Monday 20 July 2009

ஜலதரங்கம்


சப்தம் சூழ் தனிமை,
வம்பாய் வந்தமர்ந்து
போட்டிக்கு போதையேற்றும்
முறுக்கேறிய மீசைக்காரன்,

ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத்
தெரிந்திருந்தும்,

சிதறிக் கிடக்கும்
சுண்டல்களில் கண்ணும்,
சண்டைகளுக்கு காதும்
கொடுத்து முடியாது,

ஒழுங்கிலா டாஸ்மாக்கை
சுற்றி பார்கிறேன்.....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் சிறுநீரை
அடக்குவதென
இயற்கையை அடக்க
முயல்கிறேன்,

திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மேலும் இரண்டு பியரை,
ஏற்றி இருக்கலாம்...!


(இதன் கருவை கவிதையாக்க அனுமதி தந்த நாடோடி இலக்கியனுக்கு நன்றி).

-

29 comments:

Raju said...

பாவம்யா... நாடோடி இலக்கியன்.
கலையிலதான் அந்த கவிதையப் படிச்சு, சூப்பர்ன்னு என்னையும் அறீயாம் சொல்லிட்டு இருந்தேன்.
அதுக்குள்ளய..!
தலைப்பு சூப்பர் நைனா...!
கலக்குங்க.

Unknown said...

என்னண்ணே குளோனிங்கா? குளோனிங்க்
கவிதை.நையாடோடி?

Cable சங்கர் said...

நக்கலடிப்பதில் உனக்கு நிகர் நீ தான் நைனா..

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதைகேத்த படம் நைனா..
:)

Suresh Kumar said...

நையாண்டினா சும்மாவா ?

கலையரசன் said...

நீ படுத்து கிடக்குற போட்டாவ யாருப்பா எடுத்தா நைனா? ஜாக்கி அண்ணாச்சியா?

அத்திரி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......

மணிஜி said...

அங்கன சாய்ஞ்சு கிடக்கறது ஒண்ணு நானு..
இன்னொண்ணு யாருப்பா?(வாலா?)

சொல்லரசன் said...

தண்டோரா said...
அங்கன சாய்ஞ்சு கிடக்கறது ஒண்ணு நானு..
இன்னொண்ணு யாருப்பா?(வாலா?)


நையான்டின்னு சொன்னங்களே!!!!!

ஆ.ஞானசேகரன் said...

உங்களுகென்றே வரும் நக்கல்....

கோவி.கண்ணன் said...

ஜ்யோராம் சுந்தருக்கு மாணக்கர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கு.

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
பாவம்யா... நாடோடி இலக்கியன்.
கலையிலதான் அந்த கவிதையப் படிச்சு, சூப்பர்ன்னு என்னையும் அறீயாம் சொல்லிட்டு இருந்தேன்.
அதுக்குள்ளய..!
தலைப்பு சூப்பர் நைனா...!
கலக்குங்க.
*/

நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*கே.ரவிஷங்கர் said...
என்னண்ணே குளோனிங்கா? குளோனிங்க்
கவிதை.நையாடோடி?*/

நன்றி.
அடிக்கடி வாங்க அண்ணே.

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
நக்கலடிப்பதில் உனக்கு நிகர் நீ தான் நைனா..*/

நன்றி அண்ணாத்தே.

நையாண்டி நைனா said...

/*பிரியமுடன்.........வசந்த் said...
கவிதைகேத்த படம் நைனா..
:)*/

மிக நன்றி நண்பா.
இது உங்கள் முதல் வருகை என்று எண்ணுகிறேன்.
அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
நையாண்டினா சும்மாவா ?*/

இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ......

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
:-))*/
Thank you sir.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
நீ படுத்து கிடக்குற போட்டாவ யாருப்பா எடுத்தா நைனா? ஜாக்கி அண்ணாச்சியா?*/

வருகைக்கு நன்றி நண்பா. But, Keep the company secrets please.

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......*/
கெ..கெ..கெ..கெ..கெ...கெ..

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
அங்கன சாய்ஞ்சு கிடக்கறது ஒண்ணு நானு..
இன்னொண்ணு யாருப்பா?(வாலா?)*/

அண்ணே... உங்களுக்கு... இவ்ளோ பெரிய.... பெரிய... பெரிய.... வாலு இருக்குன்னு இப்ப நீங்க சொல்லி தெரிஞ்சுகிட்டேன்.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
நையான்டின்னு சொன்னங்களே!!!!!
*/
ஆமா. சரிதான் ஒன்னு நையாண்டி, இன்னொன்னு "வோர்டு கிங்கு"

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
உங்களுகென்றே வரும் நக்கல்....*/

மிக நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
ஜ்யோராம் சுந்தருக்கு மாணக்கர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கு.*/
அண்ணே அவரு முனைவர் பட்டம் வாங்க தான் சொல்லி தருவாராம்.... நானெல்லாம் பட்டயம் வாங்குறதுக்கே இங்கே நாக்கு தள்ளுது...

நாஞ்சில் நாதம் said...

:))

நையாண்டி நைனா said...

/* நாஞ்சில் நாதம் said...
:))*/

:))))))))))

நாடோடி இலக்கியன் said...

namma pakkaththu link koduththirunthaa innum suvaraasyamaa irukkume.

:)

நையாண்டி நைனா said...

/*
நாடோடி இலக்கியன் said...
namma pakkaththu link koduththirunthaa innum suvaraasyamaa irukkume.
:)
*/
ஆமா தல. விட்டு போச்சு...
இனி செஞ்சி போடுறேன் தல... இந்த முறை பிழை பொறுத்து அருள்க.

cheena (சீனா) said...

அதுவும் நல்லாருக்குன்னு எழுதிட்டு வந்தேன் - இங்க வந்த இதுவும் நல்லாருக்கு - கவுத எல்லாரும் எழுதலாம் போல இருக்கே

நையாண்டி நைனா said...

/* cheena (சீனா) said...
அதுவும் நல்லாருக்குன்னு எழுதிட்டு வந்தேன் - இங்க வந்த இதுவும் நல்லாருக்கு - கவுத எல்லாரும் எழுதலாம் போல இருக்கே*/

வாங்க ஐயா.... வாங்க....
தங்கள் வரவு நல வரவு ஆகுக...
அப்புறம் அடிக்கடி வாங்க ஐயா...