Friday 17 April 2009

சும்மா இருக்கிறதே நலம். (அரசியல் பதிவல்ல..!)

மக்களே... நாம பிறரை கேலி செய்வதற்கு சொல்லும் சில நல்ல வார்த்தைகளில் ஒன்று தான் "அவன் சும்மா தான் இருக்கான்" . ஆனா "சும்மா இருத்தல்" என்பது சும்மா இல்லை. இந்த கருத்து சும்மா இருக்கிற பல பேருக்கும் தெரியாது, சும்மா இருக்கிறமாதிரி நடிக்கிற ஆளுங்களுக்கும் தெரியாது குறிப்பா வேலை பார்க்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு சும்மா இருக்கிறவங்களுக்கும் தெரியாது. (டேய்... டேய்... டேய்... யார்ரா அவன் உன்னை மாதிரியான்னு சவுண்டு விடுறவன்.....???? சும்மா அமைதியா இருந்து கேளு பார்த்துக்க....)

சும்மா.., அனாயாசமா, ஐம்புலனையும் அடக்கி ஆளும் வல்லமை உள்ள ஒருவனாலே தான், "சும்மா" இருக்க முடியும். சரி..! ஒரு 'ஒப்பன் சாலஞ்சு'!, நீங்களே ஒரு அஞ்சு நிமிடம் சும்மா இருந்து பாருங்களேன்....? என்ன? "சும்மா" இருந்து பார்க்க முயற்சியா? சும்மா, எதுக்கு வீண் முயற்சி, நீங்களே "சும்மா" இருக்க முடியாமை தானே இங்கே பதிவு படிக்க வந்திருக்கீங்க???? அப்புறம் எதுக்கு சும்மா, முண்டாசை கட்டிக்கிட்டு இறங்குறீங்க???

நாட்களையும் சரி வீட்லயும் சரி, நாம சும்மா இருந்தாலே போதும், ஒரு பிரச்சினையும் வராது, அப்படியே சில பிரச்சினைகள் வந்தாலும் அதில் பல பிரச்சினைகள் தானாவே அடங்கிரும். ஆனா நம்மாலே தான் சும்மாவே இருக்க முடியாதே?

இப்ப நாட்டு பிரச்சினை அளவுக்கு நாம போக வேண்டாம், வீட்டு பிரச்சினையை பார்ப்போமே..... வீட்லே நீங்க வேலைக்கு போகம சும்மா இருந்தா..., "வேலைக்கு போகாம சும்மா இருக்கிறான்" அப்படின்னு ஒரு பிரச்சினைதான், அதை பல பேரு சும்மா, சும்மா சொல்லிக்காட்டுவாங்க, அதையும் கேட்டுட்டு சும்மாதான் நாம இருப்போம், இருக்கணும், நல்லதுக்காக. ஆனா அதே சமயத்திலே நீங்க சும்மா இருக்காமே, சும்மா வேலை தேட கெளம்பிட்டீங்க அதுலே எவ்ளோ பிரச்சினைகள் இருக்கு?

1. நமக்கு ஏத்த மாதிரி வேலையா இருக்கணும்.

2.அந்த வேலை பற்றிய எல்லா விஷயமும் தெரியனும்.

3. அந்த வேலைக்கு வைக்கிற நேர்காணலில் நாம் வெற்றி பெறனும்.

4. வெற்றி பெற்ற பிறகு அவங்க தருகிற சம்பளத்திற்கு நாம சம்மதிக்கணும், இல்லை நாம கேட்குற சம்பளத்திற்கு அவங்க சம்மதிக்கணும்.

5.அந்த பேசுன சம்பளத்திற்கு நாமும் உருப்படியா வேலை பார்க்கணும். இல்லை நாம வேலை பார்த்த பிறகு அவங்க பேசின மாதிரி சம்பளம் தரனும்.
.
.
.
.
.
.
இன்னும் உள் அரசியல், பக்கத்துக்கு சீட்லே சூப்பர் பிகரு என்று பல பிரச்சினைகள் இருக்கு....

இப்போ சொல்லுங்க சும்மா இருக்கிறதே தானே நலம்.

சரி... சும்மா பதிவை படிக்க வந்த நீங்களும் சும்மா போயராதீங்க...! சும்மா மானாவாரியா நமக்கு ரெண்டு பின்னூட்டத்தை வாரி வழங்கிட்டு போங்க.

என்னது.....???? காசா ??? 'சும்மா' தான் பாசு போட சொல்றேன்.

அப்புறம் இவ்ளோ நலம் கொடுக்கிற "சும்மா இருக்கிறது" எவ்ளோ கடினம் என்பதை அடுத்த பதிவிலே, நான் சும்மா இருந்தா போடுறேன்....

23 comments:

Cable சங்கர் said...

summa nallave irukku. naina

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
summa nallave irukku. naina*/

All Praise to my seniors like u.

Raju said...

என்னா நைனா..!
நேத்து அடிச்சது தெளியலையா...!
சும்மா சொல்லக் கூடாது,,சும்மா சொலட்டி அடிச்சீட்டீங்க...

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்....... said...
என்னா நைனா..!
நேத்து அடிச்சது தெளியலையா...!
சும்மா சொல்லக் கூடாது,,சும்மா சொலட்டி அடிச்சீட்டீங்க...*/


நேத்து அடிச்சது இல்லை நண்பா....
உங்கள மாதிரி மக்களோட பாசம் தான் போதிய போதைய கொடுக்கிறதே...

Raju said...

\\நேத்து அடிச்சது இல்லை நண்பா....
உங்கள மாதிரி மக்களோட பாசம் தான் போதிய போதைய கொடுக்கிறதே...\\

அப்ப தெளிவாத்தான் இருக்கீங்களா...!

நையாண்டி நைனா said...

வருகையும் கருத்தும் கொடுத்த அண்ணன் கேபிலாருக்கும், நண்பர் டக்குளசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நையாண்டி நைனா said...

/*\\நேத்து அடிச்சது இல்லை நண்பா....
உங்கள மாதிரி மக்களோட பாசம் தான் போதிய போதைய கொடுக்கிறதே...\\

அப்ப தெளிவாத்தான் இருக்கீங்களா...!*/


நண்பா அப்படியா சொல்லி இருக்கேன்...
போதையிலே தான் நண்பா இருக்கேன்,

உங்'கள்' நெஞ்சங்'கள்' நானுலாவும் 'பிராந்தி'யம்,
உங்கள் எண்ணங்கள் என் சிந்தனையை இழுக்கும் இன்'ஜின்'கள்
உங்கள் ஆரவா'ரம்' எனக்கு ரம்.
உங்கள் முகத்திலே 'பீறி'ட்டு வழியும் ஆனந்தம் நானருந்தும் 'பீர்'.

Raju said...

\\உங்'கள்' நெஞ்சங்'கள்' நானுலாவும் 'பிராந்தி'யம்,
உங்கள் எண்ணங்கள் என் சிந்தனையை இழுக்கும் இன்'ஜின்'கள்
உங்கள் ஆரவா'ரம்' எனக்கு ரம்.
உங்கள் முகத்திலே 'பீறி'ட்டு வழியும் ஆனந்தம் நானருந்தும் 'பீர்'.\\


யாராவது என்னைய காப்பாத்துங்களேன்ன்ன்...!
இங்க நைனா ஒரு ஆளு என்னைய கொலை பண்ணுறாரு..!

நையாண்டி நைனா said...

/*யாராவது என்னைய காப்பாத்துங்களேன்ன்ன்...!
இங்க நைனா ஒரு ஆளு என்னைய கொலை பண்ணுறாரு..!*/

No crying.....

Naina paavam....

Be Cool.

கார்த்திகைப் பாண்டியன் said...

சும்மா சும்மா..
நைனா ஒருத்தர்.. சும்மா சும்மா.. பதிவப் போட்டு.. சும்மா சும்மா.. மனுஷன் கழுத்த.. சும்மா சும்மா.. ப்ளேடு போடுறார்.. சும்மா சும்மா..

அடிக்கழுத... பாட்டாவே படிச்சிட்டியா.. (சிவாஜி வாய்சில படிங்க நைனா..)

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
சும்மா சும்மா..
நைனா ஒருத்தர்.. சும்மா சும்மா.. பதிவப் போட்டு.. சும்மா சும்மா.. மனுஷன் கழுத்த.. சும்மா சும்மா.. ப்ளேடு போடுறார்.. சும்மா சும்மா..

அடிக்கழுத... பாட்டாவே படிச்சிட்டியா.. (சிவாஜி வாய்சில படிங்க நைனா..)*/

ஹலோ... இப்படி என்னை சும்மா சும்மா.. சீண்டுனா....

சும்மா வீடு கட்டி அடிப்பேன் பாத்துகோங்க....

மணிஜி said...

ஏதாவது எழுதணும் ..என்ன எழுதறது ? சரி சும்மாதானே இருக்கோம் ..சும்மா எதாவது எழுதி வைப்போம்ன்னு ஆரம்பிச்சு . அட சும்மா பத்தி எ எழுதிட்டேன் .
நாம எல்லோரும் தினம் ஒரு தடவையாவது சும்மா ங்கிற வார்த்தையை சொல்லாம பயன் படுத்தாம இருக்கோமா? சும்மா சொல்லுங்க ..
எங்க எந்த பக்கம் ? சும்மாதான் ...என்னா மச்சான் இவ்வளவு நேரம் ..எந்த ராத்திரியிலே போன்? ..சும்மாதாண்டா ...

சரி எந்த சும்மாங்க்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் பார்க்கலாம் ன்னு ஒரு தமிழ் அகராதியை தேடி பிடிச்சா ..அதுல சும்மாங்க்கிற வார்த்தையே காணும் ?
சும்மாடு அப்படினு ஒரு வார்த்தை இருக்கு ..தலையில் இருக்கும் சுமை ன்னு அதுக்கு அர்த்தம் போட்டிருக்கு ...
சரி நாமதான் வேலை வெட்டி இல்லாம சும்மா சொல்லிக்கிட்டுஇருக்கோம் பார்த்தா ..சமிபத்திலே நம்ம முதல்வர் ஒரு அறிக்கை விட்டிருந்தார் ..அதுல ஜெயலலிதான் நாட்டுல கலவரத்தை தூண்டி அந்த பழியை ஆளும் கட்சி மேல போட முயற்சி பண்றார் ன்னு சொல்லி இருந்தார். உடனே அந்த அம்மா நான் மானநட்ட வழக்கு போடுவேன் ந்தும் ..உடனே நம்ம மு.க ஹி... நான் சும்மாதான் சொன்னேன் அப்படின்னு பிளட்டே திருப்பி போட்டார் ..

நான் தஞ்சையில் பிளஸ் ஒன் படிக்கும் போது , முத முறைய பொம்பளை புள்ளைங்க கூட படிச்சேன் ..அரை டிராயர் லேந்து வேட்டிக்கு மாறின பருவம் ..பயலுங்க எல்லாம் தேன் குடிச்ச நரியா திரிஞ்சோம் ...அப்பா இங்கிலீஷ் வாத்தியார் (ஹநிப் )டேய் ,என் கிளாஸ்லே ஒரு பயலும் தப்பி தவறி கூட தமிழ்லே பேச க் கூடாது இங்கிலிஷ்லேதான் பேசனும்னு சொள்ளிட்டார் ..அதுலேந்து பயலுக ஒருத்தனும் வாயே தொறக்க மாட்டானே ..எதுக்கு பிள்ளைங்க முன்னாடி அசிங்கபட்டுக்கிட்டுனுதான் ?
ஒரு நாள் நம்ம உலக்ஸ் (உலகநாதன் )கொட்டாவி விட்டான் ..வாத்தி பாத்துட்டு ..வாட் ஆர் யூ ட்யுஇங் மேன் ?ன்னாரு ?நம்மாளு உடனே சார் நான் பாட்டுக்கு சும்மா சிவனேன்னு இருக்கேன் சார் ன்னான் .வாத்திக்கு வந்ததே கோபம் ..சும்மா ன்னா என்ன ? சிவனேன்னு நா என்னன்னு போட்டு காயடிச்சுட்டார் ..நாம ஆளு க்கு அவமானமா போச்சு ..ஏன்னா அப்பத்தான் அவன் உமா ராணியை பிக்கப்ப் பண்ணிக்கிட்டு இருந்தான் .. எப்படி ரா இவ்வளவு கன்பார்மா அவ உன்னை லவ் பண்றான்னு சொல்லறேன்னு கேட்டா ? பின்ன சும்மா என்னையே தான் பாத்துகிட்டு இருக்கா பாரேனாணன் ...

அப்புறம் ஒரு சினிமா பாட்டு சும்மா ..சும்மா ன்னு ..சும்மா இருக்கும் போதெல்லாம் சும்மா சும்மா ன்னு கேட்டு அந்த பாட்டு சூப்பர் ஹிட்டு ....

சும்மா சொல்லக் கூடாது ..சும்மா இருக்கிறதுலே ஒரு சொகம் இருக்கத்தான்யா இருக்கு ...சென்னை பாழையிலே சொம்மா கெட ...நை நை னுட்டு ..

நையாண்டி நைனா said...

அண்ணே... தண்டோரா அண்ணே,
போட்டியாவும் இருக்கு ஆதரவாவும் இருக்கு

சும்மா பிச்சு உதரிட்டீங்கண்ணே,,,

சொல்லரசன் said...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

சும்மா இருக்கிறதே நலம்.

Raju said...

யேய்.. நீங்க இன்னும் இங்கதான் இருக்கீங்களா?

Anonymous said...

சும்மா

Anonymous said...

சும்மா

நிகழ்காலத்தில்... said...

\\அனாயாசமா, ஐம்புலனையும் அடக்கி ஆளும் வல்லமை உள்ள ஒருவனாலே தான், "சும்மா" இருக்க முடியும்.\\

உண்மைதான்...

வாழ்த்துக்கள்...

நையாண்டி நைனா said...

மிக நன்றி, நண்பர் சொல்லரசன் அவர்களே.

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்....... said...
யேய்.. நீங்க இன்னும் இங்கதான் இருக்கீங்களா?*/

நண்பா உன்னிய விட்டுட்டு எங்கே நண்பா போக சொல்றே?

நையாண்டி நைனா said...

சும்மா நச்சுன்னு ரெண்டு பின்னூட்டத்தை போட்டிருக்கீங்க. நன்றி நண்பர் மகா அவர்களே.

நையாண்டி நைனா said...

/*அறிவே தெய்வம் said...
\\அனாயாசமா, ஐம்புலனையும் அடக்கி ஆளும் வல்லமை உள்ள ஒருவனாலே தான், "சும்மா" இருக்க முடியும்.\\

உண்மைதான்...

வாழ்த்துக்கள்...*/

வருகைக்கு மிக நன்றி.

Raju said...

நைனா நீங்க "பிரபல பதிவர்" ஆகிட்டீங்க..!
பாத்தீங்களா.உங்களுக்கு போட்டியா இப்ப " நகைக்கடை நைனா"ன்னு ஒருத்தரு
இறங்கிட்டாரு...!