Tuesday 15 December 2009

அரைமூடி போதையில்



கள்ள சரக்கு அங்கே..
நல்ல சரக்கு இங்கே..

ஆழ்ந்த போதையில்
கிடைத்ததொரு போத்தல்
பச்சிளம் பாலகனாய்
ஒரு பாத்திரம் ஏற்கிறேன்
எத்தனை திருகிப் பார்த்தும்
நேர்த்தியாய் திறக்க வரவில்லை
அருகிலிருந்த தண்டோரா வேடமேற்றவர்...
வாந்தி எடுப்பது போல் காட்சி
ஓ..ஆ..இ.. என்று அவர்
ராகம் எடுத்தபோது
உண்மையில் தொலைந்து போனது
போதை


Friday 11 December 2009

காதல் கிறுக்கர்கள்....



எனக்கான
உன்
சமையலை
நீ
என் மூலமாக
சமைத்துக்
கொண்டிருக்கிறாய்..!!


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


இன்றேனும்
உன்னை அழகாய் பார்க்க முடியும்
என்னும் நம்பிக்கையிலேயே
விடிகின்றன என் பொழுதுகள்..
ஆனால் - கனவிலும்
பயங் காட்ட வருபவளாக
இருக்கிறாய் நீ..!!


0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0



எத்தனையோ
பேய் கதைகளை
சொன்ன தாத்தா
கடைசி வரை
சொல்லவேயில்லை..
அவை - உன்னைப் போலத்தான்
இருக்குமென்பதை..!!


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நான் சொல்லும்
ஒவ்வொரு உண்மைக்கும்
ஆங்காரமாய் கோபப்பட்டு
என் தாடைகளை உடைத்தாய்..

நீ சாந்தமாக வேண்டும் என்பதற்காகவே
பொய்களை
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நான்..!!


$ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $ $



தோழிகளோடு போய் வந்த
ஷாப்பிங்... பில்களை
என்னை நெருங்கி அமர்ந்தவளாக
காட்டிக் கொண்டிருக்கிறாய்..

எதையுமே கவனிக்காமல்
கூடப் போகும் வட்டியை
கணக்கிட்டபடி இருக்கிறேன்

உனக்கு மிகவும் பிடித்த
உடையொன்றை காட்ட
யோசிக்காமல் "கிளிஞ்சது..!"
என்று சொல்கிறேன்..

"ஹூக்ம் ...." என்றவாறே
கோபம் கொண்டவளாக
என் தாடையை பதம்
பார்த்து 'கொல்கிறாய்'..!!


! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !


எல்லாமே கொஞ்சம் கோக்கு மாக்கான ஒரு நெலையிலே எழுதினது... (மாவு கட்டு போட்டுகிட்டுன்னு யாராவது உண்மைய சொன்னா பிச்சு போடுவேன் பிச்சு..) கண்டுகோங்கப்பா..ஆனா என் வீட்டுகாரிகிட்டே மாட்டி விட்டுறாதீங்கப்பா... :-))))


இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவு அல்ல... அல்ல... அல்ல...

Thursday 10 December 2009

கேபிள்.IPS. மே/ப. பதிவர்பண்ணையம்

நம்ம 'கேபிள்' அண்ணாத்தைக்கும் மொக்கை படமா பார்த்து...பார்த்து... விமர்சனம் போட்டு போட்டு போர் அடிச்சு போச்சு... அண்ணனுக்கு வீட்லயும் செம டோசு... அந்த வருத்தம் தாங்காம நம்ம தண்டோரா அண்ணன் ஆபீசுக்கு வந்து சரக்கை போட்டுட்டு செம அழுகாச்சி... அதை பார்த்து நம்ம தண்டோரா அண்ணனுக்கு கண்லே இருந்து ரெத்தமே வந்துட்டு...

"கேபிளு... நாம யாருன்னு காட்டனும்டா... நீ பேசாமே போலிசு வேலைக்கு சேர்ந்துறுடா... "

"அண்ணே.. என்னை எல்லாம் அந்த வேலைக்கு சேர்த்துப்பாங்களா... "

"என்ன இப்படி கேட்டுபுட்டே.. அதுக்கான அத்தனை தகுதியும் தெரமையும் உனக்கு இருக்கு... "

"அண்ணே அது சாத்தியமா... "

" எல்லா போலிசுகாரங்களுக்கும் தொப்பை இருக்கு... உனக்கும் இருக்கு... அப்புறம் அந்த பசுபதி மே/ப.ராசக்காபாளையம் படம் பார்த்தியா...? அதுலே ரஞ்சித் எப்படி போலிசு ஆகுறாரு... "

"அப்படிங்குறீங்க... "

"ஆமா.. நாளைக்கே... நீ நம்ம சிட்டி கமிஷனரை போய் பார்த்து சேர்ந்துறு..."

கமிசனர் அலுவலகம்

"யாருப்பா நீயி...."

"நான் போலிஸ் வேலைக்கு சேர வந்திருக்கேன்.. "

"இப்படி திடு திப்புன்னு போலிசு வேலைக்குன்னு வந்திருக்கியே... இப்படி திடீர்னு வேலைக்கு எடுக்க மாட்டோம்.. அதுக்கு பெரிய புராசஸ் இருக்கு"

"ஐயா நீங்க பெரியவங்க..... இப்படில்லாம் தட்டி கழிக்க கூடாது... ஏதாவது கொறை இருந்தா சொல்லுங்க டெவலப் பண்ணிக்கிறேன்... ஆனா வேலை இல்லன்னு மட்டும் சொல்லிராதீங்க.. "

"ஆமா இவ்ளோ தெளிவா பேசுறீங்களே... உங்களை யாரு இங்கே அனுப்பிச்சாங்க... "

"அதுவா அது எங்க அண்ணன் தண்டோரா தான் அனுப்பி வச்சாரு..."

"அவரை நான் பார்க்கணும் அவரை கொஞ்சம் இங்கே கூட்டிட்டு வா..."

" நீங்க மட்டும் வேலை தரேன்னு சொல்லிட்டீங்கன்னா....... எங்க அண்ணன் என்ன? நான் வீரப்பனையே பொடனிலே தட்டி இழுத்துட்டு வந்திருவேன்"

"சரி.. சரி... இப்ப போய் உங்க அண்ணனை வர சொல்லு..."

இதை கேட்ட உடனே அப்படியே நம்ம கேபிள் அண்ணனுக்கு பாட்சா படம் புரொஜக்டர் இல்லாமையே மனசுலே ஒடிச்சு... தண்டோரா அண்ணன் சும்மா சிங்கம் மாதிரி நடக்குற மாதிரியும், அதை பார்த்து போலிசு டரியல் ஆனா மாதிரியும்... ஆனா அங்கே அப்படில்லாம் நடக்கலை...

நம்ம தண்டோரா அண்ணன் 'மாமன் மகள்' படத்துலே வருற கவுண்ட மணி மாதிரி வீட்லே இருந்தே நடக்க ஆரம்பிச்சிட்டார்... இதை பார்த்து கேபிள் அண்ணன் டென்சன் ஆகிட்டாப்ப்லே... சும்மா மானிட்டர் அடிச்சா மானிட்டர் மாதிரி வருவீங்கன்னு பார்த்தா ஜானி வால்கர் அடிச்சா சாணி வாக்கர் மாதிரி வாறீங்களே... நானே என்னோட தெறமைய வச்சி வாங்கிக்கறேன்.. நீங்க ஆணியே புடுங்க வேணாம் அப்படின்னு திட்டி விட்டுட்டு போய்ட்டாப்லே..


மறுபடியும் கமிசனர் அலுவலகம்:

"என்ன உங்க அண்ணனை வர சொல்லலை.. "

"கூப்பிட்டேன் அவரு நெப்போலியன் கூட இப்ப பிசியா இருக்காராம்.."

" ஒ.... நெப்போலியன் எம்.பி. கூடல்லாம் இருப்பாரா.. "

(ஹூ....க்கும்... அவரு நெப்போலியன், எம்.சி, கூட தான் பிசியா இருப்பார்.... ஆகா நாம ஒன்னு நெனச்சா தெய்வம் ஒன்னு நெனைக்கும்னு சொல்வாங்களே... அது இது தானா...) ஆ....மா...ஆமா...இதென்னா... அவரு நெனச்சா எட்டு பி. எம். அவரு காலடிலே...

(ஆகா... பெரிய எடத்து ஆள் போலே இருக்கே... நேக்கா தான் டீல் பண்ணனும்)"சரி போலிசு வேலைக்கு சேரனும்னு வந்திருக்கியே... அவங்களை பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"அப்படி கேளுங்க... கேபிளா கொக்கா... நீங்க இப்படில்லாம் கேப்பீங்கன்னு தெரிஞ்சு தான்.... இதுக்குன்னே... நேத்து நைட்டு புல்லா.. உக்காந்து.. என் கடமை, தங்கபதக்கம், ரகசிய போலீஸ், ரகசிய போலீஸ் நூத்தி பதினஞ்சு, புலன் விசாரணை, நூறாவது நாள், சாமி.. அது பத்தாதுன்னு... ஜாக்கி சான் நடிச்ச போலிசு கதை அதாங்க போலிசு ஸ்டோரி எல்லாம் பார்த்துட்டு... இன்னிக்கு வந்திருக்கேன்"

(அவனா நீயி..? என்று எண்ணியவாறே..) சரி போலிசு வேலைலே சேர்ந்து நீ என்னவெல்லாம் செய்வே..?

"நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுனாலும் செய்யலாம்னு... "

(இடை மறித்த ஆபீசர்)
"நாயகன் படத்துலே வசனம் இருக்குதா... ?"

(அடப்பாவி... நாம படம் பாக்குற ஆளுன்னு மேட்டரை கரெக்டா புடிச்சிட்டான் போலே இருக்கே...) இல்லே எங்க அண்ணன் தண்டோரா சொல்வாரு..

"நல்லா சொன்னாரு... உங்க அண்ணன்...( பார்ட்டி வேற பெரிய எடம்...) ஓகே... தமிழ்நாட்டில், தலை நகரம் எது?"

(ஹூ... ம்... தமிழ் நாட்லே 'தல'ன்னா அது அஜீத்து தான் அவரு எங்கே இருக்காரு...? இங்கே சென்னையிலே தான் இருக்காரு... அப்படின்னா இது தான் அவரு கேட்குறதுக்கு ஆன்சறு...) "சென்னைங்க..."

(அட... சரியா சொல்லிபுட்டாரே...)"சரி.. இது துப்பாக்கி...இதை மாதிரி வேற என்ன இருக்கு?"

(ஹையோ... டக்குன்னு ஞாபகத்திற்கு வர மாட்டேங்குதே... ஹான்.. ஞாபகம் வந்திடுச்சி...) "ரெட்டை குழல் துப்பாக்கி"

(அடப்பாவி... இதையும் சரியா சொல்லிட்டாரே... இவரை எப்படி சமாளிச்சு அனுப்புறது......!!!)"சரி... காந்திய சுட்டு கொன்னது யாரு..?"

"என்னது? காந்திய சுட்டு கொன்னுட்டாங்களா...!!! நானில்லே... நானில்லே.... ஆமா இது எப்ப நடந்துச்சி...?"

"இப்ப நீங்க வீட்டுக்கு போய், நாளைக்கு வந்து கூட சொல்லுங்க... இப்ப போங்க..."

தண்டோரா அண்ணன் அலுவலகம்

(அண்ணன், தண்டோரா அண்ணன் ஆபீஸ்லே உக்காந்து ஜாலியா சீட்டி அடிச்சிகிட்டு இருக்காரு... )

"என்ன.. கேபிளு... சீக்கிரம் வந்துட்டே... போன காரியம் என்னாச்சு.... வேலை கெடச்சுதா... ?"

"வேலை கெடச்சுதாவா.. வேலை கெடச்சு... முதல் கேசும் கெடச்சிட்டு....மொத கேஸே ஒரு கொலை கேசு.. நம்ம காந்திய யாரோ கொன்னுட்டாங்களாம்.. அது யாருன்னு நான்தான் கண்டுபிடிச்சி சொல்லணுமாம்..."


----------------இந்த கேசை கண்டு பிடிக்க அவரு உங்களுக்கு கூட போன் பண்ணலாம் அதனாலே பதிவர்களே.... உசார்... உங்களுக்கும் போன் வந்தாலும் வரலாம்--------------

Wednesday 9 December 2009

கேட்டேன்...கேட்டேன்...கேட்டேன்...



மொக்கை இல்லாத பதிவு கேட்டேன்
மொத்தல் இல்லாத விமர்சனம் கேட்டேன்
நெட்டில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியம் இல்லாத கிசு கிசு கேட்டேன்

உயிரை கிள்ளாத வாதம் கேட்டேன்
ஒற்றை வரியில் பின்னூட்டம் கேட்டேன்
வலிகள் செய்யாத விவாதம் கேட்டேன்
வயதுக்கு சரியான வெப்சைட் கேட்டேன்

கடிகள் இல்லாத "நையாண்டி" கேட்டேன்
இளமை கெடாத "கேபிள்" கேட்டேன்
பறந்து பறந்து "தமிலிஷ்" கேட்டேன்
பாசாங்கு இல்லாத "தமிழ்மணம்" கேட்டேன்

விரலின் நுனியில் பதிவை கேட்டேன்
பதிவின் மத்தியில் மொக்கை கேட்டேன்
தானே விழுந்திடும் ஓட்டை கேட்டேன்
தலையை கோதும் பாராட்டு கேட்டேன்

நிலவில் நடக்க சாலை கேட்டேன்
ஒல்லிக் குயிலியின் நாடகம் கேட்டேன்
நடந்து போக ரோட்டை கேட்டேன்
கிடந்து உருள சரக்கு கேட்டேன்

தொட்டுப்பார்க்க நமீதா கேட்டேன்
எட்டி பிடிக்க சங்கீதா கேட்டேன்
துக்கம் மறக்க சுனைனா கேட்டேன்
பக்கம் பார்க்க பாவனா கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு புல்(full) கேட்டேன்
புல்(full)லுகெல்லாம் சைட்டிஷ் கேட்டேன்
மனிதர்கெல்லாம் ஒரு பானம் கேட்டேன்
பறவையையெல்லாம் பொறித்துக் கேட்டேன்

குறைந்த பட்சம் முட்டை கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று கவுஜை கவுஜை கேட்டேன்


இன்னும் எழுதலாம்... பதிவர்களே... நீங்களும் கொஞ்சம் பின்னூட்டத்திலே கேட்டுட்டு போங்க.. (பி.கு. நைனாவிடம் கைமாத்து கேட்டேன் என்ற வரி ஏற்றுகொள்ள படாது... )

Monday 7 December 2009

உரையாடல் போட்டிக்கு அல்ல....

Number 1:


Number 2:


Number 3:


Number 4:


Number 5:



தயவு செய்து யாரும் காண்டாக வேண்டாம், வேண்டாம், வேண்டாம் என்று விழா கமிட்டியார் சார்பாக கேட்டு கொள்ளபடுகிறார்கள்

Wednesday 2 December 2009

எனது ஆசான் அண்ணன் தண்டோராவிற்கு சமர்ப்பணம்




நீரும், நீரோக்களும்

மாநிலங்களுக்கு இடையே...
பிரச்சினை
"பிரச்சினை தீர்ப்பது "நீரோ"!

மாநில தலைவர்களிடேயே...
பிரச்சினை
"பிரச்சினை தீர்ப்பது "நீ"ரோ?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மரமும் பெண்ணும்



மரமே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்ந்து பட்டவளா?

பெண்ணே நீ ஏன் இப்படி...!
ஒ..!
நீ வாழ்க்கை பட்டவளா?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சந்தேகம் இல்லாமல்...

உன் தேகம்?
உனக்கு இல்லை!

என் தேகம்?
எனக்கு இல்லை!

உன் தேகம்?
எனக்கும் இல்லை!

என் தேகம்?
உனக்கும் இல்லை

எல்லார் தேகத்திலும்
சந்தேகம் மட்டும்.
சந்தேகமின்றி!!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பொறுப்பு துறப்பு:

நேற்று
அலை பேசியில் ஒரு அலை

பேசியது
ரமேஷ் வைத்யா எனும் தலை

சொல்லியது
உன்னுள் உறங்குது ஒரு கலை

அதனால்
இன்று நடந்தது இந்த கொலை

வேண்டாம்
எனக்கு பீச்சில் ஒரு சிலை


Tuesday 1 December 2009

வேட்டை ஆரம்பிச்சிடுச்சி.. டோய்...


உடைத்தது எதுவென்று
தெரியாமலும்
உடைத்தது தீர்ந்ததென்று
அறியாமலும்
இன்னமும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்
உருண்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னார்கள் என்று சொல்ல
இயல்பாய் ஒரு பதத்தைத் தேடி
போதையின் சுழலில் சிக்கித் தவிக்கிறேன்.
குடிகாரரின் குழந்தைகள் என்கிறார்கள் சிலர்.
அதுவாயின்
குடிகாரனுக்கு உடனடியாய் தேவை
மூனு கிலோ அரிசியும்
முன்னூறு ரூபாயும்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *



"எம்.கே.டி".யுடன் வந்தேன்.
தந்தேன்.
முகம் சுளித்துக் கொண்டு வந்தாள்
"சிவாஜி கணேசனை"
தத்துக் கொடுத்தேன்.
சோர்ந்து போய் வந்தாள்.
இவனை விட்டு "ஜெமினியை" பிடியென்றேன்
சிவனே என்று திரும்பினாள்.
முன்னரே
"கமல் ஹாசனை" தந்திருந்தால்
முத்தமிட்டிருக்கலாம்
என்றேன் நண்பனிடம்.
"விஜய்" என்றான் அவன்..
நான் செருப்பணிந்த பெண்ணிடம் பேசியதை
நினைவுப்படுத்திவிட்டு திரும்பினேன்.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

டிஸ்கி:
"அது என்னடா.. உ... ஊ... ?"
" சரக்கு போட்டு ஊதுரியா...."
"இல்லே.. வேட்டை ஆரம்பிச்சாச்சு... அதான் சங்கு ஊதுறேன்..."
"யாருக்கு..?"
"யாருக்கோ!"

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
"சூரையாடல்" போட்டி ஆரம்பம் ஆகி விட்டது... அதற்க்கு மக்கள் சூளுரைத்து களம் காண புறப்பட்டு விட்டார்கள்... அதனால் நானும் எனது... மேற்கண்ட துதி பாடலுடன் களம் இறங்கியாச்சு....

ஒ... நான் இன்னும் போட்டிய பத்தி சொல்லவே இல்லே பாருங்க... போட்டி ரொம்ப சிம்பிள். இது எங்கே இருந்து சூரையாடப்பட்டதுன்னு கண்டு பிடிச்சி நீங்க மனசுக்குள்ளே வச்சிக்கணும்... பின்னூட்டத்திலே என்னை மட்டும் பாராட்டி பின்னூட்டம் போடணும்... யாரும் ரொம்ப அதிகம் பின்னூட்டம் போட்டிருக்காங்களோ அவங்களுக்கு...... அஸ்க்கு புஸ்க்கு... பரிசு பின்னர் அறிவிக்கப்படும்...


"வேட்டை ஆரம்பிச்சிடுச்சி.. டோய்..."



Monday 30 November 2009

டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...உன்னை கண்டாலே ஆச்சர்யமே...!



மும்பையிலிருந்து நையாண்டி நைனா, வலையுலக சுனாமி அண்ணன் தண்டோராவை காண செல்கிறார். பினாமிகள் வேணா ஊருக்குள்ளே இருக்கலாம், சுனாமி எங்கே இருக்கும்? தண்ணிலே தான் இருக்கும். (இங்கே டபுள் மீனிங் பார்க்குறவங்க பிளாக்கும் கண்ணும் அவிஞ்சி போயிரும் ஆமா நான் சொல்லிபுட்டேன்...)

சென்னையிலே தண்ணி எங்கே இருக்கு? அப்படின்னு சின்னபுள்ளை தனமா அறிவாளி கேள்வி கேட்டா... நீங்க சந்த்ராயன் அண்ணாதுரை கிட்டே வேலைக்கு சேர வேண்டிய ஆளுன்னு அர்த்தம். அதனாலே உடனே இந்த வெட்டி பிளாக்கை மூடிட்டு...
இம்மீடியட்லி காண்டாக்ட் எனி பெர்சன் பட் C/O. மிஸ்டர்.அண்ணாதுரை,

தண்ணி எங்கே இருக்கும்? எங்கும் இருக்கும். டாஸ்மாக்குலே தான் தட்டுபாடு இல்லாமே கிடைக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்னு சொன்னீங்கன்னா... அல்ரெடி நீங்க அண்டர் எனி பெர்சன் C/O.மிஸ்டர்.அண்ணாதுரைன்னு அர்த்தம்...

பட் அந்த அண்ணாதுரை வேறை, இந்த அண்ணாதுரை வேறைன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணுமா...அவ்வ்வ்வ்.

பார்த்தீங்களா... அண்ணனை பத்தி நெனச்ச உடனே... எப்படி மானிட்டர் நெறையுது... பார்த்தீங்களா... எச்சூஸ் மீ... நான் என்னோட கம்ப்யூட்டர் மானிட்டரை சொன்னேன்... தண்ணி நெறையா இருக்குற எடம், பீச்சு அதானாலே சுனாமியும் அங்கே தான் இருக்கும். அங்கே தான்... அங்கே தான்... அங்கேயே தான், அங்கே பீச்சுலே தான் சந்திக்க போறார்.

"அங்கே என்னா நடந்துச்சு?"

அதை சொல்ல தானே போறேன்... சரி... சுதி கொஞ்சம் ஏத்தி...கோங்க... பாட்டல்னா பாட்டல், ஆர்மோனிய பெட்டினா.. ஆர்மோனியபெட்டி... உங்களுக்கு எது வசதியோ அது...(கஸ்டமர் சேட்டிஸ்பாக்சன், ரொம்ப முக்கியம்)

அப்படியே... மௌன கீதங்கள் பாக்கியராஜை கற்பனை பண்ணிக்கோங்க.. அது தான் "அண்ணே". என்னாது? கற்பனையே பண்ண வேண்டாம், அண்ணன் அப்படிதான் இருப்பாரா? அது உங்க இஷ்டம். ஆனா நையாண்டி நைனா அந்த சின்ன பையன் மாதிரி தான். அதனாலே நையாண்டி நைனாவை சின்ன பையன் மாதிரியே கற்பனை பண்ணிகொங்க... அங்கே என்ன நடந்துச்சி அப்படிங்குறதை... உங்க மன திரையில் காண்க... ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்.....

நைனா:
டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...
உன்னை கண்டாலே... ஆச்சர்யமே...

டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...
உன்னை கண்டாலே... ஆச்சர்யமே...


தண்டோரா:
நைனா.. நைனா... "நைண்டி".. நைனா...
எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்

நைனா.. நைனா... "நைண்டி".. நைனா...
எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்


நைனா:
உன் பிளாக்கை பார்த்தாலே...,
உன் பதிவை திறந்தாலே...,
கம்..பூட்டரும் எலி போலே...,
ஏன் நாழுது...?

உன் பிளாக்கை பார்த்தாலே...,
உன் பதிவை திறந்தாலே...,
கம்..பூட்டரும் எலி போலே...,
ஏன் நாழுது...?


தண்டோரா:
பதிவர்கள் சில பேரு...
செய்கின்ற தப்பை தான்...
அடியேனும் இந்நாளில் செய்றேனப்பா...


நைனா:ஹான்...

தண்டோரா:
பதிவர்கள் சில பேரு...
செய்கின்ற தப்பை தான்...
அடியேனும் இந்நாளில் செய்றேனப்பா...


நைனா:அது என்ன தப்பு... ?

தண்டோரா:"போயம்ஸ்"...!

நைனா:என்கிட்டே சொல்லு...!

தண்டோரா:நோ..நோ..

நைனா:சொல்லாம போனா விட மாட்டேன்பா..

தண்டோரா:வேண்டாம்.. வேண்டாம்...

நைனா:ஹான்...

தண்டோரா:"நைண்டி"... நைனா...

நைனா:ஹான்...

தண்டோரா: அதை சொன்னாலும் புரியாதப்பா...

நைனா:டோரா... டோரா...

தண்டோரா:வலையோர நண்டெல்லாம் தான் பெற்ற குத்தோடு, எப்போதும் கட்டோடு விளையாடுதே...

வலையோர நண்டெல்லாம் தான் பெற்ற குத்தோடு, எப்போதும் கட்டோடு விளையாடுதே...

அது போலே நம்மோடு சும்மாவும் கை கலந்து அன்போட விளையாட மனம் ஏங்குதே...


நைனா:உன் மூக்கை பார்த்து...

தண்டோரா:தேன்க்யூ

நைனா:விடுவேனே குத்து...

தண்டோரா:ரியல்லி...

நைனா:எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:ஹான்

தண்டோரா:"நைண்டி"... நைனா...

நைனா:ஹான்

தண்டோரா:எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்

நைனா:டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...உன்னை கண்டாலே ஆச்சர்யமே...

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:ஹான் ... டோரா.. டோரா..

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:டோரா.. டோரா..

Friday 27 November 2009

சரக்கே உன்னை ஆராதிக்கிறேன்...



போதை என்பதற்கு சரியான இலக்கணம் எது?அது நம் பார்வையை பொறுத்த விஷயம்.. எனக்கு பதிவுகள் மிகவும் பிடிக்கும்.. என் நண்பன்.. என்னா ரசனைடா உனக்கு? வேலை வெட்டி இல்லாமே போடுறது... என்பான்.. சற்றே தீவிரமாய் சிந்தித்து(?) இடதுசாரி, வலதுசாரி அப்பப்ப, ரம்பா சாரி சிலுக்கு சாரி... (சாரி நான் கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேன்...) என உரித்தெடுத்து எழுதி இருப்பார்கள், அவர்கள் (உரிமைதான்) அதுதான் ஒரு வித்தியாசமான அப்பீலை அவர்களுக்கு (தோ..பார்டா) கொடுத்திருக்கும்) லக லக லக..... தளத்தின் நையாண்டி நைனாவை "அவதாரில்" பார்த்தால் கேவலமாக இருப்பார். (ஹேய்... மிஸ்டர் பீன், கல்ல கொண்டு அடிக்காதே... நைனா பாவம்) ஆனால் நேரில்..? மேன்லி & மெஜஸ்டிக்... (ஹேய்... மிஸ்டர் நைனா, சொல்ல கொண்டு அடிக்காதே... பதிவர்கள்.. பாவம்.) ஏன்? 'டங்கள் அன் டங்களில்' எவர்சில்வர் பாத்திரம் எனக்கு அகோரமாய் இருந்தது.ஆனால் என் வீட்டு மண்சட்டி.. அது அழகு..



ஒரு விளம்பர படப்பிடிப்பில் சிறந்த கவிஞர் விருது பெறாத அண்ணன் தண்டோரா அவர்களின் புகைப்படம் பார்த்தேன். மிக எளிமையான கிராமத்து இளைஞன்(?) முகம். வலிகள் தாண்டி கிடைத்தவெற்றியின் தாக்கம் அவர் முகத்தில் ஜொலித்தது.[இப்ப அண்ணி உங்களை அடிக்குறதை நிறுத்திட்டாங்களா அண்ணா... ஓ....... இது பொது தளமா.... மன்னிக்க.. அப்புறமா தனியா இருக்கப்ப... கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை எடுத்து வச்சிக்கிட்டு.. 108 க்கு போன் போடுங்க... (கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு நன்றி... இல்லேன்னா நானும்லோ போய் அடி வாங்கணும்...)] அப்படியொரு களை ..அந்த தன்னடக்கமான ,பெருமிதம் கலந்த மெல்லிய புன்னகையில் பேரழகாய் தெரிந்தார்.

போதையான விஷயங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்தேன்..பதிவு, எதிர் பதிவு, பின்னூட்டம், புண்ணூட்டம், கவுஜை, எதிர் கவுஜை, மொக்கை, மைனஸ் ஓட்டு, எதிர் வினை, தொடர் பதிவு, கதை போட்டி, கவிதை போட்டி, பலாப்பட்டறைகள இன்னும் இத்யாதிகள்.. ஆனால் திருப்தியே வரவில்லை. நண்பர் ஒருவர் சொன்னார். பக்கத்து ஊரில் ஒரு வி'அலம்பரக்காரர்' இருக்கிறார், அவருடன் ஒரு நாள் கழித்து விட்டு வா..

வி'அலம்பரக்காரரின்'எளிமையான அறை.... நாலைந்து ஆட்டு குட்டிகள், கோழிகள், ஒரு நாய். வேறு மனிதர்கள் இல்லை... (அவரு என்னிக்கு கவிதை எழுத ஆரம்பித்தாரோ அன்னிக்கு சுவரு ஏறி குதிச்சு ஓடி காணாமே போனவங்கதானாம்...)அப்புறம் ஒரு ரகசியம்.... அலமாரியின் பின்புறம், யாரோ ஒரு ஆங்கில பெண்மணி போஸ் கொடுத்து இருக்க, பளபள காகிதத்தில்... வெளிநாட்டு அச்சில்...(உங்களுக்கு ஏன் வடியுது எச்சில், அஸ்க்கு புஸ்கு... நீங்க எதிர் பார்க்குற புத்தகம் இல்லே...) கவிதை புத்தகம், இலக்கிய புத்தகம், வரலாற்று புத்தகம். "டேமிக்கோ படாக்கோவ்", "புஸ்க்கன் மிஸ்டா சூங்" போன்று வாயிலே நுளையாதது எல்லாம் அதுக்கு பேராம்.

அவருக்கு எழுபது வயதிருக்கலாம். ஆனாலும் "யூத்து" என்று அவரை சேர்ந்தவர்கள் சொல்லி "கொல்வார்கள்", இவரிடம் என்ன போதைய காண்பது என்று அந்த அறை.. விட்டு வெளியேறி விட்டேன்..



அன்றைய தினம் பொழுது சாய்ந்தது... பாருக்கு கிளம்பினேன்.. அந்த மாலையில், அந்தி வேளையில் எதுவும் அழகாய்த்தான் இருந்தது... ஒரு மரத்தடி. அந்த "யூத்தை" பார்த்தேன்.. அவரா இவர்? என்னால் நம்பமுடியவில்லை.. ஒழித்து வைத்திருந்த ஒரு பேரல் சரக்கை ஒற்றை ஆளாய் முடித்து கொண்டிருந்தார்.. "கொலை வெறி" ராகத்துடன் ஏதோ ஒரு டப்பாங்குத்து பாடல்.. செவி கிழிந்தது... அவர் தலைக்கு பின்னால் கதிரவன்.. என் கோணத்தில் இவர் குரல் "இனிமை" தாங்காது... ஆதவன் அரண்டு ஓடுவதாகவே.....

பலர் கண்ணை குத்தி, பதமாக மறைந்து, நவிழும் கோப்பையை அழகாய் பற்றி, அதுவும் நழுவினாலும், நழுவி விடும் என்று எண்ணி ஒரு புட்டியில் அடைத்து, ரப்பரும் மாட்டி கையில் பற்றி கொண்டு.. குழந்தைக்கு முதல் முலைப்பாலை ஊட்டும் தாயை போல் அவர் கைகள் போதையில் நர்த்தனம் புரிய எனக்குள் விவரிக்க இயலாத பிரமிப்பு தோன்றியது.. உலகில் இதை விட போதைய காண முடியாது என்றே தோன்றியது.. அவரையே அப்பட்ட காப்பி அடிக்க ஆரம்பித்தேன்.. அப்போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும்!! என்னை விட கேனையன் யாரும் இருக்க முடியாது என்ற முடிவிற்கு நீங்கள் வந்திருப்பீர்கள்... பின்னே.... நான் அவரை காப்பி அடிக்கேறேன் என்று சொல்லி "ஒரிஜினல் காப்பி"யை தானே அடித்துகொண்டிருந்தேன்.. கிளாசு கிளாசாய்..... (ஏதோ ஒரு பதிவுலே.. அப்படின்னு சொல்லி... இன்னும் மொக்கை போட விரும்பலே... இன்றைய பதிவுலே... எழுத்தாளர் தண்டோரா அண்ணன் போட்டத கொஞ்சம் கற்பனை சேர்த்திருக்கிறேன்... உல்ட்டா அடித்திருக்கிறேன்...)

போதை என்பது என்ன?உங்கள் பார்வையிலிருந்து எழுதுங்கள்..விதிமுறைகள் இல்லை... நான் அழைப்பது.. வேண்டாம்... நான் கூப்பிடாமலையே... எல்லாரும் காண்டாகி... வந்து கிட்டு இருக்காங்க... இருந்தாலும் பதிவுலக கடமை மீறக்கூடாது... பாருங்க.. அதனாலே அழைசிடுறேன்..

1 . "தமிழ் தாயின், கலைச்செல்வன்" அண்ணன் தண்டோரா.
2 . "மும்பை தாயின், தத்து பையன்" இரும்புத்திரை அரவிந்த்.
3 . "சூரத் கோட்டையின் சிங்ககுட்டி" ராசு...
4 . "கோடம்பாக்கத்தின் கோடை இடி" அண்ணன் கேபிள் சங்கர்.

டிஸ்கி: முன்பு எழுதிய ஒரு மரண சாசனம்:

சமையல் கட்டில் இருக்கிறேன்!!
பயமாய் இருக்கிறது...

அதே வரிகள்தான்..ஆனால்
இந்த முறை
நான் சமைத்ததை பார்த்து..!!

டிஸ்கி : 2
இந்த இடுகையை நீங்கள் படிக்கும் போதும், பின்னூட்டம் இடும் போதும், வாக்களிக்கும் போதும்...அப்படியே மெர்சலாகி என்னை திட்டும்போதும்... .ஆஹா....எவ்வளவு போதை !!

Monday 16 November 2009

பத்து கேட்டவங்களுக்கு ஒரு "பத்து"...



அல்லாருக்கும் வணக்கம், இதுவரை காணாமே போய் இருந்த என்னை, நம்ம தம்பி, திருநெல்வேலியின் திருத்துருவம், மும்பையின் முண்டாசு பையன், கண்ணாடி இதயம் கொண்ட நமது இரும்பு திரை அரவிந்த் அவர்கள் இதில் கோர்த்து விட்டு, உங்க பாவத்தை சம்பாதித்து கொள்கிறார் என்பதனை அறிவித்து...தொடங்குகிறேன், தொடர்கிறேன்...
******************************************************************

அரவிந்த்: வாங்க ஸ்டார்ஜன் அண்ணே... என்ன இந்த பக்கம்!!! இது மொக்கை ராஜாக்கள் எல்லாம் வாக்கிங் போற இடமாச்சே...

ஸ்டார்ஜன்: ஆமா தம்பி, நீங்க நல்லா இருக்கீங்களா... இங்கே மொக்கை ராஜாக்கள் சுத்துற இடம்னு, நீ நிக்குறப்பவே தெரிஞ்சுகிட்டு தான்.... ஓடிக்கிட்டு இருக்குற பஸ்சுலே இருந்து "டகால்னு" குதிச்சி இறங்கினேன்.

அரவிந்த்: (அடச்சே... நம்ம பிட்டை நமக்கே திருப்பிட்டாரே... நாம இனி கவனமா இருக்கோணும்) அமுல் பேபி மாதிரி இருந்துட்டு... அமுக்கி குத்துறே..லே... யாரை பார்க்க வந்தீங்க...

ஸ்டார்ஜன்: நம்ம நைனா, சரக்கை போட்டுட்டு இந்த பக்கம் தான் வருவாராம்.... அவருகிட்டே ஒரு பத்து கேட்கலாம்னு...

அரவிந்த்: ...க்கும்... வெளங்கிரும்.... எவனாவது நல்ல சரக்கு ஊத்தி வச்சிருப்பான் அதை ஆட்டைய போட்டு கள்ள சரக்கா மாத்தி ஊத்திட்டு வருவாரு... அவருகிட்டே... நீங்க பத்து வாங்கவா...

ஸ்டார்ஜன்: அட அது இல்லே தம்பி... இன்னிக்கு காந்தி ஜெயந்தி..., பார்டி சரக்கு இல்லாமே... தெளிவா வருவாரு... அவருக்கு அரசியல்லே, நடிப்புலே... இப்படி யாரை எல்லாம் பிடிக்கும்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு... பதிவு போட சொல்ல தான்...

அரவிந்த் : (ஆமா அவரு பெரிய "சார்லசு இளவரசர்"... இவரு... பெரிய "பாப்பரசி" நிருபர்... பின்னாடி விரட்டி கிட்டே போய் தான், மேட்டரும் படமும் எடுப்பாரு..... அடச்சே... நானே அதுக்கு தானே வந்திருக்கேன்...) ஆமான்னே... நானும் அதுக்கு தான் வந்திருக்கேன், ஆமா இதை ஒரு பொழப்பாவே வச்சி.. எல்லாரையும் கெளப்பி விட்டுகிட்டே தான் இருக்காங்களா.... இன்னும் பதிவுலகத்திலே...

ஸ்டார்ஜன்: தம்பி... அங்கே பாருங்க... அந்த மரதடிலே... நம்ம நைனா... யாருகிட்டயோ.... மொக்கை போட்டுக்கிட்டு இருக்காரு...
----------------------------------------------------------

நைனா: என்ன இப்படி கூட்டமா வந்திருக்கீங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: (ரெண்டு பேரு வந்ததுக்கே... இந்த பில்டப்பா... ) உங்க கிட்டே சில கேள்விகள் கேட்டு பதில் வாங்கிட்டு போலாம்னு... வந்திருக்கோம்....

நைனா: ஒ.. யூ மீன் பேட்டி...

ஸ்டார்ஜன் : (வேட்டிக்கே வக்கில்லாததெல்லாம், பேட்டிய பத்தி பேசுதே... !!!) அப்படியும் வச்சுக்கலாம்....

நைனா: அப்படியா... எந்த பேப்பர், யூ.எஸ்.ஏ.டுடேயா? வால் ஸ்ட்ரீட் ஜர்ணலா? நியூ யார்க் போஸ்டா... ?

ஸ்டார்ஜன் :ஏய்.... அரவிந்து... பார்டி என்னடா...? என்னன்னோவோ பேரெல்லாம் சொல்லுது...

அரவிந்த் : (எனக்கும் இதை கேட்டு ரெத்தம் கொதிக்க தான் செய்யுது...) அதெல்லாம் சும்மா டுபாக்கூரு... தினத்தந்தி பேபரையே பார்டி, சலூன்லையும் டீ- கடையிலையும் மட்டுந்தான் 'பார்த்திருக்கும்'... இருந்தாலும் என்ன செய்ய நம்ம நேரம்...

ஸ்டார்ஜன்: பிளாக்கு... பிளாக்கு ஒன்னு இருக்கு அதுலே, எழுத தான்... நீங்க கூட ஒன்னு வச்சிருக்கீங்க...

நைனா : (காந்தி ஜெயந்தி அன்னிக்கு நாம பிளாக்லே சரக்கு வாங்கினது இவருக்கு எப்படி தெரியும்... ) ஆமா... நீங்க என்ன போலீசா?

அரவிந்த் (விழுந்து விழுந்து சிரித்து கொண்டே) :யோவ்... நைனா... அந்த பிஞ்சு மூஞ்சை பார்த்து... போலிசுன்னு சொல்றே, உன்னோட நகைச்சுவை உணர்வை பல பேரு சொல்ல கேட்டிருக்கேன், ஆனா இன்னிக்கு அது உண்மைன்னு தெரிஞ்சுகிட்டேன்...

ஸ்டார்ஜன் : தம்பி என்ன!!! நீ.... சேம் சைடு கோல் போடுறே? திடீர்னு...

அரவிந்த் : சாரிண்ணே... மன்னிச்சுகோங்க... இருந்தாலும் அவரு உங்கள போலிசுன்னு நெனச்சி பயப்படுறாரே அதை நெனச்சி சிரிக்கேன்...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அதெல்லாம் ஒன்னும் இல்லே... பிலாக்குக்காகா, அதாவது பதிவுக்காகா வந்திருக்கோம்.

நைனா : சரி என்னமோ போங்க... கேளுங்க..

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அரசியல்வாதி, எழுத்தாளர், கவிஞர், இயக்குனர், நடிகர், நடிகை, விளையாட்டு.. இதில் பிடிச்சவங்க, பிடிக்காதவங்க... பத்தி கொஞ்சம் சொல்லுங்க..

நைனா : என்ன? ஏழு தானா?

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: இப்போதைக்கு இவ்ளோ தான்.

நைனா :அண்ணனை டென்சன் பண்ணாதீங்க... நம்பர்லே எனக்கு பிடிக்காத நம்பர் ஏழு மட்டுந்தான். அந்த ஏழு கதை எழுதுறவர் என்னிக்கு திருநெல்வேலிகாரங்களை பிடிக்காதுன்னு சொன்னாரோ அன்னிலேருந்து எனக்கு ஏழு பிடிக்காத நம்பரா போச்சு... சோ, கொஞ்சம் அதிகமா கேளுங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: இதென்னடா பொல்லாப்பா இருக்கு... சரி, பிடிச்ச, பிடிக்காத பேச்சாளர். இதை சேர்த்து எட்டாக்கிகொங்க.

நைனா : அண்ணன் கிட்டே தானே கேட்குறீங்க.. கூட கேட்க வேண்டியது தானே.. நான் என்ன சொல்ல மாட்டேன்னா சொல்ல போறேன்...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: தொழிலதிபர், இசையமைப்பாளர் இதையும் சேர்த்து பத்தா சொல்லுங்க...

நைனா : இவ்ளோ தானா... என்கிட்டே கேட்க இவ்ளோ தான் இருக்கா.. உங்க கிட்டே... அண்ணன் கிட்டே கேட்கனும்னு வந்துட்டீங்க.. தயங்காமே கேளுங்க...

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: ஒ.. அப்படியா... பிடிச்ச, பிடிக்காத பதிவு, பாடகர், பாடகி இதையும் சேர்த்துகோங்க... பதி மூணு ஆகிரும்.

நைனா : என்னாது பதிமூனா... விஞ்சானதிலே விஞ்சி இருக்குற வெள்ளைக்காரனே... பதிமூனை பார்த்து அலறுவான், அதனாலே கூட கேளுங்க. பொது அறிவை வளர்த்து கொங்க..

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: என்ன இது...!!!! சரி, 'சமூக சேவகர்' இவரை சேர்த்து பதினாலா ஆக்கிருங்க...

நைனா : என்னாப்பா இது, ஒன்னு ஒண்ணா கூட்டுறீங்க... அண்ணன் கிட்டே என்ன காசு பணமா கேட்குறீங்க... உலக விசயங்களை தானே கேட்குறீங்க... அதனாலே யோசிக்காமே கேளுங்க... யோசிக்க கேளுங்க.

அரவிந்த் அண்ட் ஸ்டார்ஜன் அன் கோ: அப்படியா... நீங்க பல பத்திரிகை பேரு சொல்லும்போதே நெனச்சோம், ... நீங்க பெரிய ஆளாத்தான் இருப்பீங்கன்னு.... முனைவர், வைத்தியர், ஆராச்சியாளர், கேமரா மென், பெண் கவிஞர், பெண் எழுத்தாளர்னு போட்டு இருபது ஆக்கிருங்க... எங்களுக்கும் படிக்க நல்லா பொழுது போகும்.... திடீர்னு எப்படியாது, எங்கேயாவது சண்டை பிச்சுகிசின்னா... இன்னும் ரெண்டு வாரத்துக்கு... மேட்டர் போடாமலேயே.. பொழுதை ஓட்டிரலாம்...


நைனா :எப்பா... நல்லவங்களா... இப்படி தான் இருக்கணும், அண்ணனோட அறிவுகண்ணை தொறந்து வச்சிட்டீங்க... அதோடு பல வாசகர்களோட அறிவுகண்ணையும் தொறந்துட்டீங்க... அண்ணன் பதில் சொல்லாமலையே... இன்னும் கேளுங்க... கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு எப் எம் ரேடியோ மாதிரி சொன்னாலும், கேட்டு கிட்டே இருந்தீங்களே.... அந்த தன்னம்பிக்கைக்கு இந்த அண்ணன் தலை வணங்குறேன்...

ஒரு கேள்வியா ரெண்டு கேள்வியா... இருபது, இருபது கேள்வி கேட்டிருக்கீங்க... ஆனா அண்ணனுக்கு மொக்கை போடுறது மட்டுந்தானே தெரியும், இப்படிலாம் கேள்வி கேட்டு அண்ணனை பெரிய ஆளா ஆக்கி புட்டீங்களே... இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்னு தெரியலையே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஒன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்... கேள்வி கேட்குறது ஈசி ஆனா பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்னு... இப்போ தெரிஞ்சி கிட்டேன்னு சொன்னா ரொம்பா சாதாரணம்...அதை விட ஒன்னு நல்லா புரிஞ்சிகிட்டேன்... அது வேற ஒன்னும் இல்லே... " நீங்க ரெண்டு பெரும் ரொம்ப நல்லவங்கன்னு" புரிஞ்சிகிட்டேன்... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


டிஸ்கி 1: அண்ணன் ஸ்டார்ஜன் அவர்களே, மன்னிச்சிகோங்க... சும்மா மொக்கை போடுறதுக்கு தான் செஞ்சிருக்கேன்... காண்டாகிராதீங்க.
டிஸ்கி 2: பதில் சொல்லாமே தப்பிக்க, என்னவெல்லாம் செய்யா வேண்டி இருக்கு...

Thursday 12 November 2009

ஹே... நானும் பெரிய புடுங்கிதான்...


நான் எழுதாத போதும் தினந்தோறும் எனது கடைக்கு, பல பேரு வருகை தந்திருக்கிறார்கள். அதில் இவன் என்ன எழுதி இருக்கிறான்? பார்க்கலாமே! படிக்கலாமே! என்று வந்தவர்கள் விரல் விட்டு எண்ண கூடிய அளவிற்கு வந்திருப்பார்கள் என்று யாரும் பொறாமை பட வேண்டாம், வந்தவர்கள் உலகில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கையிலேயே இருந்திருப்பார்கள். ஆனால் அதே சமயத்தில், நல்ல வேளைடா!!! இவன் ஒன்னும் எழுதலே நாம தப்பிச்சோம் என்று வந்து "கன்பார்ம்" பண்ணிட்டு போனவங்கதான் மிக அதிகம் என்று எந்த உளவு துறை ரிப்போர்ட்டும் சொல்லாமலேயே எனக்கு தெரியும்... ஹி...ஹி...ஹி.... அந்த நல்ல உள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளும். வணக்கங்களும்.



இதுநாள் வரை, நான் பிடுங்கியது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான் என்று அறியப்பட்டது. இப்போது எனது திறமையை (அப்படி ஒன்னு இருக்குன்னு தான் எல்லாரும் நம்பிகிட்டு இருக்காங்க...)மேலும் செம்மை படுத்தும் முகமாக, பல பயிற்சி பட்டறைகளுக்கு சென்று வந்தேன். ஆகையால் தாங்களும், எனது மொக்கை ஏதும் இன்றி மகிழ்ச்சியாக இருந்திருக்க கூடும். ஆனால் என்ன செய்வது...?! விதி வலியது அல்லவா...!!! நான் எனது பயிற்சியாளர்களை படுத்திய பாட்டால், அவர்களும் அவர்கள் தலை தப்பினால் போதும் என்று எண்ணி, என்னை "பெரும்புடுங்கி" என்று ஒப்பு கொண்டு விட்டார்கள்.. ஆகவே...

நான் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற, நல்லவர்கள் பதிவர்கள் பக்கமே வந்து விட்டேன்.
தலைப்பு பதிவுலே வரனுமாமே..!!!
அதனாலே... என்னை, பற்றி என்னோட பயிற்சியாளர்கள் சொல்லியதை சொல்லி முடிக்கிறேன்.

"ஹே... நானும் பெரிய புடுங்கிதான்".



இனி மொக்கைகள் தொடரும்....

Wednesday 14 October 2009

கணவர்களை அடையாளம் காண பத்து வலிகள்..!!!(பிழை இல்லே)



நமது நண்பர்... திரு. கார்த்திகை பாண்டியன் அவர்கள் ஒரு பதிவு போட்டிருக்காரு... அதே பாணியிலே... நம்ம பணி.

இந்த உலகத்தில் அநியாயத்துக்கு நல்லவர்களாகத் திரிபவர்களுக்கு சமூகம் தரக் கூடிய பெயர் - கணவர்கள். "எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடிய" இந்தக் கைப்பிள்ளைகளை அடையாளம் காண எளிமையான வழிகள் இங்கே..

--> கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மனைவியோடு ஷாப்பிங் போவார்கள். திரும்பி வரும்போது கையில் ஒரு ரெண்டு ரூபாய் மட்டுமே மிச்சமாக இருக்கும். அதுவும், வேறு ஒரு 'ரங்ஸ்' கூட்டிகிட்டு வந்த 'தங்க்ஸ்' இவரு வாசல்லே இருந்த நெலமைய பார்த்து பிச்சையா போட்டதா இருக்கும். "கல்யாணம் கட்டிகிட்டா, கைலே நாலு காசு போரளும் " என்று வசனம் பேசிக் கொண்டிருப்பார்கள், கடைசியில் திருவோடு எடுத்து தெருவோடு போகும் வரை.

--> மழை பெய்த இரவில் தங்க்ஸ் அருகே போகும்போது, பக்கத்தில் இருப்பவர்கள் காதில் எதுவும் தெறித்து விடக் கூடாதே என மெதுவாகப் போவார்கள். எதிரே வரும் தங்க்ஸ் இவர்களின் மீது ஏழு வீட்டுக்கு கேட்குமாறு லட்சார்ச்சனை செய்து விட்டுப்போனாலும் அசர மாட்டார்கள்.

--> பண்டிகை நாட்களில் மொபைலில் அதிகமாக காசு பிடிப்பார்கள் என்று தெரிந்தும், கவலை இல்லாமல் (தன்னை யாரும் மதிக்கவில்லை என்றாலும் கூட) அவளுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் போன் பண்ணி வாழ்த்து சொல்லுவார்கள்.

--> டிராபிக் சிக்னலில் மிகச்சரியாக ஸ்டாப் கோடுக்கு வெகுமுன்பாகவே வண்டியை நிறுத்தி விடுவார்கள். சிவப்பு பச்சையாக மாறும்வரை பொறுமையாகக் காத்திருந்துதான் போவார்கள். இதனால் பின்னால் உக்காந்திருக்கும் தங்க்ஸ் கிட்டே வண்டி வண்டியாய் திட்டு வாங்குவார்கள்.

--> வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்கள். தனக்கென ஏதாவது வாங்க ஆசைப்பட்டாலும், "இப்போ இது நமக்கு அவசியமா" என்று யாராவது சொன்னால் உடனே "ஆமாம்ல" என்று அமைதியாகி விடுவார்கள்.

--> கடையில் ஏதாவது பொருளுக்கு பில் கட்ட வேண்டி க்யூவில் நிற்பார்கள். பின்னாடி வந்தவர்கள் எல்லாம் நடுவில் போய் கட்டிவிட்டுப் போனாலும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். "அவருக்கு அவரு வீட்லே விழுற இடி நம்ம வீட்டை விட அதிகமா இருந்தாலும் இருக்கும் " என்று ஒதுங்கியே இருப்பார்கள்.

--> பஸ் பிரயாணத்தில் பக்கத்து சீட்டு பயணி அவரது தங்க்ஸ் அவரை மதிப்பும் மரியாதையுமா பேசுவார் என்று அளந்து விடுவதை பொளந்துகிட்டு கேட்டு கொண்டே இருப்பார்கள். இறங்கும் இடம் வரும்போதுதான் முன்னாள் இருந்து ராட்சச தனமா ஒரு குரல் வரும். கடைசியில் பார்த்தால் அது இவர்கள் தங்கஸை விட மிக கொடுமையாக இருக்கும்.

--> ரோட்டில் போகும்போது யாராவது தர்மம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். வாங்கியவர்கள் அவர்கள் கண்முன்னாடியே அதே பொய்யை இன்னொரு ஆளிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்டாலும் திருந்த மாட்டார்கள்.இவனுக்கு இருக்குற தைரியம் கூட நம்ம கிட்டே இல்லியே... இவனாவது சுதந்திரமா பிச்சை எடுத்து, சந்தோசமா வாழட்டும் என்று பெருமூச்சு விட்டு இடம் விலகுவார்கள்

--> ஆபிசில் லீவே போட மாட்டார்கள். மற்றவர்கள் வேலையையும் இவர்களே பார்ப்பார்கள். போதாக்குறைக்கு பக்கத்து சீட்காரர் செய்த தப்புக்கும் சேர்த்து இவர்களே திட்டு வாங்கிக் கொள்வார்கள்.பின்னே வீட்டுக்கு சீக்கிரம் போய் சிக்கலில் மாட்ட அவர்கள் விரும்புவார்களோ...

--> யார் என்ன சொன்னாலும் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணத்துக்கு, நம்ம பதிவுலகத்தையே எடுத்துக்குங்களேன். மாங்கு மாங்குன்னு பதிவு எழுதி... கடைசியில் இதெல்லாம் நான் கிடையாது... என்னோட நண்பர் ஒருவரோட அனுபவம்னு டிஸ்க்கி... மட்டும் போட்டா போதும் பாவம் அந்த நண்பர் அப்படின்னு... பின்னூட்டமும் போடுவாங்க... (நம்மள நாமளே வாரி விடுறது..? அட, பொது வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா..)


டிஸ்கி: இது சத்தியமா என் சொந்த அனுபவங்க இல்லீங்கோ.. என்னோட நண்பர் ஒருத்தரோட அனுபவம் இது... அதனால யாரும் "நீயும் இளிச்சவாய கணவர்தானான்னு" பின்னூட்டம் போட்டுறாதீங்க சாமிகளா... ஹி ஹி ஹி..

Monday 12 October 2009

"குயின்பிசர் வழங்கும் ஷேர்பாட்" தீபாவளி ஸ்பெசல் (பகுதி - 1)



வரும் தீபாவளியை முன்னிட்டு ஒரு அதிரடி ஆக்சன் படம் தான் போடலாம்னு இருந்தேன், ஆனா ஒரு வாரத்துக்கு முந்தியே வேறு ஒரு அதிரடி படம் ரிலீஸ் ஆகி சக்க போடு போட்டு கொண்டிருக்கிறது, மூக்குக்கு மூக்கு... சாரி, முக்குக்கு முக்கு அதே பேச்சாவும் இருக்கு. அதனாலே இப்ப தான் உங்களுக்காக ஒரு புது புரோகிராம் பண்ணலாம்னு முடிவு செஞ்சி ஆரம்பிச்சது. இந்த புரோகிராம். இது முழுக்க, முழுக்க புன்னகைக்காக, நகைச்சுவைக்காக எழுத பட்டது... எனது மூக்கை பதம் பார்க்க தேட வேண்டாம்... இப்ப ஒழுங்கா இருக்க மூக்கை வச்சே... நான் பார்க்குறதுக்கு கொஞ்சம் சுமாராதான் இருப்பேன்... (ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்)


* * * * * * * * * * * * * * * * * ஓவர் டூ ஸ்டேஜ் * * * * * * * * * * * * * * * *

வெல்கம் வியூவர்ஸ்... இது "குயீன்பிசர்"(அதென்ன? "கிங்பிசர்" தான் இருக்கனுமா?) வழங்கும் 'ஷேர்பாட்'(அதென்ன "ஜாக்(கெட்)பாட்" தான் இருக்கனுமா?அதான்.... அதான் இப்படி...) இந்த புரோகிராமை நமக்கு நடத்தி தர இருப்பது... மதுரை சிங்கம். வைகை கரையின் வேங்கை, வடிவேலு அவர்கள்.

வடிவேலு: நானும் பெரிய ரவடி.. ரவடி.. ரவடின்னு... நிஜ ரவடிங்க கிட்டே எகிறிகிட்டு இருந்தேன்... திடீர்னு ஒரு சாக்கு பைய போட்டு அமுக்கி இங்கே கொண்டு வந்துட்டாங்க.. இருந்தாலும் சமாளிப்போம்... (வெளியிலே எம்பூட்டு தாங்கிட்டோம்!!! ஏன்னா இது!!! எல்லாரும் ஒரு தினுசா இருக்காங்களே???)

* * * * * * * * * வீ வில் ஸ்டார்ட் ஆப்டர் எ சார்ட் கமர்சியல் பிரேக் * * * * * * * *

(வடிவேலுக்கு திடீர்னு ஒரு சந்தேகம், ஒரு வேளை பார்த்திபன் தான் வேஷம் கட்டி நம்மை மாட்டி விட்டாரோன்னு... மொபைலே எடுத்து லண்டன் "லேண்ட் லைனுக்கு" போன் போடுகிறார்)

"வடிவேலு ஹியர்... கேன் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் பார்த்தி"

"பார்த்திபன் ஹியர்.. வெண்ணை என்னடா வேணும் உனக்கு."

"எப்பா? பார்த்தி... நீ அங்கே தானே.. இருக்கே..."

"டேய்... லூசு... நான் இங்கே இருக்கபோய் தானே போனை எடுத்து பேசுறேன்... அப்புறம் என்ன கேள்வி..."

"என்னனாலும் திட்டிக்க... ஒரு கன்பர்மேசனுக்கு தான் போன் போட்டேன்... என்னோட புரோகிராமு ஒன்னு இப்போ ரெக்கார்டிங் அப்புறமா டீவிலே வரும் பாரு அண்ணன் எப்படி பிச்சி பீராஞ்சிருகேன்னு..."

* * * * * * * * * * * * * * * * * ஓவர் டூ ஸ்டேஜ் * * * * * * * * * * * * * * * * *

"இங்கே இப்போ ரெண்டு டீமு ஆட வந்திருக்காங்க, இது மொத்தம் மூணு ரவுண்டு உள்ள விளையாட்டு... 'குவாட்டர் ரவுண்டு', 'ஹாப் ரவுண்டு' கடைசியாக 'புல் ரவுண்டு' மேற்படி விதிங்கலாம் உங்களுக்கு நல்லாவே தெரியும் அதனாலே நேரே புரோகிராமுக்கு போவோம்... எல்லாரும் அவங்க அவங்களை அறிமுக படுத்திக்கோங்க.. பஸ்ட்டு டீம் 'அ' சொல்லுங்க..."

எல்லோரும் கோரசாக : 'அ' என்று சவுண்டு விடுகிறார்கள்.

"ஐயோ..! ஐயோ...! இதை சொல்லலே.. 'அ' டீமை சேர்ந்தவங்க உங்களை அறிமுகபடுத்துங்க.. தலைவர்லே இருந்து..ஆரம்பிங்க..."

முக்கு கடை - பிராந்தி
சைடு டிஸ்ஸு - பூந்தி
ஊத்தி கொடுத்தா - சாந்தி
அடிச்சு எடுத்தேன் - வாந்தி
பார்த்து சிரிச்சார் - காந்தி
இப்படியும் கவிதை - எழுதி
போட்டு அடிக்கலாம் -அழுத்தி
தண்டோரா என்று சொல்லலாம்.


"எப்பா... இப்பவே கண்ணை கட்டுதே... எம் பேரு இன்னதுன்னு சொல்றதுக்கு... இப்படி அக்குருவம் பண்ணுதே... சரி அடுத்த தல..."


ஆடியன்ஸ் கும்பல் (கோரசாக): இப்படி பொத்தாம் பொதுவா சொல்ல கூடாது... இங்கே எல்லாரும், எல்லாரையும் "தல"ன்னு...சொல்லுவோம்... அதனாலே குறிப்பா யாருன்னு சொல்லுங்க..


"அடப்பாவிகளா... இது வேறையா....அப்படின்னா... அடுத்த டீம் தலைவர் சொல்லுங்க... நீங்க வேற தலை முதல் கால் வரை மறைச்சிகிட்டு பெரிய அங்கிய போட்டு கிட்டு வந்திருக்கீங்க.."

மொட்டை மாடி
உடைந்த கிளாசு
பிட்டு படம்
விட்ட குசு
யாருமற்ற வெளியில்
கரைந்து காணாமல்
அனைவருக்கும் தெரிகிறேன்


"ஆமா... இப்ப நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன சொல்றீங்க?"

"இன்னுமா நான் யாருன்னு தெரியலே...(என்று ஆடியன்ஸ் பக்கம் திரும்பி பாட்ஷா ரஜினி மாதிரி நின்று...) 'நான் ஒரு கவுஜை சொன்னா... நூறு கவுஜை சொன்னா மாதிரி' சும்மா அதிரும்லே.."

ஆடியன்ஸ் கும்பல் (கோரசாக): குரு...ஜி குரு...ஜி கு....ரூ....ஜீ...

"ஹே... இப்பவே கண்ணை கட்டுதே... எப்பா... அது ஒரு மீஜீக் செர்ச்சிங் வெப் போர்டல்யா..."

"மொழி விளையாட்டு எனக்கு பிடிக்கும்தான்... ஆனால்... உங்கள் விளையாட்..."

"(அய்யய்யோ... இவரை பேச விட்டா... இன்னும் குழப்பத்தை உண்டு பன்னிருவாறே...) ஒகே.. ஒகே... எனக்கு மட்டும் இல்லே... எல்லாத்துக்கும் புரிஞ்சி போச்சி... நீங்க யாருன்னு... போதும் நிறுத்திக்குவோம்... டீம் 'அ' அடுத்து உங்கள்ளே இருக்குற அடுத்த ஆளு... "


தாம்பரம் ரயில் நிலையம் அருகில் இருக்குற கைவண்டி இட்லி அருமையா இருக்கும், அதுலே ரெண்டு வாங்கிகிட்டு அப்படியே கோடம்பாக்கம் வந்து பாலத்திற்கு கீழே இருக்குற உடுப்பி ஹோட்டல் சட்னி சேர்த்து, கும்மிடிபூண்டி பஸ் ஸ்டாண்டிலே யூசுப் பாய் கடையிலே ஒரு ஆம்லெட்டும் சேர்த்து வச்சி சாப்ட்டா...


"ஹே... ஹே... நிறுத்து... நிறுத்து... எட்டு ரூபா டிபனுக்கு... எதுக்கு எம்பது ஊரு சுத்த சொல்றே.....போதும்.... நீயாருன்னு... தெரியும் அடுத்த டீமு அடுத்த ஆளு..."

இதே மாதிரி ஒரு சூழலில் தன்னுடன் சொற்ப்போரில் தோற்று, மற்ப்போருக்கு செல்லும் தலைவன் அழுகையை, அழகை, அழகாய் அலகாக அளக்கிறார் 'குறுக்கே பேசினியார்' என்ற சங்கப்புலவர்

சொற் போர் வெருண்ட கையின
மற்போர் வென்றுட லழகால்
கற்போர் கனன்று காமுறலால்
மறுப்போர் கழன்று செல்லேர்


"ஷ்.... எப்பா... நானும் மதுர தான்... ஆனா எப்படி புரியற மாதிரி... தமிழ்லே பேசுறேன்... ஆனா ஏனப்பா நீ மட்டும் இப்படி... ஆமா இப்போ எதுக்கு இதை சொல்லி கூட்டத்தை கலைக்குறீங்க... போதும் அடுத்த டீமு அடுத்த ஆளு..."


குதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி பகடி பறக்கும் தானே…
என் நையாண்டி குதுரை வீரன் தானே

அ…சிங்கம் போலே!
அ…சிங்கம் போலே உருண்டு வரான் டொக்கு நையாண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் மொக்கைலே தாண்டி!

ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
பாட்டை திருத்தி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
பாட்டை திருத்தி போட்டு வாங்கு!

ஏ நைனா நைனா நசுக்கு இவனை
பாண்டிமடம் அனுப்பு
ஏ நைனா நைனா நசுக்கு இவனை
பாண்டிமடம் அனுப்பு

ஏ எலியைப் போல
ஏ எலியைப் போல கொடைஞ்சவண்டா எங்க நையாண்டி


(இந்த எடுபட்ட பயபுள்ளைய விட்டுருந்தா... இப்படி மொக்கை பாட்டை பாடியே... சொர்ணக்காவை கொன்னிருக்கும்... அம்புட்டு சண்டை போட்டிருக்க வேணாம்...) "ஷ்... எப்பா... இப்படி எத்தனி பேருடா கெளம்பியிருக்கீங்க... ஹே.. நிறுத்தப்பா.... போதும்ம்ம்.... எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் நீ யாருன்னு...."

அடுத்து அடுத்த டீம்லே அந்தா டவுசரை புடிச்சும் புடிக்காதே மாதிரி ஒருத்தர் நிக்குறார் பாருங்க நீங்க சொல்லுங்க...



அவனும் அவளும்
புணர்தலும்
உணர்தலும்
கொண்டதிந்த வாழ்கை
கை இறுதி வரை
வந்தால் வாழ்கை
அறுந்தால்
வால் அல்ல வாழ்
வாழ்கை பாழ்
இருக்கலாமோ வெறுப்பாக
பற்றியும் பற்றாமலும்
இருக்கலாம் நட்பாக.
(இதை யாரும் பிரசுரிக்காததால் இங்கேயே வெளியானது..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


"இதுவரைக்கும் பில்டிங்கு ஸ்ட்ராங், பேஸ் மண்டு வீக்குன்னு உதார் விட்டுட்டு இருந்தேன்... இப்படி ஒரு அணு குண்டை தூக்கி போட்டு மொத்த பிள்டிங்கையும் தரை மட்டமாக்கிட்டரே... இதுக்கு அப்புறம் இவரு யாருன்னு வேறை, அவர் வாயாலே கேட்க்கவா.. நோ... அடுத்த டீம் கடைசி ஆளு..


....
....
....

"ஹே.... இங்கே பாரு... அதுக்கு மேலே எல்லாம் ஏற கூடாது.... எதுக்கு அது மேலே ஏறனும்...மனசுலே பெரிய ஜாக்கி சான்னு நெனப்பா... பறந்து எம்மேலே விழுந்து அடிக்க போறியா..."

" இந்தா என்னோட இந்த கேமராவிலே... ஒரு போட்டா புடிக்க தான்... நீங்க கூட அப்படியே ஜார்ஜு புஸ்ஸு மாதிரி இருக்கீங்க... "

"அதான் செட்டை சுத்தி கேமரா வச்சிருக்கு... காணாதுன்னு அகேலா கிறேன்லாம் வச்சி படம் புடிச்சிகிட்டு இருக்காங்க... நீ என்னாத்துக்கு கண்டதுக்கும் மேலே எல்லாம் ஏறி போட்டா புடிக்குறே.... போதும்.... கேமராவோட செட்டுக்குள்ளே வரும்போதே...தெரிஞ்சி போச்சி நீ யாருன்னு...பேசாமே... அங்கே குருப்போட போய் நில்லு...அடுத்த டீமு கடைசி ஆளு.."
......
......
......
"அட நீ ஏன்பா... இப்படி பம்மி பம்மி நிக்குறே... விஜையோட 'ஆதி' படத்தை பார்த்த காமன் மென் மாதிரி நிக்க.."

"அதொண்ணும் இல்லே.. அங்கே ஆடியன்ஸ் கும்பல்லே.. என்னோட தங்க மணி நிக்குறா.. அதான்... என்ன செய்யிறதுன்னு தெரியாமே.. நிக்குறேன்.. "

"ஒ அதான் பிரச்சினையா... தெரிஞ்சி போச்சி... தெரிஞ்சி போச்சி... நீங்க யாருன்னு... அப்படியே கமுக்கமா இருக்கணும்... நான் புரோகிராமை முடிக்குற வரை.."

[ஆட்டம் என்ன ஆடினார்கள், எப்படி ஆடினார்கள் என்பதை அடுத்த பதிவுலே பாப்போம், அது வரைக்கும் எங்கும் காணாமே போயிறாதீங்க...இங்கேயே கும்மி அடிச்சிகிட்டு இருங்க..]

Friday 9 October 2009

குடிகாரர்களின் உலகில்..!!!


வழக்கம் போலே உள்ள அறிவிப்பு: இது அண்ணன். கார்த்திகை பாண்டியன் கவுஜைக்கு எதிர் அல்ல.




ஏழு கடையும் நாலு சந்தும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் டாஸ்மாக்கில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
வேப்பமரத்தின் அடியில் உருண்டு கிடக்கிறது
குடிகாரனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை...

குப்பைச்சிறுவன் அதனைத் தேடி எடுத்து
பத்திரபடுத்த யத்தனித்தபோது..

எங்கிருந்தோ வந்த ஏட்டின் குரல் கேட்டு
சிலர் காணாமல் போக..

அசதியில் தூங்கி போகிறான் காவலாளி..!!
இருந்தும் -

எப்போது கடை மீண்டும் திறக்கப்படுகிறதோ
அப்போது தான் சரக்கு கிட்டும்
என்பதை அறியாதவனாக
சந்தின் இருட்டு இடுக்குகளில்
தீராத போதை கொண்டவனாக
உருண்டு கொண்டே கிடக்கிறான் "குடிகாரன்"..!!!


==============================================================




திசைக்கொன்றாய் சிதறிக் கிடந்த
கடலைகளை பொருக்கி
கர்ம சிரத்தையாய் சரகொன்றை
அடித்து கொண்டிருந்தார் தந்தை

"அப்பா!, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.."
பையனின் குரல் கேட்டவுடன்
குற்றம் கொண்டவனாய் நொடிந்து
அதிர்ச்சியுடன் கோப்பையை நீட்டினான்..
பிரவுன் நிற திரவமொன்று
குடித்து முற்றுப்பெறாமல்
ஒழிக்க முடியாத நிலையில்
கோப்பையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..

"ரம்மு ரொம்ப நல்லா இருக்கும்பா....."
பையன் சொல்ல,
தந்தையின் முகம்
வாடிப் போனது..
"ஐயோ.. டேய்.... அது ரம்மு இல்லை.. பெப்சி.."
மீண்டும் அவன் சொன்னான்..
"இல்லெப்பா.. இது ரம்மு தான்.."
கோபம் கொண்டவனாய்
வெடுக்கென கோப்பையைப்
பறித்துக் கொண்டு சொன்னான்..
"நீ குடிக்குறது என்னன்னு, மீதி வைத்த
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!


Monday 5 October 2009

உன்னை போல் ஒருவன் - ஸ்பெசல் கார்டூன் கமண்ட்ஸ்.











Wednesday 30 September 2009

எ வெட்னஸ்டே - ரீமேக் அல்லாத ரீமேக் படம்



எ வெட்னஸ்டே - புத்தம் புதிய படம்
நடிப்பு : கவுண்டமணி, செந்தில், பதிவர் கேபிள் சங்கர்.

(ஷாட் ஓபன்)

(பீச்லே கவுண்ட மணி ஒரு கருப்பு போர்வை, போர்த்தியபடி... மற்றும் ஒரு நாயுடன்... )

கவுண்ட மணி : நேத்து வரைக்கும் நான் ஒரு 'ரிச் மேன்'... இன்னிக்கு ஐயம் 'பெக்கர் மேன்'... ஒரு சாதாரண மெண்டல் மேனாலே இப்படி ஆயிட்டேன்... இது எனக்கு தேவை தான்... இது நானே வலிய போய் விழுந்த குட்டை... பினாமி மாதிரி வந்தான் அந்த மெண்டல் மேன், சுனாமி மாதிரி என்னோட வாழ்க்கை திருப்பி போட்டுட்டான்....என் கதைய கேளு... அப்புறம் நீயும், யாரையும் "உன்னை போல் ஒருவன்" என்று நினைத்து யாரு கிட்டேயும் வம்பிழுக்க மாட்டே.... தட் இஸ் எ வெட்னஸ்டே....(என்று சொல்லியவாறே... மேல் நோக்கி பார்கிறார்...)

(ஷாட் க்லோசெஸ் அண்ட் ஒபன்ஸ் அட் கவுண்டமணி'ஸ் ஆபீஸ்)

(கவுண்ட மணி தனது அலுவலகத்தில். கம்ப்யூட்டர் முன்னாடி சோர்வாக இருக்கிறார், செந்தில் பெர்முடாஸ், முண்டா பனியன் போட்டு, டையும் கட்டி அதற்க்கு மேலே தனது சட்டையை சும்மா போட்டபடி வருகிறார்... கவுண்ட மணி "உன்னை போல் ஒருவன்" படம் பார்த்துட்டு தன் பிளாக்கில் விமர்சனம் எழுதி கொண்டிருக்கிறார்.)

கவுண்ட மணி : டேய் 'கீ-போர்டு' தலையா... எங்கேடா ரெண்டு நாளா ஆளையே காணும்...

செந்தில் : ஹி... ஹி... ஒலகம் ரொம்ப கேட்டு போச்சண்ணே!

கவுண்ட மணி : என்னடா சொல்றே... உனக்கும் ஒருத்தன் பொண்ணு தாரேன்னு சொல்லிட்டானா?

செந்தில் : அதை சொல்லலண்ணே... கம்ப்யூட்டர் வச்சிருக்குறவனெல்லாம் சாப்ட்வேர் எஞ்சினியராம்...!!!

(கவுண்ட மணி கோபமாக, முறைத்து பார்கிறார்.)

செந்தில் : பிளாக்கு வச்சிருக்குறவனெல்லாம் பெரிய ரைட்டராம்... படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் பண்றான்.

(கவுண்ட மணி மிக கோபமாக, செந்திலை எத்துகிறார்)

(அப்போது கவர்ச்சி உடையுடன் ஒரு மங்கை வருகிறார். சீனியர் எஞ்சினியர்-ன்னா அது யாரு... என்று கேட்டு சில சந்தேகங்களை கேட்டு விட்டு போக வருகிறார்)

(கவுண்டமணி, எங்கே தான் சும்மா இருந்தால் தன்னிடம் எதுவோ கேட்டுவிடுவாள் என்று மெயில் ஒப்பன் பண்ணி)



டியர் மிஸ்டர் ஒபாமா..,

உங்க ப்ரோஜக்ட் நல்ல ப்ரோஜக்ட், நாங்க அதுக்காக பாடுபட்டுகிட்டு இருக்கோம். நாங்க செய்யிற எல்லா ப்ராஜக்க்டும் மோசமாத்தான் இருக்கும்னு நீங்க நெனக்குறது உங்கள் மக்களோட பொது புத்தி. அப்புறம் நீங்க செய்யற ப்ராஜக்டு மட்டுந்தான் நல்லது என்று சொன்னா அது அமெரிக்க பார்பனிசம். உங்க ப்ராஜக்டுக்கான மேனுவலை பத்தாம் நம்பர் பாண்ட்லே டைப்பு பண்ணி கேட்குறது கொஞ்சம் ஓவர்... இந்த லெட்டரும் ஓவர்..


பெண் : (செந்திலிடம்) இங்கே "ஆலினால் அலெக்ஸ்சா" அப்படின்னா யாருங்க..

செந்தில் : இட் இஸ் மீ...

கவுண்ட மணி : (கொஞ்சம் அசந்தா, இந்த "டேப் மாறி" தலையன் இவளை கொத்திகிட்டு போய்ருவான்) ஹே.. மேடம், அந்த பெக்கர் இல்லே... ரேமான்ட் கோட்டும் சூட்டும் போட்டிருக்குற நான்தான் "ஆலினால் அலெக்ஸ்சா"

பெண்: போங்க சார், நீங்க இங்கே உள்ளவரு... அதான் கோட்டும் சூட்டும் போட்டிருக்கீங்க... இவரு தான் அமெரிக்கன் ஸ்டைல்லே... பெர்முடாசும், பனியனும் போட்டிருக்காரு... இவரைத்தான் நான் பார்க்க வந்தேன்...

கவுண்ட மணி : அய்யோ அவனை நம்பாதே... அவன் அமெரிக்கன் கிடையாது... ஆப்பிரிக்கன், அவன் இங்கே கம்பனி வாசல்லே பிச்சை எடுக்குறவன், கோட்டும் சூட்டும் போட்டா எவன் பிச்சை போடுவான்... அதான் அந்த நாதாரி அப்படி ஒரு கெட்டப்பு போட்டிருக்கு...

(அந்த பெண்ணும், செந்திலுடன் தனி அறை சென்று எதோ விவாதம் செய்து விட்டு போய் விடுகிறார்...)

செந்தில் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்....

கவுண்ட மணி :டேய்... 'டபரா செட்' தலையா நீ பார்த்ததே அவ ஒருத்திய மட்டுந்தான்.... இதுக்கு மேல பாடாதே...

செந்தில் : அண்ணே...! எனக்கு ஒரு சந்தேகம்ண்ணே...

கவுண்ட மணி : என்னடா....? கேளுடா..இதுக்குதான்டா... கம்பனிக்கு ஒரு "ஆலினால் அலெக்ஸ்சா" வேனுங்குறது...

செந்தில் : வாக் மேன் - அப்படின்னா?

கவுண்ட மணி : நடந்துகிட்டே பாட்டு கேட்குறதுக்கு பேரு.

செந்தில் : வொயர் மேன் - அப்படின்னா யாரு?

கவுண்ட மணி : கம்பி வொயர்லே வேலை பார்குறவன்.

செந்தில் : லைன் மேன் - அப்படின்னா யாரு?

கவுண்ட மணி : ரயில்வே லைன்லே வேலை பாக்குறவன்.

செந்தில் :அப்புறம்...

கவுண்ட மணி :டேய்... 'பியூஸ் கேரியர்' வாயா... போதும் நிறுத்திக்குவோம்...

செந்தில் : இன்னும் இருக்குண்ணே...!!!

கவுண்ட மணி : அடுத்து நீ எங்கே வாறே...??? என்ன கேட்க போறேன்னு??? எனக்கு தெரியும்... வேண்டாம்... போதும்

செந்தில் : அதில்லண்ணே....

கவுண்ட மணி : டேய்... அதுக்குதான் வலை உலகத்துலை பெரிய சண்டையே நடந்துகிட்டு இருக்கு... அதுலே என்னை கோர்த்து விட பார்க்குறியாடா... 'சி.பி.யூ' மண்டையா...

செந்தில் : அண்ணே.... சொல்லுங்கண்ணே...

கவுண்ட மணி : டேய்... 'ஷ்ரட்டர்' மண்டையா... போதுண்டா...

செந்தில் :டாபர் மேன் அப்படின்னா... யாரு?

கவுண்ட மணி : (அதிர்ந்தவராக) ஏண்டா நாயே... உன் பேரையே மறந்துட்டியாடா...???

செந்தில் : சொல்லுங்கண்ணே... தெரியுமா தெரியாதா..?

கவுண்ட மணி : டேய்... உன் பேரை என்கிட்டே கேட்குறியே.... இந்த எகதாளம் தானே வேண்டாங்குறது...

செந்தில் : தெரியலைன்னா... தெரியலைன்னு சொல்லுங்கண்ணே... டாபர் ஆம்லா தைலம், டாபர் ஹனி போல டாபர் ப்ரோடட்ஸ் யூஸ் பன்றவங்க தான் டாபர் மேன்... இது கூட தெரியாமே... நீங்கல்லாம்... "ஆலினால் அலெக்ஸ்சா..."

கவுண்ட மணி : இங்க பாருங்க பதிவர்களே...அவன் அவன் என்ன டென்சன்லே இருக்கான்... இவன் கவலைய பாருங்க.... இன்னிக்கு இவனை கொல்லாம விடுறதில்லை...(என்று ஒரு பேப்பர் வெய்ட்டை எடுத்து ஓங்கி எறிகிறார்..)

(செந்தில் டக்கென்று விலகிவிட... அந்த பேப்பர் வெய்ட், அந்த நேரத்தில் நிறுவனத்தை பார்வை இட வந்திருந்த முதலாளி "கேபிள் சங்கர்" மேல் விழுகிறது...)

செந்தில் : அண்ணே... நீங்க சிங்கம்னே... சினிமாக்காரங்க மேல உள்ள கோபத்தை, சினிமாக்காரரான நம்ம மொதலாளி "கேபிள்" மேல காட்டிட்டீங்களே... யூ ஆர் எ கிரேட் மேன்.

கவுண்ட மணி : மொதலாளி சார்..., மொதலாளி சார்..., சாரி.... மொதலாளி சார்... அந்த 'ஜாவா வாயன்' சொல்றதை நம்பாதீங்க சார்... அந்த 'ஆப்ரிகன் அனகொண்டா' என்னை வேணும்னே சீண்டி விட்டு மாட்டி விட்டான் சார்...

கேபிள் : யூ பிளடி நான்சன்ஸ்... ஹோட்டல்லே சாப்பாடு நல்லா இருந்தா அந்த ஹோட்டலுக்கு நல்ல பேரு, அதே நேரம் சாப்பாடு நல்லா இல்லேன்னா... ஹோட்டலுக்கு கேட்ட பேரு...தான்...

கவுண்ட மணி(பதிவுல தான் அப்படின்னா... இங்கேயுமா...என மனதுக்குள் எண்ணியவராக): மன்னிச்சுகோங்க சார்... இதெல்லாம் அந்த 'டாட் மேட்ரிக்ஸ்' தலையனாலே வந்தது...

கேபிள் : நோ... கெட் லாஸ்ட்

கவுண்டர் : என்னை மட்டும் வெளியிலே அனுப்புனா? அவனையும், அந்த 'டாஸ் தலையனயும்' சேர்த்து அனுப்புங்க... பாருங்க... நம்ம கம்பனி அடையாள அட்டைய கூட அது கழுத்துலே தொங்க விடலை

கேபிள் : அவன், அவனுக்கு "கூகுள்" கம்பனிலே வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி ரெண்டு நாளைக்கு முந்தியே ரிசைன் பண்ணிட்டான். இன்னிக்கு சில பேப்பர்ஸ் அன்ட் அரியர்ஸ் வாங்க தான் வந்திருக்கான்

கவுண்ட மணி : அடங்கொன்னியா... "கூகுள்" பெரிய "செர்ச் என்ஜின்" வச்சிருக்குற கம்பனின்னு சொல்வாங்க, அது இவனை போய் "செர்ச்" பண்ணி எடுத்திருக்கே...ஒருவேளை... செர்ச்:"பன்னி"-ன்னு கொடுத்திருப்பாங்களோ...

(கவுண்ட மணி சோகமாக வெளியே வருகிறார்...)
(ஒரு மெர்சிடஸ் பென்ஸ் நிற்கிறது...அதிலே செந்திலும் அந்த பெண்ணும் இருக்கிறார்கள்... )


செந்தில்: அண்ணே... இப்பா நான் பாரின் மேன், ஆனா நீங்க... காமன் மேன் கூட கிடையாது... புவர் பெக்கர் மேன்...

பெண் : டார்லிங்... அந்த பெக்கர் மேன் கூட என்ன பேச்சு... வாங்க நாம போலாம் நமக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு...

கவுண்ட மணி : நல்லாவே புரிஞ்சு போச்சுடா... நல்லாவே புரிஞ்சு போச்சுடா... காமன் மேன்... யாரு பெக்கர் மேன் யாருன்னு...

THE END

டிஸ்க்கி: ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் ஒரு காமன் மேனுக்கு சகஜம், அதனாலே அதை கண்டு பிடிச்சி பின்னூட்டத்திலே கும்முறவங்க... காமன் மேன் கிடையாது...


Thursday 24 September 2009

மதுரை பதிவர் சந்திப்பு... சில கமண்டுகள்.


அட போர்டை பாரேன்....


இப்படி ஒரு கைகாட்டி எல்லா பதிவர் சந்திப்புகளையும் வச்சா உங்களுக்கு புண்ணியமா போகும்....


சில நேரங்களில் சில மனிதர்கள்...


இவரு ஆசைய யாராவது..... பூர்த்தி பண்ணுங்கப்பா...


இப்படிதான் நிலைமைய சமாளிக்கணும்....


இப்படில்லாம் கூட நடக்குதா... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



டிஸ்க்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக போடப்பட்டது... எல்லாரும் கண்டு கொள்ளுங்கள், யாரும் காண்டு கொள்ளாதீர்கள்.

Wednesday 23 September 2009

கும்மி தொழில்



அனுஜன்யா அவர்களின் ஒரிஜினல் பாரின் சரக்கு அங்கே
வால் அவர்களின் டாஸ்மாக் சரக்கு அங்கே
நான் காச்சுன சரக்கு இங்கே...

தள்ளாடி துவளும்
அனானியின் கண்கள்
என் கவுஜைகள் சிலதை
படித்திருக்க வேண்டும்.

கவுஜை போட்டு
பின்னூட்டம் பார்க்கும் கவுஞ்சரின்
"கீ போர்டில்" சாய்ந்து
பின்னூட்டமிடும், மறுக்கும்
திட்டும், அர்ச்சிக்கும்,
காறியுமிழும் நூறு
பதிவர்களை காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்

எனக்கு பதட்டமாக இருக்கிறது
பதிவினில் அல்லலுறும் இவன்
பின்னாட்களில் "ஹேக்"கலாம்
கும்மலாம்
பதிவராகி
தமிழ்மணத்தையே அச்சுறுத்தலாம்
அதெல்லாம் பரவாயில்லை

கவுஞ்சராகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது


Friday 18 September 2009

"குடிக்காதவன்" அதிரடி திரைப்படம் (பகுதி 2)

இந்த படத்தின் இடைவேளை வரையிலான பகுதி இங்கே...




அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே

(டேபிள் மேலே... மிக அருமையான பாரின் சரக்கு... மினு மினு என்று மின்னி கொண்டிருந்தது... அதை பார்த்து தான் மேற்கண்ட பாடலை "கேபிளும்", "90"-யும் மானசீகமா பாடிக்கொண்டிருந்தார்கள்.)

"என்னடா இது, பிரம்மலோகம் வந்தும் பிரேமானந்தா கால்ல விழுற மாதிரி இருக்கு இது..." என்றவாறே தனது பிளாக் பெர்ரி போனை எடுத்து... எதோ பேசி வைக்க...

"அண்ணே உனக்கு சோளப்பொரியே... ஆடம்பரம் இப்ப உனக்கு பிளாக் பெர்ரியா.... ஆஅவ்வ்வ்"

"போன் போட்டது நீங்க தானே..."தேன் பாச்சியது லேட்டஸ்ட் ஹாட் முமைத் கான்

"யா... யா.. ஐ ஒண்டி கால் யூ."

"யூ நோ அம்பானி பிரதர்ஸ்..."

"Yes"

"அப்படியா... அப்படின்னா... வீ..வீ....வீ....... வா..வா... வா...." என நைனா இழுக்க...
சட்டென... கேபிள் அண்ணன் நைனா சட்டைய பிடித்து இழுத்து. நைனா காதிலே ரகசியமாய்
"என்னடா சொல்லவரே... "
(நைனாவும் கிசு.. கிசுவென)
"வம்பாணி பிரதர்ஸ்-ன்னு"



இதை கவனியாமல்.... முமைத் கானோ முகம் பிரகாசமாய்...அலறுகிறார்...
"வார்னர் பிரதர்ஸ்!!!"

"அதான்.... அதான்.... அதேதான்.... யூ பிராயினி..." இது நைனா.

"பிராயினி...!!! வாட்?"

"அதாவது... அதாவது... மு...மு...மு...."

"டேய்... வெண்ணை நைனா... அடங்குடா...அவளை காண்டாக்கி அனுப்பி வச்சிராதே... மேடம், ஹீ இடியட், ஐ எக்ஸ்ப்ளைன்... யூ ப்ரைனி அதாவது மூளைக்காரங்க....ஹி ஸ்மால் பாய், ஐ பிக் பாய்..."

"ஐ சி..." என்றவாறே, முமைத் கானோ அவரது தொப்பையை பார்க்க...

"இட் இஸ் 'பீர்' தொப்பை, ஐ பர்பஸ்புல்லி மேட், ஐ ஆக்ட் டூ ரோல் இன் பிலிம் லைக் விக்ரம் ஒன் லைக் 'கம்பி' இன்னொன்னு லைக் 'கும்பி' தட்ஸ்வோய் மை 'கும்பி' இஸ் சோ...ஓகே...ஹி... ஹி..ஹி.. வீ டான்ஸ் பண்ணுவோம்... ஓகே.."



(இரண்டு பேரும் 'பருத்தி வீரன்' சரவணன் கார்த்தி மாதிரி ஆட்டம் போட்டார்கள், முமைத் கான் முகம் சுளிக்க... அண்ணன் கேபிள் சூழ்நிலை உணர்ந்து... தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி தன் யூத்து தொப்பையை லேசாக ஆட்டி ஆட்டி ஆடி "கெத்தை" மெய்ண்டைன் பண்ணறார்... )

ஆட்டம் முடிந்த உடன்...

"டேய்... நைனா... என்னிக்காவது நீ இந்த மாதிரி பாருக்கெல்லாம் வந்திருக்கியாடா... "

"இல்லண்ணே... நீங்க தெய்வம்னே... தெனாலி படத்திலே கமல் சொல்வார் அதை மாதிரி நீங்க ஒரு தெய்வ அண்ணன்னே..."

"நல்லா என்ஜாய் பண்ணு...டோன்ட் வொர்ரி... "கேபிள்" இஸ் ஹியர்?"

"எதுக்கு குடிச்சு புட்டு காசில்லண்ணே..ன்னு சொல்லிட்டு தூக்குல தொங்குறதுக்கா?"

"இங்கே வந்தும், இத்தனைய பார்த்தும் உன் எச்ச புத்தி போகுதா பாரு.... நான்சன்ஸ்... அண்ணன் இப்ப கோடீஸ்வரண்டா..."

"அண்ணே... உன்கிட்ட தான் காசே கிடையாதே... இதெல்லாம் எப்புடி...நீங்க இப்படி கோடீஸ்வரண் ஆனதை பார்க்க நம்ம அண்ணன் தண்டோரா இல்லியே..."

"டேய்... நான்சன்ஸ்.. மூடிகிட்டு குடி.."
(ரெண்டு மூணு ரவுண்டு போகிறது... ஆரவாரம் கொஞ்சம் குறைந்து இருவருக்கும் பெரியண்ணன் தண்டோரா நினைவு ஆட்டுகிறது... அதனால் எக்ஸ்ற்றாவ ரெண்டு லார்ஜை உள்ளே விடுகிறார்கள்)

"அண்ணே... நம்ம பெரிய அண்ணன் கூட இப்படி செலவு பண்ணது கிடையாது... உன்னை நெனைக்கும்போது.... ஆஆவ்வ்வ்வ் ...இப்படி ரெண்டு நாளிலே எப்படி உங்கிட்டே இவ்ளோ பணம் வந்தது... நீ அண்ணன் சொன்னா மாதிரி... அவரோட சொத்தை எல்லாம் அவர்கூட பொதைக்கலைன்னு நெனக்குறேன்... "(நைனா தாரை தாரை யாக கண்ணீர் விட்டு அழுகிறார்.)

"அதெல்லாம் பொதச்சிட்டேன், நீ பேசாமே அழுகாச்சி..பண்ணாமே சரக்கை அடி... "

"அப்புறம், உங்கிட்டே எப்படி இவ்ளோ காசு..."

"அண்ணன் சொன்ன மாதிரி அவரு சொத்தை எல்லாம் வித்தேன்..."

"ம்..ம்..ம்...."

"லம்ப்பா ஒரு ஏழு கோடி தேறிச்சு..."

"அடப்பாவி... இவ்ளோ வச்சிக்கிட்டா தான் நம்ம கிட்டே பஞ்சப்பாட்டு பாடுனாரு!!! , வீதி ஓரத்திலே பட்டை அடிச்சி மட்டையானாறு...ஹூம் அப்புறம்..."

அதை கொண்டு போய் பேங்கிலே போட்டேன்... என் பேருலே "

"என்ன நீ... இப்படி செய்யலாமா...???!!!"

"இன்னும் கேளுரா வெண்ணை... என் பேருலே போட்ட பிறகு, அவரு பேருல ஏழு லட்சம் ரூபாய்க்கு நூறு செக்கு எழுதி அவரு கூடவே பொதச்சிட்டேன்... இப்ப அவருக்கும் அதை ஹேண்டில் பண்ண ஈசியா இருக்கும் அவரும், அப்புறமா, அவரு, அவருக்கு சவுகரியப்படுற நேரத்திலே போய் மாத்திக்குவாறு...இப்ப சொல்லு நான் அவரு சொன்ன மாதிரி செஞ்சிட்டேனா இல்லியா... "

"அவ்வ்வ்வ்....அவ்வ்வ்வ்....அவ்வ்வ்வ்.... நான் ஒன்னு கேட்கட்டுமா...."

"இன்னொரு லார்ஜுங்குறதை தவிர வேற என்ன வேணாலும்.......ஹூம்..."

"இதெல்லாம் தப்பில்லையா..."

"ம்ம்ம்ஹும்.. தப்பில்லை... நாலு பேருக்கு நாலு விதமா சரக்கு வாங்கி கொடுக்குறதுக்கு எதுவும் தப்பில்லை..."

"அண்ணே... நீங்க நல்லவரா... கெட்டவரா.."

(டக்குன்னு அண்ணன் கேபிள், நாயகன் கமல் மாதிரி)
"தெரிலப்பா..."

(இருவரும்...போதையும்... சோகமும்... களிப்பும்... சேர்ந்த ஒரு புது கலவையால் மட்டையாகிறார்கள்)

(பேக் ரவுண்டில், இளைய ராஜா வாய்சில்)
தென்பாண்டி சீமையிலே... சரக்கோட போதையிலே... கேன் போல கிடந்தவனை... யாரொதைச்சாரோ... யாரொதைச்சாரோ...
===================================================
(எண்டு கார்டு: பாரதி ராஜா வாய்சில்)
இவர்கள் செய்தது.. சரியா தப்பா... என்று ஆராய்ந்தால்...
"விடை" பல கிடைக்கலாம்... சரக்குக்கு "கடை" பல இருப்பது போல்...

"சடை"களை கண்டு, "நடை"களை மாற்றாமல்
"தடை"களை கடந்து, "படை" நடத்துவோம்...

அளவிலா போதையுடன்...
நையாண்டி நைனா


THE END.


Thursday 17 September 2009

"குடிக்காதவன்" அதிரடி திரைப்படம் (பகுதி 1)



இந்திய வரலாற்றிலேயே இது வரை வெளி வராத "கவுஞ்சர் திலகம்" தண்டோரா, "புரட்சி யூத்து" கேபிள் சங்கர், "90" நைனா இணைந்து கலக்கும் புத்தம் புதிய திரைப்படம்
"குடிக்காதவன்"
இன்று முதல் உங்கள் "லக லக லக....." தளத்திலே...



Now the film starts.......

(பெரிய செல்வந்தர் அண்ணன் தண்டோரா, அவருக்கு ரெண்டு தம்பிங்க... ஒன்னு "கேபிள்"சங்கர், இன்னொன்னு "90" நைனா எல்லாரும் ஒரு பார்லே உக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருக்காங்க)

"டேய் நைனா... பார்த்து நிதானமா அடிடா... ஓவரா ஏத்தாதே... "

"சரிண்ணே... நான் மட்டுந்தானா... இல்லே கேபிள் அண்ணனுமா"

"ஏய்... நீ ஏண்டா, என் கி..கி..கிளாசுலே மண்ணை அள்ளி போடுற... உன்னை சொன்னாருன்னா அது உனக்கு மட்டுந்தான்டா...பேப்பயலே..."

"கொந்தளிக்குறது இருக்கட்டும்... நீங்க அந்த போஸ்டரை பாத்துகிட்டே... காரச்சேவை சிகரட்டுன்னு நெனச்சி பத்த வச்சிக்கிட்டு இருக்கீங்க..."

(அண்ணன் தண்டோரா அவர்கள் தன்னை (படிக்காதவன்) சிவாஜி மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு)

"இங்கே பாருங்க கண்ணுங்களா... நீங்க ரெண்டு பெரும் என் கண்ணு மாதிரி... உங்களுக்காகவே அண்ணன் கல்யாணம் கூட பண்ணிக்காமே... போற இடத்திலை எல்லாம்... 'கித்தாப்பா' 'செட்டப்பு' மட்டும் வச்சி காலம் தள்ளுனேன்... இப்படி நீங்க சண்டை போடாம ஒத்துமையா இருக்கணும்... இந்த பாழும் உலகத்திலே நீங்க ரெண்டு பெரும் எப்படி ஒண்டியா சமாளிக்க போறீங்கன்னு நெனச்சா... துக்கம் தொண்டைய அடைக்குதே.... (அண்ணனுக்கு இன்னொரு லார்ஜு சொல்லுறா...)"

அண்ணன் தண்டோரா...ஆனந்த கண்ணீர் சொரிய... இருவரையும் தன கரங்களில் அணைத்து... விம்மி... விம்மி அழுகிறார்... ('சாங்கு' சீகுவன்சு ஸ்டார்ட்ஸ்...)

(இந்த 'சாங்கு' சீகுவன்சு... பாரில் தொடங்குது... )

ஒரு பாருப் பிள்ளையாக...ஒரு டேபிள் கிள்ளையாக...ஊத்து... நீயும் ஊத்து
படம் பார்க்கப் பறந்தாலும்... திடநின்றி திரிந்தாலும்... கிளாசு... ஒரே கிளாசு
என்னென்ன தேவைகள்.... அண்ணனை கேளுங்கள்
(ஒரு பாரு)


(அண்ணன், ரெண்டு தம்பிகளையும் கூட்டிகிட்டு தெருவிலே நடந்து போகிறார்... தெருவோரத்திலே டாஸ்மாக் கடை மற்றும் கேனில் வைத்து "கள்" விற்பதை தாண்டி செல்கிறார் )
செல்லும் வழி எங்கெங்கும் டாஸ்மாக்கு வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் கள்ளை தொடலாம்
கிளாசு... அது மாறாமல்.... அளவு... அதை மீறாமல்
நாளும் குடி போடுங்கள் மோட்சம் பெறலாம்
(செல்லும்..)


(அண்ணன் சரக்கு போட்டு சலம்பி போலீசிடம் அடி வாங்குகிறார்.. சரக்கு பாட்டிலை போலிஸ் கண்ணிலிருந்தும் அடியிலிருந்தும் தன் நெஞ்சோடு அணைத்து குறுகி குனிந்து காப்பாற்றுகிறார், அடுத்து, அடி வாங்கிய வலி தெரியாமல் இருக்க அந்த காப்பாற்றிய 'ஆப்' சரக்கை 'ராவா' அடித்து மட்டையாகிறார்.)
சரக்கை நீங்கள் காத்திருந்தால்
சரக்கு உங்களை காத்திருக்கும்
நீ தந்த அலும்புக்கும்
நான் தந்த வம்புக்கும்
கைவிலங்கு காத்திருக்கு
(ஒரு பாரு)


(சரக்கு கிட்டாத நாள்களில் இன்ஸ்டன்ட் சரக்கு எப்படி காச்சுவது, எப்படி அதிக விலைக்கு விற்பது என்று ட்யூசன் எடுக்கிறார்)
ஊரல் அதை போடாமல் கள்ளும் வருமா?
ஊறுகாய், அதை தீண்டாமல் போதை தருமா
வெள்ளை இளச்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
(ஊரல்...)


(மறுபடியும் ஒரு பொன்னாளில் குரூப், பாருக்கு வருகிறது அண்ணன் (தனக்கு ஒரு பயலும் பொண்ணு தராததனாலே..) தான் திருமணம் பண்ணாது வாழ்ந்ததை நினைவு கூர்ந்து...ஓவரா மப்பாகி... )
பேதைக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
போதைக்கு வாழ்வது தோல்வி இல்லை
ஆனந்தத் தண்ணீரில் அபிஷேகம்
நான் செய்வேன்
என் இடுப்பில் வேட்டி இல்லை
(ஒரு பாரு)


('சாங்கு' சீகுவன்சு முடிஞ்சு 'சங்கு' சீகுவன்சு, பாட்டு முடியவும் அண்ணன் தண்டோரா, நெஞ்சை பிடிச்சிகிட்டு, தடால்னு கீழே விழுந்து விடுகிறார்)

தம்பிகள் இருவரும் கோரசாக "அம்மா, அப்பாவை நாங்க கண்டதில்லை, எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலே இருந்து.. உங்க மூஞ்ச பார்த்து, பார்த்தே பார்க்க சகிக்காமே... போதைக்கு அடிமையாகிட்டோம்.. ஆனா இன்னிக்கு நீங்க இப்படி இருக்குற நிலைய பார்த்தா... எங்களுக்கு சரக்கு அடிக்காமலேயே குமட்டிகிட்டு வருது.... அஆவ்வ்வ்....."

(அண்ணன் தண்டோரா பாசமலர் கிளைமாக்ஸ் சிவாஜி மாதிரி...)
"ஆமாண்டா... கண்ணுங்களா... எனக்கு உங்களை விட்டுட்டு போறதை நெனச்சா அழுகையா வருது... நான் உங்களுக்காக சொத்து நெறைய சேர்த்து வச்சிருக்கேன்... ஆனா உங்களுக்கு இன்னும்.. நல்ல சரக்கு எது கள்ள சரக்கு எதுன்னு... கண்டு பிடிக்க தெரியலேயேயேயே..."

தம்பிகள் இருவரும் கோரசாக "அதுக்கு இப்ப நாங்க என்ன செய்யனும்..."

"நீங்க ஒன்ன்ன்ன்னும் செய்ய வேண்டாம்... ஏன்னா... எனக்கே இன்னும் நல்ல்ல்ல சரக்கு எது கள்ள்ள்ள்ள சரக்கு எதுன்னு... கண்டு பிடிக்க தெரியலேயேயே... இல்லேன்னா இப்படி மெத்தனாலை குடிச்சிட்டு இப்படி சாக கிடப்ப்ப்பேனா... அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியும்...என்னோட புத்தி தானே உங்களுக்கும் இருக்கும்"

"நீங்க உங்க சொந்த காசை போட்டு சரக்கு அடிச்சா தான் நல்லது எது டூப்பு எதுன்னு சீக்கிரம் கண்டுக்குவீங்க... அதனாலே... அண்ணனோட சொத்துகளை எல்லாம்... என்னோட சேர்த்து பொதச்சிருங்க...அப்பத்தான் உங்களுக்கு காசோட பெருமையும், சரக்கோட அருமையும் தெரி....." என்றவாறே உயிரை விடுகிறார்.



(இடைவேளை....)

அண்ணனை இழந்த தம்பிகள் என்ன ஆனார்கள்? பணம் சம்பாதித்தார்களா? அவர்களின் சரக்கு தாகம் தீர்ந்ததா? என்பதனை காண அடுத்த பகுதி வரை சற்று பொறுத்து இருக்கலாமே...!

அடுத்த பகுதி இங்கே...

Tuesday 15 September 2009

குடிக்க விரும்பும் ஒன்று... கவுஜை



உடான்ஸு வடிவம் அங்கே...
ரியல் வடிவம் இங்கே....


ஒரு நூறு ருபாய் தாளை
வீணடிப்பதை விட
இந்த போதை
வேறு என்ன தருகிறது
என்ற விமர்சனம்
எனக்கு பிடித்திருக்கிறது

எல்லா சரக்கையும்
அடித்தாகி விட்டது

மாறுபட்ட சரக்குகள்
மனித ரசனையின்
அடர்த்தியான வடிவங்கள்

அத்தனையும்
ருசி பார்க்க பட்டுவிட்டன

நுட்பங்கள்..நுணுக்கங்கள்
துல்லியமாக கலக்கப்பட்டு
விட்டது..

ஆனால் ஒன்று
சிறந்தவை என்று
ஆயிரம் சொல்லலாம்

இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது?

அதற்கான ஒரு முயற்சியாய்
ஒரு வேளை
இது இருக்கலாமோ?

ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!


இது அண்ணன் தண்டோரா அவர்களின் கவிதைக்கு எதிர் கவுஜ அல்ல...

Monday 14 September 2009

இனி என்னை கூப்பிடுவீங்க...!!!(அழகு, காதல், பணம், கடவுள்)


சிங்கபூரில் சிங்காரமாக இருக்கும்
சிங்கபூர் சிங்காரம் அம்மா அப்பா.
சிங்கப்பூரின் சிங்காரமே நீதானே!
அம்மா அப்பா.

ஆமாப்பா...
நீயே அம்மா அப்பா.
பல நற்சிந்தனைகளுக்கு
நீயே அம்மா அப்பா.

அப்பப்பா...!!!
எழுத அழைத்திட்டப்பா!
ஒரு தொடராப்பா...
நானும் தொடர்கிறேனப்பா...!!!

அழகு,
காதல்,
பணம்,
கடவுள்,
என் சிந்தனையில்...!!!(ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

என் சிந்தனை
மட்டுமின்றி
ஊரார் சிந்தனையிலும்
ஊறிப் போனது,
ஊசிப் போனது,
நாறிப்போனது.

இருப்பினும்
புது நாற்றை போல்
முளைத்துக்கொண்டே இருப்பது

இவற்றை நம் சிந்தையில் ஏந்தி தானே
வாழ்வின் பெரும்பகுதி
களிக்கிறோம்,
கழிக்கிறோம்.

எனது பார்வையில் என்று பார்க்க போனால் இத்தனையும் மாயை.

அழகு: வரையறுக்க முடியாதது...

ஒருவனுக்கு அழகாய் தெரிவது மற்றவனுக்கும் அப்படியே தெரியாது. இதில் அழகை எப்படி வரையறுப்பது? அழகை யார் வரையறுப்பது?

பசித்தவனுக்கு கஞ்சிதான் அழகாய் தெரியும்.

ஆக என்னை பொருத்தவரையில் அழகு வரையறுக்க முடியாதது. அட.... அதற்கு எல்லை இல்லாதது என்றும் ஒரு பொருள் வருகிறதே...!!!

காதல் - காவியமாவது, காவி கட்டி அலையவைப்பது.

இளம் விடலைகளுக்கு இதை உண்டு பண்ணுவது நாளமில்லா சுரப்பி. திரைப்பட இயக்குனர்களுக்கு இந்த வார்த்தையே அமுதசுரபி. இளம் இயக்குனர்கள் பலபேரு பல விதமா சொல்லி விட்டார்கள்... இருந்தாலும் நாமும் இயக்குனர்கள் பாணியிலே சொல்லிறேன்

காதல் ஒன்னும் "சைன்சு நோட்டு" இல்லைங்க....
ஒரு பக்கம் படமாவும்
மறுபக்கம் விளக்கமாவும் பதிய
அது "இரண்டு கோடு" நோட்டு....
காதலன், காதலி அப்படிங்குற இரண்டு கோடுகளையும்
வாழ்க்கைங்குற எழுத்தாலே இணைச்சி வாழணும்.


காதல் ஒன்னும் "கிராப் நோட்டு" இல்லைங்க..
நேற்று அப்படி இருந்துச்சி...
இன்னிக்கு இப்படி இருக்கு
நாளைக்கு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல
அது நித்தம் தேவைபடுற "ரூபா நோட்டு"
என்னிக்கும் இருக்கணும்,
ஒரே மதிப்பா இருக்கணும்.


காதல் ஒன்னும் சளி இல்லைங்க
எப்பவாவது வருகிறதுக்கு....
அது "ஒன்னுக்கு" மாதிரி
அடிக்கடி வரணும்,
நிதமும் வரணும்...


காதல் ஒன்னும் "குசு" இல்லிங்கோ...
ஒளிச்சு, நாசுக்காக விட்டு நார அடிக்க
அது "சுவாசம்" மாதிரி,
இருக்குறதே தெரிய கூடாது
ஆனா உசுரோட தொடர்பா இருக்கணும்

(குசு போட்டு... (விட்டு இல்லீங்க)எழுதுனாதான் "பின்" நவீனத்துவ எழுத்தாளர்னு.....)

போதும் நிறுத்திக்குவோம்...

அப்படின்னா அந்த கருமாந்திரம் பிடிச்ச காதல் பற்றி என்ன... சொல்ல...?
நல்ல காதல் கிடைத்தால் காவியம் படைக்கலாம், கேடு கெட்ட காதல் கிடைத்தால் காவி கட்டி அலைய வைக்கும்.

((இந்த காதல் பகுதியை, தம்பி லோகுவுக்கும் தம்பி அன்புக்கும் சமர்பிக்கிறேன்))

பணம்: படுத்தி எடுப்பது...

இருப்பவனும் தேடுகிறான் இல்லாதவனும் தேடுகிறான் நிம்மதியை.
மேலுள்ள ஒற்றை வரியே சொல்லுமே அதனுடைய முக்கியத்துவத்தை.

கடவுள் - கலகக்காரர்களின் கை இருப்பு.

நான் மட்டும் அல்ல... இந்த உலகமே தேடிக்கொண்டிருக்கும் ஒரு பயங்கர குற்றவாளி.
பணத்தின் மேல் பற்றுள்ளவன் பணத்தை மட்டுமே தேடுவான்.
பொன்னின் மேல் பிரியமாய் இருப்பவன் பொன்னை மட்டுமே தேடுவான்.
பெண்ணின் மேல் காமமாய் இருப்பவன் பெண்ணை மட்டுமே தேடுவான்.

ஆனால்... கடவுள் விசயத்தில்...
கடவுள் பற்று உள்ளவனும்,
கடவுள் பற்று இல்லாதவனும்
தேடுகிறார்கள்...
.
.
.
கடவுளை.

அடுத்து இந்த தொடரை இழுத்து செல்ல நான் அழைப்பது...

1. இவரு பதிவை படிக்க நல்லா இருக்கும் அவரு அருமை நண்பர் கீத் குமாரசாமி அவர்களை அழைக்கிறேன்.

2. பேரு சும்மா டெர்ரர் பேரு தான்... ஆள் முகம் பார்த்தீங்கன்னா... பிஞ்சு மூஞ்சை வச்சி இருப்பார்... கொழுக் மொழுக் என்று இருப்பார்...இவரு பதிவு பேரு தற்போதும் யூத்து பிள்ளைங்களை ஆடசெயும் பாடல் வரிதான். சரி அவரு வேற யாருமில்லை.. அவரு..... நண்பர் ஸ்டார்ஜன் (தெளிவா படிங்க புள்ளைங்களா... டார்ஜான் இல்லே ஸ்டார்ஜன்)அவர்களை அழைக்கிறேன்.

3. பகடி செய்து பதிவு போடுவது இவருக்கு கை வந்த கலை. அதுவும் சினிமான்னா... சொல்லவே வேண்டாம்... அப்புறம் சினிமாவிற்கு நடிக்க இவரு ஆளுங்களை எல்லாம் ரெகமண்டு பண்ணுவாரு... அருமை நண்பர்... இரும்புத்திரை அரவிந்து அவர்களை அழைக்கிறேன்.

4.இவரு ஒரு புகழ் பெற்ற "பாமக"காரர். இவரை பற்றி நான் சொன்னால் அது நல்லா இருக்காது... நீங்களே இவரோட வலை பதிவுகளை கண்டு அறிந்து கொள்ளுங்க.. அப்புறம் பெயர் கூட சொல்லாமே இருக்க முடியுங்களா... பெயர் திரு.அன்பு மணி அவர்கள்.

"அடங்கொயாலே... உனக்கு அவ்ளோ பெரிய ஆளுங்களை எல்லாம் தெரியுமா?" என்று வாயை பிளக்க வேண்டாம்.

"ஆம் தெரியும்" என்பதே எனது பதில்.

வாருங்கள் திரு குடந்தை அன்புமணி அவர்களே....
( யோவ்... வென்று... "பாமக" அன்பு மணின்னு சொன்னே... ஆமாங்க... இப்பவும் சொல்றேன்.. இவரும் "பாமக"தான்... பாசத்தால் க்களை ட்டியவர்)

5. அகில உலக "அதிரடி எலக்கியவாதி", "அரசியல் அனகொண்டா", விளம்பர உலக "விஜய்"(அதாங்க இளைய தளபதி(என்ன? கொஞ்சம் வயசு தான் கூட...)),ஆனால் தற்போது பதிவுலகின் "கவிதை காட்டேரி".... இப்படி அண்ணனின் பெருமையை மட்டுமே கூறினால் அதுவே ஒரு பெரிய தொடர்பதிவுக்கு "வலி" வகுக்கும் என்ற காரணத்தினால் இதோடு முடித்து கொண்டு அண்ணன் தண்டோரா அவர்களை தண்டோரா அல்ல... முரசு கொட்டி அழைக்கிறேன்...