Friday 9 October 2009

குடிகாரர்களின் உலகில்..!!!


வழக்கம் போலே உள்ள அறிவிப்பு: இது அண்ணன். கார்த்திகை பாண்டியன் கவுஜைக்கு எதிர் அல்ல.




ஏழு கடையும் நாலு சந்தும் தாண்டி
மாயமாய் மறைந்து கிடக்கும் டாஸ்மாக்கில்
வானம் தொட்டு உயர்ந்து நிற்கும்
வேப்பமரத்தின் அடியில் உருண்டு கிடக்கிறது
குடிகாரனின் உயிரைத் தாங்கி நிற்கும்
மரகத வீணை...

குப்பைச்சிறுவன் அதனைத் தேடி எடுத்து
பத்திரபடுத்த யத்தனித்தபோது..

எங்கிருந்தோ வந்த ஏட்டின் குரல் கேட்டு
சிலர் காணாமல் போக..

அசதியில் தூங்கி போகிறான் காவலாளி..!!
இருந்தும் -

எப்போது கடை மீண்டும் திறக்கப்படுகிறதோ
அப்போது தான் சரக்கு கிட்டும்
என்பதை அறியாதவனாக
சந்தின் இருட்டு இடுக்குகளில்
தீராத போதை கொண்டவனாக
உருண்டு கொண்டே கிடக்கிறான் "குடிகாரன்"..!!!


==============================================================




திசைக்கொன்றாய் சிதறிக் கிடந்த
கடலைகளை பொருக்கி
கர்ம சிரத்தையாய் சரகொன்றை
அடித்து கொண்டிருந்தார் தந்தை

"அப்பா!, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.."
பையனின் குரல் கேட்டவுடன்
குற்றம் கொண்டவனாய் நொடிந்து
அதிர்ச்சியுடன் கோப்பையை நீட்டினான்..
பிரவுன் நிற திரவமொன்று
குடித்து முற்றுப்பெறாமல்
ஒழிக்க முடியாத நிலையில்
கோப்பையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..

"ரம்மு ரொம்ப நல்லா இருக்கும்பா....."
பையன் சொல்ல,
தந்தையின் முகம்
வாடிப் போனது..
"ஐயோ.. டேய்.... அது ரம்மு இல்லை.. பெப்சி.."
மீண்டும் அவன் சொன்னான்..
"இல்லெப்பா.. இது ரம்மு தான்.."
கோபம் கொண்டவனாய்
வெடுக்கென கோப்பையைப்
பறித்துக் கொண்டு சொன்னான்..
"நீ குடிக்குறது என்னன்னு, மீதி வைத்த
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!


34 comments:

Anonymous said...

நல்லா இருக்கு. ஒரு ஓட்டும் போட்டாச்சு.

ஹேமா said...

என்னத்தைச் சொல்ல....!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கிக்கு

வால்பையன் said...

அவருகுள்ள தூங்கிட்டு இருக்குற மிருகம் உங்களுகுள்ள முழிச்சிகிட்டு இருக்கு தல!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர் தலை... :)

VISA said...

ada!!!!!

தராசு said...

எல்லாருக்கும் புரியற மாதிரி தமிழ்ல எஷுத வேண்டியது தான தல

அரங்கப்பெருமாள் said...

சூப்பர் கலக்குறீங்க சாமி.... அருமைய்யா..அருமை.

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல கலக்கல்தான் நண்பா,... பாராட்டுகள்

மணிஜி said...

நக்கலிஸ்ட் நைனா
எதிர்கவுஜ ஸ்பெஷலிஸ்ட்

Anonymous said...

சூப்பர்

முரளிகண்ணன் said...

:-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

மவராசா..நீங்க நல்லா இருக்கணும்.. நடத்துங்க..:-)))

ஷாகுல் said...

not nice one
not nice two
nice three

லக லக லக......
Super

துபாய் ராஜா said...

ஒண்ணாம் 'கிளாஸ்' நைனா.... :))

தேவன் மாயம் said...

நல்ல நாட்டுச்சரக்கு! நச்சுன்னு இருக்கு!!

வெண்ணிற இரவுகள்....! said...

//"இல்லெப்பா.. இது ரம்மு தான்.."
கோபம் கொண்டவனாய்
வெடுக்கென கோப்பையைப்
பறித்துக் கொண்டு சொன்னான்..
"நீ குடிக்குறது என்னன்னு, மீதி வைத்த
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!
//
நகைச்சுவையுடன் ஒரு கவிதை புதிதாக இருக்கிறது

நையாண்டி நைனா said...

/*வடகரை வேலன் said...
நல்லா இருக்கு. ஒரு ஓட்டும் போட்டாச்சு.*/

நன்றி அண்ணாச்சி...நன்றி அண்ணாச்சி...அடிக்கடி வாங்க..

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
என்னத்தைச் சொல்ல....!*/

உங்களுக்கு தோணுறதை சொல்லுங்க...

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல கிக்கு*/

அப்படியா... நன்றி.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
அவருகுள்ள தூங்கிட்டு இருக்குற மிருகம் உங்களுகுள்ள முழிச்சிகிட்டு இருக்கு தல!*/

அதே மிருகம் உங்க உள்ளே.. குதிச்சிகிட்டு இருக்கு...

நையாண்டி நைனா said...

/* Achilles/அக்கிலீஸ் said...
சூப்பர் தலை... :)*/

நன்றி தல

நையாண்டி நைனா said...

/* VISA said...
ada!!!!!*/

Thanks.

நையாண்டி நைனா said...

/* தராசு said...
எல்லாருக்கும் புரியற மாதிரி தமிழ்ல எஷுத வேண்டியது தான தல*/

என்னா பண்றது...!!!! சரக்குன்னாலே... இங்கிலிபீசு தான் வருது...

நையாண்டி நைனா said...

/*அரங்கப்பெருமாள் said...
சூப்பர் கலக்குறீங்க சாமி.... அருமைய்யா..அருமை.*/

ஐயா.. நன்றி ஐயா...

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
வழக்கம் போல கலக்கல்தான் நண்பா,... பாராட்டுகள்*/

வழக்கம் போலே நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
நக்கலிஸ்ட் நைனா
எதிர்கவுஜ ஸ்பெஷலிஸ்ட்*/

நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/*சின்ன அம்மிணி said...
சூப்பர்*/

தேங்க்ஸ்.

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
:-))))*/
Thank you dear friend.
:-))))))))))))

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
மவராசா..நீங்க நல்லா இருக்கணும்.. நடத்துங்க..:-)))*/

அப்படி வாழ்த்துங்க தலே

நையாண்டி நைனா said...

/*ஷாகுல் said...
not nice one
not nice two
nice three

லக லக லக......
Super*/

Thank You Mr.Nanba.

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
ஒண்ணாம் 'கிளாஸ்' நைனா.... :))*/
துபாய் ராசாவே சொல்லிட்டாரு...

நையாண்டி நைனா said...

/*தேவன் மாயம் said...
நல்ல நாட்டுச்சரக்கு! நச்சுன்னு இருக்கு!!*/

பார்த்து அடிங்க அண்ணே.

நையாண்டி நைனா said...

வெண்ணிற இரவுகள்....! said...
//"இல்லெப்பா.. இது ரம்மு தான்.."
கோபம் கொண்டவனாய்
வெடுக்கென கோப்பையைப்
பறித்துக் கொண்டு சொன்னான்..
"நீ குடிக்குறது என்னன்னு, மீதி வைத்த
எனக்கு மட்டும்தான் தெரியும்.."!!!
//
நகைச்சுவையுடன் ஒரு கவிதை புதிதாக இருக்கிறது

முதல் வருகை மட்டும் ஆதரவிற்கு நன்றி. அப்புறம் நீங்க தான் நூறாவது பாலோயர். நன்றி நன்றி மிக நன்றி