி கொடுத்தாலும், தான் கொண்ட கணவனுக்கு கஞ்சி பரிமாறும் வேளையில் மட்டுமே சொல்லடி மட்டுமே கொடுப்பாள் என்று முடித்திருப்பது. கும்பரின் கற்பனையாக மட்டும் இருக்க முடியாது என்ற கேள்வியை நமக்கு விட்டு செல்கிறது...

பாடல்.


வஞ்சி மிரள இடைக்கு, அடநடைக்கு
அஞ்சி களிரொதுங்க, அடியன்னக்
கச்சம் நீரில் ஒளிப்பப் பயலுகப்
பச்சம் சொல்லடிப் பாவையும் ஆடினாள்

எப்பா...என்னா அடி....!!!.


.
அண்ணன் நர்சிம் அவர்களுக்கு நன்றி.

Thursday, 12 February 2009

இடைத் தேர்தல்... கடைக்கண் பார்வை..அழகியல்! கும்பர்...

"அவள பார்த்தியா,என்னா திமிர் இருந்தா அப்பிடி ஒரு கேள்வி குதர்க்கமா கேட்பா?"

"யாரு கமலா? என்ன கேட்டா?"

"அந்த ராஜிதான்...என்ன இப்ப செளக்கியமானு கேட்குறா?"

"அதுல என்ன தப்பு..சாதாரணமா கேட்குறதுதானே?"

"ம்ஹூம்..அதுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கு..எனக்கா தெரியாது? என் அப்பா இந்த தொகுதி M.L.A. அவரை போட்டு தள்ளி இந்த தொகுதிலே இடை தேர்தல் வர வச்சதே அவங்க ஆளுங்க தான்.. எங்க வீட்லே வேற ஆண் வாரிசு இல்லை அப்படிங்குறத தைரியத்துலே கேட்குறா?"

"நீயா வேற அர்த்தம் எடுத்துக்கிட்டா யாரு என்ன பண்ணமுடியும்?? அட்லீஸ்ட் நல்ல சுவாரயஸ்யமான மேட்டர்லயாவது இந்த மாதிரி கற்பனையா நிறைய அர்த்தம் எடுத்தாலும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.. இப்பிடி ஒன்னுமே இல்லாத மேட்டருக்கு இந்த ரியாக்ஷன் தேவையா?"

"என்னோட இந்த ரியாக்ஷன விடு.. வர்ற இடை தேர்தல்லே நானே நின்னு எங்கப்பா இடத்தை பிடிக்கலே என் பேரு கமலா இல்லை"

* * * * *
அவளோட காதலன் அழகன் கிட்டே கமலா " தேர்தல எப்படி கையாளனுமோ, கையாண்டுக்கோ ஆனா நான் ஜெயிக்கணும்".என்று சொல்லி ஜெயித்து விட்டாள். நடந்த காட்சிகளை கும்பன் விவரிக்கிறான்...

அழகன், எலேச்சன் டையதிலே ஊத்து, கூத்துன்னு பல கைங்கர்யங்கள் செய்து, பூத்து கைப்பற்றுதல், பணத்தை வாரி இறைத்தல், மிரட்ட வேண்டிய ஆளுங்களை மிரட்டி உரைத்தும் ஒரு வழியா ஜெயிக்க லைன் கிளியர் பண்ணி, இப்போ பதவி ஏற்பு விழாவும் ஏற்பாடாயிருச்சு. அழகான அழகன் இன்னும் அழகா வந்தாச்சு..இப்போ கமலா, அழகன், அழக பார்க்கணும்.. என்ன? தான் இந்த காலத்து பொண்ணா இருந்தாலும், அரசியல்வாதி பொண்ண இருந்தாலும், காதலனை பல பேரு முன்னே பார்க்க கூச்சமாய் தான் இருக்கிறது அவளுக்கு.

ஆனாலும் அவங்க கண்ல மண்ண தூவிட்டு அழகன் அழக பார்த்தே ஆகணும், அதனால சிம்பிளா தன்னோட கையாலே, நெற்றி, சிகை மற்றும் அந்த சிறிய அளவிலான முக அலங்காரம் ஆகியவற்றை சரி செய்யும் சாக்கில் ஒரு பார்வ‌ பாக்குறா கமலா..

அப்போது அவளுக்கு அவனை பற்றி பல எண்ணங்கள்? எப்போதும் சரி, பார்க்க சாதுவா இருக்கும் இவனா நமக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்தவன். இவன் உண்மையிலேயே சாதுவா இல்லை நம் மேல் பயித்தியமாய் இருக்கும் சேதுவா என்று எண்ணி, சந்தேகம் கொண்டு பார்க்கிறாள்.

* * * * *

"இது எல்லோரும் பண்றது தானே.."

"எது?"

"காதலனை காதலி பார்ப்பது, மற்றும் இன்ன பிற... செயல்கள். "

" O.k.. தான் ஆனா இந்த பாட்டிலே... ஏன் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை சரி பண்றமாதிரின்னு கும்பர் எழுதியிருக்கணும்?"

"ஏன்?"

"எல்லா பெண்களும், தான் அழகோ இல்லையோ, அடுத்தவ அழகா? என்று காணுவதிலேயே பெரும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். அந்த சைக்காலஜியை பயன்படுத்தி, பிற பெண்களின் பார்வையை அவன் மேல் விழாதவாறு தன் பக்கம் திருப்பி, தன் காதலனை காணுகிறாள். இது ஒரு கோணமா?"

"பெண்களுக்கு, ஆபரணங்களை விட அவளை சுமங்கலியாய் அறிவிக்கும் நெற்றிக் குங்குமம், மற்றும் சூடும் பூ மேலேயே அலாதி பிரியம் இருக்கும். ஸோ..இவ நெற்றி, சிகை, சரிசெய்யுற மாதிரி, இன்று வெற்றி திலகம் தாங்கும் இந்த நெற்றி, நாளை உன்னுடைய மங்கள திலகத்தையும் தாங்கும் என்றும், இன்று வெற்றி மகுடம் சூட்டப்படும் இந்த சிரசு நாளை உன் கையால் பூ முடித்து தாங்கும் என்றும் உணர்த்துபவளாக அந்த செய்கையை செய்கிறாள் என்று கும்பர் நமக்கு உணர்த்து கிறார். "
"இது ஒரு கோணமா??

அதனால்தான் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை திருத்துபவளாக காட்டினான் கும்பன்.. ஓக்கேயா??"

அந்த பாடல்..
உடைய பூத் வளைத்ததும் இறைத்ததும் உரைத்தும்,
இடைய தேர்தல் இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
பையனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
சிகை தலை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்..

(எல்லோரும் இருக்கும் இடமாதலால், அன்று நமக்காக பூத்து கைப்பற்றுதல், பணத்தை வாரி இறைத்தல், மிரட்ட வேண்டிய ஆளுங்களை மிரட்டி உரைத்தல் போன்ற வேலைகளை செய்து இன்று சாதுவாய், பையன் போல, ஏதும் அறியா சிறுவன் போல நிற்கும் இவனா? அவன். என் அழகன். என்ற ஐயம் நீங்க, தன் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை திருத்துவது போல் என் நெற்றியில் எந்த திலகமும் உன்னால் தான், நான் சூடுவது கல்யாணமாலையாய் இருந்தாலும் உன்னால் தான் என்று குறிப்பாய் உணர்த்தி கடைக் கண்ணால் பார்த்தாள்)

எது எப்படியோ.. மிக தற்காலத்தில் தேர்தல் நடக்கும் அழகான காட்சியையும், கமலாவின் வெட்கம் கலந்த கடைக்கண் பார்வையும் கண்முன் நிறுத்தும் என்ன! ஒரு அழகான பாடல்...

கும்பர் வாழ்க‌.

Wednesday, 21 January 2009

டிஸ்கோ போகும் பெண்கள்...கும்பர் வாழ்க.

மும்பை, ஏழு நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி, வெள்ளி இரவு.. இளைஞர்களின் கொண்டாட்டம்.. குடும்பஸ்தர்களின் திண்டாட்டம்..(குடும்பத்தோடு போனால் உள்ளே விட மாட்டாங்க.) நிறைய காதலர்கள்.. அதைவிட நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் குரூப் என பட்டாம்பூச்சி(விட்டில்?)மயம்.. ஆட்டம், பாட்டம், பெல்லி ஆட்டம், பாட்டம் ஆட்டம்..... என அடுத்த கட்ட முயற்சி.. அங்கே தான் நம் கதை நாயகர்கள் நைனாவும் அவனோட மைனாவும் மது கோப்பையை நுனிவிரலில் எடுத்து முன் உதடுகளில் வைத்து..இப்படி நுனிநளினங்கள் எல்லாம் வெளியேதான்..டிஸ்கொ அரங்கினுள் அதே அவர்கள் கெட்ட ஆட்டம் தான்..அட இதில் என்ன ஒரு வாழ்க்கைத் தத்துவம்.

"என்ன...பாலிவுட் பகல் கனவு கன்னி ஜில்லிகா ஜிக்காவத் வருவாளா? நம்ம உள்ள போகலாமா?"

" வருவா.... வெயிட்பண்ண வேண்டாம்...நாம உள்ளே போவோம்....அங்க பார்த்தியா.. குத்து ஆட்டம் போடுற பாக்கி பாவண்த் .." என்று சொல்லிக்கொண்டே ஒரு 'வினோத' சைகை காட்டி சிரித்தாள்.

ஒரு சிகப்பு டீ சர்ட் இளைஞன் க்ராஸ் செய்தான்..

"நல்லா இருக்கான் இல்ல.."
"இல்ல.. செளவ்செளவ் காய் மாதிரி இருக்கான்.. நீ இன்னும் அவன் முகத்தை பார்க்கல....நீதான் சூப்பரு நைனா.... அதனாலே தானே உன்னை புடிச்சேன்." -

"ஹே...நைனா.... ஆமா.. நீ ஏன்? இந்த பக்கமாவே பார்த்து பேசிட்டு இருக்க? அங்கே பாரு ஜில்லிகா ஜிக்காவத் வந்தாச்சு,"
"ஸோ வாட்? நம்ம பக்கத்து பில்டிங் சேட்டு பொண்ணு, வந்திருக்கா, செம செக்சியா இருக்கால்லோ, அவளை பார்த்து கிட்டு இருக்கேன்"

"ஹேய்... ஜில்லிகா ஜிக்காவத்தோட ஹிப் மூவ்மென்டை பாரேன், அவளோட எடுப்பான இடுப்பை பாரேன்..."
"நான் எங்க அதப்பார்த்தேன்.. இன்னும் சேட்டு பொண்ணத்தான் பார்த்துட்டே இருக்கேன்.. "

இதைக் கேட்டுக்கொண்டே இருந்த மைனா....
"ஆமா.. இவரு பெரிய டாஸ்மாக் "டங்குவாரு"... ஒரு ஐட்டம் டேஸ்ட் பண்ணிட்டாருண்னா வேற ஐட்டத்தை தொடவே மாட்டாறு .... காசை கொட்டி வந்தத்துக்கு... கூட நாலு ஃபிகரை ரசிச்சிட்டு போவியா...!."

"என்னோட காசிலே ஓசிக்கு வந்ததும் இல்லாம ஆரம்பிச்சுட்டியா.... ஹே அந்த டாஸ்மாக் "டங்குவாரு" புரியலடி.. எக்ஸ்பைளைன் ப்ளீஸ்.."

"சில டாஸ்மாக் டங்குவாருங்களை சரக்கு அதிகமா அடுக்கி வச்சிருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போய் விட்டாங்கலாம், எதுனாலும் எவ்ளோனாலும் அடிச்சிக்கலாம் என்று சொல்லி. ஆனாலும் அந்த டங்குவாருங்க அதது, அதது அடிக்கிற சரக்கை மட்டுமே எடுத்து அடிச்சிசாம்... அடிச்சி கொஞ்ச நேரததிலையே மட்டையாகி போச்சாம்."

இப்படி நடந்துச்சோ இல்லையோ.. ஆனா கும்பரோட பார்வையும், வார்த்தைகளும்.. ஒரு சம்பவத்தோட அழக வர்ணிக்கிறதுனா இதைவிட சிறப்பா யாரும் எழுத முடியாதுங்கறதும் மட்டும் உண்மையோ உண்மை..
பேசிக்கொண்டே ஒரு அறைக்குள் நுழைந்து மறைந்துபோனார்கள்..

அந்த பாடல்..


கோர்பெல் கண்டார் கோர்பெலே கண்டார்
கோர்தழல் கங்குணை அன்ன
பகார்டிகண்டார் பகார்டியே கண்டார்
பர்னட்ஸ் கண்டாரும் அஃதே
விழிகொண்ட கண்ணார் யாரே
விடியவிடிய முடியக் கண்டார்



விளக்கம்:
கோர்பெல் சரக்கு அடிப்பவர்கள் கோர்பெலே அடித்தார்கள், அதை மட்டுமே அடித்தார்கள். தன்னை ஒட்டி இருக்கும் அனைத்தையும் கோர்த்து எரியும் கங்கு போன்ற பகார்டி குடிப்பவர்கள் அதனையே குடித்தார்கள், பர்னட்ஸ் சரக்கை சுவைப்பவர்களின் நிலையும் அதுதான்.... விழிப்பாய் இரு என்று பாடம் சொல்லும், விழி கொண்ட கண்களை உடைய, யாரும் விடியும் வரை கூட இருக்க முடியவில்லை? என்னே காதல் மக்களுக்கு, சரக்கின் மேல்.


மிகைப்படுத்தி வர்ணித்தாலும், எத்தனை அழகான சொற்கள்..எவ்வளவு கற்பனை..அதுதான் கும்பர்..!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அனுமதி வழங்கிய திரு.நர்சிம் அவர்களுக்கு நன்றி...

Tuesday, 23 December 2008

போதை பொழியும் பானம் - கும்பர்

தமிழ் ஆர்வலர்களும்....
நர்ஸிம் அண்ணாவின் ரசிகர்களும் மன்னிக்க.....

நேற்று தம்பி லண்டனில் இருந்து வந்திருந்தான்.. காலையில் காபியை குடித்துக் விட்டு, காலைக் கடனுக்காக ஆற்றுக்கரை ஓரம் நடந்து கொண்டே ஊர் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்..திடீரென ஓர் இடத்தில் நிறுத்தி.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நேத்து லண்டநிலிருந்து வரும்போது, நீ பல வருஷமா ஏங்கி கொண்டிருந்த ஒரு மேட்டர் கிடைச்சுச்சு.. அத நீ பார்த்தேன்னா அவ்வளவுதான்..என்று சொல்லிக் கொண்டே அந்த பொருளை எடுத்தான்..

பொன் நிறமாக இருந்தது அது, பெரிய பெரிய மனிதர்களும், மேட்டுக்குடி மக்களும் வைத்திருப்பார்களே அது, ஆங்கிலப் படங்களில் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்து ரசித்து, ரசித்து சிப்பி, சிப்பி அருந்துவார்களே அந்த வகையான உயர்தர மது தான் அது... பருகினால் "வருடும் போதையை தரும்" பானம்...

வாரா வாரம் வார இறுதியில், ஏதோ ஒரு கணத்தில் ஆளாளுக்கு கையில் உள்ள காசை போட்டு, காணாதத்திற்கு சில பழைய பத்திரிகைகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி யார் கண்ணிலும் படாதவாறு சரக்கு வாங்கி, ஏதேனும் தோப்பு, துறவு என்று ஒதுங்கி சரக்கடித்து...இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே..அனிச்சை செயலாக ஊறுகாய் தீர்ந்த விரலை நக்கித் தொலைப்பதும்... நடக்கும்..

இப்படி போற்றிப் பாதுகாத்த பழக்கம் அது.. பின்னர் ஒரு நண்பனின் பிறந்தநாள் அன்று, எங்கேயோ யாரிடமோ இருந்து அவன் கெஞ்சி கூத்தாடி கொண்டு வந்திருந்த மிலிடரி சரக்கு தான் , முதன்முதலாய் (முதலும் கடைசியுமாய்:மனசாட்சி..) நான் அறிந்து அடித்த விலை உயர்ந்த சரக்கு.. எட்டாவதாய் நான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்த சமயம் அது...

இப்படிப் பட்ட வரலாற்று பெருமை வாய்ந்த அந்த பழக்கம், (காதலில் தோற்றவுடன் மற்ற பொருள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ..?). இன்று வரை தேடித் தீர்ந்து போனேன்..ஒரு உயர்ந்த சரக்கையும், நான் முதலில் காதலித்த பெண்ணையும்....

அந்த சரக்கைத்தான் கொடுத்தான்..அதை வாங்கிய நான் எதுவும் சொல்லவில்லை.. அமைதியாக கையில் வைத்திருந்தேன்..அவனை கட்டிப் பிடித்து தேங்ஸ் சொல்லுவேன், .."நண்பா... நீயே உண்மை நண்பா, மச்சி... கலக்கிட்டெ" என்று ஆர்ப்பரிப்பேன்.என்று என்ன என்னமோ எதிர் பார்த்திருந்த அவன்.. என்னுடைய இந்த ரியாக்ஸனை பார்த்து..

எங்களின் சக நண்பணிடம்
"ஏதாவது பிரச்சனையா, அவன் சரக்கடிக்கிறததை விட்டுட்டானா? " என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தான்..

பாவம் அவன் கும்பரை படித்ததில்லை..

கள் பானையை பதுமனிடம் இருந்து வாங்கிய பேதை ஏதேதோ பேச முயன்று ..உதடு குவித்து,விம்மி.. ஆனால் ஏதும் பேசாமல் அதை தன் மார்பில் வைத்துக் கொண்டானாம்.. வாயூரி நின்றானாம்..

அந்த பாடல்..

மோரொக்கும்; உலை வைக்கா தூறலு மயங்கும்; குளிர் நல் நீர்நீக்கி,
நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்நோக்கும்; நுவலக்
கருதும், ஒன்றும் நுவல்கில்லான்;மேக்கு நிமிர் விம்மலன்;
விழுங்கலுறுகின்றான்


(மோரை போன்றது; உலை வைக்க கிடையாது, ஊறலும் கிடையாது, கலந்தடிக்க நீரும் தேவை இல்லை. இதை போன்ற ஒரு சிறந்த பானம் கிடையாது என்று எண்ணி,.கண்ணில் வந்த நீர் திரையை நீக்கி அதை நெடுநேரம் பார்த்தான்.. ஏதும் பேசவில்லை.. ஆனால் உதடுகள் விம்மி, வாயூரி, எச்சில் விழுங்கி நின்றான்..)

மீண்டும்.. கும்பர்.. வாழ்க..!

Thursday, 20 November 2008

பெருந்தொகை... ரம்மு.... ஆம் அந்த ஃபேமஸ் பார் தான்....

"அண்ணே..."
"ஹ்ம் என்ன?"
"அண்ணே.. இங்கே உக்காந்துக்கலாமா அண்ணே"
"ஹ்ம்.."
"என்னன்னே.. தனியா உக்காந்து.... சரக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க..."
"ஹான்..... யாரை நம்பி நான் பொறந்தேன்??? தம்பி... பொம்பளைங்களே நம்பவே கூடாது.. நம்பினே நடு ரோடு தான்.."
"ஆமாண்னே...."

இப்படி தொடங்கும் டாஸ்மாக் உரையாடல் பெரும்பாலும் பேச்சில் தொடங்கி நட்பில் முடிகிறது என்பது வரலாறு.

நண்பனின் வீட்டு திருமணத்தில், உற்சாக பாண விருந்தில், ஏமாற்றிய பெண்ணை நினைத்து (பூ மாதிரி பொண்ணு???)... நினைத்து... நினைத்து.. பார்த்துக் கொண்டே.. சரக்கை போட்டுக்கொண்டு சிகரட்டை... ஊதுவதில்... தொடங்கி

பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, பின் எந்த கல்யாணம் வந்தாலும், முடிந்த வரை சரக்கை போட்டுக் கொண்டு இருந்து, எப்படா இன்னொருவனுக்கு கல்யாணம் வரும் என்றும் காத்திருந்து, அந்த வீட்டு திருமண, உற்சாக பாண விருந்திற்கு எதேச்சையாக செல்வது போல் திட்டமிட்டு(திட்டமிட்டா அப்புறம் என்ன எதேச்சை?) செல்வது.... பின்னர் டேமேஜரிடம் திட்டு வாங்கின, பதவி உயர்வு வாங்கின என்று சகல நிகழ்வுகளுக்கும் சென்று தண்ணி அடித்து..நட்பை தொடர்வது

நார்மலாக கல்பா... இழுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் பிறர் முன் சிப், சிப்பாக சிப்பி.. முன் உதட்டாலேயே முகர்ந்து கொண்டிருந்து விட்டு, அவர்கள் கை கழுவவோ அல்ல வேறு ஏதேனும் இயற்கை செயலுக்காகவோ எழுந்ததும் இயல்பாய் குடிப்பது போல் பாவனை காட்டி ஒரு கல்பில் இழுத்து விட்டு அடுத்த ரவுண்டை தொடர்வது...

பின்னர் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பொதுநண்பர் மூலம் அறிமுகமாகி, ஒரு சினேகப் புன்னகையில் மெயில் அட்ரஸ் வாங்கி, போன் நம்பர் வாங்கி, ஈ என்று இளித்துக்கொண்டே நீங்க என்ன அடிப்பீங்க? என்று கேட்டு அதை பெற்றும் கொடுத்து, யார் எவர் என்பதை முழுமையாக தெரியாமல் குத்து மதிப்பாக தகவல்களை பரிமாறி..பின் சிகரட் , சைய்டு-டிஸ் பரிமாறிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கிறது..

இப்படி எத்தனையோ சந்தர்ப்பத்தில் யார் எவர் என்றே தெரியாமல் கிலாசோடு கிலாசு உரசி.. சகலமும் பகிர்ந்த... நட்பு... திருமணம் முடிந்தாலும் முற்று பெறாமல் இறுதி வரை செல்வதை பார்த்தோ, அனுபவித்தோ, அனுப‌வத்தை கேட்டோ இருக்கிறோம்...

இந்த மேட்டரை எந்த பிரபலமான பாடலும் விளக்க வில்லை என்றே தெரிகிறது..
அதனால் நானே ஒரு சிறந்த குறுந்தொகை பாடலை உல்டா செய்து விட்டேன்..

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க...
மற்றவர்கள் குடித்து விட்டு ஸ்ட்டெடியா நிக்க...


பாடல்..

நீயும் நானும் யார் ஆகியரோ
பியரும் பிராந்தியும் எம்முறை கேளிர்
யானும் நீயும் வேறு வழி வந்தும்
ரம் மிடை கலந்த கோக் போல
குடியரிடை நெஞ்சம் தாம் கலந்தனவே



ஒரு குடிமகன், இன்னொரு குடிமகனிடம் கூறும் குடிப்பாடல்..
ரம்மி ஆடினார் ரம்மி என்ற புலவர்..(ரம் அடித்துவிட்டு ரம்மி ஆடுபவராக இருக்கும், அதனால் வந்த பெயராக இருக்கும்..)

இது இந்த பதிவின் எதிர் பதிவு அல்ல, அதனை ஒட்டி வந்தது......