Friday 20 February 2009

கல்யாணமான நண்பர்களை பார்த்து, கல்யாணமாகாத நண்பர்கள்...

இப்ப பத்து கேள்விகள் கேட்கும் சீசன் போல இருக்கு, அதனாலே நானும் என் பங்கு கேள்விகளை கேட்டு வச்சிறேன். இதை நான் இப்ப மிஸ் பண்ணிடேம்னா, அப்போ நாளைக்கு நான் இல்லை, யா..ரும் பீல் பண்ண கூடாது பாருங்க அதுக்கு தான்,


சரி..... கேள்விக்கு போகலாமா?


1. பால் காச்சுறது, வெந்நீர் அளவா சுட வைக்க தெரியாத நீங்கல்லாம் கல்யாணம் செய்துக்க ஆசை பட்டது ஏன்?

2. உங்க வீட்லே நடக்கிற கல்யாணம், உங்க கல்யாணம் எல்லாத்துக்கும் வந்து நாங்க வேலை பார்க்கிறோம், சரக்கடிகிறோம். ஆனா நாங்க ஒரு பார்ட்டி வைச்சு கூப்பிட்டா கரெக்டா அன்னைக்கு மட்டும் உங்க மேனேஜர் உங்களுக்கு முக்கியமான வேலை கொடுத்திடுறாரே எப்படி?

3. உங்களோட ஓல்டு பிராண்டோ, இல்லை உங்க வைப்போட ஒன்னு விட்ட சித்தப்பா வந்தால் எங்களை ஸ்டேசனுக்கு அனுப்பி ரிசீவ் பண்ண சொல்ற நீங்க உங்க மச்சினிச்சி வந்தா நீங்களே போய் ரிசீவ் பண்றீங்களே எப்படி?

4. மச்சினிச்சிக்கு காலேஜ் பீஸ் கட்டுறது, மச்சினிச்சி ரெசுயூம் பார்வர்ட் பண்றது எல்லாம் கரீட்டா மனசுலே வச்சி பண்றீங்க, ஆனா எங்க ரெசுயூம் பார்வர்ட் பண்ணவோ, ஒரு அம்பது நூறு கடன் கேட்டா, என்ன? பண்ணினாலும் உங்க மனசுலே நிக்க மாட்டேங்குதே அது ஏன்?

5. உங்க மாமியார், மாமனார் பொறந்தா நாளெல்லாம் தெரிஞ்சி வச்சிகிட்டு அர்த்த ராத்திரிலே விஷ் பண்ணுறீங்க, எங்க பொறந்த நாளெல்லாம் தெரிஞ்சிருந்தாலும் மறந்து போறீங்களே அது எப்படி?

6. மற்ற நாளெல்லாம் சும்மா இருக்க, உங்க வீடு ஷிப்ட்டு பண்ணினாலோ, இல்லை வெள்ளை அடித்தாலோ வேலை நேரத்தில் மட்டும் எங்க நியாபகம் வருதே அது எப்படி?

7. மற்ற நாளெல்லாம் நேரா வீட்டுக்கு போய் விடுகிற நீங்க, உங்க மனைவி ஊரிலே இல்லாதப்ப மட்டும் எங்க ரூமுக்கோ, மேன்சனுக்கோ வந்து தண்ணி அடிக்க வா, சீட்டாடவா என்று படுத்தி எடுக்குறீங்களே ஏன்?

8. நாங்க ஏதாவது சொல்லிட்டா 'ரட்சகன்' நாகர்ஜுன மாதிரி வருகிற நீங்க, உங்க மனைவி கிட்டே மட்டும் எந்த ரியாக்சனும் காட்டாமே 'பாட்சா' மாணிக்கம் மாதிரி கைய தலைக்கு பின்னாலே கட்டிக்கிட்டு, படுத்துகிடந்து, என்ன திட்டுனாலும் வாங்குறீங்க, அது எப்படி?

9. உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?

10. அப்புறம் எல்லாத்துக்கும் மேல, நீங்க பெரிய ஒழுக்க சீலன் மாதிரியும், நாங்க தான் கேடு கெட்ட குப்பன் மாதிரியும் உங்க மனைவிகிட்டே இமேஜ் பில்டப் கொடுக்குறீங்களே, அது ஏன்?

நான் நம்ம தரப்பு கேள்விகளை வச்சிருக்கேன், காளைகளே உங்க ஆதரவை பின்னூடத்திலே சொல்லிட்டு போங்க. அணி திரள்வீர் அண்ணன் நையாண்டியின் கரத்தை வலுப்படுத்த...

59 comments:

Anonymous said...

ஆதரவு தானே கொடுத்துட்டா போச்சு!!

Anonymous said...

//பால் காச்சுறது, வெந்நீர் அளவா சுட வைக்க தெரியாத நீங்கல்லாம் கல்யாணம் செய்துக்க ஆசை பட்டது ஏன்?//

இது எல்லாம் நான் பத்து வயசுலையே செய்வேன்!! இப்போ வரைக்கும் எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கல!! (ஒரு வேல இது எல்லாம் தெருஞ்சா கல்யாணம் ஆகாதோ??)

Anonymous said...

//உங்க வீட்லே நடக்கிற கல்யாணம், உங்க கல்யாணம் எல்லாத்துக்கும் வந்து நாங்க வேலை பார்க்கிறோம், சரக்கடிகிறோம்.//

நாம என்ன வேற எங்கயும் சரக்கு கிடைக்காமையா அங்க போறோம்?? குடுச்சா அவங்க வீட்டு விசேசத்துல தான் குடிக்கணும்னு போறது இல்ல ??

Anonymous said...

//உங்களோட ஓல்டு பிராண்டோ, இல்லை உங்க வைப்போட ஒன்னு விட்ட சித்தப்பா வந்தால் எங்களை ஸ்டேசனுக்கு அனுப்பி ரிசீவ் பண்ண சொல்ற நீங்க உங்க மச்சினிச்சி வந்தா நீங்களே போய் ரிசீவ் பண்றீங்களே எப்படி?//

ஏன்?? ஏன்?? ஏன்??

நையாண்டி நைனா said...

உடன் பிறப்பே... suttapalam-மே உனது ஆதரவை கண்டு என் இதயம் இனித்தது, கண்கள் பனித்தது.....

நையாண்டி நைனா said...

/*இது எல்லாம் நான் பத்து வயசுலையே செய்வேன்!! இப்போ வரைக்கும் எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கல!! (ஒரு வேல இது எல்லாம் தெருஞ்சா கல்யாணம் ஆகாதோ??)*/

ஆமா... அதானே....????

சரியான கேள்வி

நையாண்டி நைனா said...

/*நாம என்ன வேற எங்கயும் சரக்கு கிடைக்காமையா அங்க போறோம்?? குடுச்சா அவங்க வீட்டு விசேசத்துல தான் குடிக்கணும்னு போறது இல்ல ??*/

உண்மையை உரக்க சொல்லு, உரைக்க சொல்லு...
நண்பா...
மறுக்கா... மறுக்கா சொல்லு...

நையாண்டி நைனா said...

/*//உங்களோட ஓல்டு பிராண்டோ, இல்லை உங்க வைப்போட ஒன்னு விட்ட சித்தப்பா வந்தால் எங்களை ஸ்டேசனுக்கு அனுப்பி ரிசீவ் பண்ண சொல்ற நீங்க உங்க மச்சினிச்சி வந்தா நீங்களே போய் ரிசீவ் பண்றீங்களே எப்படி?//

ஏன்?? ஏன்?? ஏன்??*/

ஏன்? என்ற கேள்வி, கேட்காமல் இங்கு வாழ்கை இல்லை...

புருனோ Bruno said...

:) :)

//
10. அப்புறம் எல்லாத்துக்கும் மேல, நீங்க பெரிய ஒழுக்க சீலன் மாதிரியும், நாங்க தான் கேடு கெட்ட குப்பன் மாதிரியும் உங்க மனைவிகிட்டே இமேஜ் பில்டப் கொடுக்குறீங்களே, அது ஏன்?
//

ஹி ஹி ஹி

நையாண்டி நைனா said...

/* புருனோ Bruno said...
:) :)

//
10. அப்புறம் எல்லாத்துக்கும் மேல, நீங்க பெரிய ஒழுக்க சீலன் மாதிரியும், நாங்க தான் கேடு கெட்ட குப்பன் மாதிரியும் உங்க மனைவிகிட்டே இமேஜ் பில்டப் கொடுக்குறீங்களே, அது ஏன்?
//

ஹி ஹி ஹி
*/

மருத்துவர் அய்யா,
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக நன்றி,

முரளிகண்ணன் said...

super super super

Anonymous said...

//எங்க பொறந்த நாளெல்லாம் தெரிஞ்சிருந்தாலும் மறந்து போறீங்களே அது எப்படி?//

அவங்க தங்கமணி ஊர்ல இல்லைனா மூணு மாசம் முன்னாடி முடுஞ்ச நம்ம பொறந்தநாள சொல்லி ட்ரீட் வைக்க சொல்லறது!! ஏன்??

Anonymous said...

//மச்சினிச்சி ரெசுயூம் பார்வர்ட் பண்றது எல்லாம் கரீட்டா மனசுலே வச்சி பண்றீங்க//

பார்வர்ட் பண்ணுனா கூட பொறுத்துக்கலாம்.. இவங்க தான் ரெடி பண்ணறதே!! பேட் பெல்லோஸ்!!

நையாண்டி நைனா said...

/* முரளிகண்ணன் said...
super super super*/

மிக நன்றி... நண்பரே

நையாண்டி நைனா said...

/* suttapalam said...
//எங்க பொறந்த நாளெல்லாம் தெரிஞ்சிருந்தாலும் மறந்து போறீங்களே அது எப்படி?//

அவங்க தங்கமணி ஊர்ல இல்லைனா மூணு மாசம் முன்னாடி முடுஞ்ச நம்ம பொறந்தநாள சொல்லி ட்ரீட் வைக்க சொல்லறது!! ஏன்??
*/
ஆமா நண்பா,
இதை மறந்துட்டனே...

CA Venkatesh Krishnan said...

லக லக லக.....

நையாண்டி நைனா said...

/*suttapalam said...
//மச்சினிச்சி ரெசுயூம் பார்வர்ட் பண்றது எல்லாம் கரீட்டா மனசுலே வச்சி பண்றீங்க//

பார்வர்ட் பண்ணுனா கூட பொறுத்துக்கலாம்.. இவங்க தான் ரெடி பண்ணறதே!! பேட் பெல்லோஸ்!!*/

அடப்பாவிகளா...
இதெல்லாம் கூட நடக்குதா.

mvalarpirai said...

இது கேள்வி..!
எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போறாருங்கிற கதையா சில பேர் கேட்கனுமேகிறதுக்கா கேள்வி கேட்டுஇருக்காங்க...
நச்சினு இருக்கு கேள்வி எல்லாம் ..

எங்க தலைவர் மேல கைவச்சிட்டு sorry கேள்விக்கு பதில் சொல்லிட்டு ..அப்புறம் போங்க !

-உண்மை தொண்டன் :)

நையாண்டி நைனா said...

/*இளைய பல்லவன் said...
லக லக லக.....*/

அய்யா... நண்பரே நல்லா தானே வந்திங்க நம்ம கடைக்கு வர்றப்ப...
இந்த பத்து கேள்விக்கே இப்படி ஆகிடீங்களே?

வருகைக்கு மிக நன்றி

நையாண்டி நைனா said...

/*mvalarpirai said...
இது கேள்வி..!
எங்க வீட்டுகாரரும் கச்சேரிக்கு போறாருங்கிற கதையா சில பேர் கேட்கனுமேகிறதுக்கா கேள்வி கேட்டுஇருக்காங்க...
நச்சினு இருக்கு கேள்வி எல்லாம் ..

எங்க தலைவர் மேல கைவச்சிட்டு sorry கேள்விக்கு பதில் சொல்லிட்டு ..அப்புறம் போங்க !

-உண்மை தொண்டன் :)*/

வருகைக்கு மிக, மிக, மிக நன்றி....

அப்புறம் ஒன்னு..
இதுலே உள்குத்து, புறகுத்து, நடுக்குத்து, சைடுகுத்து உச்சிகுத்து, அடிக்குத்து என்று எதுவும் இல்லையே?

ஷாஜி said...

//மற்ற நாளெல்லாம் நேரா வீட்டுக்கு போய் விடுகிற நீங்க, உங்க மனைவி ஊரிலே இல்லாதப்ப மட்டும் எங்க ரூமுக்கோ, மேன்சனுக்கோ வந்து தண்ணி அடிக்க வா, சீட்டாடவா என்று படுத்தி எடுக்குறீங்களே ஏன்?//

---இதுக்கு பதில் கல்யானம் பண்ணதும் உனக்கு(உங்களுக்கு) தானா புரியும் பாசு...

நையாண்டி நைனா said...

/*ஷாஜி said...
//மற்ற நாளெல்லாம் நேரா வீட்டுக்கு போய் விடுகிற நீங்க, உங்க மனைவி ஊரிலே இல்லாதப்ப மட்டும் எங்க ரூமுக்கோ, மேன்சனுக்கோ வந்து தண்ணி அடிக்க வா, சீட்டாடவா என்று படுத்தி எடுக்குறீங்களே ஏன்?//

---இதுக்கு பதில் கல்யானம் பண்ணதும் உனக்கு(உங்களுக்கு) தானா புரியும் பாசு...*/

வருகைக்கு மிக்க நன்றி... நண்பரே
(ஒருமையில் விளித்தாலும், தவறொன்றுமில்லை அன்பரே)

Thamira said...

சிறப்பாக இருந்தது.. அந்த ரெண்டாவது கேள்வியில் நீங்கள் மானேஜர் என்று குறிப்பிடுவது தங்கமணியைத்தான் இல்லையா?

Super.!

Thamira said...

9. உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

எவ்ளோ சொன்னாலும் இப்பிடித்தான் கேனை மாதிரி எதிர் கேள்வி கேப்பானுங்க..

வால்பையன் said...

// பால் காச்சுறது, வெந்நீர் அளவா சுட வைக்க தெரியாத நீங்கல்லாம் கல்யாணம் செய்துக்க ஆசை பட்டது ஏன்?//

கல்யாணம் பண்ணீட்டு கத்துகலாம்னு ஒரு குருட்டு தைகிரியம் தான்

வால்பையன் said...

//ஆனா நாங்க ஒரு பார்ட்டி வைச்சு கூப்பிட்டா கரெக்டா அன்னைக்கு மட்டும் உங்க மேனேஜர் உங்களுக்கு முக்கியமான வேலை கொடுத்திடுறாரே எப்படி?//

உங்களுக்கு செலவு வைக்க வேணாம்னு தான்.

நீங்க தங்கமணிகிட்ட அடி வாங்காம இருக்கன்னு நினைச்சிங்களா
அய்யோ, அய்யோ!

வால்பையன் said...

//உங்க வைப்போட ஒன்னு விட்ட சித்தப்பா வந்தால் எங்களை ஸ்டேசனுக்கு அனுப்பி ரிசீவ் பண்ண சொல்ற நீங்க உங்க மச்சினிச்சி வந்தா நீங்களே போய் ரிசீவ் பண்றீங்களே எப்படி?//

அவ எதாவது சொக்கு பொடி போட்டு உன்னையும் மயக்கிறுவா மாப்பு.
அப்புறம் உனக்கு இருக்கு ஆப்பு.

வால்பையன் said...

//மச்சினிச்சிக்கு காலேஜ் பீஸ் கட்டுறது, மச்சினிச்சி ரெசுயூம் பார்வர்ட் பண்றது எல்லாம் கரீட்டா மனசுலே வச்சி பண்றீங்க, ஆனா எங்க ரெசுயூம் பார்வர்ட் பண்ணவோ, ஒரு அம்பது நூறு கடன் கேட்டா, என்ன? பண்ணினாலும் உங்க மனசுலே நிக்க மாட்டேங்குதே அது ஏன்?//

இதுக்கு இருபக்க அடி உண்டு
தங்ஸ் & சின்னதங்ஸ்

ஆனா நீ ஒருவாட்டி சொல்லிட்டு மறந்துடுவயே

வால்பையன் said...

//உங்க மாமியார், மாமனார் பொறந்தா நாளெல்லாம் தெரிஞ்சி வச்சிகிட்டு அர்த்த ராத்திரிலே விஷ் பண்ணுறீங்க, எங்க பொறந்த நாளெல்லாம் தெரிஞ்சிருந்தாலும் மறந்து போறீங்களே அது எப்படி?//

மாச கடைசி பட்ஜெட்ல துண்டு விழுகும் போது உங்கிட்ட கேட்க முடியுமா?
நீயே இங்க தான் வந்து நிப்ப

மாமனார் ஒரு பைனான்ஸ் ஹெல்ப்பரப்பா

வால்பையன் said...

// உங்க வீடு ஷிப்ட்டு பண்ணினாலோ, இல்லை வெள்ளை அடித்தாலோ வேலை நேரத்தில் மட்டும் எங்க நியாபகம் வருதே அது எப்படி?//

கல்யாணம் பண்ணால் என்ன கதின்னு ஞாபகபடுத்தத்தான்

வால்பையன் said...

//மற்ற நாளெல்லாம் நேரா வீட்டுக்கு போய் விடுகிற நீங்க, உங்க மனைவி ஊரிலே இல்லாதப்ப மட்டும் எங்க ரூமுக்கோ, மேன்சனுக்கோ வந்து தண்ணி அடிக்க வா, சீட்டாடவா என்று படுத்தி எடுக்குறீங்களே ஏன்?//

என்ன கொலைவெறி,
ஒரு மனுசன் சந்தோச இருக்குறது உங்களுக்கு ஏன் பிடிக்கலை

வால்பையன் said...

//நாங்க ஏதாவது சொல்லிட்டா 'ரட்சகன்' நாகர்ஜுன மாதிரி வருகிற நீங்க, உங்க மனைவி கிட்டே மட்டும் எந்த ரியாக்சனும் காட்டாமே 'பாட்சா' மாணிக்கம் மாதிரி கைய தலைக்கு பின்னாலே கட்டிக்கிட்டு, படுத்துகிடந்து, என்ன திட்டுனாலும் வாங்குறீங்க, அது எப்படி?//

அது மனைவி பேசினா மட்டும் காது கேக்காத மாதிரி ஒரு மந்திரம் இருக்கு,
அது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆபாச ஸ்வாமிகள் தாமிரானந்தா கிட்ட கேட்டா சொல்லுவாரு

வால்பையன் said...

//உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

உங்க மேல உள்ள பாசத்தால தான்

வால்பையன் said...

//அப்புறம் எல்லாத்துக்கும் மேல, நீங்க பெரிய ஒழுக்க சீலன் மாதிரியும், நாங்க தான் கேடு கெட்ட குப்பன் மாதிரியும் உங்க மனைவிகிட்டே இமேஜ் பில்டப் கொடுக்குறீங்களே, அது ஏன்?//

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை,
இல்லைனா “உங்க ஃப்ரெண்டும் தான் இருக்காரு” நீங்களும் இருக்கிங்களேன்னு ஆரம்பிச்சா நமக்கு தலைகுள்ள எல்லா ரயிலும் ஓடும்.

மங்களூர் சிவா said...

சிறப்பாக இருந்தது.. அந்த ரெண்டாவது கேள்வியில் நீங்கள் மானேஜர் என்று குறிப்பிடுவது தங்கமணியைத்தான் இல்லையா?

Super.!

மங்களூர் சிவா said...

9. உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

எவ்ளோ சொன்னாலும் இப்பிடித்தான் கேனை மாதிரி எதிர் கேள்வி கேப்பானுங்க..

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

// உங்க வீடு ஷிப்ட்டு பண்ணினாலோ, இல்லை வெள்ளை அடித்தாலோ வேலை நேரத்தில் மட்டும் எங்க நியாபகம் வருதே அது எப்படி?//

கல்யாணம் பண்ணால் என்ன கதின்னு ஞாபகபடுத்தத்தான்
/
:)))

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

//நாங்க ஏதாவது சொல்லிட்டா 'ரட்சகன்' நாகர்ஜுன மாதிரி வருகிற நீங்க, உங்க மனைவி கிட்டே மட்டும் எந்த ரியாக்சனும் காட்டாமே 'பாட்சா' மாணிக்கம் மாதிரி கைய தலைக்கு பின்னாலே கட்டிக்கிட்டு, படுத்துகிடந்து, என்ன திட்டுனாலும் வாங்குறீங்க, அது எப்படி?//

அது மனைவி பேசினா மட்டும் காது கேக்காத மாதிரி ஒரு மந்திரம் இருக்கு,
அது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆபாச ஸ்வாமிகள் தாமிரானந்தா கிட்ட கேட்டா சொல்லுவாரு
/

ரிப்பீட்ட்ட்டே!

www.narsim.in said...

6ம் 7ம் அலப்பரயா இருக்கு தல.. மற்றவை உங்க பிராண்டு நைனா.. கலக்கல் கேள்விகள்..

ரமேஷ் வைத்யா said...

கல கல கல‌

கூட்ஸ் வண்டி said...
This comment has been removed by the author.
கூட்ஸ் வண்டி said...

//நாங்க ஏதாவது சொல்லிட்டா 'ரட்சகன்' நாகர்ஜுன மாதிரி வருகிற நீங்க, உங்க மனைவி கிட்டே மட்டும் எந்த ரியாக்சனும் காட்டாமே 'பாட்சா' மாணிக்கம் மாதிரி கைய தலைக்கு பின்னாலே கட்டிக்கிட்டு, படுத்துகிடந்து, என்ன திட்டுனாலும் வாங்குறீங்க, அது எப்படி?//

கீப் த கம்பனி சீக்ரட்ஸ்.

கோவி.கண்ணன் said...

10/10 மதிப்பெண்கள் !

9 ஆவது அட்வைஸ் தான் சொல்ல விரும்புகிறேன்.

:)

சொல்லரசன் said...

// உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

நாங்கள் படும் இன்னல் எதிரிக்கும் வரகூடாது என்பதால்

நையாண்டி நைனா said...

/* தாமிரா said...
சிறப்பாக இருந்தது.. அந்த ரெண்டாவது கேள்வியில் நீங்கள் மானேஜர் என்று குறிப்பிடுவது தங்கமணியைத்தான் இல்லையா?

Super.!*/

பாசு உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது...

கரெக்டா புரிஞ்சிகிட்டீங்களே....

நையாண்டி நைனா said...

/*தாமிரா said...
9. உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

எவ்ளோ சொன்னாலும் இப்பிடித்தான் கேனை மாதிரி எதிர் கேள்வி கேப்பானுங்க..*/

நண்பரே.... நீங்களும் எங்க கிட்டே மட்டும் தான் கேட்க முடியும். நாங்களும் உங்க கிட்டே மட்டும்தான் கேட்க முடியும். இது தெரிஞ்சுமா இப்படி...?
ஓ.... உரிமையா திட்டுறீங்க... திட்டுங்க... திட்டுங்க.

நையாண்டி நைனா said...

நண்பர் வால்பையன் அவர்களே....
அருமையான பதில்கள்.

வருகைக்கும் மற்றும் தங்களின் மேலான பதில்களுக்கும் நன்றி.

நையாண்டி நைனா said...

ஐயா மங்களூரு...,
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, வருக.. வருக நன்றி.

நையாண்டி நைனா said...

/*narsim said...
6ம் 7ம் அலப்பரயா இருக்கு தல.. மற்றவை உங்க பிராண்டு நைனா.. கலக்கல் கேள்விகள்..*/

பாராட்டிற்கு நன்றி. அண்ணா.

நையாண்டி நைனா said...

/*ரமேஷ் வைத்யா said...
கல கல கல‌*/

வருகைக்கு நன்றி சாமியோ...

நையாண்டி நைனா said...

/*கூட்ஸ் வண்டி said...
//நாங்க ஏதாவது சொல்லிட்டா 'ரட்சகன்' நாகர்ஜுன மாதிரி வருகிற நீங்க, உங்க மனைவி கிட்டே மட்டும் எந்த ரியாக்சனும் காட்டாமே 'பாட்சா' மாணிக்கம் மாதிரி கைய தலைக்கு பின்னாலே கட்டிக்கிட்டு, படுத்துகிடந்து, என்ன திட்டுனாலும் வாங்குறீங்க, அது எப்படி?//

கீப் த கம்பனி சீக்ரட்ஸ்.*/

வருகைக்கு நன்றி கூட்ஸ் வண்டி அன்பரே.

நையாண்டி நைனா said...

/*கோவி.கண்ணன் said...
10/10 மதிப்பெண்கள் !

9 ஆவது அட்வைஸ் தான் சொல்ல விரும்புகிறேன்.

:)*/

அண்ணா, வருகைக்கும் அட்வைசுக்கும் மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
// உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

நாங்கள் படும் இன்னல் எதிரிக்கும் வரகூடாது என்பதால்*/

வருகைக்கு நன்றி சொல்லரசன் சாமி.

ஸ்ரீதர்கண்ணன் said...

9. உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

எவ்ளோ சொன்னாலும் இப்பிடித்தான் கேனை மாதிரி எதிர் கேள்வி கேப்பானுங்க..

:)))))))))))

ஸ்ரீதர்கண்ணன் said...

10. அப்புறம் எல்லாத்துக்கும் மேல, நீங்க பெரிய ஒழுக்க சீலன் மாதிரியும், நாங்க தான் கேடு கெட்ட குப்பன் மாதிரியும் உங்க மனைவிகிட்டே இமேஜ் பில்டப் கொடுக்குறீங்களே, அது ஏன்?

Super :)

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீதர்கண்ணன் said...
9. உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?//

எவ்ளோ சொன்னாலும் இப்பிடித்தான் கேனை மாதிரி எதிர் கேள்வி கேப்பானுங்க..

:)))))))))))*/

நம்மளைன்ன அவர்கள் எவ்வளவு உரிமையா, தைரியமா சொல்றாங்க பாருங்க.

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீதர்கண்ணன் said...
10. அப்புறம் எல்லாத்துக்கும் மேல, நீங்க பெரிய ஒழுக்க சீலன் மாதிரியும், நாங்க தான் கேடு கெட்ட குப்பன் மாதிரியும் உங்க மனைவிகிட்டே இமேஜ் பில்டப் கொடுக்குறீங்களே, அது ஏன்?

Super :)*/

வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி அன்பரே.

Mohan said...

இப்பதான் உங்க வலைப் பக்கம் வருகிறேன்! வலைப் பக்க தலைப்புக்கு தகுந்த மாதிரியே ரொம்ப நையாண்டியாதான் எழுதறீங்க! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பதிவு!

நையாண்டி நைனா said...

/*Mohan said...
இப்பதான் உங்க வலைப் பக்கம் வருகிறேன்! வலைப் பக்க தலைப்புக்கு தகுந்த மாதிரியே ரொம்ப நையாண்டியாதான் எழுதறீங்க! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பதிவு!*/
முதல் வருகை, வணக்கம்.
கருத்துக்கு மிக நன்றி.