Sunday 15 September 2013

நைனாவும் சலூனும்...

உங்கள் அன்பன் நைனா மரியாதைக்குரிய விஞ்ஞானி....(அட இங்க பார்ரா தமிழ... என்னைய கூட விஞ்ஞானின்னு அர்த்தம் வார மாதிரி சொல்லுது சும்மா சொல்லி பார்த்தேன்....) சரி கதைக்கு வருவோம்... மரியாதைக்குரிய விஞ்ஞானி அப்துல் கலாம் மாதிரி முடிய வளர்த்து, ஆ! 'கலாம்' ஆகலாம்னு.. கனா கண்டுகிட்டுக்கு முடிய வளர்த்துகிட்டு

 "ஏன்மா என்னோட கேர் ஸ்டைல் எப்படி இருக்கு...?" "கேறு இருக்கு... ஸ்டைல் எங்கே?"

"சரி சரி.. ரொம்ப வாராத இருக்குற ஸ்டைலை சொல்லு..."

"எனக்கு... உங்களை மாதிரி டக்குன்னு பொய் சொல்ல வராதுங்க..." (என்னாது வராதா!!!

(வெறுமாவை வச்சிபுட்டு குருமான்னு சொல்லுவியே அதெல்லாம் எதுலம்மா சேர்த்தி... ன்னு மனசுக்குள்ளே நெனச்சிட்டே)
"சரி யோசிச்சாது சொல்லேன் ஒரு பொய்யி..."

"பொய்யி ஏங்க... உண்மையே சொல்றேன்.... எங்க வீட்டுக்கு போனா எங்கப்பா ஆடு வாங்குற செலவு மிச்சம்.."

(அடியேய் ...ஒரு உசுர எத்தனை வாட்டிடி பலி கொடுப்பீங்கன்னு வாய் வரை வந்துச்சி... அடுத்துவார சாப்பாட்டு நேரம் எம் மனசுலே வந்து மறைஞ்சதாலே..)
"ஹி..ஹி... ஹி... அவ்ளோ இளங்குட்டியா தெரியறேனா... ஹி..ஹி.. ஹி"

"அது எப்படிங்க..!!! எவ்ளோ கேவலபடுத்துனாலும்.. பாசிட்டிவா சொல்லி சிரிக்கிறீங்க"

"ஹும்... நீயும் ஒரு கார்பொரேட் கம்பனிலே வேலை செஞ்சி பாரு... பழகிரும்.. இப்ப என்ன தான் செய்யலாங்கிறே???"

"போயி முடிய வெட்டி மனுசனா வாங்க..."

(டேய் அறிவுகெட்ட நைனா... இதுக்கு மேலேயும் வம்பை வளர்க்காதே... அப்புறம் அசிங்கமா போயிரும் ... யாருக்கு? யாருக்கோ????ன்னு..நெனச்சிகிட்டு)

going for a hair cut...

(To be Continued....)

No comments: