Tuesday 9 June 2009

இதுக்கு பேரு என்னாது...?



நேற்றே நண்பர் டக்குளசு தளத்திலே அறிவித்து இருந்தேன், அவரது கவுஜயின் உண்மை வடிவை இங்கே எனது தளத்திலே தருகிறேன் என்று...
அதன் உண்மை களமும் வடிவும் இது தான். அதனை இங்கே தருவதில் பெருமை கொள்கிறான் உங்கள் அன்பன் நையாண்டி நைனா

இனி கவுஜ


சிறு சிறு சண்டைகள் ப‌ற்பல போட்டு,
கன்னம் வைக்கும் ஏரியா பங்கு போட்டு,
நீதிமன்ற வளாகத்தில் ஒன்பைடூ டீ அடித்து,
பஸ்ஸடாப்பில் பல பாக்கட்டுகளை அடித்து,
ஸ்டேசனில் புரபைல் திருடி கிழித்து,
பெட்டிக்கடை பில்டருமாய்,
டாஸ்மாக் பீருமாய்,
ஜெயில் வளாகத்தில் வெட்டிப்பேச்சுமாய்,
இன்னும் ஞாபகம் உள்ளது நண்பா,என்னுள்.
நீ அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம்.

"ஸ்ஸ்ஸ்யெப்பா..சென்ட்ரா ஏத்திட்டாங்கடா......!"

இது தான் நண்பர் டக்கு சாரி...சாரி....மாண்புமிகு டக்கு அவர்கள் (எந்த நேரத்திலே யாரு எப்படி, என்ன, ஆவாங்கன்னே தெரியலே.... அதுவும் வேற பயபுள்ளை "மதுரக்கார" பயபுள்ள நானு..." என்று பதிவுலே போட்டு பயங்காட்டுது... அதான்... இவ்ளோ மரியாதை ) தன்னோட ஜெயில் செல்லிலே ஒக்காந்து இருக்கும் போது அவரோட நண்பர் அவரை பற்றி சுவத்திலே எழுதுனது. ஒருவேளை இதுக்கு பேருதான் கவுஜயோ..?

பி.கு.1: இதை நம்ம டக்கு எப்படி மாத்தி போட்டுருக்கு என்று பார்க்க வேண்டும் என்றால் இங்கே போய் பாருங்க. இது எதிர் பதிவோ கவுஜயோ அல்ல, உண்மையை சொல்லும் கவுஜ.

பி.கு. 2: ஹலோ... "டக்கு" மேலே கொடுத்திருக்கும் படம் சாம்பிளுக்கு தான்.... நீ உடனே என்னோட செல்லுலே இந்த தங்கையர்(உனக்கு தான் தங்கை, அந்த புள்ளைங்க தான் இப்படி போட சொல்லிச்சுங்க) எல்லாம் இல்லை என்று புரச்சி பண்ண வேண்டாம்....

16 comments:

Raju said...

ஹேய்...எனக்கும் எதிர்பதிவு வந்துருச்சு..எதிர் பதிவு வந்துருச்சு.
நானும் ரவுடிதான்..ரவுடிதான்..ரவுடிதான்..!

Raju said...

:)

நையாண்டி நைனா said...

என்ன மாப்பு... இப்படி இருந்த கவுஜயே நீ ஏன் அப்படி மாத்தினே???

Raju said...

யாரு மாத்துனது..?
நானா.யோவ்..வேற எதாவது சொல்லீறப் போறேன்

தினேஷ் said...

வெயிட்...தல

மணிஜி said...

இரண்டு

மணிஜி said...

இரண்டு

சொல்லரசன் said...

ஒரு முடிவதான் இருக்கிங்க, இன்று டக்ளஸ் நாளை யாரோ?

ஆ.ஞானசேகரன் said...

என்ன நடக்குது, எல்லாம் ஒரு முடிவாதான் இருக்காங்க‌

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னைக்கு சிக்கினது டக்கா? அய்யா.. ஒரே ஜாலி..

குசும்பன் said...

சோதனை பதிவை கிளிக்கி காணவில்லை என்ற வேதனையில் வந்த எனக்கு வந்த சோதனை!

(இதுவும் கவிதையா?)

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
ஹேய்...எனக்கும் எதிர்பதிவு வந்துருச்சு..எதிர் பதிவு வந்துருச்சு.
நானும் ரவுடிதான்..ரவுடிதான்..ரவுடிதான்..!
*/

இது எதிர் கவுஜைலாம் இல்லே...உன்னோட சரித்திரம்.

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
வெயிட்...தல*/

Thanks Nanba.

நையாண்டி நைனா said...

தண்டோரா அண்ணே... ரொம்ப நன்றி. என்னோட கடனை திருப்பி தந்ததுக்கு

நையாண்டி நைனா said...

Nanbarkal sollarasan, ஆ.ஞானசேகரன், Maa.Kaa.Paa avarkalukku nandrikal.

நையாண்டி நைனா said...

/*குசும்பன் said...
சோதனை பதிவை கிளிக்கி காணவில்லை என்ற வேதனையில் வந்த எனக்கு வந்த சோதனை!

(இதுவும் கவிதையா?)*/

H.O.D Sir...
Ithu kavithaiye thaan.
Thanks for your visit.