Tuesday 30 December 2008

பாட்டி வடையை "சுட்ட" கதை

பட்டணத்து வீதியிலே,
பாட்டி வடை வண்டியிலே,
பருப்பு வடை சுடயிலே,
காவலர் வந்தார் இடையிலே,
கவ்வி கொண்டார் கையிலே,
போயே விட்டார் ஒன்வேயிலே.

Friday 26 December 2008

நானும் பெரிய பதிவரு தான்....

அண்ணன் கோவியாரின் பதிவுலே பல பதிவர்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் போட்டு, சிறப்பித்து இருந்தார்கள். அவர்கள் எல்லாருடைய பதிவுகளையும் நானும் படித்து இருக்கிறேன். படித்து கொண்டு இருக்கிறேன்.

இதுலே ஒரு சிறப்பு வீஷேசம் என்ன? அப்படின்னு பார்த்தா.....இவர்களுக்காவது... இத்தனை, இத்தனை பேரு பாலோ பண்றாங்கன்ணு சொல்ல முடியுது... ஆனா எனக்கு எத்தனை, எத்தனை, எத்தனை பேரு என்னை எப்படி, எப்படி பாலோ பண்றாங்கன்ணு என்று என்னாலேயே சொல்ல முடியாது.... அப்படின்னா நாலாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய..... பதிவரு.....

Tuesday 23 December 2008

போதை பொழியும் பானம் - கும்பர்

தமிழ் ஆர்வலர்களும்....
நர்ஸிம் அண்ணாவின் ரசிகர்களும் மன்னிக்க.....

நேற்று தம்பி லண்டனில் இருந்து வந்திருந்தான்.. காலையில் காபியை குடித்துக் விட்டு, காலைக் கடனுக்காக ஆற்றுக்கரை ஓரம் நடந்து கொண்டே ஊர் விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்..திடீரென ஓர் இடத்தில் நிறுத்தி.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. நேத்து லண்டநிலிருந்து வரும்போது, நீ பல வருஷமா ஏங்கி கொண்டிருந்த ஒரு மேட்டர் கிடைச்சுச்சு.. அத நீ பார்த்தேன்னா அவ்வளவுதான்..என்று சொல்லிக் கொண்டே அந்த பொருளை எடுத்தான்..

பொன் நிறமாக இருந்தது அது, பெரிய பெரிய மனிதர்களும், மேட்டுக்குடி மக்களும் வைத்திருப்பார்களே அது, ஆங்கிலப் படங்களில் ஆணும் பெண்ணுமாய் அமர்ந்து ரசித்து, ரசித்து சிப்பி, சிப்பி அருந்துவார்களே அந்த வகையான உயர்தர மது தான் அது... பருகினால் "வருடும் போதையை தரும்" பானம்...

வாரா வாரம் வார இறுதியில், ஏதோ ஒரு கணத்தில் ஆளாளுக்கு கையில் உள்ள காசை போட்டு, காணாதத்திற்கு சில பழைய பத்திரிகைகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி யார் கண்ணிலும் படாதவாறு சரக்கு வாங்கி, ஏதேனும் தோப்பு, துறவு என்று ஒதுங்கி சரக்கடித்து...இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே..அனிச்சை செயலாக ஊறுகாய் தீர்ந்த விரலை நக்கித் தொலைப்பதும்... நடக்கும்..

இப்படி போற்றிப் பாதுகாத்த பழக்கம் அது.. பின்னர் ஒரு நண்பனின் பிறந்தநாள் அன்று, எங்கேயோ யாரிடமோ இருந்து அவன் கெஞ்சி கூத்தாடி கொண்டு வந்திருந்த மிலிடரி சரக்கு தான் , முதன்முதலாய் (முதலும் கடைசியுமாய்:மனசாட்சி..) நான் அறிந்து அடித்த விலை உயர்ந்த சரக்கு.. எட்டாவதாய் நான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்த சமயம் அது...

இப்படிப் பட்ட வரலாற்று பெருமை வாய்ந்த அந்த பழக்கம், (காதலில் தோற்றவுடன் மற்ற பொருள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விடுமோ..?). இன்று வரை தேடித் தீர்ந்து போனேன்..ஒரு உயர்ந்த சரக்கையும், நான் முதலில் காதலித்த பெண்ணையும்....

அந்த சரக்கைத்தான் கொடுத்தான்..அதை வாங்கிய நான் எதுவும் சொல்லவில்லை.. அமைதியாக கையில் வைத்திருந்தேன்..அவனை கட்டிப் பிடித்து தேங்ஸ் சொல்லுவேன், .."நண்பா... நீயே உண்மை நண்பா, மச்சி... கலக்கிட்டெ" என்று ஆர்ப்பரிப்பேன்.என்று என்ன என்னமோ எதிர் பார்த்திருந்த அவன்.. என்னுடைய இந்த ரியாக்ஸனை பார்த்து..

எங்களின் சக நண்பணிடம்
"ஏதாவது பிரச்சனையா, அவன் சரக்கடிக்கிறததை விட்டுட்டானா? " என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தான்..

பாவம் அவன் கும்பரை படித்ததில்லை..

கள் பானையை பதுமனிடம் இருந்து வாங்கிய பேதை ஏதேதோ பேச முயன்று ..உதடு குவித்து,விம்மி.. ஆனால் ஏதும் பேசாமல் அதை தன் மார்பில் வைத்துக் கொண்டானாம்.. வாயூரி நின்றானாம்..

அந்த பாடல்..

மோரொக்கும்; உலை வைக்கா தூறலு மயங்கும்; குளிர் நல் நீர்நீக்கி,
நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம்நோக்கும்; நுவலக்
கருதும், ஒன்றும் நுவல்கில்லான்;மேக்கு நிமிர் விம்மலன்;
விழுங்கலுறுகின்றான்


(மோரை போன்றது; உலை வைக்க கிடையாது, ஊறலும் கிடையாது, கலந்தடிக்க நீரும் தேவை இல்லை. இதை போன்ற ஒரு சிறந்த பானம் கிடையாது என்று எண்ணி,.கண்ணில் வந்த நீர் திரையை நீக்கி அதை நெடுநேரம் பார்த்தான்.. ஏதும் பேசவில்லை.. ஆனால் உதடுகள் விம்மி, வாயூரி, எச்சில் விழுங்கி நின்றான்..)

மீண்டும்.. கும்பர்.. வாழ்க..!

Monday 22 December 2008

மீண்டு வந்து விட்டேன்

வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).

இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......

Monday 24 November 2008

த்தூ... த்தேறி... ஐ. டி நாய்களா.....

த்தூ... தேறி... ஐ. டி நாய்களா..... என்ன மசுருக்குடா... ஐ. டி கம்பனிலே சேர்ந்தீங்க...?

அதான் படிச்சேல்லோ.... பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில். படிச்சிப் புட்டு... இங்கே என்ன மயிர தூக்கி நிறுத்த வந்தே? உங்களுக்கு எல்லாம், நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள்லாம் இங்கே வந்து வெள்ளைக்காரானுங்களுக்கு செருப்பு தொடைகக வந்துட்டா? அந்த பாழாப் போன TNPSC. UPSC, RRB, Bank Probationary Officers இதெல்லாம் எவனுக்குடா நடத்தறது? இந்த தேர்வை எல்லாம் தொங்கி சாகிறது தானேடா உங்க தலை எழுத்து.... அதை யாருடா மாற்ற சொன்னது....

படித்தது ஒன்று செய்வது ஒன்று, வெக்கம் இல்லை..... பரதேசி நாய்ங்களா?

உங்கப்பன் தோப்பிலும் துறவிலும் இருந்து சம்பாதிக்கிறான்.... நீங்களும் அவர்களுக்கு போய் உதவி செய்து வயிரை கழுவ வேண்டியது தானே... உங்களுக்கு எதற்கு பணம் சம்பாதிக்க வேண்டிய எண்ணம்? கஞ்சிகே வழி இல்லாத கூமுட்டைக்கு பொறந்த பண்னாடை நீயி. உனக்கு தன்மானம் இருக்கலாமா?

கஞ்சி, கஞ்சி என கத்தியே பசியை மறந்து கொண்டிருந்த உனக்கு Cathey Pacific-ல் பயணமா?
ஏர் பிடித்து பிழைத்து வந்த உனக்கு Air India ஒரு கேடா...?

என்னது? நீ சம்பாதிச்சி தான் உங்கப்பனை குடிசையில் இருந்து கோபுரத்துக்கு கொண்டு வர போறியா?....ஏண்டா... அறிவில்லெ உனக்கு, அதுக்கு தானேடா.... தேசத்தில் பலபேரு திட்டம் போட்டு, திட்டம் அறிவிக்கிறாங்க... அதை எல்லாம் நீயே செஞ்சுகிட்டா ... போடுற திட்டம் எல்லாம்.. எவனுக்குடா? இந்த சின்ன அறிவு கூட இல்ல... நீ எல்லாம்....த் தூ...

என்னது, இருந்த சின்ன கடையையும் வித்து உன்னை படிக்க வச்சாரா உங்க அப்பா?... என்ன கொடுமைடா ..இது... அவர்தான் புத்தி கெட்டு வித்தார் என்றால்..நீ அவரை விட பெரிய கூமுட்டையா இருக்கே... அவரே வேண்டாம்ணு தானே வித்துட்டார்... நீ அதை திருப்பி வாங்கி அவர் கைலே கொடுக்கணும்னு நினைக்கிறீயே .. நீ எல்லாம் ஒரு பிள்ளை....? உனக்கு ஒரு மூஞ்சி....?

இப்படி பொறாமையில் எத்தனை விமர்சனங்களும், வசவுகளும் வந்தாலும்,
நான் ஐ.டி-இல் சம்பாதித்து, தன்னை தேய்த்து என்னை வளர்த்த என் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த உலகில் என்ன வசதிகள் உள்ளதோ அத்தனையும் அனுபவிக்க செய்வேன், என்ன விலை என்றாலும் கொடுத்து.

நானோ அவர்களோ இறந்த பிறகு சொர்க்கத்தில் அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்று காண முடியாது. அதனால் இப்போ என் கண் முன்னே அத்தனையும் நடத்தி பார்ப்பேன்.

( இதன் பிறகும் ஐ.டி.யை பலவாறு தூற்றி அநேக பதிவுகள் வரும், வரட்டும்...
"வாழ்ந்தாலும் ஏசும்.. வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா...... "
என்ற பாடலை எப்போதும் என் மனத்தில் நிறுத்துகிறேன், அது போல் நீங்களும்....)

Thursday 20 November 2008

பெருந்தொகை... ரம்மு.... ஆம் அந்த ஃபேமஸ் பார் தான்....

"அண்ணே..."
"ஹ்ம் என்ன?"
"அண்ணே.. இங்கே உக்காந்துக்கலாமா அண்ணே"
"ஹ்ம்.."
"என்னன்னே.. தனியா உக்காந்து.... சரக்கு போட்டுக்கிட்டு இருக்கீங்க..."
"ஹான்..... யாரை நம்பி நான் பொறந்தேன்??? தம்பி... பொம்பளைங்களே நம்பவே கூடாது.. நம்பினே நடு ரோடு தான்.."
"ஆமாண்னே...."

இப்படி தொடங்கும் டாஸ்மாக் உரையாடல் பெரும்பாலும் பேச்சில் தொடங்கி நட்பில் முடிகிறது என்பது வரலாறு.

நண்பனின் வீட்டு திருமணத்தில், உற்சாக பாண விருந்தில், ஏமாற்றிய பெண்ணை நினைத்து (பூ மாதிரி பொண்ணு???)... நினைத்து... நினைத்து.. பார்த்துக் கொண்டே.. சரக்கை போட்டுக்கொண்டு சிகரட்டை... ஊதுவதில்... தொடங்கி

பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, பின் எந்த கல்யாணம் வந்தாலும், முடிந்த வரை சரக்கை போட்டுக் கொண்டு இருந்து, எப்படா இன்னொருவனுக்கு கல்யாணம் வரும் என்றும் காத்திருந்து, அந்த வீட்டு திருமண, உற்சாக பாண விருந்திற்கு எதேச்சையாக செல்வது போல் திட்டமிட்டு(திட்டமிட்டா அப்புறம் என்ன எதேச்சை?) செல்வது.... பின்னர் டேமேஜரிடம் திட்டு வாங்கின, பதவி உயர்வு வாங்கின என்று சகல நிகழ்வுகளுக்கும் சென்று தண்ணி அடித்து..நட்பை தொடர்வது

நார்மலாக கல்பா... இழுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும் பிறர் முன் சிப், சிப்பாக சிப்பி.. முன் உதட்டாலேயே முகர்ந்து கொண்டிருந்து விட்டு, அவர்கள் கை கழுவவோ அல்ல வேறு ஏதேனும் இயற்கை செயலுக்காகவோ எழுந்ததும் இயல்பாய் குடிப்பது போல் பாவனை காட்டி ஒரு கல்பில் இழுத்து விட்டு அடுத்த ரவுண்டை தொடர்வது...

பின்னர் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பொதுநண்பர் மூலம் அறிமுகமாகி, ஒரு சினேகப் புன்னகையில் மெயில் அட்ரஸ் வாங்கி, போன் நம்பர் வாங்கி, ஈ என்று இளித்துக்கொண்டே நீங்க என்ன அடிப்பீங்க? என்று கேட்டு அதை பெற்றும் கொடுத்து, யார் எவர் என்பதை முழுமையாக தெரியாமல் குத்து மதிப்பாக தகவல்களை பரிமாறி..பின் சிகரட் , சைய்டு-டிஸ் பரிமாறிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கிறது..

இப்படி எத்தனையோ சந்தர்ப்பத்தில் யார் எவர் என்றே தெரியாமல் கிலாசோடு கிலாசு உரசி.. சகலமும் பகிர்ந்த... நட்பு... திருமணம் முடிந்தாலும் முற்று பெறாமல் இறுதி வரை செல்வதை பார்த்தோ, அனுபவித்தோ, அனுப‌வத்தை கேட்டோ இருக்கிறோம்...

இந்த மேட்டரை எந்த பிரபலமான பாடலும் விளக்க வில்லை என்றே தெரிகிறது..
அதனால் நானே ஒரு சிறந்த குறுந்தொகை பாடலை உல்டா செய்து விட்டேன்..

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க...
மற்றவர்கள் குடித்து விட்டு ஸ்ட்டெடியா நிக்க...


பாடல்..

நீயும் நானும் யார் ஆகியரோ
பியரும் பிராந்தியும் எம்முறை கேளிர்
யானும் நீயும் வேறு வழி வந்தும்
ரம் மிடை கலந்த கோக் போல
குடியரிடை நெஞ்சம் தாம் கலந்தனவே



ஒரு குடிமகன், இன்னொரு குடிமகனிடம் கூறும் குடிப்பாடல்..
ரம்மி ஆடினார் ரம்மி என்ற புலவர்..(ரம் அடித்துவிட்டு ரம்மி ஆடுபவராக இருக்கும், அதனால் வந்த பெயராக இருக்கும்..)

இது இந்த பதிவின் எதிர் பதிவு அல்ல, அதனை ஒட்டி வந்தது......

Monday 17 November 2008

வாழ்க்கைப் போராட்டம்

அணிஅணியாய் வீரர்கள்,
ஒரே அடி,
செத்து விழுந்தன எறும்புகள்.


(மொக்கையா இருந்தாலும் பொறுத்துக் கொள்க....)

Thursday 13 November 2008

பொறுப்பை மறந்தது காவல்துறை மட்டுமா????

நேற்று சட்ட கல்லூரியில், மன்னிக்க சென்னை, அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் ( என்ன சரிதானா ? )நடந்த வன்முறை சம்பவம் கண்டனத்திற்கு உரியதே, இதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை.

இதனை நான் மாணவர்களின் மோதலாக கருதவில்லை. மோதல் நடந்த இடம் கல்லூரியாக போய் விட்டதே என்றே வருந்துகிறேன். வேறு எங்காவது இந்த மோதல் நடந்திருந்தால் நாம் என்ன? நினைத்திருப்போம். இரண்டு மாணவ குழுவுக்கு இடையே நடந்த மோதல் என்றா???

இதனை ஒட்டி நம் பதிவர்கள் அனைவரும் தங்கள் கருத்தை வைதாயிற்று, வைத்தாயிற்று. இதில் பலரும் தங்கள் வாதத்தை வைக்கும் போது காவல் துறையையும் தங்கள் வார்த்தை குண்டுகளால் தைக்க தவற வில்லை. அவர்களின் சமூக அக்கறை பெருமிதம் கொள்ள வைக்கிறது. வாழ்க பொது ஜனம்.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அனைவரின் வேண்டுகோளும்/குற்றச்சாட்டும் அந்த காவலர்கள் நம்ம செல்லுலாய்டு நாயகர்கள் போல் பாய்ந்து பிடித்து நிறுத்த வேண்டுமாம். முடியுமா அது? காவலர்கள் வேலையும் சில சட்ட திட்டத்திற்கு அடங்கியே தான் இருக்கும், இருக்கிறது. ( உடனே, அவர்கள் எல்லா விடயத்திலும் சட்ட திட்டத்திற்கு அடங்கியா செய்கிறார்கள் என்று புலி பாய்ச்சல் பாய வேண்டாம், அநேக விடயங்களில் இல்லை என்றே எனக்கும் தெரியும்).

ஒரு கல்லூரியில் சென்று சும்மா ஒரு சில மாணவர்களை கைத்து செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் நீங்களும், மற்ற ஊடாக புலிகளும் விட்டு விடுவீர்களா? "காவல்துறையின் அராஜாகம். காவல்துறையின் ஆணவ போக்கு. காவல் துறையின் திமிர், காவல் துறையின் ... அது.... காவல் துறையின் ..இது..." என்று போட்டு நுங்கு எடுக்க மாட்டீங்க????

மாணவர்களே என்ன சொல்வார்கள்? இன்னைக்கு நாங்க அடிசிப்போம், நாளைக்கு நாங்க ஒண்ணா சேர்ந்ததுப்போம். இடையிலே நீ என்ன? அப்படி என்று தானே கேப்பார்கள். அதே போல் கல்லூரியின் உள்ளே ஹாக்கி மட்டை வைத்திருந்தார்கள், கிரிக்கட் மட்டை வைத்திருந்தார்கள் என்று சொல்லி கைது செய்ய முடியுமா? பின்னே கல்லூரியில் இதெல்லாம் இல்லாமெ வேற என்ன இருக்கும்?

சும்மா கத்தியை வைத்திருப்பதற்கெல்லாம் கைது செய்யிய முடியாது? என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியே கைது செய்யலாம் என்றாலும் அது ஏதும் அறியாத அப்பாவி வேண்டும் என்றால் கைது செய்யலாம். ஆனால் அவர்கள் அப்படியா? அவர்கள் சட்டத்தை அறிந்தததை விட சட்டத்தின் ஓட்டைகளையே அறிந்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? சரி அப்படியே ஒரு காவல்காரார் பாய்ந்து போகிறார் என்று வையுங்கள்; அவர் என்ன ஆயுதம்? யுக்தி கொண்டு அவனை பிடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சுட்டு விடலாமா? தடி கொண்டு தாக்கி விடலாமா? இல்லை நம்ம கைய்ப்புள்ள மாதிரி வேண்டாம் அழுதிருவேன் என்று மிரட்டல்(?) விடலாமா?

சரி அப்படியே ஒருவர் பாய்ந்து ஏதாவது ஆகி விட்டால், அந்த காவலரின் நிலை என்ன? அந்த காவலரின் குடும்பத்தின் நிலை என்ன? இதை கேட்டால் உடனே நீங்கள் அது அவர்களின் கடமை என்று சொல்வீர்கள். அப்படி சொல்லும் நாம் நம் கடமையை சரி வர செய்திருக்கிறோமா? செய்கிறோமா? செய்வோமா? நாம் நம்முடைய குற்றத்திற்கு, இயலாமைக்கு பிறரையே குற்றம் சாட்டி பழகி விட்டவர்கள். அதனாலேயே இப்படியும் சொல்லி கொண்டிருக்கிறோம்.

சட்டம் என்ன சொல்கிறது? இன்னது செய்தால் நாம் இன்ன தண்டனைக்கு, இன்ன நிலமைக்கு ஆளாவோம் என்று அறியாதவர் செய்தால் அவர்களுக்கு தண்டனை இல்லை என்று சொல்கிறது. (சரிதானே... தவறா இருந்தால், பிழை பொறுத்து அருள்க. அதாவது தான் செய்வத்தின் விளைவு அறியாத குழந்தைகளையும், மன நலம் பாதித்தவரையும் சட்டம் தண்டிக்காது என்று சொல்ல வந்தது...) ஆனால் இவர்கள் அப்படி அல்ல. பொறுத்திருந்து பார்ப்போம் சட்டம் என்ன செய்கிறது என்று?

அந்த இடத்தில், உங்கள் தகப்பனாரோ, மகனோ காவல் பணியில் இருந்திருந்தால் நீங்கள் அவர்கள் என்ன செய்ய வேண்டும் எதிர் பார்த்திருப்பீர்கள்???? ( தயவு செய்து மன சாட்சியுடன் சொல்லவும்.......)

நாம் ரோட்டில் விபத்து இன்றி வாகனம் ஒட்ட " உங்கள் குடும்பம் உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறது" என்று எழுதி வைத்திருக்கிறாரே காவலர், அந்த அறிவிப்பு அவருக்கும் தானே?

Thursday 16 October 2008

கேள்வி கேள்வி கேள்வி..

பெரும்பாலும் யாரு கதை எழுதினாலும், கீரோ லவ்வி கண்னாலம் கட்டுறார். ஆனா அவரு தங்கைக்கு இவரு தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறார்... ஏங்க? அப்படி????
அவரு தங்கை லவ்வ கூடதாங்கோ??? அப்படியே அவ லவ்வி தொலைச்சா அவரு ஏங்க ஒண்ணு வில்லனா இருக்கார்.. இல்லை கெட்டவனா இருக்கார்....

யாராவது பதில் சொல்லுங்களேன்....

Wednesday 15 October 2008

மில்லியன் டாலர் கேள்வி....

திவாலு...திவாலு.. திவாலு... என்று சொல்கிறார்களே.... எங்கே அய்யா... திவாலு ஆகி போச்சு.... அந்த வங்கியும் அமெரிக்காவில் தான் உள்ளது... அந்த வங்கியின் பணமும் அங்கே தான் இருக்கு... அதுக்கிட்டே கடன் வாங்கி கட்டிய வீடும் அங்கேயே தான் இருக்கு.... பின்னே எப்படி திவால் ஆகும்... யாராவது மொத்த வங்கியை கொள்ளை அடித்து விட்டு எங்காவது ஓடிப் போய்ட்டாங்களா...

அய்யா... யாராவது விளக்குங்களேன்.......

Monday 29 September 2008

பயடேட்டா

இது கண்டிப்பாக கோவி அண்ணாவின் பதிவுக்கு எதிர் வினை தான். அவருக்கு பல பேரை தெரியும் அதனாலே அவர் மட்டும் தான் பயடேட்டா போடனுமா என்ன? அதனாலே நானும் போட்டுட்டேன் எனக்கு தெரிந்த பய-டேட்டாவை....

நான் இங்கே சில பய-டேட்டாக் களை கொடுத்து உள்ளேன். இது இங்கே நம்ம வலை உலகில் யார் யாருக்கு என்ன என்ன உள்ளது என்று நீங்களே கும்மி கொள்ளுங்கள். நானே போட்டு இருப்பேன்... ஆனால் வலை உலகில் எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது.. ஆகையால் நான் சொன்னால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகையால் தெரிந்தவர்கள், தெரிந்தவர்களை கும்மி கொள்ளலாம்,கொல்லலாம்.

(யாரும் இதை சீரியஸா எடுத்து என்னை கும்மிறாதீங்க)

Acarophobia -- fear of skin infestation by mites or ticks
Acousticophobia -- fear of noise
Acrophobia -- fear of heights
Aerophobia -- fear of flying
Agoraphobia -- fear of open spaces
Ailurophobia -- fear of cats
Algophobia -- fear of pain
Amaxophobia -- fear of riding in a vehicles
Androphobia -- fear of men
Anginophobia -- fear of sore throat
Anthropophobia -- fear of people, especially in groups
Apiphobia -- intense fear of bees
Arachnophobia -- fear of spiders
Astraphobia -- fear of lightning
Atelophobia -- fear of imperfection
Automysophobia -- fear or dislike of being dirty
Autophobia- Fear of being alone or of oneself (எனக்கு மற்றும் பல புதிய பதிவர்களுக்கு)
Bacteriophobia -- fear of bacteria
Bathophobia -- fear of bathing
Batophobia -- fear of passing high buildings
Batrachophobia -- fear of frogs and toads
Belonephobia -- fear of pins and needles
Blennophobia -- fear of slime
Bogyphobia -- dread of demons and goblins
Bromidrosiphobia -- fear of having unpleasant body odor
Brontophobia -- fear of thunder and thunderstorms
Carcinophobia -- fear of cancer
Cardiophobia -- fear of heart disease
Cenophobia -- fear of open spaces
Cheimaphobia -- fear or dislike of cold
Chrometophobia -- fear or dislike of money (ஹும்ம்... வரும்... வட்டார போக்குவரத்து அலுவலக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இடும் போது வரும்)
Cibophobia -- fear of food
Claustrophobia -- fear of enclosed spaces
Cnidophobia -- insect stings
Coitophobia -- fear of sexual intercourse
Coprophobia -- fear of excrement/feces
Cyberphobia -- fear of computers ()
Cymophobia -- fear of waves
Cynophobia -- dread of dogs
Cypridophobia -- fear of venereal disease
Demonophobia -- fear of spirits, demons
Demophobia -- dislike of crowds
Dermatophobia -- fear of skin disease
Dipsophobia -- fear of drinking
Domatophobia -- fear of being in a house
Doraphobia -- fear of contact with animal fur or skin
Dysmorphophobia -- fear of deformity
Ecophobia -- fear of home surroundings (அநேக குடும்ப-இஸ்திரி களுக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன்...அதுவும் இப்போ தீபாவளி நேரம் வேற)
Eleutherophobia -- fear of freedom
Elurophobia -- fear of cats
Emetophobia -- fear of vomiting
Enetophobia -- fear of needles or pins
Entomophobia -- fear of insects
Ergophobia -- fear of work
Erotophobia -- fear of sexual feelings and their physical expression
Gamophobia -- fear or dislike of marriage
Gephyrophobia -- fear of crossing a bridge
Gerascophobia -- fear of growing old
Glossophobia -- fear of speaking in public or of trying to speak
Graphophobia -- dislike of writing
Gymnophobia -- fear of nudity
Gynophobia -- fear of women
Hadeophobia -- fear of hell
Hagiophobia -- dislike for saints and the holy
Hamartophobia -- fear of error or sin
Haptophobia -- fear of touch
Harpaxophobia -- fear of robbers
Hedonophobia -- fear of pleasure
Hemaphobia -- fear of the sight of blood
Herpetophobia -- fear of reptiles
Hierophobia -- fear or dislike of sacred objects, fear of priests
Hippophobia -- fear or horses
Hodophobia -- fear or dislike of travel
Homophobia -- fear of homosexuality (same-sex affection)
Hydrophobia -- fear of water
Hydrophophobia -- fear of rabies
Hygrophobia -- fear of liquids
Hypnophobia -- fear of sleep
Iatrophobia -- fear of doctors
Ichthyophobia -- fear of fish
Iophobia -- fear of poisons
Kakorrhaphiophobia -- fear of failure or defeat
Katagelophobia -- fear of ridicule
Keraunophobia-- fear of thunder and lightning
Kinetophobia -- fear or dislike of motion
Kleptophobia --fear of thievery
Kopophobia -- fear of mental or physical examination
Laliophobia -- fear of talking
Linonophobia -- fear of string
Mechanophobia -- fear of machinery
Merinthophobia -- fear of being bound
Microphobia -- fear of germs
Misanthropy -- a hatred of mankind in general
Misophobia -- fear of dirt
Molysomophobia -- fear of infection
Musophobia -- fear of mice
Myxophobia -- fear of slime
Necrophobia -- fear of death or corpses
Neophobia -- fear of new things
Noctiphobia -- fear of the night
Nosophobia -- fear of contracting a disease
Nudophobia -- fear of nudity
Nychtophobia-- fear of darkness
Obesophobia -- fear of gaining weight
Ochlophobia -- fear of crowds
Ochophobia -- fear of vehicles
Odontophobia -- fear of teeth
Odynophobia -- fear of pain
Ombrophobia -- fear of rain
Ophidiophobia -- fear of snakes
Panphobia -- a nonspecific fear of everything
Paraphobia -- fear of sexual perversion
Parasitophobia -- fear of parasites
Pathophobia -- fear of disease
Peccatiphobia -- fear of sinning (இது எனக்கும் இருப்பதால் தான், பதிவு நிறைய போடுறது இல்லை...)
Pedophobia -- fear of children
Peladophobia -- dread of baldness
Peniaphobia -- fear of poverty
Phagophobia -- fear of eating
Pharmacophobia -- fear of drugs
Phasmophobia -- fear of ghosts
Phenogophobia -- fear of daylight
Phobophobia -- fear of fear itself
Phonophobia -- fear or dislike of noise
Photophobia -- fear of light
Phonemophobia -- fear of thinking (இது பல பேருக்கு இருக்கிறதனாலே தான், நெறைய பேரு வலைப்பதிவு பக்கம் வருவதே இல்லை)
Pnigophobia-- fear of choking or smothering
Poinephobia -- fear of punishment
Psychophobia -- fear of the cold
Pyrexiophobia -- fear of fever
Rhabdophobia -- fear of being beaten
Rhypophobia -- fear of filth
Sciophobia -- fear of shadows
Scoleciphobia -- fear of worms
Scopophobia -- fear of being looked at
Scotophobia -- fear of the dark
Socialphobia -- fear of people or crowds
Tachophobia -- fear of speed
Taphephobia -- fear of being buried alive
Telephonophobia -- fear of the telephone
Theophobia -- fear of God (ஹை...இதை ஆன்மிகம்னு சொல்லலாமா?????)
Thanatophobia -- fear of death
Tocophobia -- fear of childbirth
Tomophobia -- fear of surgical operations
Topophobia -- fear of certain places
Toxiphobia -- fear of being poisoned
Trichophobia -- fear of hair
Urophobia -- fear of urine
Vaccinophobia -- fear of vaccines and vaccination
Venereophobia -- fear of venereal disease
Venustraphobia -- fear of beautiful women
Verminophobia -- fear of germs
Vermiphobia -- fear of worms
Xenophobia -- fear of foreigners and strangers
Zoophobia -- fear of animals



Ok... Start the Kummiies..... If you are free....

Friday 26 September 2008

பதிவர்களுக்கு நறுக்குன்னு நாலு கேள்வி....


தில் இருந்தால், இந்த என்னோட "நறுக்" கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்போ "நறுக்" கேள்விகள் காலம் போல் இருக்கிறது. எனக்கு வலை உலகில் யாரும் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. ஏதோ நமக்கு தோனியதை எழுதுவோமே என்று எழுத வந்து, ஒண்ணும் சாதிக்கலே. ஏதோ ஆணி புடுங்குற பொழப்புலே இருந்து ஒரு சிறு ஆறுதல் கிடைக்குது. தமிழ் அன்னைக்கு புது ஆபரணம் செய்து போடும் அளவுக்கு அறிவில்லாட்டாலும், கீழே இருக்கிற சாமரத்தை எடுத்து விசிறி விட உடம்பிலே தெம்பு இருக்கு. அந்த முயற்சியா தான் நம்ம பதிவு. (மயிலை பார்த்து ஆட வந்த வான் கோழி நான் என்று எனக்கும் தெரியும்). பின்னூடடமே வரமாட்டேங்குது, பின்னே நம்மை மதித்து யார் பதில் சொல்லுவாங்க? அதனாலே நான் இந்த "நறுக்" கேள்விகளை பொதுவில் வைக்கிறேன்.




தில் இருந்தால் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. "நறுக்" கேள்விகள் என்றால் என்ன?

2. "நறுக்" கேள்விகள் யாரிடம் கேட்க வேண்டும், யாரிடம் கேட்க கூடாது?

3. "நறுக்" கேள்விகளை சாய்சில் விடலாமா?

4. காய்கறி வெட்டுவதை நாம் காய்கறி "நறுக்"க போகிறேன் என்று சொல்லும் நாம், முடி வெட்டுவதை மட்டும் முடி "நறுக்"க போகிறேன் என்று ஏன் சொல்வதில்லை?





விடைகளை எதிர் பார்த்து....... இருக்கிறேன்.

Wednesday 24 September 2008

லக்கியின் அல்லக்கையாக தன்னை அறிவித்த பரிசலுக்கு - பதில்.

வாங்க... வாங்க..... வாங்க...... இப்பத்தான் உங்களுக்கு என் வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சுதா..? என்ன அப்படி அடிச்சி பிடிச்சி வந்திருக்கீங்க. கோப படாதீங்க... உங்களை எல்லாம் நாங்க எங்க வீட்டுக்கு பின்னே எப்படித்தான் வரவைக்கிறது. பாருங்க இந்த குடிசை பகவான் பி லாக் க ர் கொடுத்த இலவச மனையிலே கட்டினது தான், பல பேரு பொருளோடு கட்டி இருக்காங்க, நானே நை+ஆண்டி நைனா என்கிட்டெ பொருள் இருக்குமா...அதனாலே உங்கள மாதிரி பொருள் இருக்கிற நாலு பேரு வந்து போனாததானே, நம்ம வாழ்க்கைக்கும் ஒரு பொருள் இருக்கும்.

சரி..சரி..சரி.. சமாச்சாரத்துக்கு வறேன்.

அதுக்கு முன்னே நம்ம அண்ணன் பரிசலாரின் என்ற நான் யாருக்கு அல்லக்கை? இந்த பதிவையும் கொஞ்சம் படிச்சிட்டு வாங்க......

என்ன? படிச்சாச்சா

அல்லக்கை-னா என்னன்னு ஒரு ஆராய்ச்சி வேற.

எவ்ளோ எளிதான விஷயம். இதற்கு போய்.??

அல்லக்கை:
முதலாளித்துவம் பரவியுள்ள இந்த சமூகத்தில், சந்தைக்கு செல்லும் பெரும் முதலாளிமார்கள் ஒரு சரக்கை ( சாராயம் அல்ல) தகுதி ஆராய எடுத்து பார்க்க வேண்டி வரும், அந்த வேளையில் குனிந்து சரக்கு எடுக்க முடியாது, அதற்கு அவர்களின் தொப்பையும் இடம் கொடுக்காது, அவர்களின் கையும் அழுக்கு ஆகிறும், மேலும் அவர்களின் பை திருட்டு போகும் வாய்ப்பும் அதிகம் அதனாலே அவங்க தங்களோட ஒரு ஆளை கூட்டிக்கிட்டு போவாங்க, அவர் அவர் கையாலே அள்ளி முதலாளியிடம் கான்பிபார்கள். அவர்களே பின்னாளில் அள்ள கை என்று அழைக்க பட்டார்கள். பின்னாளில் இதுவே மாறி அல்லக்கை என்றாகி விட்டது. வெகு நாளுக்கு பிறகு ஏவிய வேலை செய்யும் அனைவரையும் அல்லக்கை என்று அழைக்கலானார்கள் மக்கள்.

ஸ்..ஸ்...ஸ்... அப்பா.... இன்னும் என்ன? என்ன? கேள்விலாம் வரப்போகுதோ?

பி. கு: தலைப்பு காலையிலே அண்ணன் கோவியாரின் பதிவை படித்தினால் வந்த பாதிப்பு... ஹி ..ஹி..ஹி...
( இருந்தாலும் பொருந்தி வருதுலொ?)

Friday 19 September 2008

பதிவு எழுதுவோர்க்கு தலைப்பு இலவசம்.

ரத்னேஷ் அண்ணாவின் பதிவில் பின்னூடடம் இட்டு இருந்த போது அண்ணன் ஒரு கேள்வி கனையை என்னை நோக்கி ஏவி உள்ளார்கள்.


நையாண்டி நைனா சார்,

//அன்றும் இன்றும் என்றும் புனிததத்தை கெடுக்கும் செயல்களில் பெரியாரோ, பெரியாரின் தொண்டர்களோ செய்வதில்லை.//

வினய நோக்கம் இன்றி தெரிந்து கொள்வதற்காக மட்டும் கேட்கிறேன். பெரியாரோ பெரியாரின் தொண்டர்களோ புனிதம் என்று எவற்றைக் கருதுகிறார்கள் என்று சொல்வீர்களா?


அந்த கேள்வி நெஞ்சில் தைத்ததால், சோர்ந்து, இருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஆண்டு இறுதி தேர்விலே கூட இப்படி யோசிக்கலை, அப்படி யோசிக்கிறேன். அதுக்கு முன்னாடி உங்களுக்கும் அந்த கேள்வியை வைக்கிறேன், என் மதிக்கு எட்டாத்தது உங்கள் அறிவிற்கு புலப்படலாம் அல்லவா? நீங்களும் இதற்கென்று தனியாக யோசிக்காமல், பேருந்தில் செல்லும்போதோ, வீட்டில் படுத்திருக்கும் போதோ, இல்லை அரசு அலுவலகத்தில் லஞ்சத்தையும், விண்ணப்பதினையும் உள்ளே அனுப்பி காத்திருக்கும் போதோ அல்லது கழிவறையில் 'இருக்கும்' போதோ, தயவு செய்து யோசித்து இந்த தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் அறிவை ஏற்றி வைக்குமாறு உங்களை கேட்டு கொள்கிறேன்.

இவற்றிற்கு நான் பதில் சொல்லும் முன்னே ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நான் பெரியாரும் அல்ல, பெரியவரும் அல்ல. பெரியாரின் தொண்டனும் அல்ல, சிறியாரின் குண்டனும் அல்ல.

"புனிதம் என்றால் என்ன?"

புனிதமானது நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, மனிதனுக்கு மனிதன் வேறுபடும். ஆனால் சகலரும் என்ன விரும்புகிறார்கள்? தன்னை அனைவரும் மனிதனாக நடத்த வேண்டும் என்று எண்ணுவது, அந்த வகையில் பெரியாருக்கும் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் ( உண்மை தொண்டர்கள்) பிற மனிதனின் வாழ்வாதார உரிமை, உரிமை, உரிமை, உரிமை ஒன்றே ( கருவிகளோ மற்ற பொருள்கலோ அல்ல) புனிதமாகும்.எதனையும் ஆராயும் அறிவும், கேள்வியுமே மந்திரமாகும்.


இன்னும் மற்றவர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கலாம்.

Tuesday 16 September 2008

எனது பயணத்தை தொடர்கிறேன்...

அப்பாடா.. ஒரு வழியா நம்ம அலுவலகத்திலே போட்டிருந்த புதிய இணைய விதிகளை, சிறிது தளர்த்தி இணைய வீதிகளில் நடமாட அனுமதி கொடுத்ததினால், இப்போது என்னால் இந்த பதிவுலகிற்கு காலடி வைக்க முடிந்தது.

இணைய தொடர்பு மட்டுறுத்தப்பட்டிருந்த காலத்தில் பதிவு செய்ய அதிக தகவல் இருந்தது போலவும், இப்போ வற்றி போனது போலவும் ஒரு மாயை. ( சட்டிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும் ... என்று யாரோ முணுமுணுகிறார்கள்). இப்போ என்ன பதிவு போடலாம்னு யோசிக்கிற வேளையிலே ஒண்ணுமே வந்து தொலைய மாட்டேங்குது.
சரி மக்கள் தப்பித்தார்கள் என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டு,
நான் மீண்டும் வருவேன் மொட்டை பிளேடு கொண்டு.
என்று அறிவித்து எனது பயணத்தை தொடர்கிறேன்.

Tuesday 29 July 2008

பொய்யை பரபரப்பாக்கும் குமுதம்.

இன்றைய உலகில் பத்திரிகையின் வியாபார தந்திரத்தினால், ஜனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கபடுகிற பத்திரிகை மிகவும் கீழிறங்கி, ஜாதி, மத உணர்வு என்ற புற்று கொண்டுள்ளது. ஜனரஞ்சகம், பெரும்பான்மை மக்களால் ரசிக்கபடுவது என்று கூறி அதனாலேயே அது தான் சிறந்தது, அதில் சொல்லபட்டுள்ளது எல்லாம் உண்மை. கூறுவோமெயானால், நம்மை போல் மூடர்கள் யாருமில்லை.

சில பத்திரிகைகள் தங்கள் வருமானம் பெருக வேண்டும் என்ற காரணத்திற்காகவும், சமுதாயத்தில் பரபரப்பை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவும் சில வேடிக்கை வினோத செய்திகளை வெளியிடுவார்கள். அது போல தான் இதுவும். இதில் பாரதியையும், குஷ்புவையும் நுழைத்துள்ளார்கள்.

பாரதி என்ற பெயர் பாரதியாருக்கு மட்டும் தானா? குஷ்பு என்ற பெயர் அந்த சினிமா நடிகைக்கு மட்டும் தானா? அந்த பெயரிலே வேறு யாரும் இருக்க மாட்டார்களா? இருந்தாலும் அவர்கள் ஜாதி சான்றிதழ் வாங்கவே வரமாட்டார்களா? அப்படியே வந்தாலும் வேறு பெயரில் தான் எடுப்பார்களா? என்ன கொடுமை சார் இது?

அவர்கள் கொடுத்த தகவல் அது பாரதி தான், அது குஷ்பு தான் என்று அருதியிட்டு, உறுதிப்பட கூறுவது எப்படி?

இவர்கள் ஏதோ பரபரப்பை உண்டு பண்ண, இவ்வாறு எழுதி உள்ளார்கள் என்றே எனக்கு படுகிறது. இவர்கள் இவ்வாறு குற்றத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்றால், இவர்களுக்கு சமுதாயத்தின் மீது உண்மையில் அக்கறை உண்டு என்று சொன்னால் இந்த அசிங்கத்தை செய்வோரை கையும் மெய்யுமாக பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது தானே. அல்லது இதே நாடகத்தை சம்பந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளின் முன்னே அல்லது ஒரு மாவட்ட ஆட்சியர் முன்னோ, காவல் துறை உயர் அதிகாரிகளின் துணை உடனோ செய்யலாமே.






இது அந்த பத்திரிகையின் கற்பனையே அன்றி வேறில்லை.



இணைப்பு: இதனை முன்னிறுத்தி சில துவேச கருத்துக்கள் பரப்பபட்டதால் இன்னும் சில தொக்கி நிற்கும் கேள்விகளை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுளேன்.

1: சில மாதங்களுக்கு முன்னே, ஜனாதிபதி, மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் வழங்கினார்கள், இலஞ்சம் வாங்கி கொண்டு, அது மாதிரி கைது வாரண்ட் பிறப்பித்தவர்கள், திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?

2. இந்தியாவின் பாதுகாப்பு/உளவு துறையில் இருந்து கொண்டு இந்தியாவை மற்றவர்களுக்கு காட்டி கொடுக்கிறார்களே அவர்கள் திரு. ஹரி சொல்லியது போல் உள்ள தமிழ் நாட்டு அதிகாரிகள் தானா?

Friday 4 July 2008

அப்படியா சேதி?????

இவ்ளோ நாளும் நாம ஒலக நாயகன் கமல ஹாசனின் தெரமைய புகலோ புகழுண்னு புகழுந்து பொலந்து கட்டுனோம்... நானும் கூட ரொம்ப ஒன்றி போயி யாரை பார்தாளும் கமல ஹாஸனாகவே தெரிய, ஆபீஸுக்கு ஒருநா அல்வா கொடுத்துட்டு.. பார்க்கான்டே உக்காந்து ரொம்ப சிலாகித்துவிட்டு ஏதோ பெரிய கலா ரசிகனாட்டம் பீத்திகிட்டே இருந்தப்போ வருத்த படாத வாலிபர் சங்கத்தை ( இது நம்ம இணையத்தில் உள்ள வ.வா. சங்கம் அல்ல ) சேர்ந்த ரெண்டு பேரு வந்து என்கிட்டெ கேட்டனுங்க... நீங்க திருந்தவே மாட்டீங்கலாண்ணு.... " அடங்கொக்கா மக்கா... நாம என்னடா..செஞ்சோம்னூ யோசிச்சிக்கினு இருக்கும் போது சொன்னான்.. "ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்ததும் எங்க தலைவரு தான், இப்போ கமலுக்கு வாழ்க்கை கொடுத்ததும் எங்க தலைவர் தான்" என்று சொன்னான் "எப்படி? ..எப்படி?" என்று நானும் கேக்க..

சந்தூரமுகி பட விழாவில் தானே சூப்பெரு இஸ்டாரே சொன்னாரே... "என்கிட்டெ கால்சீட் வாங்கூறது முக்கியமில்லை.. போய் வ.வா சங்கத்தின் தலைவரு கைய்ப்புள்ள கிட்ட பஸ்ட் கால்சீட் வாங்கிகினு வாங்க அப்பாலே நான் தரேன்னு சொன்னேன்" என்று தானே சொன்னாரு....

ஓ... இப்படி ஒரு சேதி இருக்கா....என்று யோசித்து கொண்டே ...... அப்புறம்????..... என்று அடுத்த விடைக்கு கொக்கியை போட....

"இந்த தசாவதாரம் என்ன அவரு கான்செபுட்டா??? இல்லவே இல்லை.... "மனத்தை திருடி விட்டாய்" படம் பார்தீளா.. அதுலெ.. எங்க கைப்புள்ள, பிகர் கிட்டே ரீலு விட்டுக்கிட்டே இருப்பாரு.. அப்ப அந்த காட்சியை பார்த்தீங்கன்னா அதுலெ அவரு அப்பா, அம்மா, அண்ணன், மற்றும் தம்பி என்று நாலு ரோழுலெ வருவாரு.. இதுலே இருந்து பிடிச்சது தான் தசவதார கான்செபுட்டு..." இதை நான் யோசிச்சிக்கிட்டே இருக்கும் போதேய்.. அந்த வ.வா. சங்கத்து ஆளுங்க கெளம்பி போய்ட்டாங்க

தூரத்திலே போய்கிட்டே இருக்கும்போது ஒருத்தன் சொன்னான்... " இந்த தமிழ்நாட்டு மக்க ரொம்ப நல்லவங்க, எத்தனை பேரு எத்தனை தடவை, எதுலெ இருந்து காப்பி அடிசாலும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, பாத்துட்டு பதிவும் போடுவாங்க".. என்று....

சம்பளத்திற்கு ஆள் வச்சு யோசிப்பாங்களோ?????

Tuesday 1 July 2008

"அஜக்-பஜக்" கதை

ஆஹா... என்ன செய்யிறது....

இவ்ளோ நாளும் தசாவதாரம், தசாவதாரம் என்று பல பதிவர்கள் பல அவதாரம் எடுத்து எழுதினார்கள். தசாவதாரம் படத்தில் தான் சுனாமி வந்து எல்லோரையும் காப்பாற்றியது, சிலரை கொன்று..... ஆனால் வலை உலகில் வந்த தசாவதார சுனாமியோ பலரை கொன்று சிலரை காப்பாற்றி உள்ளது. சரி நம்ம பங்குக்கு ஏதாவது எழுதி போடலாம்னு பார்த்தா, இந்த பாழா போன "கொயாசு" விதியினால் நம்ம விதி "கொயாசு" ஆகி விட கூடாதுன்குற பயந்தான், எழுதாமே விட்டேன்.

சரி திரும்ப வந்து பார்த்தா. அ. ஆ ( நன்றி: எஸ்.ஜே. சூர்யா) கதைகளா வருது. நாமளும் யாரும் பார்க்காமே கதைய படிச்சிட்டு போலாம்னு பார்த்தா, இங்கு எல்லாருமே பெரிய எஸ்.ஜே. சூர்யா-வா இருக்காங்க.... ஆமாங்க.....இருக்கு, ஆனா இல்ல.... இருக்கு, ஆனா இல்லை என்று சொல்லி..... திருப்பு முனை, பருப்பு முனை-ன்னு சொல்லி நம்மை கடுப்பின் முனைக்கே கொண்டு செல்கிறார்கள். அதனாலே நாமும் ஒரு "அஜக்-பஜக்" கதை எழுதி சங்கத்தில் சேர்ந்துவிடுவோம்னு சொல்லி எழுதலாம்னு நெனச்சு தயாராகி, சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று திரும்பி பார்க்கும் போது... என் அருகே என் குழுவை சேர்ந்த பரிசோதகர், "சோதனை செல்வி" நின்று, இந்த பதிவு எல்லாத்தையும் படித்துவிட்டு குறும்பாய் ஒரு பார்வை பார்த்து " அஜக்" என்று ஒரு அடி விட்டார், நானும் "பஜக்" என்று கையை பிடித்து, தப்பினேன், அடியிலிருந்து......

அப்பாடா... நாமும் ஒரு கதை எழுதியாச்சு...

Monday 30 June 2008

அறிவிப்பு.....

இன்றைய பதிவை தமிழ் மனத்தில் இணைக்க, செய்த முயற்சியில். என்னை அறியாமல் இந்த பழைய பதிவு சேர்ந்து வந்துவிட்டது. எனவே அனைவரும் பொறுமை காக்குமாறு வேண்டி கொள்கிறேன்.

ஏற்கனவே படித்தவர்கள் பொறுமை காத்தததற்கு நன்றி.
புதியவர்களுக்கு: வருகை புரிந்ததற்கு நன்றி

சாதனையா? வேதனையா?

ரொம்ப நாள் ஆணி புடுங்கி, புடுங்கி என்னையும் என் பணி இடத்தில் இவர் பெரிய "புடுங்கி" என்று ஒத்துகொண்டதாலும்,
திட்டுவதெர்கென்றே மேலாளர் ஆனார்போல், என்னேரமும் யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கும் எனது திட்ட மேலாளரும், என்னை பெரிய "புடுங்கி" என்று ஒத்துக்கொண்டு சில காலமாக வசைப்பாடாமல், இசை பாடி வருவதனாலும்,
"ஆமாம்..... இந்த நைனா பெரிய "புடுங்கி" எப்பவாவது தான் வருவார்", இனி அவரை எதிர்பார்க்க கூடாது. அந்த "புடுங்கி" எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று வலை உலகில் யாரும் வசை பாடி விட கூடாது என்று நினைத்து கொண்டே வலை உலகை மேய்ந்த பொழுது இந்த பதிவு கண்ணில் பட்டது. இதெல்லாம் ஒரு சாதனையா என்றும் என் மனக்கண்ணில் பட்டது. அதனாலேயே உங்கள் கண்களுக்கும் தருகிறேன் சில வரிகளாக

எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.


கண்ணை கொத்தும் வறுமையைசுவாசித்து,
கொடிய விசமுடைய பசியை உண்டு
இன்று சாதிக்க துடிக்கும்

எம் இளைஞனின் சாதனை
முன்னே இது சாதாரணம்.


கண்ணை கொத்தும் வேலை இல்லா திண்டாட்டம்,
நினைத்துப்பார்த்தாலே சாகடிக்கும் விலை வாசி
இரண்டையும் நாசியினால் சுவாசித்து,

இன்று சாதிக்க துடிக்கும்
எம் இளைஞனின் சாதனை
முன் இது சாதாரணம்

இன்னும் நிறைய எழுதலாம், அதனை வாசகர்களின் / பதிவர்களின் பொறுப்பாய் விட்டு ....

நிற்கிறேன் நான்.

உங்கள் எண்ணங்களை இங்கே பதிந்து செல்லுங்கள்.....

Tuesday 10 June 2008

மனைவி

A wife was making fried eggs for her husband for breakfast. Suddenly her husband burst into the kitchen.

"Careful... Careful!!! Put in some more butter! Oh my God! You're cooking too many at once. Too many! Turn them! Turn them now! We need more butter. Oh my God! Where are we going to get more butter? They're going to stick! Careful... Careful!!! I said be careful! You never listen to me when you're cooking! Never! Turn them! Hurry up! Are you crazy? Have you lost your mind? Don't forget to salt them. You know you always forget to salt them. Use the salt. Use the salt! The salt!"

The wife stared at him and asked, "What the heck is wrong with you? You think I don't know how to fry a couple of eggs?"

The husband calmly replied, "I wanted to show you what it feels like when I'm driving with you in the car."


Courtesy: Internet

Monday 19 May 2008

மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - ஆ

முந்தைய பதிவினை படித்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். படிக்க வில்லை எனில் படிக்க இங்கே சொடுக்கவும். (மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - அ)
மருத்துவர் ஐயா திரு. புருனோ அவர்கள், சொல்கிறார் டெஸ்ட் எடுக்க நீதி மன்றங்கள் வற்புறுத்துகின்றதாம். நீதி மன்றங்கள் அதனிடம் முறை இடப்பட்ட வழக்கு சார்ந்த வகைகளுக்கு மட்டுமே அவ்வாறு வற்புறுத்துகிறது, மற்றைய நேரங்களில் அதன் தலையீடு இருப்பதில்லை, அதாவது, ஒரு சாதாரண பொதுஜனம், நம்ம நையாண்டி நைனா போகிறார் என்று வைத்து கொள்ளுங்களேன் அவரிடம் தேவை இல்லாத சில / பல பரிசோதனைகளை பரிந்துறைப்பது ஏன்? (சோதனைகள் செய்யாமல் எப்படி நோயை கண்டு பிடிப்பது என்று எதிர் கேள்வி கேட்க தேவை இல்லை. மேலும் அது மருத்துவதிற்கு தேவை அற்றது என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? மாற்று மருத்துவம் நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டு கேள்வியின் நோக்கத்தை திசை திருப்பும் முகமாக
பதிலை நான் விரும்ப வில்லை.)
என் வாழ்வில் எனக்கு நடந்த ஒரு சின்ன அனுபவம். எனக்கு வயது 27 ஆகும் சமயம், அதாவது கடந்த வருடம். எனக்கு கடைவாய் பல்லின் அருகே, வலி வந்தது ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவர் ஒன்றுமே கேட்காமல், " போய் ஒரு எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் " என்று சொல்கிறார். நானாக ஒரு வலி நிவாரண மாத்திரை எழுதி வாங்கி உட்கொண்டு, பின்னர் என் வீட்டிற்கு போன் செய்து சொன்னதும் எனது தந்தை கூறுகிறார் " உனக்கு கடைவாய் பல் வளரும் பருவம் அது தான் வளர்கிறது, வேறொன்றும் இல்லை" என் தந்தை கூறிய படியே நடந்தது. இதை போல் என் அண்ணனுக்கும் நடந்தது. ஒரு சாதாரண மனிதருக்கு தெரியும் இந்த விவரம் ஒரு மருத்துவருக்கு தெரியாமல் போனது ஏன்? (இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டுமே.)

வேண்டும் என்றே இயற்கையாக வரும் பிரசவ வலியினை மட்டுருத்தி, சிசேரியன் செய்ய வற்புறுத்தாமை வேண்டும் என்று நான் கூறினால், நீங்கள் சொல்கிறீர்கள் "அப்படி சுகப்பிரசவம் ஆக சிறிது நேரம் பொறுக்கலாம். ஆனால் அதில் ஆபத்து அதிகம். பிறகு பிரச்சனை வந்தால் நீங்கள் (அதாவது பொது ஜனம்) என்ன கூறுவீர்கள். முதலிலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது என்று தானே"
சுக பிரசவத்தில் சிக்கலா????? அப்படி என்றால் நம் முன்னோர்கள் 10 - 15 பிள்ளைகள் பெற்றார்களே எப்படி?
சரி, அந்த இக்கட்டான நிலமையையும் சமாளிக்க தானே மருத்துவ மனை தேடி வருகிறார்கள். சுகமாய் பிரசவம் ஆகவேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சமாளிக்க தானே மருத்துவ மனைகளே ஒழிய, சுக பிரசவம் ஆகும் முன்னரே சிசேரியன் செய்வதற்கு அல்ல. இயற்கையாக வரும் பிரசவ வலி ( பிரசவ வலி வந்தால், பிரசவம் ஆகிவிடும், அப்படி ஆகும் பொழுது சில சமயம் குழந்தாயின் நிலை மாறிவிடும், வேறு பல சிக்கல்களும் வரும்) வராமல் மட்டுபடுத்தி சிசேரியன் செய்ய அல்ல.
எத்தனை பேர், மருத்துவரின் தவறுக்கு அவரிடம் வில்லங்கம் செய்கிறார்கள்? அவரவர், அவரவர் விதியினை நொந்து தானே செல்கிறார்கள்.

அடுத்து, சோதனை, டெஸ்ட் என்று நான் சொல்வது ஸ்டெத்-சோதனைகளையும், நாக்கை நீட்டி சோதனை செய்வதையும் கூறவில்லை, ஆனால் அதையும் நீங்கள் கூறி இருப்பது உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டினாலும், அதில் உங்கள் மழுப்பல் உணர்வே மேலோங்கி இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த சோதனைகளை காசில்லாமல் செய்கிறோம் என்ற ஏளனமா? இல்லையே? அந்த சோதனைகளுக்கும் சேர்த்து தானே கட்டணம் வாங்குகிறீர்கள். ஏற்கனவே பார்த்து கொண்டிருக்கும் மருத்துவரின் மருந்துக்களும், வைத்திய முறைகளும் தீர்வை தரவில்லை என்று அடுத்த மருத்துவரை நாடும் பொழுது எடுக்க சொல்லும் டெஸ்டுகளை பற்றி நான் சொன்னால் நீங்கள் வேறு எதையோ பேசி சமாளிக்கிறீர்கள்.

ட்ரிப்ஸ், சிரிஞ்சு, ஏன் எழுதி கொடுக்கிறீர்கள் என்று தெளிவில்லாமல் கேட்டது என் தவறு தான். நான் சொல்வது தேவைக்கு மீறி, எழுதி கொடுப்பது ஏன்? நான் கேட்ட வரை "இதெல்லாம் கூட கொடுத்தால் தப்பில்லை அவருக்கு தெம்பா இருக்கும்" என்றொரு பதில். பின்னர் அவர் ஒரு மாத்திரை வில்லை எழுதி கொடுப்பார் அது அங்கே இல்லை எனில் (அப்படி பெரும்பாலும் இருக்காது, ஏன் எனில் அவரே அங்கு ஸ்டாக் உள்ளத்தை தானே எழுதியே தருவார் )அங்கே உள்ளவர் மாற்றி ( மாற்றி கொடுப்பது என்பது வேறு ராசாயன கலவை கொண்டுள்ள மாத்திரை அல்ல, எல்லாம் ஒரே ராசாயனம், திறன், அளவு உள்ள மாத்திரை தான்) கொடுத்தாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார். ஆனால் நாம் வெளியே சென்று வாங்கி வந்துவிட்டால்? பிரச்சினை தான்? ஒண்ணும் சொல்ல முடியாத பட்சத்தில் இம்சை வேறு ரூபத்தில் வரும்.


தொடரும்.... இனி வரும் பதிவுகளில்......

மருத்துவத் துறையின் அவலங்களும், சில மலுப்பல் பதில்களும்...பகுதி - அ

Disclaimer: This is published to clarify the certain things and thoughts prevailing in the society. Not to hurt anybody.

இது மருத்துவத் துறையில் சேவை செய்து வரும் சில நல்ல உள்ளங்களுக்கு சமர்ப்பணம்.

சில தினங்களுக்கு முன் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயா. திரு புருனோ அவர்களின் பதிவான முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம்
பதிவில், நான் இட்ட பின்னூட்டம் காரணமாக மிக நீண்ட விவாதம் மற்றும் கருத்து பரிமாற்றம் நடை பெற்றது. அதில் நானும் சில கேள்விகளை விளக்கி கேட்க வில்லை, எனது தவறுக்கு வருந்துகிறேன். மேலும் சில கேள்விகளுக்கு மருத்துவர் ஐயா மலுப்பலான பதில்களே தந்துள்ளார். அதனாலேயே நான் அதை பற்றிய ஒரு விவாத களமாக, கருத்து வெளிப்பாடாக இந்த பதிவினை பதிக்கிறேன்.
அவரது பதிவில் அவரது ஆதாங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்து இருந்தார்.
"
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார்
1990ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் இன்று அவர் எவ்வளவு ஊதியம் பெறுவார்??? "


இதற்கு எனது பின்னூடடம் "சேவை மனப்பான்மையுடன் வருபவர்கள் மட்டும் வரட்டும். பணம் சம்பாதிக்க தான் ஆயிரம் வழிகள் உள்ளனவே...."

அதனை தொடர்ந்த பின்னூட்ட பகுதியினை படித்து விட்டு வாருங்கள் தொடர்வோம்.......

Friday 25 April 2008

புத்திசாலி புருஷன்

A wife mentioned to her husband that for her birthday, she would like something that accelerates from 0 to 100 in four seconds.
She was expecting something like this............

*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*

But her husband presented her with something very different...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

Friday 18 April 2008

ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்..............

கும்மி, கும்மி என்று சொல்வார்கள், கேள்வி பட்டதுண்டு. இப்போ நேரே பார்க்கிறேன். அண்ணன் டோண்டு அவர்கள், இருந்துக்குவாராம் அவரோட அல்லக்கை அண்ணன்கள் சில கேள்விகளை கேப்பார்ககலாம், இவர் 'அறிவாலித்தனமாய்' பதில் சொல்வாராம். இதற்கு பேரு கும்மியாட்டம், தானே? ஹி..ஹி... தமாசா இல்லை? இதைவிட பெரிய ரோதனை அதுக்கு பின்னூட்டம் வேற?

அப்படியே அவர்களின் கேள்விகளின் தரத்தை பார்த்தால்????
ஒண்ணும் சொல்வதற்கு இல்லை.
அது என்னவோ இவர்களுக்கே ஒரு சிலபஸ் வச்சிக்கிட்டு கேப்பாங்க போலிருக்கு.

பாடம்: 'சர்வதேச வரலாறு'
முதல் பகுதி: மாவீரன் மோடி - புகழ் மாலை ( கடவுள் வாழ்த்து பகுதி - மனப்பாட பகுதி )
இரண்டாம் பகுதி: இந்தியாவில் கம்யூனிசம் - மறு பதிப்பு.
மூன்றாம் பகுதி: திராவிட எதிர்ப்பு கேள்விகள்.
நான்காம் பகுதி: டோண்டுவின் சாதனைகள்/வேதனைகள்/ ரோதனைகள்.
ஐந்தாம் பகுதி: கிச்சு, கிச்சு கேள்விகளும், பதில்களும்.

இன்னன்ன பகுதியில் இருந்துதான் கேள்வி கேக்கப்படும். ( பதில்கள் டோண்டு 'வீண்' பார்வையில்)

என்றைக்காவது இதனை தவிர கேள்வி பதிலில் ஏதாவது வந்துள்ளதா?
இதனை தவிர்த்து ஆக்க பூர்வமா? சமுதாய சிந்தனையுடன் கேள்வி கேட்கப்பட்டு விடை வந்தது உண்டா?

தங்களின் கொள்கைகளை விளக்கி கேள்வி கேட்டும், விளக்கியும் பதில் போடலாம்.
நான் ஏன் சொல்கிறேன் என்றால், கேள்வி பதிலுக்கு அவரே பொறுப்பாளி ஆகிறார். கேள்விகளை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு உள்ளது. வந்த கேள்விகளை தேர்வு செய்து விடை அளிக்கலாமே, தேர்வாகாத கேள்விகளை, கேள்வி கேட்டவர்களுக்கு அறிவிப்பு செய்து விளக்காலாமே?/விலக்காலாமே?

இதற்கு தினதந்தியில் வரும் 'குருவியார் பதில்கள்' எவ்வளவோ மேல்.


ஐயோ, தாங்க முடியலெ...வெள்ளி கிழமை வந்தால்...............
நமக்கெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் ரெண்டு பாம்.
காலையில் அண்ணன் டோண்டு விண் "கேள்வி-பதில் பாம்",
அதை படித்துவிட்டு நாம் தேடுவதோ "ஜன்டு பாம்".



பின் குறிப்பு: இதனை நான் வ.வா.ச இரண்டாம் ஆண்டு போட்டிக்காக எழுதவில்லை, தேர்வானால் நான் பொறுப்பில்லை.
திஸ்கி:இது தனி மனித தாக்குதல் இல்லை- இது திரு.டோண்டு அவர்களின் கேள்வி பதில் பகுதிக்கான விமர்சனம்.

Monday 14 April 2008

யாரடி நீ மோகினி-விமர்சனம்

ஒரு நூத்தி அறுபது ரூபாயில் என்னென்ன செய்யலாம்?

1. தான் குடும்பத்திற்கு எதிர்கால சேமிப்பாய் வைக்கலாம்.

2. வீட்டிற்கு தேவையான பொருள் வாங்கி வைக்கலாம்.

3. பிள்ளைகள் படிக்க தேவையான நூல்கள் வாங்கி அடுக்கலாம்.

4. தான் பெண்டாட்டிக்கு ஒரு புடவை வாங்கி கொடுக்கலாம்.

5. அப்பா, அம்மா விற்கு மருத்துவதிற்கு பயன் படுத்தலாம்.

6. ஏழைக்கு உணவளித்து பசி போக்கலாம்.

7. ஏழை மாணவனுக்கு உடை வாங்க உதவி செய்யலாம்.

8. புண் பட்ட மனத்தாய் இருந்தால் 4,5,6 பாக்கெட் தங்க ராஜா(Gold Kings), வடிகட்டி(Filter), உள்ளம்( Wills), கத்தி (Scissors) என்னாமாவது மனசுக்கு பிடிச்சசத்தை வாங்கி ஊதலாம்.

9. குவாட்டறோ, ஆப்போ, வாங்கி ஊத்தலாம், நண்டு இறா, சுறா, புறா கோழி கொக்கு, கௌதாரி ன்னு எதையாவது வாங்கி வெட்டலாம்.

10.பணம் அதிகமா இருந்தா. சும்மா ரோட்ல போறவனை கூப்பிட்டு, வடிவேலு மாதிரி வீரம் பேசி முதுகிலே ரெண்டு போட்டு போலீஸுக்கு தண்டமா கூட கொடுக்கலாம்.

ஆனா சும்மா கூட
"யாரடி நீ மோகினி" படத்திற்கு மட்டும் போய்ராதே................


அந்த நூத்தி அறுபது ரூபா, நான் இங்கே மும்பையில் PVR மல்டிபலெக்ஸ்-சில் படம் பார்க்க கொடுத்த தண்டம்.

Friday 11 April 2008

யாராவது... ஒரு யோசனை சொல்லூங்கப்பு.....

தமிழ் கூறும் நல்லுலக சான்றோரே,
பதிவு, பதிவுலகம், பதிவர் என்ற வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டு வந்துட்டேன்.

பதிவு போடலாம். எப்படிப்பட்ட பதிவு போடலாம்? அப்படின்னு யோசிக்கிறேன்.
நமக்குன்னு என்ன கொள்கை வைத்து போடலாம்னு யோசிச்சேன், அதுககப்புறம்தான் தோணிச்சு தமிழ் நாட்டுலெ எவன் கொள்கை வச்சிருக்கான் நாம வச்சிக்கிறததுக்கு?
அதனாலே கொள்கை வச்சுக்கபுடாது என்ற கொள்கை வச்சுக்கிட்டேன். சரிதானே? ( ஐயோ... நம்ம "விசய"காந்து கோவிசுப்பாரோ? )

சரி கொள்கை இல்லைன்னு ஆகி போச்சு
அப்புறம் என்ன எழுதலாம்?
ஏழை, பணக்காரன் வித்தியாசம் எழுதலாமா?, கம்யூனிஸம் தெரியாதே?
முற்போக்கு , பிற்போக்குன்னு அசுரத்தனமா எழுதலாமா? அதுவும் நமக்கு வராதே, நமக்கு அவ்ளோ மூளை இருந்த நான் ஏன் பொட்டி தட்டுற பொழப்புக்கு வறேன். அதை முயலு, இதை முயலாதேன்னு ரத்னமா எழுதலாமா? கோவிலுக்கு போ, போகாதே என்று காலத்தின் வழியை எழுதலாமா?

என்ன ஏலவ பண்றது. ABCD-யே ஒண்ணும் புரியல தயவு செய்து வெலகுங்கன்னு கேக்கலாம். வெலகாம ஊரு வெலெக்கீ வச்சிட்டாங்கன்னா???? அப்புறம் நாம போட்ட கணக்கு தலைகீழ்விகிதமா போய், வவ்வாலாட்டம் ஊருக்கு வெளியே தொங்க வேண்டியது தான்.

ஐயா....குசும்பொன்னும் பண்ணாம, யோசிப்பவர், யோசிக்காதவர்.... யாராவது... ஒரு நல்ல யோசனை சொல்லூங்கப்பு.....
நம்ம குருதி தான் தமிழ்க் குருதி ஆயிற்றே? நமக்கு யாராவது சொன்னால் தானே சுரனையே வரும், புத்தியும் வரும்.

ஒண்ணும் சொல்லவில்லை என்றால் மொக்கை பதிவுதான் வரும்...

Thursday 3 April 2008

அனைத்தும், உள்ளது உம்மிடம்.

வணக்கம்,
என் இனிய என் தாய் நாட்டு மக்களே..!
என்ன இல்லை இத்திரு நாட்டில்?
ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?
என்பது பழைய கூற்று.....

நான் கூறுகிறேன். என்ன திறமை இல்லை உங்களிடம்?
என்ன நலம் இல்லை உங்களிடம்?


அனைத்தும், உள்ளது உம்மிடம்.
ஆணையும் உள்ளது உம்மிடம்.
இணையம் உள்ளது.
ஈகை குணமும் உள்ளது.
உடையும் உள்ளது.
ஊக்கமும் உள்ளது.
எண்ணற்ற வளமும் உள்ளது.
ஏற்ற மிகு சிந்தனையும் உள்ளது.
ஐயமில்லா அறிவும் உள்ளது.
ஒழுக்கமும் உள்ளது.
ஓயா உழைப்பும் உள்ளது.

பின் ஏன் வறுமை?
பின் ஏன் வேலை இல்ல திண்டாட்டம்?


சோம்பேறி தனமும், பொறுப்பற்ற தனமும், சுய நலமும் அதிகம் உள்ளது
மற்றவைகளை, மற்றவர்களை காட்டிலும்

Thursday 20 March 2008

உன் பிரச்சினை என்ன?

மச்சி,

உன் பிரச்சினை உனக்கு, என் பிரச்சினை எனக்கு, அவன் பிரச்சினை அவனுக்கு,ஆனா உனக்கு ஒரு பிரச்சினைனா அது எனக்கும் பிரச்சினைதான், எனக்கு ஒரு பிரச்சினைனா அது உனக்கும் பிரச்சினைதான். அவனுக்கு ஒரு பிரச்சினைனா அது நமக்கும் பிரச்சினைதான். அவனுக்கு வந்த பிரச்சினை நமக்கும்தான் என்று இருந்தா பிரச்சினை, பிரச்சினை என்று பெரிய பிரச்சினையாஹவே இருக்கும். அவனுக்கு வந்த பிரச்சினைய நம்ம பிரச்சினையா நினைக்கவில்லை என்றால் அது பிரச்சினை இல்லை ஆனா நமக்கு வந்த பிரச்சினையை அவன் பிரச்சினையா நினைக்கவில்லை என்று பிரச்சினை பண்ணுனா தான் பிரச்சிணையே.அடுத்தவங்களுக்கு பிரச்சினை உண்டு பண்ணுகிற பிரச்சினைகளை வைத்து போது இடத்தில் பிரச்சினை பண்ணினால் அது பிரச்சினைத்தான். அதுக்காக நாமளும் எல்லாத்தையும் பிரச்சினையா நினைக்க கூடாது. இப்ப என்ன பிரச்சினைனா, நம்ம கிட்டே பிரச்சிணையே இல்லாத ஆளு யாரு? சொல்லு பார்ப்போம். இதுக்கு நீ பதில் சொன்னேனு வைச்சுக்கோயேன். இந்த லோகத்தில் பிரச்சிணையே இல்லாத ஒரு ஆளு நீதான்.பிரச்சினை இல்லாததை நெனச்சு பிரச்சினை பண்ணாதே.சரி பிரச்சினை பண்ணாம விஷயத்துக்கு வா. உன் பிரச்சினை என்ன?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Tuesday 22 January 2008

தூங்கும் முன்பு பேசினால்.........???????

தூங்கும் முன்பு செல்போனில் பேசினால் உடல் நலனுக்கு ஆபத்து.
லண்டன்: தூங்கச் செல்வதற்கு முன்பு படுக்கையில் செல்போனில் பேசினால் உடல் நலத்திற்கு பேராபத்து ஏற்படும். மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.செல்போன் கருவியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால், ஞாபக மறதி மற்றும் தீராத தலைவலி ஆகியவை ஏற்படும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தூக்கம் சரியாக வராமல் அவதிப்பட நேரிடுமாம்.சரியாக தூங்காவிட்டால் மனச் சோர்வு, கவனக்குறைவு போன்ற குறைபாடுகள் ஏற்படும். மேலும் குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர் சரியாக படிக்க முடியாமல் சிரமப்பட நேரிடுமாம்.ஸ்வீடனில் உள்ள உப்பசாலா பல்கலைக்கழகம், கரோலின்ஸ்கா கல்வி நிறுவனம், மிச்சிகனில் உள்ள வேயன் ஸ்டேட் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த எச்சரிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.செல்போன் கருவியிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு மூளையை நேரடியாக பாதிக்கும் அபாயமும் உள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தாட்ஸ் தமிழ் (செய்தி வலை)

தூங்குவதற்கு முன் மனைவியிடம் பேசினால் என்ன என்று எந்த ஒரு பல்கலைக்கழகமும் ஆய்வு செய்யாத காரணத்தினால்.நொந்து நூடுல்ஸ் ஆனவர்களால் நடத்தப்படும் இந்த "பிரான்டல் பல்வலிகலகம்" ( கலகம் என்றுள்ளது சத்தியமாகஎழுத்து பிழை அல்ல) ஒரு ஆய்வு நடத்தியது.

அதன் விபரம் வருமாறு:
தூங்கச் செல்வதற்கு முன்பு படுக்கையில் மனைவியுடன் பேசினால் உடல் நலத்திற்கு பேராபத்து ஏற்படும். மூளைக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வு தெரிவிக்கிறது.மனைவியின் வாயில் இருந்து வெளியாகும் புதிர் பேச்சால் ஞாபக மறதி மற்றும் தீராத தலைவலி ஆகியவை ஏற்படும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் தூக்கம் சரியாக வராமல் அவதிப்பட நேரிடுமாம்.சரியாக தூங்காவிட்டால் மனச் சோர்வு, கவனக்குறைவு போன்ற குறைபாடுகள் ஏற்படும். மேலும் குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர் சரியாக படிக்க முடியாமல் சிரமப்பட நேரிடுமாம்.அலுவலகங்களில் வேலை செய்வோர் தவறிழைக்க நேரிடுமாம்.மனைவியின் வாயில் இருந்து வெளியாகும் புதிர் பேச்சு மூளையை நேரடியாக பாதிக்கும் அபாயமும் உள்ளது, என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சற்றுமுன் வந்த செய்தியாக:
சுவிளாசில் உள்ள உய்யலாலா பல்வலிகலகமும், ஆப்பு விலக்கி பாடசாலையும் சேர்ந்து நடத்திய ஆய்விலும் இந்த எச்சரிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.