Friday 4 July 2008

அப்படியா சேதி?????

இவ்ளோ நாளும் நாம ஒலக நாயகன் கமல ஹாசனின் தெரமைய புகலோ புகழுண்னு புகழுந்து பொலந்து கட்டுனோம்... நானும் கூட ரொம்ப ஒன்றி போயி யாரை பார்தாளும் கமல ஹாஸனாகவே தெரிய, ஆபீஸுக்கு ஒருநா அல்வா கொடுத்துட்டு.. பார்க்கான்டே உக்காந்து ரொம்ப சிலாகித்துவிட்டு ஏதோ பெரிய கலா ரசிகனாட்டம் பீத்திகிட்டே இருந்தப்போ வருத்த படாத வாலிபர் சங்கத்தை ( இது நம்ம இணையத்தில் உள்ள வ.வா. சங்கம் அல்ல ) சேர்ந்த ரெண்டு பேரு வந்து என்கிட்டெ கேட்டனுங்க... நீங்க திருந்தவே மாட்டீங்கலாண்ணு.... " அடங்கொக்கா மக்கா... நாம என்னடா..செஞ்சோம்னூ யோசிச்சிக்கினு இருக்கும் போது சொன்னான்.. "ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்ததும் எங்க தலைவரு தான், இப்போ கமலுக்கு வாழ்க்கை கொடுத்ததும் எங்க தலைவர் தான்" என்று சொன்னான் "எப்படி? ..எப்படி?" என்று நானும் கேக்க..

சந்தூரமுகி பட விழாவில் தானே சூப்பெரு இஸ்டாரே சொன்னாரே... "என்கிட்டெ கால்சீட் வாங்கூறது முக்கியமில்லை.. போய் வ.வா சங்கத்தின் தலைவரு கைய்ப்புள்ள கிட்ட பஸ்ட் கால்சீட் வாங்கிகினு வாங்க அப்பாலே நான் தரேன்னு சொன்னேன்" என்று தானே சொன்னாரு....

ஓ... இப்படி ஒரு சேதி இருக்கா....என்று யோசித்து கொண்டே ...... அப்புறம்????..... என்று அடுத்த விடைக்கு கொக்கியை போட....

"இந்த தசாவதாரம் என்ன அவரு கான்செபுட்டா??? இல்லவே இல்லை.... "மனத்தை திருடி விட்டாய்" படம் பார்தீளா.. அதுலெ.. எங்க கைப்புள்ள, பிகர் கிட்டே ரீலு விட்டுக்கிட்டே இருப்பாரு.. அப்ப அந்த காட்சியை பார்த்தீங்கன்னா அதுலெ அவரு அப்பா, அம்மா, அண்ணன், மற்றும் தம்பி என்று நாலு ரோழுலெ வருவாரு.. இதுலே இருந்து பிடிச்சது தான் தசவதார கான்செபுட்டு..." இதை நான் யோசிச்சிக்கிட்டே இருக்கும் போதேய்.. அந்த வ.வா. சங்கத்து ஆளுங்க கெளம்பி போய்ட்டாங்க

தூரத்திலே போய்கிட்டே இருக்கும்போது ஒருத்தன் சொன்னான்... " இந்த தமிழ்நாட்டு மக்க ரொம்ப நல்லவங்க, எத்தனை பேரு எத்தனை தடவை, எதுலெ இருந்து காப்பி அடிசாலும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, பாத்துட்டு பதிவும் போடுவாங்க".. என்று....

சம்பளத்திற்கு ஆள் வச்சு யோசிப்பாங்களோ?????

6 comments:

Syam said...

:-))))

நையாண்டி நைனா said...

வாங்க மிஸ்டர் சியாம்...ரொம்ப நன்றி.. உங்கள் வருகைக்கு.....

g said...

இன்னா நைனா சௌக்கீயமா? நல்ல கீது. மேட்டர சொன்னேன்.

நையாண்டி நைனா said...

நல்லா சோக்கா கீரேன் பா... ஜிம்மு மாமூ

மேட்டரை மறந்துகீனு போறேனே...
டாங்க்ஸ் தலிவா....

tamilraja said...

நல்லாத்தான் உக்காந்து யோசிக்கிறிங்க !
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணா கட்டுதே !

cheena (சீனா) said...

ஆகா யோசிக்கறதுக்கு இப்படி ஒரு வழி இருக்கா - பலேபலே -
எங்க கிளப்புலே ஜோகர் வெட்றதுக்கே ஒரு ஆள வச்சிருப்போம் -ஆமா