Wednesday 29 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம் நான்காம் பாகம்

ஐசு வந்தாங்களே... அந்த சந்தையிலே... அங்கே ரெண்டு பேரு பிச்சை எடுத்து கிட்டு இருக்காங்க... அந்த ரெண்டு பெரும் யாருன்னு பார்த்தா... வடிவுக்கரசியும்... ராமராஜனும்...

அவர்கள் பிச்சை எடுத்து வச்சிருக்குரத்தை ஒரு முரட்டு கரம் பறித்து எடுக்கிறது... இதனை ரஜினி பார்த்து சினம் கொண்டு அந்த குண்டனை அடித்து துவைக்கிறார்... பைட்டு சீன முடிஞ்சா உடனே...அவர்களின் பக்கம் வந்து... அவர்களின் அருகே வந்து..... இந்தாங்க உங்க பணம்.... )

வடிவுக்கரசி / ராமராஜன் : (இருவரும்.. அழுதபடியே... . கோரசாக) அது அவங்க பணம் தான் தம்பி...

வடிவுக்கரசி: அவங்க எடுத்தாங்க... நீங்க வந்து தடுத்துட்டீங்க... அவங்க ரொம்ப பொல்லாதவங்க தம்பி... உங்களை என்ன செய்ய போறாங்களோ தெரியலியே....

ரஜினி : அது அவங்க பணமா? எப்படி நீங்க தானே கஷ்ட பட்டு பிச்சை எடுத்தீங்க... ஆமா...! அவங்க யாரு.

வடிவுக்கரசி: தம்பி, அவனுங்க இந்த ஊரு மந்திரியோட ஆளுங்க... நாங்க பத்து ரூபா பிச்சை எடுத்தா ஒன்பது ரூபா அவங்களுக்கு.. அப்படி நாங்க கொடுத்தா... அவங்க என்னோட மகனை ஒன்னும் செய்ய மாட்டாங்க... அதனாலே தான் தம்பி நாங்க பிச்சை எடுத்து எங்க மகனை காப்பாத்திட்டு இருக்கோம்...

ரஜினி : உங்க புள்ளை எங்கம்மா இருக்கான்?

வடிவுக்கரசி : அது தெரியலையே தம்பி... ஆனா அவன் எங்கேயோ பத்திரமா இருக்கான்...

ரஜினி : என்னம்மா இது புதிரா இருக்கு... உங்களுக்கே உங்க மகன் எங்கே இருக்கான்னு தெரியாதுன்னு சொல்றீங்க... அப்புறம் பிச்சை எடுத்து உங்க மகனை காப்பாத்துறேன்னு சொல்றீங்க... ஒன்னும் புரியலையே...

வடிவுக்கரசி :இவனுங்க மந்திரியோட ஆளுங்க, ரொம்ப பெரிய ஆளுங்க தம்பி... இந்த நேப்பாளதையே இவங்க கட்டுக்குள்ளே வச்சிருக்கானுங்க... இவங்களுக்கு எல்லா நாட்லயும் ஆளுங்க இருக்கானுங்க... இவனுங்களுக்கு தெரியாத அரசாங்கமும் கிடையாது... மாபியா கும்பலும் கிடையாது... அதனாலே இவங்க எங்கேயோ பத்திரமா இருக்க என் மகனை ஒன்னும் செய்ய கூடாதுன்னு சொல்லி பிச்சை எடுத்து கொடுத்திட்டு இருக்கோம்....அது இருக்கட்டும் தம்பி... நீங்க யாரு...

ரஜினி : நான் தமிழ்நாட்லே இருந்து வாறேன்.......................... (மற்ற வசனம் எல்லாம் சைலென்ஸ் ஆகி போயிருது..) தல கதைய சொல்றாரு...

வடிவுக்கரசி : "தம்பி உங்களை வளர்த்தவங்க பேரு தமன்னாவா... அப்படின்னா நீங்க என்னோட மகனா...." என்று சொல்லி கட்டி பிடித்து கொள்கிறார்...

ரஜினி : "நீங்க என்னோட அம்மா அப்பாவா.." என்று ஆனந்த கண்ணீர் விடுகிறார்...

ரஜினி : இனி நீங்க பிச்சை எடுக்க வேண்டாம்... நான் உங்களை பிச்சை எடுக்க விட மாட்டேன்.....

வடிவுக்கரசி :தம்பி... நாங்க பிச்சக்காரங்க இல்லே... நீயும் பிச்சைகாரங்க பெத்த புள்ளை இல்லேப்பா... நீ தான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்...நீ தான் இந்த மண்ணோட ஒரே மன்னன். ஆமாப்பா... நாம இந்த நேப்பாளத்தோட ராஜ வம்சம்... நாம தமிழ்நாட்லே பொறந்தோம்... ராஜ ராஜ சோழன் இங்கே படை எடுத்து வந்தப்போ... அவரு கிட்டே சேனாதிபதியா இருந்தாங்க நம்ம முன்னோர்கள்.. அவங்களுக்கு இந்த ராஜ்யத்தை ஆளுற பொறுப்ப கொடுத்தாரு ராஜ ராஜ சோழன்...

ரஜினி :அப்புறம் ஏனம்மா பிச்சை எடுக்குற நெலமைக்கு ஆளாநீங்க...

வடிவுக்கரசி : அது உன்னோட மாமன், அதான் என் தம்பி... பதவி மோகமும் பண ஆசையும் கொண்டு... எங்களை ஜெயில்லே தள்ளி.. உன்னையும் கொல்றதுக்கு திட்டம் போட்டான்... அதுலே உன்னே தப்பிக்க வச்சோம் நாங்க.. எங்களுக்கு பொறந்த கொளந்தை செத்து போச்சுன்னு சொன்னோம், அதை அவன் நம்பலை.. உன்னைய கண்டு பிடிச்சி கொல்லாமே விடுறதில்லேன்னு அலைஞ்சான்..நம்ம ராஜ்யத்தையும் பிடுங்கிகிட்டான் . அதுக்கு அப்புறம் அவனை எதிர்த்தா என்ன ஆகுங்குறதை காமிக்க... எங்களை இப்படி சந்தையிலே பிச்ச எடுக்க வச்சிட்டான்...

ரஜினி : அவனே...(என்று சொல்லிய வாறே ரஜினி ஆக்ரோசமா எழுகிறார் )

வடிவுக்கரசி :கோப..படாதேடா தம்பி... நிதானமா தான் ஜெயிக்கணும்... நேற்று ஒருத்தி பல்லக்குலே வந்தாளே.. அவதான் உன்னோட மாமன் பொண்ணு... நேற்று தான் அவ வயசுக்கு வந்தான்னு... ஊரே கோலாகலமா கிடக்கு...

ரஜினி :நான் அவளை பார்கலையே...

வடிவுக்கரசி : அப்படியா.... அவ அப்பந்தான் பொல்லாதவன்... இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுப்பா... கொசுவை கூட கொல்ல கூடாதுன்னு சொல்லி அந்த பொண்ணு... ஆல் அவுட்டோ... மார்டினோ... ஏன் டார்டாயிஸ் கூட வச்சிகுறது கிடையாது...

ரஜினி : அப்படின்னா கொசு கடிலேயா தூங்குது...

வடிவுக்கரசி :இருக்குமாப்பா... (இது சங்கர் படமாச்சே)... வைரமும் வைடூரியமும் பதிச்ச... வெல்வெட்டிலும், பட்டுலையும் செஞ்ச கொசுவலை தான் பயன்படுத்துவாங்க..

ரஜினி :அதானே பார்த்தேன்....நான் இப்பவே போய், என் மாமனை ஒரு கை பாக்குறேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
(மாமனாக) ராதாரவி: நீ இங்கே வருவேன்னு தெரியும் தம்பி... அதனாலே தான் நானே இந்த ராஜ்யத்தை... கட்டி காப்பாத்திட்டு இருக்கேன்.. இந்தாங்க உங்க ராஜ்யத்தை..நீங்களே ஆளுங்க... நாளைக்கு உங்களுக்கு பட்டாபிசேகம்...

ரஜினி : இப்படி பேசுற நீயி, அப்புறம் ஏன் என்னோட அப்பா அம்மாவை பிச்சை எடுக்க வச்ச...

(மாமனாக) ராதாரவி:அதுவா தம்பி.. முன்னே நம்ம முன்னோர்கள் ஒரு ஆளு... தமிழ்நாட்லே ஜமீனா இருந்தப்ப... எதோ திவான் ஏமாத்திட்டாரு என்று சொல்லி... ராஜ்யத்தையே விட்டுட்டு அவரு பைய்யன் முத்துவையும் வேலைக்காரனா ஆக்கிட்டு போயிட்டாருன்னு..(முத்து படத்தோட கிளிப்ஸ் காட்ட படுகிறது ) கேள்வி பட்டேன்..அப்படி ஒரு நெலமை உங்களுக்கு வந்திர கூடாதுன்னு தான் இப்படி எல்லாம் செஞ்சேன்.. அதை அவங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்க... இப்ப நீங்க வந்துட்டீங்க.. அவங்களுக்கு எல்லா இப்ப புரிஞ்சிருக்கும்...

***********************************************

ஊரே கோலாகலமா இருக்கு... பின்னே தலைவருக்கு பட்டாபிசேகம்னா சும்மாவா...

மேடையிலே எல்லாரும் இருக்காங்க...

"ஏற்- போர்ஸ் ஒன்" அப்படிங்குற ப்ளைட் வருது...

ராதாரவி: நான் தான் பட்டாபிசேகதிற்கு வரணும்னு சொல்லி அமெரிக்க ஜனாதிபதியை கூப்டிருந்தேன்... அவரு தான் வாறாரு..

(அமெரிக்க ஜனாதிபதி.. தன் செகூரிட்டி எல்லாரோடையும்.. வந்து நிற்கிறார்..)

அமெரிக்க ஜனாதிபதி : எஸ்... ப்ரோசீட்...

ராதாரவி:அப்புறம் என்ன நீங்களே வந்துட்டீங்க... ஆரம்பிச்சுர வேண்டியது தான்...

அமெரிக்க ஜனாதிபதி :நோ... கார்...ட்ஸ்... யூ ப்ரோசீட்... மிஸ்டர்... வசீகரன்.. யூ ஆர் அண்டர் அரஸ்ட் என்று சொல்லி.. நம்ம ரஜினி கைலே விலங்க மாட்றாங்க...

Intervel..........

மீதி கதை நான் போடுறேனா.. இல்லே படமே வந்திருதான்னு தெரியலே..

பார்க்கலாம்...

5 comments:

எஸ்.கே said...

சார் இந்த கதைய படமா எடுத்தா நிச்சயம் ஓடும்! :-) பயங்கர திருப்பங்களுடன் வருகிறதே! வாழ்த்துக்கள்! நல்லா பொழுதுபோனதுக்கு நன்றிகள்!

Raju said...

இப்பதான் இண்டர்வேலேவா..?
வெளங்கீரும்ம்ம்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

வா தல... எங்க ஆள காணும்? ...

ரமேஷ் வைத்யா said...

haaahaaahaaahaa

ம.தி.சுதா said...

அப்ப இந்தப்படம் எப்ப திரைக்கு வரும்... காத்திருக்கிறேன் சகோதரா...