Monday 27 July 2009

மூலையோர இருக்கை...




வழக்கம் போலே இதுவும் ஒரு மொக்கை கவுஜ தான்.

நல்ல சரக்கு அங்கே.
கள்ள சரக்கு இங்கே.




வழக்கமான சரக்கடிக்கும் சடங்கு,
அடித்துப் பிடித்தாவது
அமர்ந்து விடுகிறேன்
அதே மூலையோர இருக்கையில்,

ஒரு ரெண்டு மணிநேர சடங்கில்
ஓடிவந்து டேபிள் துடைக்கும்
இரட்டைச் சிறுவர்கள்,

தன் தாத்தாவோடு அமர்ந்து
5000-ஐ பதம் பார்க்கும் இளைஞன்,

பார்த்ததும் தலையாட்டும்
சிகரட்டு கடை பெரியவர் என

என்னின் வருகையை
சினேகத்தோடு எதிர் நோக்கும்
அவர்களைப் பாராது
ரெண்டு "பின்ட்" அதிகம் போய் விடுகிறது
அவ்விருக்கையை
தவற விடும் நாட்களில் ...!


சிகரட்டு மட்டும் உண்டு தீப்பெட்டி இல்லாத மாதிரி, வாட்டர் மட்டும் உண்டு குவாட்டர் இல்லாத மாதிரி, என்னடா...? பதிவு போட ஒண்ணுமே இல்லையே என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கும் போது கைகொடுத்த தெய்வம் அண்ணன் நாடோடி இலக்கியனுக்கு நன்றிகள்.

32 comments:

பிரபாகர் said...

நைனா,

செம அனுபவம் போல இருக்கு, நமக்கெல்லாம் கேள்வி ஞானம்தான். ம்... என்ன செய்ய, நம்ம விதி அப்படி.

பிரபாகர்.

குடந்தை அன்புமணி said...

ஹா... ஹா... அங்கே போயிட்டுத்தான் இங்க வர்றேன்.

அண்ணா... சத்தியமா நீங்க நினைக்கிற அங்க இல்லைங்கண்ணா...

நல்ல சரக்கு இருக்கிற இடத்துக்குத்தான்போயிட்டு வர்றேன்னு சொல்ல வந்தேன்.

Raju said...

ரைட்டு..
இன்னிக்கு சிக்குனதும் நாடோடி இலக்கியனா..?
யோவ்..இப்பத்தானய்யா போட்டாப்ல.
அதுக்குள்ளயா... ந‌டத்துங்கய்யா.

Raju said...

\\செம அனுபவம் போல இருக்கு, நமக்கெல்லாம் கேள்வி ஞானம்தான்\\

இது என்னங்க வம்பாப் போச்சு..!
குடிய‌ப் பத்தி எழுதுனா, குடிகாரனா இருக்கனுமா..?
அப்போ, டாக்டராகுன்ம்னா நோயாளியா இருந்திருக்கனுமா..?
போலீஸாகுனும்னா திருடனா இருந்திருக்கனுமா..?
அட, கால்யாணமாகனும்னா பிரம்மச்சாரியா இருக்குனும்னு சொல்வீங்க போலயே..!
ஒரே கூத்தா இருக்ககே..!
:)

துபாய் ராஜா said...

கள்ள சரக்கு நல்லா கீதுப்பா. :))

நையாண்டி நைனா said...

/*
Prabhagar said...
நைனா,

செம அனுபவம் போல இருக்கு, நமக்கெல்லாம் கேள்வி ஞானம்தான். ம்... என்ன செய்ய, நம்ம விதி அப்படி.

பிரபாகர்.
*/

என்ன பாசு பொசுக்குன்னு இப்படி சொல்லி வச்சிட்டீங்க,
காந்தி இருக்குறது சரக்கே கிடைக்காத குஜராத்துலே, நானிருக்குறது எல்லாம் கிடைக்குற மும்பைலே... அப்படி இருந்தும் நானெல்லாம் "டக்ளசு" ஆக்கும்.

அருன்ஜோர் பொருள்:
டக்ளஸ் = யோக்கியன்

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
ஹா... ஹா... அங்கே போயிட்டுத்தான் இங்க வர்றேன்.

அண்ணா... சத்தியமா நீங்க நினைக்கிற அங்க இல்லைங்கண்ணா...

நல்ல சரக்கு இருக்கிற இடத்துக்குத்தான்போயிட்டு வர்றேன்னு சொல்ல வந்தேன்.
*/

Thanks Thala.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
ரைட்டு..
இன்னிக்கு சிக்குனதும் நாடோடி இலக்கியனா..?
யோவ்..இப்பத்தானய்யா போட்டாப்ல.
அதுக்குள்ளயா... ந‌டத்துங்கய்யா.*/

சுடச்சுட போட்டாதான் வடை, ச்சி.. கடை.. போனியாவும்.

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்... said...
\\செம அனுபவம் போல இருக்கு, நமக்கெல்லாம் கேள்வி ஞானம்தான்\\

இது என்னங்க வம்பாப் போச்சு..!
குடிய‌ப் பத்தி எழுதுனா, குடிகாரனா இருக்கனுமா..?
அப்போ, டாக்டராகுன்ம்னா நோயாளியா இருந்திருக்கனுமா..?
போலீஸாகுனும்னா திருடனா இருந்திருக்கனுமா..?
அட, கால்யாணமாகனும்னா பிரம்மச்சாரியா இருக்குனும்னு சொல்வீங்க போலயே..!
ஒரே கூத்தா இருக்ககே..!
:)
*/

அப்படி சொல்லுறா என் செல்லக்குட்டி....

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
கள்ள சரக்கு நல்லா கீதுப்பா. :))*/

நன்றி நண்பா...
அடிக்கடி வாங்க.

தராசு said...

யோவ், நிஜமாலுமே நாடோடி இலக்கியன் சரக்கு நல்ல சரக்குயா....

அதப்போயி ஏய்யா இப்படி,....

ம்ஹூம், ஒரு குரூப்பாத்தான் திரியரீங்க

நையாண்டி நைனா said...

/* தராசு said...
யோவ், நிஜமாலுமே நாடோடி இலக்கியன் சரக்கு நல்ல சரக்குயா....

அதப்போயி ஏய்யா இப்படி,....

ம்ஹூம், ஒரு குரூப்பாத்தான் திரியரீங்க
*/

வருகைக்கு நன்றி அண்ணே...
என்னை மாதிரி அழகா அரவிந்த்சாமி மாதிரி இருக்குற ஆளை தான் அசிங்கம் பண்ணமுடியும்.

அப்புறம் கவுஜ சொன்னா அனுபவிக்கனும் அண்ணாத்தே... ஆராய கூடாது.

(உன்னை நாங்க பார்த்ததே இல்லை என்று சொல்பவர்கள், மணிரத்னம் எடுத்த ரோஜா படம் பார்க்கவும் அதில் வரும் அரவிந்த்சாமி மாதிரி தான் நான் இருப்பேன்..இதுக்கு பேரு தன்னடக்கம்)

Suresh Kumar said...

கள்ள சரக்குலே வாழ்க்கைய ஒட்டுறியே நைனா

ஹேமா said...

கொஞ்சம் எனக்கும்
தலை சுத்துது நைனா.

Anonymous said...

(உன்னை நாங்க பார்த்ததே இல்லை என்று சொல்பவர்கள், மணிரத்னம் எடுத்த ரோஜா படம் பார்க்கவும் அதில் வரும் அரவிந்த்சாமி மாதிரி தான் நான் இருப்பேன்..இதுக்கு பேரு தன்னடக்கம்)//

இதுக்கு பேருதான் லொள்ளு...

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
கள்ள சரக்குலே வாழ்க்கைய ஒட்டுறியே நைனா*/

என்னா அண்ணாத்தே... இப்புடி சொல்லுதீய....
நல்ல சரக்குக்கு நாலு பேருதான் வாராங்க. கள்ள சரக்குக்கு நாலாயிரம் பேரு வாராங்க....

கவர்மண்டே... நல்ல சரக்கு அடிச்சு மட்டையானா கண்டுக்காது.. ஆனா கள்ள சரக்கு அடிச்சு "மட்டையானா" லெச்ச லெச்சமா நிவாரணம் தருது....

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
கொஞ்சம் எனக்கும்
தலை சுத்துது நைனா.*/

புதுசா நம்ம சரக்க அடிக்கிறீங்கல்லோ... அதனாலே தான்... இது போக போக சரியாயிரும்.

தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க. நன்றி.

நையாண்டி நைனா said...

/*மயில் said...
(உன்னை நாங்க பார்த்ததே இல்லை என்று சொல்பவர்கள், மணிரத்னம் எடுத்த ரோஜா படம் பார்க்கவும் அதில் வரும் அரவிந்த்சாமி மாதிரி தான் நான் இருப்பேன்..இதுக்கு பேரு தன்னடக்கம்)//

இதுக்கு பேருதான் லொள்ளு...*/

வாங்க மயிலு வாங்க...
தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க....

ஆமா தன்னடக்கத்தை, லொள்ளுன்னு வேற சொல்வாங்களா...??? புதுசா இருக்கே.!!!

நாடோடி இலக்கியன் said...

என்னோட பதிவுல சொல்ல வேண்டிய நன்றியை இங்கேயும் , இங்கே சொல்ல சொல்ல வேண்டியதை அங்கேயும்மாற்றி பேஸ்ட் செய்துவிட்டேன் நண்பா,அதான் டெலிட்டிவிட்டேன்.

ஆமா,இந்த மாசம் அதிகமா நான் தான் சிக்கியிருக்கேன் போல.எதிர் கவுஜ இந்த முறை சுமார்தான்.

நையாண்டி நைனா said...

/*நாடோடி இலக்கியன் said...
என்னோட பதிவுல சொல்ல வேண்டிய நன்றியை இங்கேயும் , இங்கே சொல்ல சொல்ல வேண்டியதை அங்கேயும்மாற்றி பேஸ்ட் செய்துவிட்டேன் நண்பா,அதான் டெலிட்டிவிட்டேன்.

ஆமா,இந்த மாசம் அதிகமா நான் தான் சிக்கியிருக்கேன் போல.எதிர் கவுஜ இந்த முறை சுமார்தான்.*/

மிக மிக மிக நன்றி அண்ணாத்தே...

Cable சங்கர் said...

உனக்கென்ன நைனா. யாராவது பதிவு போட்ட போதும்.. உனக்கு பதிவெழுத ஐடியா கிடைச்சிரும்.. நாஙக்ளும்தான் இருக்கோமே..?(

ஆ.ஞானசேகரன் said...

கள்ள சரக்கும் நல்லாவே இருக்கு...
புகைப்படம் அருமை

கலையரசன் said...

யோவ் மைனா... சப நாகரீகம் தெரியாதா?

நான் பார்ட்டி வச்சா குடிச்சிட்டு போவியா..
அதை விட்டுட்டு படம் எடுத்துபோட்டு ஏன்யா உயிர வாங்குற?

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
உனக்கென்ன நைனா. யாராவது பதிவு போட்ட போதும்.. உனக்கு பதிவெழுத ஐடியா கிடைச்சிரும்.. நாஙக்ளும்தான் இருக்கோமே..?(*/


வருகைக்கு நன்றி அண்ணாத்தே...
இப்படில்லாம் கண்ணு வைக்க கூடாது....

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
கள்ள சரக்கும் நல்லாவே இருக்கு...
புகைப்படம் அருமை*/

கள்ள சரக்கு என்னிக்கும் நல்லா இருக்கும். வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
யோவ் மைனா... சப நாகரீகம் தெரியாதா?

நான் பார்ட்டி வச்சா குடிச்சிட்டு போவியா..
அதை விட்டுட்டு படம் எடுத்துபோட்டு ஏன்யா உயிர வாங்குற?
*/

கோவிச்சுக்காதே பங்காளி...
அப்புறம் எப்படி உன்னோட பெருமைய நாலு பெருகிட்டே சொல்றது. வார்த்தையாலே சொன்னா கேக்குறவன் "சும்மா படங்காட்டாதே" என்பான். அதனாலே தான் படமாவே காட்டிட்டேன்.

Suresh Kumar said...

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
கள்ள சரக்குலே வாழ்க்கைய ஒட்டுறியே நைனா*/

என்னா அண்ணாத்தே... இப்புடி சொல்லுதீய....
நல்ல சரக்குக்கு நாலு பேருதான் வாராங்க. கள்ள சரக்குக்கு நாலாயிரம் பேரு வாராங்க....

கவர்மண்டே... நல்ல சரக்கு அடிச்சு மட்டையானா கண்டுக்காது.. ஆனா கள்ள சரக்கு அடிச்சு "மட்டையானா" லெச்ச லெச்சமா நிவாரணம் தருது...///////////////////////////


ஒ அதனால தானா நடக்கட்டும் .


இது தான் என் ஏரியா சும்மா வங்க .....

http://www.sureshkumar.info

கார்த்திகைப் பாண்டியன் said...

உஷ்ஷ்ஷ்ஷ்...அப்பா.. முடியல..

நையாண்டி நைனா said...

/*
ஒ அதனால தானா நடக்கட்டும் .
இது தான் என் ஏரியா சும்மா வங்க .....
http://www.sureshkumar.info
*/

வந்து பார்த்தாச்சு நண்பா...
உங்க ப்ளாக் பில்டிங்கு பிரமிப்பா இருக்கு நண்பா.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
உஷ்ஷ்ஷ்ஷ்...அப்பா.. முடியல..*/

மிஸ்டர் பாண்டியன்... சரக்கை பார்தவொடனை கபால்னு பாஞ்சி ராவா அடிக்க கூடாது... நிறுத்தி நிதானமா அடிக்கோணும். இல்லாங்காட்டி இப்படிதான் சொல்ல வேண்டி வரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
:-))*/

:-))))))