Thursday 21 October 2010

ஆந்தை எழவு அரசனும் அதிசய ஒப்பாரியும்...

பதிவர் "எழவு"அரசன் அவர்கள், அண்ணன் ஜாக்கி அவர்களை நக்கல் செய்து ஒரு பதிவை எழுதி இருக்கிறார்... அதை நான் நூற்றுக்கு ரெண்டாயிரம் சதம் கண்டிக்கிறேன்.

அந்த பதிவு மிக மிக கீழ்த்தரமான ஒரு பதிவு என எண்ணுகிறேன். அந்த பதிவில் அவருடைய மிக கேவலமான எண்ணங்களே வார்த்தைகளாக வார்தெடுக்கப்பட்டுள்ளன.

பதிவர் "எழவு"அரசன், இந்தப் பெயர் முழுக்க முழுக்க கற்பனையே. யார் 'பட்டத்தையும்' புண்படுத்துவது அல்ல. உங்களுக்கு தெரிந்த உயிரோடு இருக்கும், அல்லது இறந்த நபரகள் யாருடைய பெயரின். சாயலோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அது முழுக்க முழுக்க எதேச்சையாக ஏற்பட்டதே. நன்றி

நண்பா.... "எழவு"அரசா...

ஜாக்கி அவர்கள் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வைத்து எழுத வில்லை.. ஆனால்
அவரை சாடி எழுதி உள்ள உங்களை.. எத்தனை பேருக்கு தெரியும்.

இப்படி கேவலமான ஒரு பதிவை எழுதி விட்டு எக்காளம் வேறு... "அவன் அவன் அப்படி அது எழுதி இருக்கிறான், இது எழுதி இருக்கிறான் ஆனா அவரு ஒரு பதிவை வச்சிக்கிட்டு....
" என்று... நண்பரே.... நீங்கள் எழுதி இருப்பது... எதில் சேர்த்தி தெரியுமா? கட்டண கழிப்பறையில் தன வக்கிரங்களை கிறுக்கி இருக்கும் மன நிலை பிறழ்ந்த ஒருவன் செய்யும் காரியமே ஆகும்... இதற்கு வைத்தியம் இருக்கிறது நண்பரே... கவலை வேண்டா! தங்களால் முடிந்தால் தக்க வைத்தியரிடம் சென்று, சிறிது பொருளும் செலவழித்தால்
சீக்கிரமே குணமாகும்... செலவிற்கு பணம் இல்லை என்றால். அப்போது வந்து ஒரு பதிவு எழுதிடுங்கள்... பதிவர்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். அண்ணன் ஜாக்கி அவர்களும் கண்டிப்பாக உதவுவார்..

அவர் தவறாக எழுதுவதாக எள்ளி நகையாடி உள்ளீரே... நீர் தான் முப்பாலுக்கும் தப்பாமல் பொருளுரை எழுதியவரோ? நீர் தான் தொல்காப்பியம் படைத்த தொல் காலத்து புலவரோ? புலவரின், மூலவரோ? அல்ல புலவரின் புதல்வரோ? சற்று எண்ணிப் பாரும்.

தாங்கள் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவராகின், தமிழின் அனைத்து கூறுகளும் அறிந்தவராகின் தமிழறியா பிண்டங்கலாகிய எங்களுக்கு வகுப்பு எடுத்து சொல்லி கொடுங்களேன்... நாங்களும்... தங்களுக்கு வேண்டியது செய்து கற்று கொள்கிறோம்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!

... என்ற புறநானூற்று பாடல் அடியொற்றி, உங்கள் அடி போற்றி கற்று கொள்கிறோம்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆங்கிலத்தில் பலரும் வியக்கும் வண்ணம் படைப்புகளை தந்தாரே சேக்ஸ்பியர்.. அவரும் உயர் தர ஆங்கிலத்தை சரியாக எழுத வல்லவர் அல்லவாம்! கணித மேதை ராமானுஜம் பள்ளிக் கல்வியில் வல்லவர் அல்லவாம்! அனைவரும் அறிந்த தாமல் ஆல்வா எடிசன் பட்டம் வாங்கி விஞ்ஞானி ஆனவரில்லை என்பதனை தங்களின் கீழ்த்தரமான பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

தங்களுக்கு தமிழாளுமை மிக நன்றாக இருக்கலாம்... ஆனால் மன ஆளுமை?
ஆக அவருக்காவது தமிழ் தான் தெரியவில்லை.... ஆனால் உங்களுக்கு ...????

அவரு அதை எழுதுறாரு.... இதை எழுதுறாரு..... ஆபாசமா எழுதுறாரு என்று "உயர விளக்கு" பிடித்த நீங்கள்... அவருடைய மற்ற செயலுக்கும் "விளக்கு" பிடிப்பீரா?

இதெற்கெல்லாம் மேலாக, மிக மிக மிக கேவலமான எண்ணத்துடன்.... அனைவரும் உங்களை மகா காமெடியன், இரண்டாம் கவுண்டமணி, நகைச்சுவை "எழவல்" இருபத்தி ஏழாம் "எழவு" அப்படின்னு பட்டம் வாங்கும் முயற்சியாக கண்டவாறு வசை பாடி உள்ளீர்கள்...அது என்ன மன நிலை...

நீங்கள் என்ன?
அழகு வடியும் அஞ்சரை பெட்டியா?
ஆணை இடும் ஆணை குட்டியா?
இனிய பேச்சு இருக்கும் இன்குபெட்டரா?
ஈகை புரளும் ஈச்சம் பாயா?
உருண்டு வரும் உலக அழகா?

இதை தாங்கள் சற்று எண்ணி பார்க்க வேண்டும் என்று நினைவு படுத்துகிறேன்..இயலவில்லை என்றால் கண்ணாடியையாவது பார்த்து தெளி(ரி)ந்து கொள்ளுங்கள்.

தமிழாய்ந்த அழகு தம்பிரானே... உங்களுக்கு சில குறிப்புகள்...

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.


இதற்கெல்லாம் அர்த்தம் தாங்கள் படித்தவுடனே புரிந்து கொள்வீர்கள் என்றே எண்ணுகிறேன்... ஏனெனில் நீங்கள் தான் தமிழ் பண்டித மா மா மா மா மா மணியாயிற்றே... யாரையும் கேளாமல் எதனையும் படியாமல் அர்த்தம் தெரிந்து கொள்வீரே..


தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.


தீவினை யகற்று.
(ஆத்திச்சூடி)
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
(கொன்றைவேந்தன்) ஔவையார் சொன்னதுங்கோ....



பின் இணைப்பு... (தங்கள் பதிவில் இருந்தே.. )
/*எங்க ஆபீஸ்ல நேத்து தெரியாத்தனமா அந்த blogஐ ஓபன் பண்ணிட்டேன். எடுத்தவுடனே அரையும்குறையுமா ப்ரியாமணி நிக்கிது. பக்கத்துல என் மேலாளர் வேற. அய்யயோ கொல்லப்போறாரேனு நினைச்சா, அந்தாளு சொல்றாரு "அட. அண்ணன் ஜாக்கியோட பிளாகா? அனுஷ்கா படத்த மாத்திட்டு ப்ரியாமணி படத்த போட்டாரு போல. ஹிஹி"னு.*/

அவரு இயல்பா இருக்காரு... அதனாலே பெரிய ஆளா ஆகி இருக்காரு.. நீங்க எப்ப ஆக போறீங்க.... குறைந்த பச்சம் மனிதனாக

Friday 15 October 2010

குந்திரன் - ஒரு குருட்டுபார்வை

இது வரை எல்லா வகை விளம்பரங்களும் கொடுத்து..சமீபத்திய வெற்றி படத்தை வெற்றி படமாக ஆக்க அரும்பாடு பட்டு கொண்டிருக்கு ஒரு கும்பினி... அதன் பல முயற்சியில் எல்லா முயற்சிகளும் முடிந்து விட்ட இந்த நிலையில், எல்லாரும் எல்லாவிதமாக படமும் பார்த்து விட்ட நிலையில்... இப்படியும் ஒரு விளம்பர யுக்தி உள்ளது.. இப்படியும் விளம்பரம் பண்ணலாம் என்று ஒரு ஐடியா கொடுக்கும் ஒரு புதிய(?) முயற்சியாக வாசக அன்பர்களுக்கு தெரிய படுத்தவே... இந்த பதிவு....
.
.
.
.
.
.
.
.
.
.
அட பொறுமையா இருங்க....

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'பறி'வாலயமே துண
ஜெய் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 'கன்' பிச்சர்ஸாய நமக ஜெய் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 'கன்' பிச்சர்ஸாய நமக
இந்த கடிதம் கண்டவுடன், குந்திரன் படத்திற்கு பத்து டிக்கட் எடுத்து பத்து பேருக்கு இலவசமாக கொடுக்கவும். அப்படி செய்தால் உங்கள் வீட்டில் பானை... பூனை... எல்லாத்திலையும் செல்வம் பொங்கும், மகிழ்ச்சி பாயை பிராண்டி உருளும். இது கட்டுக் கதை அல்ல..

பாளையங்கோட்டைலே ஒரு ஆளு குந்திரன் டிக்கட் ஒரு ஆறு வாங்கி ஆறு பேருக்கு கொடுத்தாரு... அவருக்கு நைஜீரியா லாட்டரிலே இருபத்தி அஞ்சி லச்சம் பரிசு கிடைச்சது... இத்தனைக்கும் அவரு அந்த ஊருக்கு போனதும் இல்லே அந்த லாட்டரிய வாங்கினதும் இல்லே..

பாகிஸ்தான்லே ஒரு ஆளு குந்திரன் டிக்கட்டை பத்து வாங்கி, இலவசமா கொடுத்த மறுநா அவரு அமேரிக்கா குவாண்டனமோ என்கிற எடத்திலே அப்பாயின்மென்ட் கெடச்சி போயிட்டாரு...

எப்போதும் எல்லா படத்தையும் நொள்ளை, பொக்கை, என்று பதிவு போட்டு கொண்டு இருந்தார் ஒரு மொண்ணை பதிவர், அவரு கேபிள் டிவி காமிச்சிட்டு இருந்தார் பேரு கூட எதோ சங்கராம் அவரு குந்திரன் படம் நல்லா இருக்கு என்று பதிவு போட்டார்... போட்டுட்டு மறுநாள் அவரு பதிவை பார்த்தால் லட்சம் பாலோயர்சும் நாலு கோடி ஹிட்சும் பெற்று இருந்துச்சி...


விருதாச்சலதிலே ஒரு ஆளு குந்திரன் படம் நல்ல படம் அப்படின்னு சொல்லி ஒரு நாலு பேருக்கு டிக்கட் எடுத்து கொடுத்தாரு... மறுநாளே அவரை எல்லாரும் கேப்டனாக்கி பெரிய ஆளா ஆக்கிட்டாங்க...

அதே விருத்தாச்சலதிர்க்கு பக்கத்திலே ஒரு ஆளு, ராமன் அடிமையாம்.... அவரு ரஜினி பாபாவை பகைச்சி கிட்டாரு.. இன்னிக்கு அவரோட நெலமைய நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனுமா என்ன?

பேருலே மட்டும் "உண்மை".... "தமிழன்"....னு அப்படின்னு பேரு வச்சி ஒரு ஆளு, 'கனவு' தோலர்களுக்கு பாயிண்ட்டு எடுத்து கொடுக்கிறேன் பேர்வழின்னு குந்திரன் படத்தை எள்ளி நகை ஆடினார்... அப்படி கொடச்சலை கொடுத்துட்டு... அப்பனே.... முருகா.... வேலா.... கந்தா.... கடம்பா.... ன்னு கதறிக்கிட்டு நின்னா முருகன் அருளை கொடுப்பானா? பொருளை கொடுப்பானா.... ? 'பொருளோட' ஆட்களை தான் ஆட்டோலே அனுப்புவான்...

அப்புறம் ஒரு ஆளு ஈரோட்டு ஆளு.. எப்பவும் குடியும் குடித்தனமுமா இருந்த ஒரு ஆளு... பேரு கூட ஆசன வாய்க்கு பக்கத்திலே இருக்குமே அந்த உறுப்போட பேருதான்.. ( அய்யோ... அய்யோ... அந்த உறுப்பு இல்லேங்க ... ஆடு மாட்டுகெல்லாம் அதுக்கு மேலே இருக்குமே அந்த உறுப்புய்யா... ) குந்திரன் படத்தை கொண்டாடுன ஆளுங்களை எல்லாம் கலாச்சி ஒரு பதிவு எழுதுனாரு, இப்ப அவரு குவாட்டரை தொட யோசிக்குற ஆளா ஆயிட்டாரு...

இங்கே சென்னையிலே ஒரு ஆளு... எந்திரன் படத்திற்கே போகாமே... அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருந்தாரு... கடைய்சிலே அவரு ரெத்த வாந்தி எடுத்து செத்து போனாரு...


ஆகையினால் இதை எல்லாம் சிந்திச்சி.. உங்க வீட்டு அண்டா குண்டா எல்லாத்தையும் பாத்திரமா, பத்திரமா சேட்டு கடையிலே ஹிந்தி படிக்க அனுப்பியாவது... குந்திரன் பட டிக்காட்டை வாங்கி பல பேருக்கு கொடுத்து... எல்லாம் வல்ல 'கன்' பிச்சர்சின் அருள் பெறுமாறு வேண்டி கேட்டு கொல்கிறோம், கொல்கிறோம்... மன்னிச்சுகோங்க ... கொள்கிறோம்.. கொள்கிறோம்.

இந்த ஐடியா உருவான விதம் அப்படின்னு ஒரு பதிவு தேத்திகிட்டு இருக்கேன்... அதோட நாளைக்கு வாறேன்...