Monday 24 August 2009

ஸ்பெசல் மானி(ட்)டரை, வாழ்த்துப்பா வாழ்த்து பா..!





அண்ணன் தண்டோரா இனி "மணி"ஜி நாளைக்கு "ஹாரன்"ஜி நாளான்னிக்கு "சைரன்"ஜி, நூறை தொட்டதை வாழ்த்தும் ஆன்றோரே சான்றோரே.....

அண்ணன் ஒரே கல்ப்பில் நூற்றி எம்பதை அனாயாசமாய் தொடுவார் என்றும் மூச்சு விட்டு, மூச்சு விட்டு தொடர்வாறேயானால் முன்னூத்தி எழுபத்தி அஞ்சி என்ன??? எழுநூறே அவருக்கு சர்வ சாதாரணம் என்று இந்த மாமன்றத்திலே சொல்லி விடை பெறு.......

மன்னிக்க... அண்ணன் தொட்டது பதிவிலே நூறாம்... அதனாலே முந்திய பத்தியை உங்கள் நினைவில் இருந்து மழித்து எடுத்துவிட்டு.... தொடருங்கள்


பதிவினில் நூறுகண்ட, அண்ணன் மணிஜி என்றும் அழைக்கப்படும் தண்டோரா அவர்களுக்கு, இந்த வாழ்த்துப்பாவை சமர்பிக்கிறேன்...

(டிஸ்கி: இரண்டு முறை போட்டிருப்பது பிழை அல்ல, அது கவிதை கதைக்கும் கலை.)

ஸ்பெசல் மானி(ட்)டரை,
வாழ்த்துப்பா,
வாழ்த்துப்பா...
என்றே என்மனம்
கூவியதால்
வந்து விழுந்தது இந்த
வாழ்த்து பா
வந்து பிறந்தது இந்த
வாழ்த்து பா
இதையும் கொஞ்சம் நீ படிப்பா, நீ படிப்பா.


நிஜப் பேரோ விளம்பரக்காரன்- உண்மையில்
நீ பெருங் கோபக்காரன்.
நீ பெருங் "கோ"
நீ பெருங் கோ(உ)பகாரன்.

புனைப்பெயரோ தண்டோராஜி
ஆளுவோரை "புட்சி"
ஆக்குவாய் "டோரா புஜ்ஜி"
ஆளுவோரை "புட்சி"
ஆக்குவாய் "டோரா புஜ்ஜி"


உடன் பிறப்பே...

நூறு அடித்த உனது
வீரம் பரணி பாடற்குரியது.

சுவை பதிவில் நீ
அடித்தாய் "நூறு"

சுவை பதிவில் நீ
அடித்தாய் "நூறு"

கன்னியர் கைவிட்ட காதலர்
அடிப்பார் "தொண்ணூறு"

கன்னியர் கைவிட்ட காதலர்
அடிப்பார் "தொண்ணூறு"

இந்த உன் சாதனையை
பாடட்டும் "புறநானூறு"

இந்த உன் சாதனையை
பாடட்டும் "புறநானூறு"

மொக்கையிலுனை சீண்டுவோர்
தமிழுலகின் "வல்லூறு"

மொக்கையிலுனை சீண்டுவோர்
தமிழுலகின் "வல்லூறு"


உடன்பிறப்பே....


நூறு அடித்துவிட்டேன் என
இறுமாந்து இருந்துவிடாதே....
செம்மாந்து இருந்துவிடாதே...

அய்யன் தந்த
காமத்துப்பால் ஒரு
"ரெண்டரை நூறு"

அய்யன் தந்த
காமத்துப்பால் ஒரு
"ரெண்டரை நூறு"

இனிக்க, இனிக்க
நீ படித்திருப்பாய்
"அகநானூறு"

இனிக்க, இனிக்க
நீ படித்திருப்பாய்
"அகநானூறு"

மறக்காமல் கழக
வளர்ச்சிக்கு அனுப்பிவிடு
நிதி "நானூறு"

மறக்காமல் கழக
வளர்ச்சிக்கு அனுப்பிவிடு
நிதி "நானூறு"

இதன் மூலம் நீ
ஆக்குகிறாய் எதிரியின்
தலையை "சுக்கு நூறு"


உடன்பிறப்பே,

என்னவென்று சொல்வேன் உன் வீரத்தை, தீரத்தை....
என்னவென்று சொல்வேன் உன் வீரத்தை, தீரத்தை....
காதலுலகின் பாவலரேறு,
பாடட்டும் உன் வரலாறு.
காதலுலகின் பாவலரேறு,
பாடட்டும் உன் வரலாறு.

நையாண்டி நைனா என் பேரு
இதை பலரிடம் கொண்டு நீ சேரு


40 comments:

யாசவி said...

ohmmmm

ennatha solla

:-)

yasavi

யாசவி said...

ennatha solla

;-)

நையாண்டி நைனா said...

/* யாசவி said...
ohmmmm

ennatha solla

:-)

yasavi
*/

Thanks for your first visit.
You can say as you like.

நையாண்டி நைனா said...

/*யாசவி said...
ennatha solla

;-)
*/
Ennannaalum sollunga.

:-))))

மணிஜி said...

மணவீட்டில்
மைக் பிடித்து
வாழ்த்துவதற்கு முன்
எதிரியை வைது
அட்சதை போடும்முன்
அரசியல் கொஞ்சம் பேசி
மணமக்களின் மாலையையும்
தன் கழுத்தில் போட்டு
தன்னடக்கத்தின்
தனிப்பெரும் சுடராய் இருக்கும்
தமிழ் பெருங்குடியே..
வாழ்க நீ எம்மான்
வையத்துள் வாழ்வாங்கு...

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
மணவீட்டில்
மைக் பிடித்து
வாழ்த்துவதற்கு முன்
எதிரியை வைது
அட்சதை போடும்முன்
அரசியல் கொஞ்சம் பேசி
மணமக்களின் மாலையையும்
தன் கழுத்தில் போட்டு
தன்னடக்கத்தின்
தனிப்பெரும் சுடராய் இருக்கும்
தமிழ் பெருங்குடியே..
வாழ்க நீ எம்மான்
வையத்துள் வாழ்வாங்கு...*/

கடைசியில் என் பேரை போட்டது தப்புதான் அதுக்காக இப்படி ஒரு எசைப்பாட்டா...?? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

வருகைக்கு நன்றி அண்ணாத்தே...

துபாய் ராஜா said...

உங்க வாழ்த்துப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !! :))

குடந்தை அன்புமணி said...

வாழ்த்துகள். ஆனா, எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுதுப்பா... எதனாலே...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அட்டகாசம்,பின்னிப் பெடல் எடுத்துருக்கீங்க ,சிரிப்புத் தாங்க முடியல.நூறைத் தொட்ட தண்டோராவுக்கு இங்கேயும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.

Jackiesekar said...

மறக்காமல் கழக
வளர்ச்சிக்கு அனுப்பிவிடு
நிதி "நானூறு"//
முதல்ல அந்த ஆள அதை செய்ய சொல்லி நைனா புண்ணியமா போவும்..

லோகு said...

Raittu............

ஹேமா said...

நைனா,ஏன் இரண்டு இரண்டா இருக்கு.

ஓ...கவிதைன்னா அப்பிடித்தானோ !

முரளிகண்ணன் said...

பட்டயக் கிளப்பீட்டிங்க நைனா

கலையரசன் said...

நூறு அடிச்சிட்டு... நூறை பற்றி எழுதுன மாதிரி இருக்கே நண்பா...

புறநாநூறு படிச்சிட்டு நா நூறு அடிச்சிட்டு படுக்கனும் போல..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))))

நாஞ்சில் நாதம் said...

:))

வால்பையன் said...

கலக்கலா இருக்கு கவிதை!

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

Prapa said...

//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//

dharshini said...

//(டிஸ்கி: இரண்டு முறை போட்டிருப்பது பிழை அல்ல, அது கவிதை கதைக்கும் கலை.)//

இது அரசியல்வாதிங்களோட ஸ்டைல் ஆச்சே!...
தண்டோரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

Raittu.....ok.....

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
உங்க வாழ்த்துப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !! :))
*/

நன்றி அண்ணாத்தே.

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
வாழ்த்துகள். ஆனா, எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுதுப்பா... எதனாலே...*/

ஹி... ஹி.... ஹி... சரக்கு அதிகம். என்னோட கவிதைளே.... அதான்

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீ said...
அட்டகாசம்,பின்னிப் பெடல் எடுத்துருக்கீங்க ,சிரிப்புத் தாங்க முடியல.நூறைத் தொட்ட தண்டோராவுக்கு இங்கேயும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.
*/

நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
மறக்காமல் கழக
வளர்ச்சிக்கு அனுப்பிவிடு
நிதி "நானூறு"//
முதல்ல அந்த ஆள அதை செய்ய சொல்லி நைனா புண்ணியமா போவும்..*/

அதுக்கு பேசாமே நான் குவாட்டரை விட்டுட்டு மட்டையாகலாம்.

நையாண்டி நைனா said...

/*லோகு said...
Raittu............*/

lepttu.

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நைனா,ஏன் இரண்டு இரண்டா இருக்கு.

ஓ...கவிதைன்னா அப்பிடித்தானோ !*/

"டக்கென" புரிந்து கொண்டீர்களே.... நன்றி.

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
பட்டயக் கிளப்பீட்டிங்க நைனா*/

Thanks Nanbaa.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
நூறு அடிச்சிட்டு... நூறை பற்றி எழுதுன மாதிரி இருக்கே நண்பா...

புறநாநூறு படிச்சிட்டு நா நூறு அடிச்சிட்டு படுக்கனும் போல..*/

தாராளமா செய் நண்பா....

நையாண்டி நைனா said...

/*அத்திவெட்டி ஜோதிபாரதி said...
:))))*/

Hi...hi...hi.... :-)))))))

நையாண்டி நைனா said...

/*நாஞ்சில் நாதம் said...
:))*/

:-))))

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
கலக்கலா இருக்கு கவிதை!*/

Thanks Thala.

நையாண்டி நைனா said...

பிரபா said...
//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//


Vanthiruvom nanbare.

நையாண்டி நைனா said...

/*dharshini said...
//(டிஸ்கி: இரண்டு முறை போட்டிருப்பது பிழை அல்ல, அது கவிதை கதைக்கும் கலை.)//

இது அரசியல்வாதிங்களோட ஸ்டைல் ஆச்சே!...
தண்டோரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்..
*/

நன்றி அக்கா...

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
Raittu.....ok.....*/

Thanks Nanba.

துபாய் ராஜா said...

நையாண்டி மன்னன் - நையாண்டி நைனா அவர்களே,உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன். வாருங்கள்.
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_07.html

தொடர்புள்ள பதிவுகள் படித்து பாருங்கள்.
1.http://irumbuthirai.blogspot.com/2009/09/blog-post_04.html
2.http://acchamthavir.blogspot.com/2009/09/blog-post.html
3.http://anbu-openheart.blogspot.com/2009/09/blog-post_05.html

உங்கள் பாணியில் கலக்குங்கள்.

தராசு said...

நல்லாத்தான போயிகிட்டிருந்திச்சு......

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
நையாண்டி மன்னன் - நையாண்டி நைனா அவர்களே,உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன். வாருங்கள்.
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_07.html

தொடர்புள்ள பதிவுகள் படித்து பாருங்கள்.
1.http://irumbuthirai.blogspot.com/2009/09/blog-post_04.html
2.http://acchamthavir.blogspot.com/2009/09/blog-post.html
3.http://anbu-openheart.blogspot.com/2009/09/blog-post_05.html

உங்கள் பாணியில் கலக்குங்கள்.*/

அழைப்பிற்கு நன்றி நண்பரே,
வேலையில் இறங்கியாச்சு.

நையாண்டி நைனா said...

/*தராசு said...
நல்லாத்தான போயிகிட்டிருந்திச்சு......*/

இதுவும் நல்லாதானே இருக்கு...ஹி..ஹி..ஹி..

நையாண்டி நைனா said...

naane pottukaren oru 40