தமிழகத்திலே பாமரனையும் படிக்க தூண்டிய பத்திரிக்கை தினத்தந்தி என்றால் அது மிகையோ? இல்லை, இல்லவே, இல்லை. அல்லவா? அது மக்களுக்கு செய்தியை வழங்கிய விதங்கள் மற்றும் சொல் பயன்பாடுகளும் மக்களுக்கு சென்று அடைந்தது அல்லவா? அது மக்களுக்கு வழங்கிய சொற்றொடர்கள் குறிப்பாக இரட்டை கிளவிகள் இன்றும் மக்கள் மனதிலே நீங்கா இடம் பிடித்து இருக்கிறது அல்லவா? அந்த இரட்டை கிளவிகளை நான் இங்கே பதிந்தால் அது உங்களை நான் கதற-கதற, மாறி-மாறி கொடுமை செய்தவனாவேன். நீங்களும் என்னனை சதக்-சதக் என குத்திக் கிழிக்க கொடுவாளை தேடி புறப்பட்டு விடுவீர்கள்.
தினத்தந்தி; தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அளப்பரிய தொண்டு செய்துள்ளது. அந்த தொண்டுக்கு எனது மரியாதை மற்றும் வணக்கங்கள். இன்றும் இங்கே மும்பையிலே அதன் பதிப்பு வருகிறது. இங்கே இருக்கும் சில மக்கள் தமிழ் மொழியை மறந்து விட கூடாது என்பதற்காகவும், தற்போதுள்ள இளைய தலைமுறையினர் தமிழை அறிந்து கொள்ளவும், அந்த பதிப்பிலே "தமிழ் கற்றுக்கொள்ளலாம் வாங்க" என்று தலைப்பிட்டு, அழைப்பு விடுத்து ஒரு பகுதி ஒதுக்கி தமிழை சொல்லிக்கொடுக்கும் முறையாக பாடங்களை வரிசையாக பதிக்கிறது. நன்றி நன்றி. நன்றி.
சரி. இப்போது விடயத்திற்கு வருகிறேன், அந்த பாடங்களில் சில வடமொழி எழுத்துக்களையும், தமிழ் எழுத்து என்றே சொல்லி வருகிறது? அது எப்படி சரியாகும்? இது வடமொழி எழுத்து, என்று முதலிலேயே அறிவுறுத்த வேண்டாமோ? அது நாம் சொற்களை பலுக்குதலுக்கு வேண்டி பயன்படுத்துகிறோம் என்று கூறவேண்டாமோ? இனி வரும் பதிப்பிலாவது அப்படி அறிவிப்பை செய்து தொடருமா? தினத்தந்தி.
இது ரொம்ப முக்கியமா? என்று கூறாதீர்கள். இது முக்கியமே. ஒரு மொழிக்குன்டான எழுத்துக்களே சரிவர அறியாமல், தெரியாமல் நாம் எப்படி அந்த மொழியை கற்றவர்களாவோம். இதை ஒத்துக்கொண்டால், தமிழ் எழுத்துக்கள் எத்தனை? என்ற அடிப்படை இலக்கணமே மாறிவிடுகிறதே? அதற்காக தான் இந்த பதிவே. நாமும் சொல்லவில்லை என்றால் பின் யார்தான் சொல்வது.
நிற்க. "போய் புள்ளைங்களை படிக்க வைங்கடா" என்றும் " இதை விட்டு விட்டு போய் வேறு வேலை பாரு" என்று சொல்ல முனையும் அனானி நண்பர்களே, தயவு செய்து நீங்கள் வேறு வேலை பார்க்க போய், ஆக்கமா சிந்தியுங்கள். மற்ற நண்பர்கள் நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உங்கள் கருத்துகளை பின்னூட்டமாய் சொல்லி விட்டு, போங்களேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts
Wednesday, 15 April 2009
Monday, 9 March 2009
தமிழக அரசியலில் மாற்றம் வருமா?
வோட்டு சந்தை கூடும் நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. பெரும் முதலாளிகள் முதல் சில்லறை முதலாளிகள் வரை தங்கள் டேரா மற்றும் பதாகைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்கள். சில பல கவர்ச்சி சலுகை, கவர்ச்சி திட்டம் மற்றும் கவர்ச்சி நடிகைகள், நடிகர்கள் என்று கிளம்பிவிட்டார்கள்.
சரி.. ஆட்டம் துவங்கியாச்சு. நம் பதிவர்கள் முதல் சலூன் கடையில் கிடந்தது தந்தி யை புரட்டும் முதியவர்கள் வரை ஆட்டத்தில் பங்கு பெரும் முதலாளிகளையும் அவர்களின் அல்லக்கைகளையும் ஒரு வழி பண்ணும் அளவிற்கு கருத்துகளும் வழங்கியாச்சு. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று மாறாமல் கூவியாச்சு.
பெட்டி தூக்கி, வேட்டி கட்டி கிளம்பியிருக்கும் இந்த முதலாளிகளின் இலக்கு நீங்களா? உங்கள் ஒட்டா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை, என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
கூகுளாண்டவரை தொழும் நீங்களும் நானும் அல்ல அவர்கள் இலக்கு, கூழையே ஆண்டவனாக கொண்ட அப்பாவிகள் தான் அவர்கள் இலக்கு.
வாழ்கை சக்கரத்தில் 'யு-ட்யூபை' இணைத்து கொண்ட நீங்களோ அவர்களின் வலையில் சிக்க போகிறீர்கள்? வழுக்கை சைக்கில் சக்கரத்தில் உள்ள வால்-ட்யூபை மாற்ற வக்கில்லாத வறியவர்கள் அல்லவோ அவர்கள் வலையில் சிக்க போகிறார்கள்!
வாயிலே பராக் ஒபாமாவை மெல்லும், அறிவாளியாக காட்டி கொள்ளும் சிறிய கூட்டம் அல்ல அவர்களது குறி, வாயிலே வெற்றிலை பாக்கை, பாண் பராக்கை மெல்லும் வறிய கூட்டமே அவர்கள் குறி.
இன்னும் எம்ஜீயாரும், என்டீயாரும் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பும் பாமர கூட்டத்தை நம்பிதானே இவர்கள் கடை விரிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையை உரைக்காமல் நாம் என்ன சாதிக்க முடியும்.? அவர்களுக்கு அவர்கள் நிலைமையை உணர்த்தாமல் நாம் என்ன பெற்றிட முடியும்? என்ன மாற்றத்தை நாம் ஏற்படுத்தி விட முடியும்? அதனால் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி கொடுத்தாரே மாபெரும் தலைவர் அம்பேத்கர்.அந்த அம்பேத்கரும் வெறுமனே புரட்சி செய் என்று சொல்லவில்லை, கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று கூறினார். இன்றைய நமது சூழலில் புரட்சியெல்லாம் கூட தேவை இல்லை, கற்பித்தாலே போதும், சமூக மாற்றம் தானே நடக்கும்.
நீங்கள் யாருக்கு ஒட்டு போடுவீர்கள்? என்று கேட்டால் "நான் ஜெயலலிதாவிற்கெல்லாம் ஒட்டு போட மாட்டேன், ரெட்டை இல்லை எம்ஜியாருக்கு தான் ஒட்டு போடுவேன்" என்று பெருமையாக சொல்லும் குடி மக்களை வைத்து தானே, இங்கே இப்போ நாம் ஜனநாயகத்தை வளர்த்து கொண்டுள்ளோம்.
என் நாடு, என் சமூகம், அனைத்து மக்களும் அமைதியுடனும், பொருளாதார தன்னிறைவோடும் வாழ வேண்டும் என்று நினைக்கிறன். அனைவரும் அறிதல், அதுவும் உண்மை நிலை அறிதல் என்ற சமூக மாற்றம் இல்லாது வெறும் அரசியல் மாற்றம் மட்டும் நம்மை, நம் சமூகத்தை, நம் நிலையை முன்னேற்றாது என்பது என் நம்பிக்கை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒட்டு போடுங்கன்னு உங்ககிட்டே கேட்டாலே... எவ்வளவு தருவே என்று என்கிட்டேயே கேப்பீங்க...
அதனாலே பின்னூட்டம் மட்டுமாவது போட்டுட்டு போங்க... ஹி ஹி ஹி
சரி.. ஆட்டம் துவங்கியாச்சு. நம் பதிவர்கள் முதல் சலூன் கடையில் கிடந்தது தந்தி யை புரட்டும் முதியவர்கள் வரை ஆட்டத்தில் பங்கு பெரும் முதலாளிகளையும் அவர்களின் அல்லக்கைகளையும் ஒரு வழி பண்ணும் அளவிற்கு கருத்துகளும் வழங்கியாச்சு. மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று மாறாமல் கூவியாச்சு.
பெட்டி தூக்கி, வேட்டி கட்டி கிளம்பியிருக்கும் இந்த முதலாளிகளின் இலக்கு நீங்களா? உங்கள் ஒட்டா? இல்லை... இல்லை... இல்லவே இல்லை, என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
கூகுளாண்டவரை தொழும் நீங்களும் நானும் அல்ல அவர்கள் இலக்கு, கூழையே ஆண்டவனாக கொண்ட அப்பாவிகள் தான் அவர்கள் இலக்கு.
வாழ்கை சக்கரத்தில் 'யு-ட்யூபை' இணைத்து கொண்ட நீங்களோ அவர்களின் வலையில் சிக்க போகிறீர்கள்? வழுக்கை சைக்கில் சக்கரத்தில் உள்ள வால்-ட்யூபை மாற்ற வக்கில்லாத வறியவர்கள் அல்லவோ அவர்கள் வலையில் சிக்க போகிறார்கள்!
வாயிலே பராக் ஒபாமாவை மெல்லும், அறிவாளியாக காட்டி கொள்ளும் சிறிய கூட்டம் அல்ல அவர்களது குறி, வாயிலே வெற்றிலை பாக்கை, பாண் பராக்கை மெல்லும் வறிய கூட்டமே அவர்கள் குறி.
இன்னும் எம்ஜீயாரும், என்டீயாரும் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்பும் பாமர கூட்டத்தை நம்பிதானே இவர்கள் கடை விரிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையை உரைக்காமல் நாம் என்ன சாதிக்க முடியும்.? அவர்களுக்கு அவர்கள் நிலைமையை உணர்த்தாமல் நாம் என்ன பெற்றிட முடியும்? என்ன மாற்றத்தை நாம் ஏற்படுத்தி விட முடியும்? அதனால் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றி கொடுத்தாரே மாபெரும் தலைவர் அம்பேத்கர்.அந்த அம்பேத்கரும் வெறுமனே புரட்சி செய் என்று சொல்லவில்லை, கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று கூறினார். இன்றைய நமது சூழலில் புரட்சியெல்லாம் கூட தேவை இல்லை, கற்பித்தாலே போதும், சமூக மாற்றம் தானே நடக்கும்.
நீங்கள் யாருக்கு ஒட்டு போடுவீர்கள்? என்று கேட்டால் "நான் ஜெயலலிதாவிற்கெல்லாம் ஒட்டு போட மாட்டேன், ரெட்டை இல்லை எம்ஜியாருக்கு தான் ஒட்டு போடுவேன்" என்று பெருமையாக சொல்லும் குடி மக்களை வைத்து தானே, இங்கே இப்போ நாம் ஜனநாயகத்தை வளர்த்து கொண்டுள்ளோம்.
என் நாடு, என் சமூகம், அனைத்து மக்களும் அமைதியுடனும், பொருளாதார தன்னிறைவோடும் வாழ வேண்டும் என்று நினைக்கிறன். அனைவரும் அறிதல், அதுவும் உண்மை நிலை அறிதல் என்ற சமூக மாற்றம் இல்லாது வெறும் அரசியல் மாற்றம் மட்டும் நம்மை, நம் சமூகத்தை, நம் நிலையை முன்னேற்றாது என்பது என் நம்பிக்கை.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒட்டு போடுங்கன்னு உங்ககிட்டே கேட்டாலே... எவ்வளவு தருவே என்று என்கிட்டேயே கேப்பீங்க...
அதனாலே பின்னூட்டம் மட்டுமாவது போட்டுட்டு போங்க... ஹி ஹி ஹி
Tuesday, 3 March 2009
மும்பையிலும் தமிழர் எழுச்சி.
உழைப்பின் உன்னதம் அறிந்தவன் தமிழன். உழைப்பின் உயர்வை அறிந்தவன் தமிழன். விண்ணை கடைந்து எடுக்க கலன் அனுப்பியவன் தமிழன், மண்ணை கடைந்து உழுது உண்ணும் கலன் நிரப்பியவன் தமிழன். அவன் காணா களமும் இல்லை அவன் இல்லாத காலமும் இல்லை.
உயிரை எடுக்கும் தொழில் செய்பவனை எமதர்மராஜா என்று போற்றி பிறர் மதித்து தொழும் வேளையிலும் அவனை காலன் என்று காலால் எத்தி மிதித்தவன் தமிழன். எவனுக்கும் அஞ்சி சேவகம் செய்யாதவன். அந்நியர்கள் ஒவ்வொரு பாளையமாக கைப்பற்றி வரி வசூல் வேட்டை நடத்திய வேளையிலே ' நெற் கட்டும்' செவலை. 'நெற்கட்டான்' சேவல் என்று மாற்றி வீரப்போர் நடத்தி, விடுதலை போரின் முதல் 'நாற்றை' நட்டவன் நம் தமிழன். "எமக்கு என்ன சேவகம் செய்திட்டாயடா பரங்கிப்பேயே? எம்மிடம் வரி வசூலிக்க வந்திட்டாய்?" என்று போர் முழக்கம் செய்தவனும், விடுதலை நாற்றை வீறுடன் எழ செய்தவனும் தமிழனே ஆக முதலில் வீர வாளையும், வேலையும் ஆயுதமாக ஏந்தியவன் தமிழன். பின்னே தானே சிப்பாய் என்று பெயர்பெற்றவரும் கலகம் செய்திட்டார். அந்நியன் கலக்கம் அடைந்திட்டான்.
மேலை நாட்டினர், நம் உரிமை பொருளின் மீதும் உரிமை நாட்டினர். அடங்கியவனோ தமிழன்? அவனுக்கு எதிராய் வியாபார ஆயுதம் ஏந்தி கப்பல் தொழில் செய்து, கடல் பரப்பின் மீதும் நம் உரிமையை நாட்டினர் தமிழர்.
அயல் நாடுகளின் உதவியுடன் இராணுவமும் நடத்தி வந்தவன் தமிழன். தமிழன் என்றால் சும்மா இல்லை "எம்டன் அவன்" என்று உணர்த்தியவன் ஒரு மறத்தமிழன். தமிழனின் பெருமை கூற ஆரம்பித்தால் அது முற்று பெறாது போய் கொண்டே இருக்கும். மேலும் இன்றைய சூழ்நிலையில், பழம்பெருமை பேசி வீணே பொழுதை களித்து, கழித்து கிடப்பதல்ல நமது பெருமை.
உலகெங்கும், தமிழ் மக்களுக்கு ஆதரவாய் உலக தமிழ் இனம் ஒன்று பட்டு இருக்கும் இந்த வேளையிலே, மும்பையிலும் தமிழர்கள் தங்கள் ஆதரவை காட்டும் முகமாய். 01 - 03 - 2009 ஞாயிறு மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை "மாதுங்கா கிங் சர்கிள் - தானே" ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான 25. கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலியை தங்கள் உணர்வுடன், தமிழ் உணர்வுடன் ஏற்படுத்தினர். இது வெறும் மனித கரங்கள் அல்ல. உலக தமிழ் மக்களுக்காக, அல்லல்படும் மக்களுக்காக நீட்ட பட்ட அன்பு கரங்கள். உலகில் நாம் எங்கெங்கு பிரிந்து இருந்தாலும், நம் உயிரும், உணர்வும் ஒன்றே என உணர்த்த சேர்ந்திட்ட ஆதரவு கரங்கள்.
"ஏய்... தமிழ் மக்கள் விரோத அரசே, பாரு எங்கள் ஒற்றுமையை, எங்கள் தமிழரை காப்பாற்று" என்று அணி திரண்டு, இன்னல் படும் மக்களுக்கு தங்கள் ஆதரவை காட்டி நின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான அரசுக்கு தன் பலத்தை காட்டி நின்றனர். அல்லல் படும் மக்களுக்கு ஆதரவாய், தன் சமுதாய எழுச்சிக்காக கூடி நின்றனர். உலகெங்கும் உள்ள தன் தமிழ் மக்களுக்கு ஆதரவை கூட்டி நின்றனர். தமிழ், தமிழன் என்று முழங்கி அவன் நிமிர்ந்து நிற்க, இங்கே தன் நெஞ்சு நிமிர்த்தி நின்றனர். ஒற்றுமை எனும் ஆயுதம் ஏந்தி.
இந்த மாபெரும், மனித சங்கிலி போராட்டத்தை, தமிழ் உணர்வை, இன ஒற்றுமையை காட்டும் நிகழ்ச்சியை பல இயக்கங்கள், பல சங்கங்கள், பல அமைப்புகள், ஒன்று சேர்ந்து நடத்தியது. அது உலக மக்களுக்கு உணர்த்தியது, தமிழும், தமிழ் உணர்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று.
இந்த கரப் பினப்பிலே, இது ஆண்டான் கரம், இது அடிமை கரம், இது படித்தவன் கரம், இது படிக்காதவன் கரம், இது ஏழை கரம், இது செல்வந்தன் கரம், இது கருப்பன் கரம், இது செவத்தவன் கரம், இது வெளுத்தவன் கரம், இது சாப்பிட்டவன் கரம், இது சாப்பிடாதவன் கரம், இது கூலி தொழிலாளி கரம், இது பொறியாளன் கரம், இது மருத்துவன் கரம், இது நோயாளியின் கரம், இது முதிர்ந்த கரம் இது பிஞ்சு கரம் என்று பேதம் தெரியவில்லை, "நாம் அனைவரும் சமம் ஒன்று" என்று வேதம் தெரிந்தது.
வாழ்க தமிழ்.
வளர்க தமிழ் உணர்வு.
ஓங்குக தமிழனின் ஒற்றுமை.
உயிரை எடுக்கும் தொழில் செய்பவனை எமதர்மராஜா என்று போற்றி பிறர் மதித்து தொழும் வேளையிலும் அவனை காலன் என்று காலால் எத்தி மிதித்தவன் தமிழன். எவனுக்கும் அஞ்சி சேவகம் செய்யாதவன். அந்நியர்கள் ஒவ்வொரு பாளையமாக கைப்பற்றி வரி வசூல் வேட்டை நடத்திய வேளையிலே ' நெற் கட்டும்' செவலை. 'நெற்கட்டான்' சேவல் என்று மாற்றி வீரப்போர் நடத்தி, விடுதலை போரின் முதல் 'நாற்றை' நட்டவன் நம் தமிழன். "எமக்கு என்ன சேவகம் செய்திட்டாயடா பரங்கிப்பேயே? எம்மிடம் வரி வசூலிக்க வந்திட்டாய்?" என்று போர் முழக்கம் செய்தவனும், விடுதலை நாற்றை வீறுடன் எழ செய்தவனும் தமிழனே ஆக முதலில் வீர வாளையும், வேலையும் ஆயுதமாக ஏந்தியவன் தமிழன். பின்னே தானே சிப்பாய் என்று பெயர்பெற்றவரும் கலகம் செய்திட்டார். அந்நியன் கலக்கம் அடைந்திட்டான்.
மேலை நாட்டினர், நம் உரிமை பொருளின் மீதும் உரிமை நாட்டினர். அடங்கியவனோ தமிழன்? அவனுக்கு எதிராய் வியாபார ஆயுதம் ஏந்தி கப்பல் தொழில் செய்து, கடல் பரப்பின் மீதும் நம் உரிமையை நாட்டினர் தமிழர்.
அயல் நாடுகளின் உதவியுடன் இராணுவமும் நடத்தி வந்தவன் தமிழன். தமிழன் என்றால் சும்மா இல்லை "எம்டன் அவன்" என்று உணர்த்தியவன் ஒரு மறத்தமிழன். தமிழனின் பெருமை கூற ஆரம்பித்தால் அது முற்று பெறாது போய் கொண்டே இருக்கும். மேலும் இன்றைய சூழ்நிலையில், பழம்பெருமை பேசி வீணே பொழுதை களித்து, கழித்து கிடப்பதல்ல நமது பெருமை.
உலகெங்கும், தமிழ் மக்களுக்கு ஆதரவாய் உலக தமிழ் இனம் ஒன்று பட்டு இருக்கும் இந்த வேளையிலே, மும்பையிலும் தமிழர்கள் தங்கள் ஆதரவை காட்டும் முகமாய். 01 - 03 - 2009 ஞாயிறு மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை "மாதுங்கா கிங் சர்கிள் - தானே" ஆகிய இரண்டு இடங்களுக்கு இடையேயான 25. கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலியை தங்கள் உணர்வுடன், தமிழ் உணர்வுடன் ஏற்படுத்தினர். இது வெறும் மனித கரங்கள் அல்ல. உலக தமிழ் மக்களுக்காக, அல்லல்படும் மக்களுக்காக நீட்ட பட்ட அன்பு கரங்கள். உலகில் நாம் எங்கெங்கு பிரிந்து இருந்தாலும், நம் உயிரும், உணர்வும் ஒன்றே என உணர்த்த சேர்ந்திட்ட ஆதரவு கரங்கள்.
"ஏய்... தமிழ் மக்கள் விரோத அரசே, பாரு எங்கள் ஒற்றுமையை, எங்கள் தமிழரை காப்பாற்று" என்று அணி திரண்டு, இன்னல் படும் மக்களுக்கு தங்கள் ஆதரவை காட்டி நின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான அரசுக்கு தன் பலத்தை காட்டி நின்றனர். அல்லல் படும் மக்களுக்கு ஆதரவாய், தன் சமுதாய எழுச்சிக்காக கூடி நின்றனர். உலகெங்கும் உள்ள தன் தமிழ் மக்களுக்கு ஆதரவை கூட்டி நின்றனர். தமிழ், தமிழன் என்று முழங்கி அவன் நிமிர்ந்து நிற்க, இங்கே தன் நெஞ்சு நிமிர்த்தி நின்றனர். ஒற்றுமை எனும் ஆயுதம் ஏந்தி.
இந்த மாபெரும், மனித சங்கிலி போராட்டத்தை, தமிழ் உணர்வை, இன ஒற்றுமையை காட்டும் நிகழ்ச்சியை பல இயக்கங்கள், பல சங்கங்கள், பல அமைப்புகள், ஒன்று சேர்ந்து நடத்தியது. அது உலக மக்களுக்கு உணர்த்தியது, தமிழும், தமிழ் உணர்வும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று.
இந்த கரப் பினப்பிலே, இது ஆண்டான் கரம், இது அடிமை கரம், இது படித்தவன் கரம், இது படிக்காதவன் கரம், இது ஏழை கரம், இது செல்வந்தன் கரம், இது கருப்பன் கரம், இது செவத்தவன் கரம், இது வெளுத்தவன் கரம், இது சாப்பிட்டவன் கரம், இது சாப்பிடாதவன் கரம், இது கூலி தொழிலாளி கரம், இது பொறியாளன் கரம், இது மருத்துவன் கரம், இது நோயாளியின் கரம், இது முதிர்ந்த கரம் இது பிஞ்சு கரம் என்று பேதம் தெரியவில்லை, "நாம் அனைவரும் சமம் ஒன்று" என்று வேதம் தெரிந்தது.
வாழ்க தமிழ்.
வளர்க தமிழ் உணர்வு.
ஓங்குக தமிழனின் ஒற்றுமை.
Subscribe to:
Posts (Atom)
