தமிழகத்தில் தேர்தல் - 2009 போட்டி நடக்கிறது. .தெரிந்த விஷயம். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றிபெறுவார்... தெரிந்த விஷயம்..
தன் ஆற்றலினால், நல்ல எண்ணங்களினால் , நோக்கினால் சிறந்த வேட்பாளர்கள் எத்தனையோ இருக்கின்றார்கள். நேர்மையாக எல்லா வேட்பாளர்களையும் முடிந்த வரை ஆராய்ந்து அல்லவா ஓட்டு இட்டு ஒருவரை வெற்றி பெற செய்யவேண்டும்?..
ஒருத்தர் இன்று பதிவிட்டு இருக்கிறார்...
அவர் யாருரென்று எனக்கு தெரியாது. இது வரை என் பதிவுகளிள் நான் அவரை பார்த்தது இல்லை. பதிவு எழுதுகிறவர்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரி. சரி மக்கள் தொண்டு செய்து பெயர் பெற்றவரா? அல்ல வேறு மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவரா? அடித்தட்டு மக்களுக்காக தன் உடமை அத்தனையையும் இழந்தவரா? ஆனால் இது வரை இப்படி எதையும் செய்யாதவர். இப்போது வந்து இரண்டு வார்த்தை அவரை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று சொல்லி, தானும் சொல்லிவிட்டு, அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று...
ஒரு அரை பக்கத்திற்கு அவரின் சுய வாழ்வை பற்றி எழுதிவிட்டு, அந்த வேட்பாளரே, நடத்தும் வலைபக்கங்களின் சுட்டிகளை தனித்தனியாக சுட்டி ஓட்டு போடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்...
என்ன சுயநலம் ? எத்தனை சாமர்த்தியம்...?!! இப்படி கேவலமாக ஓட்டு கேட்க வேண்டுமா? சரி கேட்டாரே.. தனி மடல் அனுப்பி கேட்டு இருக்கலாம், கண்டிப்பாக கோபம் வந்து இருக்காது... சரி இமெயில் கிடைக்கவில்லை என்றால் சாதா மெயில் எழுதி அனுப்பி இருக்கலாம்.. எதுவும் இல்லாமல் தன்னுடைய ப்ளாக்'ஐ அவரின் ஓட்டு வேட்டை நடத்தவும், விளம்பர இடமாகவும் பயன்படுத்திக்கொள்ள நல்ல யுத்தியை முயற்சி செய்து இருக்கிறார். !! சின்ன சின்ன விஷயத்தில் கூட நம்மால் நேர்மையாக நடந்து கொள்ள முடியவில்லை.?. இப்படி எல்லாம் ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டுமா?
இப்படி எத்தனை 'ப்ளாக்' அவர் செய்து இருக்கிறாரோ தெரியவில்லை...
தமிழகத்தில் வெற்றி பெறுபவர் இப்படிப்பட்ட ஓட்டுகளினால் தான் என்றால்.. நினைத்து பார்க்கவே வேதனையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக நல்ல வேட்பாளர்கள் பின்னால் தள்ளப்படுவர். இப்படி ஓட்டு கேட்டு தன் வேட்பாளர்களை முன் நிறுத்த தெரியாத பலர் காணாமல் போவார்கள். இப்படி கேவலமாக கொஞ்சமும் நாகரீகமும், நேர்மையும் இல்லாமல் தன் சுய வியாபார உக்திகளினால் வென்ற வியாபாரிகள் ஓட்டுகள் வாங்கி முதலில் நிற்பர்...
எனக்கு பிடிக்காத பட்சத்தில் கண்டிப்பாக அந்த பதிவை ரிஜெக்ட் செய்ய எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது இப்படி பதிவு போட வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் மேலே சொன்ன படி அவர் சுய வாழ்வில் என்ன செய்தார் என 2 வரிகள் எழுதாமல், நேரடியாக ஓட்டு கேட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் நானும் படித்து பார்த்து பிடித்து இருந்தால் ஓட்டில் சேர்த்து இருப்பேன், இல்லையேல் விட்டு இருப்பேன்..ஆனால், தன்னை மிகவும் சாமர்த்தியசாலியாக நினைத்து, தன் பதிவுக்கு வருபவர்கள், பொது 'பார்வைகள்' அற்றவர்கள் அத்தனை பேரும் மூடர்கள், ஒருவரின் சுய வாழ்வை மட்டும் தந்து, பொதுவாழ்வில் என்ன சாதித்தார் என்று தராமல் ஓட்டு கேட்கலாம் என நினைத்து, ஓட்டு கேட்க வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள, தன் பதிவினை பயன்படுத்திக்கொள்ள நினைத்து போடப்பட்ட பதிவு என்பதால் இதை எழுத வேண்டியதாகிவிட்டது. தன் பதிவை பற்றி, கருத்தை பற்றி ஒரு வரி கூட யாரும் எதிராக எழுதக்கூடாது என்று அவர் நினைத்தால்.. :)))) அப்படி ஒரு பதிவும், பதிவரும் எனக்கு பொதுவில் தேவையில்லை.!! :)))
அவரின் பெயரை குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.. காரணம் அதனால் திரும்பவும் அவருடைய பதிவுகள் என்னால் விளம்பரப்படுத்தபடும்.
இப்படி கேவலமாக ஓட்டு கேட்பதை விட தோற்று போகலாமே?!!
Showing posts with label பதிவர் உலகம். Show all posts
Showing posts with label பதிவர் உலகம். Show all posts
Wednesday, 22 April 2009
வெட்கமாய் இல்லை இப்படி ஓட்டு கேட்க??
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
அனுபவம்,
சமூகம்,
செய்தி,
தேர்தல்,
பதிவர் உலகம்
Subscribe to:
Posts (Atom)
