Monday 30 November 2009

டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...உன்னை கண்டாலே ஆச்சர்யமே...!



மும்பையிலிருந்து நையாண்டி நைனா, வலையுலக சுனாமி அண்ணன் தண்டோராவை காண செல்கிறார். பினாமிகள் வேணா ஊருக்குள்ளே இருக்கலாம், சுனாமி எங்கே இருக்கும்? தண்ணிலே தான் இருக்கும். (இங்கே டபுள் மீனிங் பார்க்குறவங்க பிளாக்கும் கண்ணும் அவிஞ்சி போயிரும் ஆமா நான் சொல்லிபுட்டேன்...)

சென்னையிலே தண்ணி எங்கே இருக்கு? அப்படின்னு சின்னபுள்ளை தனமா அறிவாளி கேள்வி கேட்டா... நீங்க சந்த்ராயன் அண்ணாதுரை கிட்டே வேலைக்கு சேர வேண்டிய ஆளுன்னு அர்த்தம். அதனாலே உடனே இந்த வெட்டி பிளாக்கை மூடிட்டு...
இம்மீடியட்லி காண்டாக்ட் எனி பெர்சன் பட் C/O. மிஸ்டர்.அண்ணாதுரை,

தண்ணி எங்கே இருக்கும்? எங்கும் இருக்கும். டாஸ்மாக்குலே தான் தட்டுபாடு இல்லாமே கிடைக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்னு சொன்னீங்கன்னா... அல்ரெடி நீங்க அண்டர் எனி பெர்சன் C/O.மிஸ்டர்.அண்ணாதுரைன்னு அர்த்தம்...

பட் அந்த அண்ணாதுரை வேறை, இந்த அண்ணாதுரை வேறைன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணுமா...அவ்வ்வ்வ்.

பார்த்தீங்களா... அண்ணனை பத்தி நெனச்ச உடனே... எப்படி மானிட்டர் நெறையுது... பார்த்தீங்களா... எச்சூஸ் மீ... நான் என்னோட கம்ப்யூட்டர் மானிட்டரை சொன்னேன்... தண்ணி நெறையா இருக்குற எடம், பீச்சு அதானாலே சுனாமியும் அங்கே தான் இருக்கும். அங்கே தான்... அங்கே தான்... அங்கேயே தான், அங்கே பீச்சுலே தான் சந்திக்க போறார்.

"அங்கே என்னா நடந்துச்சு?"

அதை சொல்ல தானே போறேன்... சரி... சுதி கொஞ்சம் ஏத்தி...கோங்க... பாட்டல்னா பாட்டல், ஆர்மோனிய பெட்டினா.. ஆர்மோனியபெட்டி... உங்களுக்கு எது வசதியோ அது...(கஸ்டமர் சேட்டிஸ்பாக்சன், ரொம்ப முக்கியம்)

அப்படியே... மௌன கீதங்கள் பாக்கியராஜை கற்பனை பண்ணிக்கோங்க.. அது தான் "அண்ணே". என்னாது? கற்பனையே பண்ண வேண்டாம், அண்ணன் அப்படிதான் இருப்பாரா? அது உங்க இஷ்டம். ஆனா நையாண்டி நைனா அந்த சின்ன பையன் மாதிரி தான். அதனாலே நையாண்டி நைனாவை சின்ன பையன் மாதிரியே கற்பனை பண்ணிகொங்க... அங்கே என்ன நடந்துச்சி அப்படிங்குறதை... உங்க மன திரையில் காண்க... ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்.....

நைனா:
டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...
உன்னை கண்டாலே... ஆச்சர்யமே...

டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...
உன்னை கண்டாலே... ஆச்சர்யமே...


தண்டோரா:
நைனா.. நைனா... "நைண்டி".. நைனா...
எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்

நைனா.. நைனா... "நைண்டி".. நைனா...
எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்


நைனா:
உன் பிளாக்கை பார்த்தாலே...,
உன் பதிவை திறந்தாலே...,
கம்..பூட்டரும் எலி போலே...,
ஏன் நாழுது...?

உன் பிளாக்கை பார்த்தாலே...,
உன் பதிவை திறந்தாலே...,
கம்..பூட்டரும் எலி போலே...,
ஏன் நாழுது...?


தண்டோரா:
பதிவர்கள் சில பேரு...
செய்கின்ற தப்பை தான்...
அடியேனும் இந்நாளில் செய்றேனப்பா...


நைனா:ஹான்...

தண்டோரா:
பதிவர்கள் சில பேரு...
செய்கின்ற தப்பை தான்...
அடியேனும் இந்நாளில் செய்றேனப்பா...


நைனா:அது என்ன தப்பு... ?

தண்டோரா:"போயம்ஸ்"...!

நைனா:என்கிட்டே சொல்லு...!

தண்டோரா:நோ..நோ..

நைனா:சொல்லாம போனா விட மாட்டேன்பா..

தண்டோரா:வேண்டாம்.. வேண்டாம்...

நைனா:ஹான்...

தண்டோரா:"நைண்டி"... நைனா...

நைனா:ஹான்...

தண்டோரா: அதை சொன்னாலும் புரியாதப்பா...

நைனா:டோரா... டோரா...

தண்டோரா:வலையோர நண்டெல்லாம் தான் பெற்ற குத்தோடு, எப்போதும் கட்டோடு விளையாடுதே...

வலையோர நண்டெல்லாம் தான் பெற்ற குத்தோடு, எப்போதும் கட்டோடு விளையாடுதே...

அது போலே நம்மோடு சும்மாவும் கை கலந்து அன்போட விளையாட மனம் ஏங்குதே...


நைனா:உன் மூக்கை பார்த்து...

தண்டோரா:தேன்க்யூ

நைனா:விடுவேனே குத்து...

தண்டோரா:ரியல்லி...

நைனா:எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:ஹான்

தண்டோரா:"நைண்டி"... நைனா...

நைனா:ஹான்

தண்டோரா:எந்தன் ஆச்சர்யம் உன்னோடு தான்

நைனா:டோரா.. டோரா.. ஓ... தண்..டோரா...உன்னை கண்டாலே ஆச்சர்யமே...

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:ஹான் ... டோரா.. டோரா..

தண்டோரா:நைனா...நைனா...

நைனா:டோரா.. டோரா..

21 comments:

Raju said...

அப்போ சரிதா யாரு...?

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
அப்போ சரிதா யாரு...?*/

கொஸ்டின் பார்வேடடு டு அண்ணன்.

கே.என்.சிவராமன் said...

அன்பின் நைனா,

கலக்கல்.... :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மணிஜி said...

”சரிதா”ன்..இந்த பாத்ரூம்ல ஒரு பிகர் உண்டாச்சே..

cheena (சீனா) said...

பாட்டு சூப்பர்

விவிசி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Cable சங்கர் said...

suuper.. attahasam

பெசொவி said...

//தண்டோரா ...... said...
”சரிதா”ன்..இந்த பாத்ரூம்ல ஒரு பிகர் உண்டாச்சே..
//
அண்ணன் குசும்பு மாறவே மாறாது.

நையாண்டி நைனா said...

/*பைத்தியக்காரன் said...
அன்பின் நைனா,

கலக்கல்.... :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்*/

அன்பிற்கு நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
”சரிதா”ன்..இந்த பாத்ரூம்ல ஒரு பிகர் உண்டாச்சே..*/

கரெக்க்ட்டு தான்... ஆனா அதை நீங்க என்ன பண்ணீங்களோ... தெரியலே... கூப்பிட்டா... வர மாட்டேங்குது...

நையாண்டி நைனா said...

/*cheena (சீனா) said...
பாட்டு சூப்பர்

விவிசி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா*/

நன்றி ஐய்யா...

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
suuper.. attahasam*/

Thanks Anna... (என்னமோ தெரியலே.. தொரை இப்பல்லாம்... இங்கிளிபிசுலே பொளந்து கட்டுது....
)

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//தண்டோரா ...... said...
”சரிதா”ன்..இந்த பாத்ரூம்ல ஒரு பிகர் உண்டாச்சே..
//
அண்ணன் குசும்பு மாறவே மாறாது.*/

ஆமா... அண்ணாத்தே குசும்பு ஓவரா தான் போகுது...

இப்ப நம்ம வலை தளத்திற்கு அடிக்கடி வருகிறீர்கள்... நன்றி... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

பெசொவி said...

//இப்ப நம்ம வலை தளத்திற்கு அடிக்கடி வருகிறீர்கள்... நன்றி... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
//

அப்படி வந்தாலாவது, நம்ம வலைப்பூ பக்கம் வந்து பின்னூட்டம் போடுவீங்கன்னு ஒரு பேராசைதான், ஹிஹி......

மணிஜி said...

என் பேரை கேட்டாலே சிலருக்கு அலறல்தான்..உனக்கும் மைனஸ் ஓட்டு போட்டுட்டாங்கப்பா..

butterfly Surya said...

hahhaha.. கலக்கல்..

எப்படி இதெல்லாம்.. ??

Raju said...

ண்ணோவ்..வாழ்த்துக்கள்ண்ணோவ்..!
மைனஸ் ஓட்டுண்ணோவ்..பிரபல பதிவர் ஆயிட்டீங்கண்ணோவ்.

நையாண்டி நைனா said...

/*♠ ராஜு ♠ said...
ண்ணோவ்..வாழ்த்துக்கள்ண்ணோவ்..!
மைனஸ் ஓட்டுண்ணோவ்..பிரபல பதிவர் ஆயிட்டீங்கண்ணோவ்.*/

வேட்டை ஆரம்பிச்சிடிச்சி... டோய்....

நையாண்டி நைனா said...

/*butterfly Surya said...
hahhaha.. கலக்கல்..

எப்படி இதெல்லாம்.. ??*/


அண்ணனை நெனச்சா... அதுவா வருது.... அவ்வ்வ்வவ்

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
என் பேரை கேட்டாலே சிலருக்கு அலறல்தான்..உனக்கும் மைனஸ் ஓட்டு போட்டுட்டாங்கப்பா..*/

நான் வளர்கிறேனே மம்மி... சாரி அண்ணா...

நையாண்டி நைனா said...

/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//இப்ப நம்ம வலை தளத்திற்கு அடிக்கடி வருகிறீர்கள்... நன்றி... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
//

அப்படி வந்தாலாவது, நம்ம வலைப்பூ பக்கம் வந்து பின்னூட்டம் போடுவீங்கன்னு ஒரு பேராசைதான், ஹிஹி......*/

வந்து பார்த்து கிட்டே தான் இருக்கோம்னா...

ஆ.ஞானசேகரன் said...

கலக்குங்க நைனா>>>