Showing posts with label ஐயோ பாவம். Show all posts
Showing posts with label ஐயோ பாவம். Show all posts

Friday, 11 December 2009

காதல் கிறுக்கர்கள்....



எனக்கான
உன்
சமையலை
நீ
என் மூலமாக
சமைத்துக்
கொண்டிருக்கிறாய்..!!


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இன்றேனும்
உன்னை அழகாய் பார்க்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
பயங் காட்ட வருபவளாக
இருக்கிறாய் நீ..!!


0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0



எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நான் சொல்லும்
ஒவ்வொரு உண்மைக்கும்
ஆங்காரமாய் கோபப்பட்டு
என் தாடைகளை உடைத்தாய்..

நீ சாந்தமாக வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!


$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $



தோழிகளோடு போய் வந்த
ஷாப்பிங்... பில்களை
என்னை நெருங்கி அமர்ந்தவளாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..

எதையுமே கவனிக்காமல்
கூடப் போகும் வட்டியை
கணக்கிட்டபடி இருக்கிறேன்

உனக்கு மிகவும் பிடித்த
உடையொன்றை காட்ட
யோசிக்காமல் "கிளிஞ்சது..!"
என்று சொல்கிறேன்..

"ஹூக்ம் ...." என்றவாறே
கோபம் கொண்டவளாக
என் தாடையை பதம்
பார்த்து 'கொல்கிறாய்'..!!


! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !


எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு நெலையிலே எழுதினது... (மாவு கட்டு போட்டுகிட்டுன்னு யாராவது உண்மைய சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு..) கண்டுகோங்கப்பா..ஆனா என் வீட்டுகாரிகிட்டே மாட்டி விட்டுறாதீங்கப்பா... :-))))


இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு அல்ல... அல்ல... அல்ல...