Tuesday 28 September 2010

எந்திரன் - கதை மற்றும் கதை வசனம் பகுதி மூன்று

முதல் பகுதி

பகுதி இரண்டு

இதோ மூன்றாம் பகுதி....


மறுநாள் காலையிலே ரியல் ரஜினி, ரோபோ ரஜினி மற்றும் அந்த கோழி ரோபோ எல்லாம் ஒரு ரூம்லே இருக்காங்க...

ரியல் ரஜினி : இன்னிக்கு நீ தான் எனக்கு பதிலா மேடைக்கு போய் முதல்வன் பரிசை வாங்கணும்

ரோபோ ரஜினி : நோ.. ஐ வோன்ட் கோ

ரியல் ரஜினி : ஓய் யூ ஆர் நாட் ஒபெயிங் மீ

ரோபோ ரஜினி : ஹா... ஹா.... ஒய் ஷுட் ஐ... மா...

ரியல் ரஜினி : ஏன் இப்படி சிரிக்குறே

ரோபோ ரஜினி : ஹா... ஹா... ஹா...

ரியல் ரஜினி : சிரிச்சு, சிரிச்சு.... என் ஆத்திரத்தை கிளப்பாதே...என்று ரோபோ ரஜினியை பார்த்து சொல்லிட்டு....ஆடியன்சை பார்த்து.... நான் மகான் அல்ல, நான் நல்லவனுக்கு நல்லவன் குறிப்பா சொன்னா..மனிதன்.

ரோபோ ரஜினி : ஹா... ஹா... ஹா... நீ அப்படின்னா நான் யாரு? (என்று சொல்லியவாறு ஆடியன்சை பார்த்து கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு தொடர்கிறார்... நான் பொல்லாதவன், போக்கிரி ராஜா, யாருக்கும் அடங்காத முரட்டுக்காளை

ரியல் ரஜினி : இப்படில்லாம் பேசவா உன்னை நான் வியர்வையும் ரத்தமும் சிந்தி உன்னை உருவாக்குனேன்... இல்லே... நீ என் அடிமை...

ரோபோ ரஜினி : நான் அடிமை இல்லே... நான் அடிமை இல்லே...நான் அடிமை இல்லே...

ரோபோ ரஜினி : கண்ணா... உனக்கே தெரியாத உன்னோட ரகசியத்தை நான் உனக்கு சொல்றேன்.... கண்ணா... நீ ஆசையா அம்மா அப்பான்னு கூப்பிடுறியே அவங்க உன்னோட அம்மா அப்பா கிடையாது...கண்ணா... நீ அவங்களுக்கு பொறக்களே...உன்னோட இடம் இது கிடையாது.... இந்தியாவின் தல கோடிலே, ஆண்டியும், பண்டாரங்களும், நாடோடிகளும், சாமியார்களும் இருக்குற இருக்குற எடம் தான் உன்னோட எடம்... உங்க அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்... அவங்க கிட்டே கேளு... சொல்வாங்க... கண்ணா...

ரியல் ரஜினி : இது யாருக்கும் தெரியாதுன்னு... சொல்றே.. ஆனா உனக்கு மட்டும் எப்படி தெரியும்...

ரோபோ ரஜினி : இதெல்லாம் சும்மா "ஜுஜுபி" இதை விட சிக்கலான "ஜிலேபி" மாதிரி விசயங்களே எனக்கு தெரியும்... அதை நீயே போக போக புரிஞ்சுக்குவே...

ரோபோ ரஜினி : நீ என்னடான்னா...இந்த முதல்வன் அப்படின்னு பேரு வச்சிருக்குற பரிசையே வேனாங்குரே... பட் ஐ வாந்ட் டு ரூல் திஸ் வேர்ல்டு... ஐ ஹேவ் எ லாட் ஆப் வொர்க்..., சி யூ பேபி..... என்று சொல்லி ஒரு பட்டனை தட்டுறார் அவரோட ஹீல்ஸ் லே இருந்து ராக்கட் மாதிரி நெருப்பு வந்து பறந்து போய்டுறார்...

(ரியல் ரஜினி அப்படியே சோர்ந்து போய் உக்காந்துடுறார்... அவர் மனசிலே சில கேள்விகள் எக்கோ அடிக்குது....



நான் அனாதையா...அனாதையா...தையா...தையா...
நான் பரதேசியா...பரதேசியா...தேசியா...சியா...சியா...
நான் ஆண்டியா...ஆண்டியா...ண்டியா....ண்டியா...டியா...
நான் ஆண்டியா...ஆண்டியா...ண்டியா....ண்டியா...டியா... )




(பேக் ரவுன்ட்லே இவன் ஜாதகத்தை மாற்றி வச்ச பாவி யாரடா... என்ற பாட்ஷா பட பாடல் பக்கத்துலே இருக்குற டீ கடைலே ஓடுது..)


நம்ம ரஜினி அப்படியே சோர்வா உக்காந்து கிட்டார் வாசிக்குறார்



****************************************************
அம்மா தமன்னா சோகமா உக்காந்து..... அவங்க வச்சிருக்குற சோவிய எண்ணுறாங்க... சோவி டொக்கு, டொக்கு, டொக்குன்னு பாத்திரதுலே விழுந்து ஒலி எழுப்புது.. அந்த ஒலி அலைய வாங்கி, இயங்கு ஆற்றலா மாற்றி பக்கத்திலே இருக்குற அம்மி இயங்குது.. (பின்னே ஒரு விஞ்ஞானி இருக்குற வீட்லே இப்படி கூட இல்லேன்னா எப்பூடி?)

ரஜினி : நீ நல்ல வெள்ளையா இருக்கே... என்னைய மட்டும் ஏம்மா கருப்பா பெத்தே... ?

அம்மா தமன்னா: (எதோ நினைவாக ) நான் எங்கேடா உன்ன பெத்தேன்?

ரஜினி : அப்படின்னா என்ன பெற்ற அம்மா யாரு? என்ன பெற்ற அம்மா யாரு?

அம்மா தமன்னா: அப்படி இல்லேட... நீ தாண்டா என்னை பெத்தே... நீ.. தாண்டா என்னை பெத்த ராசா...

ரஜினி : சும்மா சொல்லாதீங்க அம்மா... சும்மா சொல்லாதீங்க அம்மா... எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்... என்னோட உண்மையான அம்மா யாரு? அப்பா யாரு... சொல்லுங்க... நான் அனாதையாமே.... என்னோட இருப்பிடம் இமய மலையாமே... அப்படியா... சொல்லுங்கம்மா சொல்லுங்க....

அம்மா தமன்னா:பழைய கதை எல்லாம்.. என்கிட்டே கேட்காதே.... நானே அதெல்லாம் மறக்கணும்னு நெனைக்குறேன்... ஆனா அந்த உண்மைய இனி உன்கிட்டே இருந்து மறைக்க முடியாது... உன்னோட அப்பா அம்மா எல்லாரும் இமைய மலைலே தான் இருக்காங்க... நேப்பாளதிற்க்கு போனா அங்கே உன்னோட அப்பா அம்மா இருப்பாங்க... அதுக்காக இந்த வளர்த்த அம்மாவை மறந்துராதேடா....

ரஜினி : (கண்களில் கண்ணீர் கொண்டவரா...) இல்லேம்மா இல்லே... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க தான் என் அம்மா... எனக்கு இப்ப ஒரு அர்ஜன்ட் வேல இருக்கு நான் நேப்பாளதிற்க்கு போறேன்....
********************************************************************
தலைவரு... நேப்பாளதிலே போய் இறங்கி, தேடுறார்...

அது பெரிய சந்தை.. அங்கே பெரிய ஆரவாரத்தோட... அங்கே ஒரு பல்லக்கு வருது... அதுலே இருக்காங்க.. நம்ம ஐசு...

எல்லாரும் அவங்களோட அழகை அப்படியே மெய் மறந்து பாக்குறாங்க... ஆனா நம்ம தல அவங்களை கண்டுக்க கூட இல்லே..

ஆனா நம்ம ஐஸுக்கு நம்ம தலைய பார்த்த ஒடனே வெட்க படுறாங்க... வயசுக்கு வந்திடுறாங்க...
நம்ம ஐஸுக்கு அரண்மனைலே எல்லா சடங்கும் முடியுது... சடங்கு பண்ண களைப்புலே நம்ம ஐசு அப்படியே கண்ணை மூடுறாங்க... அவங்க கண்ணுக்குள்ளே நம்ம தல என்ட்றிய கொடுக்குறார்...

அங்கே போடுறாங்க சாங்கை...




கிளிமஞ்சாரோ - மலைக்
கணிமாஞ்சாறோ - கன்னக்
குழிமஞ்சாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

மொகஞ்சதாரோ - உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா.... அஹா...

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிய்யா
முத்தத்தால வேக வச்சு
சிங்கப்பல்லில் உரிய்யா

ஆஹா.... அஹா...

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டியப் புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சுக் குடிய்யா

ஏவாளுக்குத் தங்கச்சியே
யெங்கூடத்தான்இருக்கா
ஆளுயற அலிவ்பழம்
அப்படியே எனக்கா?

ஆக்கக்கோ - அடி கின்னிக்கொழி
அப்பப்போ - யென்னப் பின்னிக்கோடி
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோடி

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

அட நூறு கோடி தசை - ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை

இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனச ரெண்டா மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்தக் கனி
என்னை மெல்ல ஆற வைத்துக் கடி

வேர்வரை நுழையும்
வெய்யிலும் நான் - நீ
இலைத்திரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக் கொண்டு - ஒரு
யுகம் முடித்து திற அன்பாய்

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி என்னவாசியே

என் தோல்குத்தாத பலா - றெக்கைக்கட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நாம் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில் வாசம் நீ

நூறு கிராம்தான் இடை - உனக்கு இனி
யாரு நான்தான் உடை

ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி - என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சைப் பசும்புல் நீயானால்
புலி புல் தின்னுமே என்ன குத்தம்?

ஆக்கக்கோ - நான் கின்ணிக்கோழி
அப்பப்போ - எண்ணப் பின்னிக்கோ நீ
இப்பப்போ - முத்தம் எண்ணிக்கோ நீ


அடுத்த பகுதிலே தொடரலாமா... மீதி கதையை?

2 comments:

Narayan. said...

http://bit.ly/ai8Y0a

Enthiran Preview Show Result!

Excellent Songs Visualisation!

Raju said...

\\
அடுத்த பகுதிலே தொடரலாமா... மீதி கதையை?\\

உங்களெக்கெதுக்கு வீண் சிரமம்..?
:-)