Friday 17 July 2009

உன்னநான் தோஸ்தாக்கிகிட்டு...!



நல்ல சரக்கு இங்கே.
கள்ள சரக்கு இங்கே.



உன்னநான் தோஸ்தாக்கிகிட்டு
என்னாத்த சுகங்கண்டேன்

கோட்டருண்டா கோழியுண்டா
கையிலாவது வாயிலாவது

வேலையுண்டா வெட்டியுண்டா
ஊருகுல்ல உலகத்தில

ஓடாத்தேஞ்சு போனேன் -நீ பிகர் மடிக்க
நான் காத்து கிடந்து

எலும்பா உருகிப்போனேன் - லோகல் சரக்கும்
துண்டு பீடியும் நானடிச்சு

ஒன்னாந்தேதியானா சிரிச்சிகிட்டே
வர்ர மச்சான்

பத்து தேதி மேலே
வெட்டிப்பயலேன்னு வையுறியே

ஆயிரந்தான் வஞ்சாலும்
உன்போல தோஸ்து வருமா

ஊருள்ளே நடக்கையில
உனையாரும் சேர்ப்பாரோ

பிகர்பார்க்க போனேயே
வழுக்கு மண்டைய தடவிகிட்டு

ராவும் வந்துருச்சே
கீழ்வானம் இருண்டுருச்சே

அடி சத்தம் போலிசாலே
கீறல் ஒண்ணு மார்மேலே

பழைய புண்ணு ஆறுது
உன் உடம்பும் காயுது

கண்ண மட்டும் காப்பாத்திட்டு
ஓடி வாயேன் என் ராசா





நமது சக பதிவர் வால்பையனுக்கு நன்றிகள்.
.

22 comments:

Raju said...

அந்தாளே எதிர்க்வுஜ எழுதுற ஆளூ..
அந்த ஆளுக்கேவா....
நடத்துங்கப்பா..!

வசந்த் ஆதிமூலம் said...

குத்துங்க எசமான் குத்துங்க.... எவ்ளோ வலிச்சாலும் தாங்குறதுக்கு நாங்க இருக்கோம்ல.

சொல்லரசன் said...

இதைதான் திருநெல்வேலிக்கே அல்வா என்று சொல்வதா?

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்... said...
அந்தாளே எதிர்க்வுஜ எழுதுற ஆளூ..
அந்த ஆளுக்கேவா....
நடத்துங்கப்பா..!*/

யோவ் .... சண்டைய மூட்டி விட்டுராதைய்யா...

நையாண்டி நைனா said...

/*வசந்த் ஆதிமூலம் said...
குத்துங்க எசமான் குத்துங்க.... எவ்ளோ வலிச்சாலும் தாங்குறதுக்கு நாங்க இருக்கோம்ல.*/

ஏலே.. அந்த தைரியத்திலே தாம்லே நானே பதிவு..சாரி... மொக்கை போட்டு நிக்கேன்.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
இதைதான் திருநெல்வேலிக்கே அல்வா என்று சொல்வதா?*/

பாஸ்... திருநெல்வேலி என்னோட ஊரு...

ஈரோடிற்கே கைத்தறி துண்டா? அப்படின்னு கேளுங்க...

நாஞ்சில் நாதம் said...

:)))))))))

தராசு said...

எத்தன பேர்யா கிளம்பீருக்கீங்க இப்படி

Cable சங்கர் said...

/எத்தன பேர்யா கிளம்பீருக்கீங்க இப்படி//

இப்பதைக்கு இவரு ஒருத்தர்தான் தராசண்ணே..

நையாண்டி நைனா said...

/*நாஞ்சில் நாதம் said...
:)))))))))*/

Thanks dear friend.

நையாண்டி நைனா said...

/*
தராசு said...
எத்தன பேர்யா கிளம்பீருக்கீங்க இப்படி
*/
எனக்கு தெரிஞ்சி நான் ஒருத்தன் தான்

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
/எத்தன பேர்யா கிளம்பீருக்கீங்க இப்படி//

இப்பதைக்கு இவரு ஒருத்தர்தான் தராசண்ணே..*/

வருகைக்கு நன்றி...

தரசண்ணன் உங்களுக்கும் அண்ணனா???

அப்படின்னா நானு அவரை இனி தராசு அங்கிள் அப்படின்னு தான் கூப்பிடனும்.

தராசு அங்கிள்... இதுக்காக கோபபட்டு நம்ம கடை பக்கம் வராமே போயராதீங்க...

வால்பையன் said...

//கையிலாவது வாயிலாவது
வேலையுண்டா வெட்டியுண்டா//

அண்ணே இது தப்புண்ணே!

வால்பையன் said...

கண்ண மட்டும் காப்பாத்திட்டு
ஓடி வாயேன் என் ராசா//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


அருமையோ அருமை தலைவா!

Suresh Kumar said...

இது தான் கவுஜயா ?

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

ஆ.ஞானசேகரன் said...

சுட்டியை சுட்டுங்கள்
வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)

நையாண்டி நைனா said...

வால்பையன் said...
//கையிலாவது வாயிலாவது
வேலையுண்டா வெட்டியுண்டா//

அண்ணே இது தப்புண்ணே!


அதெல்லாம் தப்பு இல்லேன்னு... உச்ச நீதி மன்றமே சொல்லிருச்சி,

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
கண்ண மட்டும் காப்பாத்திட்டு
ஓடி வாயேன் என் ராசா//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அருமையோ அருமை தலைவா!
*/

நன்றி தல.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
இது தான் கவுஜயா ?*/

இப்படி நான் சொல்லி சொல்லி தான் என்னோட பொழப்பை ஒட்டி கிட்டு இருக்கேன்.ஹி... ஹி...ஹி...

நையாண்டி நைனா said...

/*ஆப்பு said...
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!*/

இதென்ன புது விளையாட்டா இருக்கே...

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
சுட்டியை சுட்டுங்கள்
வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)*/

மிக நன்றி நண்பா.