Wednesday 30 September 2009

எ வெட்னஸ்டே - ரீமேக் அல்லாத ரீமேக் படம்



எ வெட்னஸ்டே - புத்தம் புதிய படம்
நடிப்பு : கவுண்டமணி, செந்தில், பதிவர் கேபிள் சங்கர்.

(ஷாட் ஓபன்)

(பீச்லே கவுண்ட மணி ஒரு கருப்பு போர்வை, போர்த்தியபடி... மற்றும் ஒரு நாயுடன்... )

கவுண்ட மணி : நேத்து வரைக்கும் நான் ஒரு 'ரிச் மேன்'... இன்னிக்கு ஐயம் 'பெக்கர் மேன்'... ஒரு சாதாரண மெண்டல் மேனாலே இப்படி ஆயிட்டேன்... இது எனக்கு தேவை தான்... இது நானே வலிய போய் விழுந்த குட்டை... பினாமி மாதிரி வந்தான் அந்த மெண்டல் மேன், சுனாமி மாதிரி என்னோட வாழ்க்கை திருப்பி போட்டுட்டான்....என் கதைய கேளு... அப்புறம் நீயும், யாரையும் "உன்னை போல் ஒருவன்" என்று நினைத்து யாரு கிட்டேயும் வம்பிழுக்க மாட்டே.... தட் இஸ் எ வெட்னஸ்டே....(என்று சொல்லியவாறே... மேல் நோக்கி பார்கிறார்...)

(ஷாட் க்லோசெஸ் அண்ட் ஒபன்ஸ் அட் கவுண்டமணி'ஸ் ஆபீஸ்)

(கவுண்ட மணி தனது அலுவலகத்தில். கம்ப்யூட்டர் முன்னாடி சோர்வாக இருக்கிறார், செந்தில் பெர்முடாஸ், முண்டா பனியன் போட்டு, டையும் கட்டி அதற்க்கு மேலே தனது சட்டையை சும்மா போட்டபடி வருகிறார்... கவுண்ட மணி "உன்னை போல் ஒருவன்" படம் பார்த்துட்டு தன் பிளாக்கில் விமர்சனம் எழுதி கொண்டிருக்கிறார்.)

கவுண்ட மணி : டேய் 'கீ-போர்டு' தலையா... எங்கேடா ரெண்டு நாளா ஆளையே காணும்...

செந்தில் : ஹி... ஹி... ஒலகம் ரொம்ப கேட்டு போச்சண்ணே!

கவுண்ட மணி : என்னடா சொல்றே... உனக்கும் ஒருத்தன் பொண்ணு தாரேன்னு சொல்லிட்டானா?

செந்தில் : அதை சொல்லலண்ணே... கம்ப்யூட்டர் வச்சிருக்குறவனெல்லாம் சாப்ட்வேர் எஞ்சினியராம்...!!!

(கவுண்ட மணி கோபமாக, முறைத்து பார்கிறார்.)

செந்தில் : பிளாக்கு வச்சிருக்குறவனெல்லாம் பெரிய ரைட்டராம்... படம் பார்த்தவனெல்லாம் விமர்சனம் பண்றான்.

(கவுண்ட மணி மிக கோபமாக, செந்திலை எத்துகிறார்)

(அப்போது கவர்ச்சி உடையுடன் ஒரு மங்கை வருகிறார். சீனியர் எஞ்சினியர்-ன்னா அது யாரு... என்று கேட்டு சில சந்தேகங்களை கேட்டு விட்டு போக வருகிறார்)

(கவுண்டமணி, எங்கே தான் சும்மா இருந்தால் தன்னிடம் எதுவோ கேட்டுவிடுவாள் என்று மெயில் ஒப்பன் பண்ணி)



டியர் மிஸ்டர் ஒபாமா..,

உங்க ப்ரோஜக்ட் நல்ல ப்ரோஜக்ட், நாங்க அதுக்காக பாடுபட்டுகிட்டு இருக்கோம். நாங்க செய்யிற எல்லா ப்ராஜக்க்டும் மோசமாத்தான் இருக்கும்னு நீங்க நெனக்குறது உங்கள் மக்களோட பொது புத்தி. அப்புறம் நீங்க செய்யற ப்ராஜக்டு மட்டுந்தான் நல்லது என்று சொன்னா அது அமெரிக்க பார்பனிசம். உங்க ப்ராஜக்டுக்கான மேனுவலை பத்தாம் நம்பர் பாண்ட்லே டைப்பு பண்ணி கேட்குறது கொஞ்சம் ஓவர்... இந்த லெட்டரும் ஓவர்..


பெண் : (செந்திலிடம்) இங்கே "ஆலினால் அலெக்ஸ்சா" அப்படின்னா யாருங்க..

செந்தில் : இட் இஸ் மீ...

கவுண்ட மணி : (கொஞ்சம் அசந்தா, இந்த "டேப் மாறி" தலையன் இவளை கொத்திகிட்டு போய்ருவான்) ஹே.. மேடம், அந்த பெக்கர் இல்லே... ரேமான்ட் கோட்டும் சூட்டும் போட்டிருக்குற நான்தான் "ஆலினால் அலெக்ஸ்சா"

பெண்: போங்க சார், நீங்க இங்கே உள்ளவரு... அதான் கோட்டும் சூட்டும் போட்டிருக்கீங்க... இவரு தான் அமெரிக்கன் ஸ்டைல்லே... பெர்முடாசும், பனியனும் போட்டிருக்காரு... இவரைத்தான் நான் பார்க்க வந்தேன்...

கவுண்ட மணி : அய்யோ அவனை நம்பாதே... அவன் அமெரிக்கன் கிடையாது... ஆப்பிரிக்கன், அவன் இங்கே கம்பனி வாசல்லே பிச்சை எடுக்குறவன், கோட்டும் சூட்டும் போட்டா எவன் பிச்சை போடுவான்... அதான் அந்த நாதாரி அப்படி ஒரு கெட்டப்பு போட்டிருக்கு...

(அந்த பெண்ணும், செந்திலுடன் தனி அறை சென்று எதோ விவாதம் செய்து விட்டு போய் விடுகிறார்...)

செந்தில் : நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்....

கவுண்ட மணி :டேய்... 'டபரா செட்' தலையா நீ பார்த்ததே அவ ஒருத்திய மட்டுந்தான்.... இதுக்கு மேல பாடாதே...

செந்தில் : அண்ணே...! எனக்கு ஒரு சந்தேகம்ண்ணே...

கவுண்ட மணி : என்னடா....? கேளுடா..இதுக்குதான்டா... கம்பனிக்கு ஒரு "ஆலினால் அலெக்ஸ்சா" வேனுங்குறது...

செந்தில் : வாக் மேன் - அப்படின்னா?

கவுண்ட மணி : நடந்துகிட்டே பாட்டு கேட்குறதுக்கு பேரு.

செந்தில் : வொயர் மேன் - அப்படின்னா யாரு?

கவுண்ட மணி : கம்பி வொயர்லே வேலை பார்குறவன்.

செந்தில் : லைன் மேன் - அப்படின்னா யாரு?

கவுண்ட மணி : ரயில்வே லைன்லே வேலை பாக்குறவன்.

செந்தில் :அப்புறம்...

கவுண்ட மணி :டேய்... 'பியூஸ் கேரியர்' வாயா... போதும் நிறுத்திக்குவோம்...

செந்தில் : இன்னும் இருக்குண்ணே...!!!

கவுண்ட மணி : அடுத்து நீ எங்கே வாறே...??? என்ன கேட்க போறேன்னு??? எனக்கு தெரியும்... வேண்டாம்... போதும்

செந்தில் : அதில்லண்ணே....

கவுண்ட மணி : டேய்... அதுக்குதான் வலை உலகத்துலை பெரிய சண்டையே நடந்துகிட்டு இருக்கு... அதுலே என்னை கோர்த்து விட பார்க்குறியாடா... 'சி.பி.யூ' மண்டையா...

செந்தில் : அண்ணே.... சொல்லுங்கண்ணே...

கவுண்ட மணி : டேய்... 'ஷ்ரட்டர்' மண்டையா... போதுண்டா...

செந்தில் :டாபர் மேன் அப்படின்னா... யாரு?

கவுண்ட மணி : (அதிர்ந்தவராக) ஏண்டா நாயே... உன் பேரையே மறந்துட்டியாடா...???

செந்தில் : சொல்லுங்கண்ணே... தெரியுமா தெரியாதா..?

கவுண்ட மணி : டேய்... உன் பேரை என்கிட்டே கேட்குறியே.... இந்த எகதாளம் தானே வேண்டாங்குறது...

செந்தில் : தெரியலைன்னா... தெரியலைன்னு சொல்லுங்கண்ணே... டாபர் ஆம்லா தைலம், டாபர் ஹனி போல டாபர் ப்ரோடட்ஸ் யூஸ் பன்றவங்க தான் டாபர் மேன்... இது கூட தெரியாமே... நீங்கல்லாம்... "ஆலினால் அலெக்ஸ்சா..."

கவுண்ட மணி : இங்க பாருங்க பதிவர்களே...அவன் அவன் என்ன டென்சன்லே இருக்கான்... இவன் கவலைய பாருங்க.... இன்னிக்கு இவனை கொல்லாம விடுறதில்லை...(என்று ஒரு பேப்பர் வெய்ட்டை எடுத்து ஓங்கி எறிகிறார்..)

(செந்தில் டக்கென்று விலகிவிட... அந்த பேப்பர் வெய்ட், அந்த நேரத்தில் நிறுவனத்தை பார்வை இட வந்திருந்த முதலாளி "கேபிள் சங்கர்" மேல் விழுகிறது...)

செந்தில் : அண்ணே... நீங்க சிங்கம்னே... சினிமாக்காரங்க மேல உள்ள கோபத்தை, சினிமாக்காரரான நம்ம மொதலாளி "கேபிள்" மேல காட்டிட்டீங்களே... யூ ஆர் எ கிரேட் மேன்.

கவுண்ட மணி : மொதலாளி சார்..., மொதலாளி சார்..., சாரி.... மொதலாளி சார்... அந்த 'ஜாவா வாயன்' சொல்றதை நம்பாதீங்க சார்... அந்த 'ஆப்ரிகன் அனகொண்டா' என்னை வேணும்னே சீண்டி விட்டு மாட்டி விட்டான் சார்...

கேபிள் : யூ பிளடி நான்சன்ஸ்... ஹோட்டல்லே சாப்பாடு நல்லா இருந்தா அந்த ஹோட்டலுக்கு நல்ல பேரு, அதே நேரம் சாப்பாடு நல்லா இல்லேன்னா... ஹோட்டலுக்கு கேட்ட பேரு...தான்...

கவுண்ட மணி(பதிவுல தான் அப்படின்னா... இங்கேயுமா...என மனதுக்குள் எண்ணியவராக): மன்னிச்சுகோங்க சார்... இதெல்லாம் அந்த 'டாட் மேட்ரிக்ஸ்' தலையனாலே வந்தது...

கேபிள் : நோ... கெட் லாஸ்ட்

கவுண்டர் : என்னை மட்டும் வெளியிலே அனுப்புனா? அவனையும், அந்த 'டாஸ் தலையனயும்' சேர்த்து அனுப்புங்க... பாருங்க... நம்ம கம்பனி அடையாள அட்டைய கூட அது கழுத்துலே தொங்க விடலை

கேபிள் : அவன், அவனுக்கு "கூகுள்" கம்பனிலே வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி ரெண்டு நாளைக்கு முந்தியே ரிசைன் பண்ணிட்டான். இன்னிக்கு சில பேப்பர்ஸ் அன்ட் அரியர்ஸ் வாங்க தான் வந்திருக்கான்

கவுண்ட மணி : அடங்கொன்னியா... "கூகுள்" பெரிய "செர்ச் என்ஜின்" வச்சிருக்குற கம்பனின்னு சொல்வாங்க, அது இவனை போய் "செர்ச்" பண்ணி எடுத்திருக்கே...ஒருவேளை... செர்ச்:"பன்னி"-ன்னு கொடுத்திருப்பாங்களோ...

(கவுண்ட மணி சோகமாக வெளியே வருகிறார்...)
(ஒரு மெர்சிடஸ் பென்ஸ் நிற்கிறது...அதிலே செந்திலும் அந்த பெண்ணும் இருக்கிறார்கள்... )


செந்தில்: அண்ணே... இப்பா நான் பாரின் மேன், ஆனா நீங்க... காமன் மேன் கூட கிடையாது... புவர் பெக்கர் மேன்...

பெண் : டார்லிங்... அந்த பெக்கர் மேன் கூட என்ன பேச்சு... வாங்க நாம போலாம் நமக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு...

கவுண்ட மணி : நல்லாவே புரிஞ்சு போச்சுடா... நல்லாவே புரிஞ்சு போச்சுடா... காமன் மேன்... யாரு பெக்கர் மேன் யாருன்னு...

THE END

டிஸ்க்கி: ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் ஒரு காமன் மேனுக்கு சகஜம், அதனாலே அதை கண்டு பிடிச்சி பின்னூட்டத்திலே கும்முறவங்க... காமன் மேன் கிடையாது...


Thursday 24 September 2009

மதுரை பதிவர் சந்திப்பு... சில கமண்டுகள்.


அட போர்டை பாரேன்....


இப்படி ஒரு கைகாட்டி எல்லா பதிவர் சந்திப்புகளையும் வச்சா உங்களுக்கு புண்ணியமா போகும்....


சில நேரங்களில் சில மனிதர்கள்...


இவரு ஆசைய யாராவது..... பூர்த்தி பண்ணுங்கப்பா...


இப்படிதான் நிலைமைய சமாளிக்கணும்....


இப்படில்லாம் கூட நடக்குதா... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



டிஸ்க்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக போடப்பட்டது... எல்லாரும் கண்டு கொள்ளுங்கள், யாரும் காண்டு கொள்ளாதீர்கள்.

Wednesday 23 September 2009

கும்மி தொழில்



அனுஜன்யா அவர்களின் ஒரிஜினல் பாரின் சரக்கு அங்கே
வால் அவர்களின் டாஸ்மாக் சரக்கு அங்கே
நான் காச்சுன சரக்கு இங்கே...

தள்ளாடி துவளும்
அனானியின் கண்கள்
என் கவுஜைகள் சிலதை
படித்திருக்க வேண்டும்.

கவுஜை போட்டு
பின்னூட்டம் பார்க்கும் கவுஞ்சரின்
"கீ போர்டில்" சாய்ந்து
பின்னூட்டமிடும், மறுக்கும்
திட்டும், அர்ச்சிக்கும்,
காறியுமிழும் நூறு
பதிவர்களை காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்

எனக்கு பதட்டமாக இருக்கிறது
பதிவினில் அல்லலுறும் இவன்
பின்னாட்களில் "ஹேக்"கலாம்
கும்மலாம்
பதிவராகி
தமிழ்மணத்தையே அச்சுறுத்தலாம்
அதெல்லாம் பரவாயில்லை

கவுஞ்சராகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது


Friday 18 September 2009

"குடிக்காதவன்" அதிரடி திரைப்படம் (பகுதி 2)

இந்த படத்தின் இடைவேளை வரையிலான பகுதி இங்கே...




அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே

தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே

எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே

(டேபிள் மேலே... மிக அருமையான பாரின் சரக்கு... மினு மினு என்று மின்னி கொண்டிருந்தது... அதை பார்த்து தான் மேற்கண்ட பாடலை "கேபிளும்", "90"-யும் மானசீகமா பாடிக்கொண்டிருந்தார்கள்.)

"என்னடா இது, பிரம்மலோகம் வந்தும் பிரேமானந்தா கால்ல விழுற மாதிரி இருக்கு இது..." என்றவாறே தனது பிளாக் பெர்ரி போனை எடுத்து... எதோ பேசி வைக்க...

"அண்ணே உனக்கு சோளப்பொரியே... ஆடம்பரம் இப்ப உனக்கு பிளாக் பெர்ரியா.... ஆஅவ்வ்வ்"

"போன் போட்டது நீங்க தானே..."தேன் பாச்சியது லேட்டஸ்ட் ஹாட் முமைத் கான்

"யா... யா.. ஐ ஒண்டி கால் யூ."

"யூ நோ அம்பானி பிரதர்ஸ்..."

"Yes"

"அப்படியா... அப்படின்னா... வீ..வீ....வீ....... வா..வா... வா...." என நைனா இழுக்க...
சட்டென... கேபிள் அண்ணன் நைனா சட்டைய பிடித்து இழுத்து. நைனா காதிலே ரகசியமாய்
"என்னடா சொல்லவரே... "
(நைனாவும் கிசு.. கிசுவென)
"வம்பாணி பிரதர்ஸ்-ன்னு"



இதை கவனியாமல்.... முமைத் கானோ முகம் பிரகாசமாய்...அலறுகிறார்...
"வார்னர் பிரதர்ஸ்!!!"

"அதான்.... அதான்.... அதேதான்.... யூ பிராயினி..." இது நைனா.

"பிராயினி...!!! வாட்?"

"அதாவது... அதாவது... மு...மு...மு...."

"டேய்... வெண்ணை நைனா... அடங்குடா...அவளை காண்டாக்கி அனுப்பி வச்சிராதே... மேடம், ஹீ இடியட், ஐ எக்ஸ்ப்ளைன்... யூ ப்ரைனி அதாவது மூளைக்காரங்க....ஹி ஸ்மால் பாய், ஐ பிக் பாய்..."

"ஐ சி..." என்றவாறே, முமைத் கானோ அவரது தொப்பையை பார்க்க...

"இட் இஸ் 'பீர்' தொப்பை, ஐ பர்பஸ்புல்லி மேட், ஐ ஆக்ட் டூ ரோல் இன் பிலிம் லைக் விக்ரம் ஒன் லைக் 'கம்பி' இன்னொன்னு லைக் 'கும்பி' தட்ஸ்வோய் மை 'கும்பி' இஸ் சோ...ஓகே...ஹி... ஹி..ஹி.. வீ டான்ஸ் பண்ணுவோம்... ஓகே.."



(இரண்டு பேரும் 'பருத்தி வீரன்' சரவணன் கார்த்தி மாதிரி ஆட்டம் போட்டார்கள், முமைத் கான் முகம் சுளிக்க... அண்ணன் கேபிள் சூழ்நிலை உணர்ந்து... தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி தன் யூத்து தொப்பையை லேசாக ஆட்டி ஆட்டி ஆடி "கெத்தை" மெய்ண்டைன் பண்ணறார்... )

ஆட்டம் முடிந்த உடன்...

"டேய்... நைனா... என்னிக்காவது நீ இந்த மாதிரி பாருக்கெல்லாம் வந்திருக்கியாடா... "

"இல்லண்ணே... நீங்க தெய்வம்னே... தெனாலி படத்திலே கமல் சொல்வார் அதை மாதிரி நீங்க ஒரு தெய்வ அண்ணன்னே..."

"நல்லா என்ஜாய் பண்ணு...டோன்ட் வொர்ரி... "கேபிள்" இஸ் ஹியர்?"

"எதுக்கு குடிச்சு புட்டு காசில்லண்ணே..ன்னு சொல்லிட்டு தூக்குல தொங்குறதுக்கா?"

"இங்கே வந்தும், இத்தனைய பார்த்தும் உன் எச்ச புத்தி போகுதா பாரு.... நான்சன்ஸ்... அண்ணன் இப்ப கோடீஸ்வரண்டா..."

"அண்ணே... உன்கிட்ட தான் காசே கிடையாதே... இதெல்லாம் எப்புடி...நீங்க இப்படி கோடீஸ்வரண் ஆனதை பார்க்க நம்ம அண்ணன் தண்டோரா இல்லியே..."

"டேய்... நான்சன்ஸ்.. மூடிகிட்டு குடி.."
(ரெண்டு மூணு ரவுண்டு போகிறது... ஆரவாரம் கொஞ்சம் குறைந்து இருவருக்கும் பெரியண்ணன் தண்டோரா நினைவு ஆட்டுகிறது... அதனால் எக்ஸ்ற்றாவ ரெண்டு லார்ஜை உள்ளே விடுகிறார்கள்)

"அண்ணே... நம்ம பெரிய அண்ணன் கூட இப்படி செலவு பண்ணது கிடையாது... உன்னை நெனைக்கும்போது.... ஆஆவ்வ்வ்வ் ...இப்படி ரெண்டு நாளிலே எப்படி உங்கிட்டே இவ்ளோ பணம் வந்தது... நீ அண்ணன் சொன்னா மாதிரி... அவரோட சொத்தை எல்லாம் அவர்கூட பொதைக்கலைன்னு நெனக்குறேன்... "(நைனா தாரை தாரை யாக கண்ணீர் விட்டு அழுகிறார்.)

"அதெல்லாம் பொதச்சிட்டேன், நீ பேசாமே அழுகாச்சி..பண்ணாமே சரக்கை அடி... "

"அப்புறம், உங்கிட்டே எப்படி இவ்ளோ காசு..."

"அண்ணன் சொன்ன மாதிரி அவரு சொத்தை எல்லாம் வித்தேன்..."

"ம்..ம்..ம்...."

"லம்ப்பா ஒரு ஏழு கோடி தேறிச்சு..."

"அடப்பாவி... இவ்ளோ வச்சிக்கிட்டா தான் நம்ம கிட்டே பஞ்சப்பாட்டு பாடுனாரு!!! , வீதி ஓரத்திலே பட்டை அடிச்சி மட்டையானாறு...ஹூம் அப்புறம்..."

அதை கொண்டு போய் பேங்கிலே போட்டேன்... என் பேருலே "

"என்ன நீ... இப்படி செய்யலாமா...???!!!"

"இன்னும் கேளுரா வெண்ணை... என் பேருலே போட்ட பிறகு, அவரு பேருல ஏழு லட்சம் ரூபாய்க்கு நூறு செக்கு எழுதி அவரு கூடவே பொதச்சிட்டேன்... இப்ப அவருக்கும் அதை ஹேண்டில் பண்ண ஈசியா இருக்கும் அவரும், அப்புறமா, அவரு, அவருக்கு சவுகரியப்படுற நேரத்திலே போய் மாத்திக்குவாறு...இப்ப சொல்லு நான் அவரு சொன்ன மாதிரி செஞ்சிட்டேனா இல்லியா... "

"அவ்வ்வ்வ்....அவ்வ்வ்வ்....அவ்வ்வ்வ்.... நான் ஒன்னு கேட்கட்டுமா...."

"இன்னொரு லார்ஜுங்குறதை தவிர வேற என்ன வேணாலும்.......ஹூம்..."

"இதெல்லாம் தப்பில்லையா..."

"ம்ம்ம்ஹும்.. தப்பில்லை... நாலு பேருக்கு நாலு விதமா சரக்கு வாங்கி கொடுக்குறதுக்கு எதுவும் தப்பில்லை..."

"அண்ணே... நீங்க நல்லவரா... கெட்டவரா.."

(டக்குன்னு அண்ணன் கேபிள், நாயகன் கமல் மாதிரி)
"தெரிலப்பா..."

(இருவரும்...போதையும்... சோகமும்... களிப்பும்... சேர்ந்த ஒரு புது கலவையால் மட்டையாகிறார்கள்)

(பேக் ரவுண்டில், இளைய ராஜா வாய்சில்)
தென்பாண்டி சீமையிலே... சரக்கோட போதையிலே... கேன் போல கிடந்தவனை... யாரொதைச்சாரோ... யாரொதைச்சாரோ...
===================================================
(எண்டு கார்டு: பாரதி ராஜா வாய்சில்)
இவர்கள் செய்தது.. சரியா தப்பா... என்று ஆராய்ந்தால்...
"விடை" பல கிடைக்கலாம்... சரக்குக்கு "கடை" பல இருப்பது போல்...

"சடை"களை கண்டு, "நடை"களை மாற்றாமல்
"தடை"களை கடந்து, "படை" நடத்துவோம்...

அளவிலா போதையுடன்...
நையாண்டி நைனா


THE END.


Thursday 17 September 2009

"குடிக்காதவன்" அதிரடி திரைப்படம் (பகுதி 1)



இந்திய வரலாற்றிலேயே இது வரை வெளி வராத "கவுஞ்சர் திலகம்" தண்டோரா, "புரட்சி யூத்து" கேபிள் சங்கர், "90" நைனா இணைந்து கலக்கும் புத்தம் புதிய திரைப்படம்
"குடிக்காதவன்"
இன்று முதல் உங்கள் "லக லக லக....." தளத்திலே...



Now the film starts.......

(பெரிய செல்வந்தர் அண்ணன் தண்டோரா, அவருக்கு ரெண்டு தம்பிங்க... ஒன்னு "கேபிள்"சங்கர், இன்னொன்னு "90" நைனா எல்லாரும் ஒரு பார்லே உக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருக்காங்க)

"டேய் நைனா... பார்த்து நிதானமா அடிடா... ஓவரா ஏத்தாதே... "

"சரிண்ணே... நான் மட்டுந்தானா... இல்லே கேபிள் அண்ணனுமா"

"ஏய்... நீ ஏண்டா, என் கி..கி..கிளாசுலே மண்ணை அள்ளி போடுற... உன்னை சொன்னாருன்னா அது உனக்கு மட்டுந்தான்டா...பேப்பயலே..."

"கொந்தளிக்குறது இருக்கட்டும்... நீங்க அந்த போஸ்டரை பாத்துகிட்டே... காரச்சேவை சிகரட்டுன்னு நெனச்சி பத்த வச்சிக்கிட்டு இருக்கீங்க..."

(அண்ணன் தண்டோரா அவர்கள் தன்னை (படிக்காதவன்) சிவாஜி மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு)

"இங்கே பாருங்க கண்ணுங்களா... நீங்க ரெண்டு பெரும் என் கண்ணு மாதிரி... உங்களுக்காகவே அண்ணன் கல்யாணம் கூட பண்ணிக்காமே... போற இடத்திலை எல்லாம்... 'கித்தாப்பா' 'செட்டப்பு' மட்டும் வச்சி காலம் தள்ளுனேன்... இப்படி நீங்க சண்டை போடாம ஒத்துமையா இருக்கணும்... இந்த பாழும் உலகத்திலே நீங்க ரெண்டு பெரும் எப்படி ஒண்டியா சமாளிக்க போறீங்கன்னு நெனச்சா... துக்கம் தொண்டைய அடைக்குதே.... (அண்ணனுக்கு இன்னொரு லார்ஜு சொல்லுறா...)"

அண்ணன் தண்டோரா...ஆனந்த கண்ணீர் சொரிய... இருவரையும் தன கரங்களில் அணைத்து... விம்மி... விம்மி அழுகிறார்... ('சாங்கு' சீகுவன்சு ஸ்டார்ட்ஸ்...)

(இந்த 'சாங்கு' சீகுவன்சு... பாரில் தொடங்குது... )

ஒரு பாருப் பிள்ளையாக...ஒரு டேபிள் கிள்ளையாக...ஊத்து... நீயும் ஊத்து
படம் பார்க்கப் பறந்தாலும்... திடநின்றி திரிந்தாலும்... கிளாசு... ஒரே கிளாசு
என்னென்ன தேவைகள்.... அண்ணனை கேளுங்கள்
(ஒரு பாரு)


(அண்ணன், ரெண்டு தம்பிகளையும் கூட்டிகிட்டு தெருவிலே நடந்து போகிறார்... தெருவோரத்திலே டாஸ்மாக் கடை மற்றும் கேனில் வைத்து "கள்" விற்பதை தாண்டி செல்கிறார் )
செல்லும் வழி எங்கெங்கும் டாஸ்மாக்கு வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் கள்ளை தொடலாம்
கிளாசு... அது மாறாமல்.... அளவு... அதை மீறாமல்
நாளும் குடி போடுங்கள் மோட்சம் பெறலாம்
(செல்லும்..)


(அண்ணன் சரக்கு போட்டு சலம்பி போலீசிடம் அடி வாங்குகிறார்.. சரக்கு பாட்டிலை போலிஸ் கண்ணிலிருந்தும் அடியிலிருந்தும் தன் நெஞ்சோடு அணைத்து குறுகி குனிந்து காப்பாற்றுகிறார், அடுத்து, அடி வாங்கிய வலி தெரியாமல் இருக்க அந்த காப்பாற்றிய 'ஆப்' சரக்கை 'ராவா' அடித்து மட்டையாகிறார்.)
சரக்கை நீங்கள் காத்திருந்தால்
சரக்கு உங்களை காத்திருக்கும்
நீ தந்த அலும்புக்கும்
நான் தந்த வம்புக்கும்
கைவிலங்கு காத்திருக்கு
(ஒரு பாரு)


(சரக்கு கிட்டாத நாள்களில் இன்ஸ்டன்ட் சரக்கு எப்படி காச்சுவது, எப்படி அதிக விலைக்கு விற்பது என்று ட்யூசன் எடுக்கிறார்)
ஊரல் அதை போடாமல் கள்ளும் வருமா?
ஊறுகாய், அதை தீண்டாமல் போதை தருமா
வெள்ளை இளச்சிட்டுக்கள், வெற்றி கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதை தட்டுங்கள், விண்ணை தொடுங்கள்
(ஊரல்...)


(மறுபடியும் ஒரு பொன்னாளில் குரூப், பாருக்கு வருகிறது அண்ணன் (தனக்கு ஒரு பயலும் பொண்ணு தராததனாலே..) தான் திருமணம் பண்ணாது வாழ்ந்ததை நினைவு கூர்ந்து...ஓவரா மப்பாகி... )
பேதைக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
போதைக்கு வாழ்வது தோல்வி இல்லை
ஆனந்தத் தண்ணீரில் அபிஷேகம்
நான் செய்வேன்
என் இடுப்பில் வேட்டி இல்லை
(ஒரு பாரு)


('சாங்கு' சீகுவன்சு முடிஞ்சு 'சங்கு' சீகுவன்சு, பாட்டு முடியவும் அண்ணன் தண்டோரா, நெஞ்சை பிடிச்சிகிட்டு, தடால்னு கீழே விழுந்து விடுகிறார்)

தம்பிகள் இருவரும் கோரசாக "அம்மா, அப்பாவை நாங்க கண்டதில்லை, எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலே இருந்து.. உங்க மூஞ்ச பார்த்து, பார்த்தே பார்க்க சகிக்காமே... போதைக்கு அடிமையாகிட்டோம்.. ஆனா இன்னிக்கு நீங்க இப்படி இருக்குற நிலைய பார்த்தா... எங்களுக்கு சரக்கு அடிக்காமலேயே குமட்டிகிட்டு வருது.... அஆவ்வ்வ்....."

(அண்ணன் தண்டோரா பாசமலர் கிளைமாக்ஸ் சிவாஜி மாதிரி...)
"ஆமாண்டா... கண்ணுங்களா... எனக்கு உங்களை விட்டுட்டு போறதை நெனச்சா அழுகையா வருது... நான் உங்களுக்காக சொத்து நெறைய சேர்த்து வச்சிருக்கேன்... ஆனா உங்களுக்கு இன்னும்.. நல்ல சரக்கு எது கள்ள சரக்கு எதுன்னு... கண்டு பிடிக்க தெரியலேயேயேயே..."

தம்பிகள் இருவரும் கோரசாக "அதுக்கு இப்ப நாங்க என்ன செய்யனும்..."

"நீங்க ஒன்ன்ன்ன்னும் செய்ய வேண்டாம்... ஏன்னா... எனக்கே இன்னும் நல்ல்ல்ல சரக்கு எது கள்ள்ள்ள்ள சரக்கு எதுன்னு... கண்டு பிடிக்க தெரியலேயேயே... இல்லேன்னா இப்படி மெத்தனாலை குடிச்சிட்டு இப்படி சாக கிடப்ப்ப்பேனா... அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியும்...என்னோட புத்தி தானே உங்களுக்கும் இருக்கும்"

"நீங்க உங்க சொந்த காசை போட்டு சரக்கு அடிச்சா தான் நல்லது எது டூப்பு எதுன்னு சீக்கிரம் கண்டுக்குவீங்க... அதனாலே... அண்ணனோட சொத்துகளை எல்லாம்... என்னோட சேர்த்து பொதச்சிருங்க...அப்பத்தான் உங்களுக்கு காசோட பெருமையும், சரக்கோட அருமையும் தெரி....." என்றவாறே உயிரை விடுகிறார்.



(இடைவேளை....)

அண்ணனை இழந்த தம்பிகள் என்ன ஆனார்கள்? பணம் சம்பாதித்தார்களா? அவர்களின் சரக்கு தாகம் தீர்ந்ததா? என்பதனை காண அடுத்த பகுதி வரை சற்று பொறுத்து இருக்கலாமே...!

அடுத்த பகுதி இங்கே...

Tuesday 15 September 2009

குடிக்க விரும்பும் ஒன்று... கவுஜை



உடான்ஸு வடிவம் அங்கே...
ரியல் வடிவம் இங்கே....


ஒரு நூறு ருபாய் தாளை
வீணடிப்பதை விட
இந்த போதை
வேறு என்ன தருகிறது
என்ற விமர்சனம்
எனக்கு பிடித்திருக்கிறது

எல்லா சரக்கையும்
அடித்தாகி விட்டது

மாறுபட்ட சரக்குகள்
மனித ரசனையின்
அடர்த்தியான வடிவங்கள்

அத்தனையும்
ருசி பார்க்க பட்டுவிட்டன

நுட்பங்கள்..நுணுக்கங்கள்
துல்லியமாக கலக்கப்பட்டு
விட்டது..

ஆனால் ஒன்று
சிறந்தவை என்று
ஆயிரம் சொல்லலாம்

இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது?

அதற்கான ஒரு முயற்சியாய்
ஒரு வேளை
இது இருக்கலாமோ?

ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!


இது அண்ணன் தண்டோரா அவர்களின் கவிதைக்கு எதிர் கவுஜ அல்ல...

Monday 14 September 2009

இனி என்னை கூப்பிடுவீங்க...!!!(அழகு, காதல், பணம், கடவுள்)


சிங்கபூரில் சிங்காரமாக இருக்கும்
சிங்கபூர் சிங்காரம் அம்மா அப்பா.
சிங்கப்பூரின் சிங்காரமே நீதானே!
அம்மா அப்பா.

ஆமாப்பா...
நீயே அம்மா அப்பா.
பல நற்சிந்தனைகளுக்கு
நீயே அம்மா அப்பா.

அப்பப்பா...!!!
எழுத அழைத்திட்டப்பா!
ஒரு தொடராப்பா...
நானும் தொடர்கிறேனப்பா...!!!

அழகு,
காதல்,
பணம்,
கடவுள்,
என் சிந்தனையில்...!!!(ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

என் சிந்தனை
மட்டுமின்றி
ஊரார் சிந்தனையிலும்
ஊறிப் போனது,
ஊசிப் போனது,
நாறிப்போனது.

இருப்பினும்
புது நாற்றை போல்
முளைத்துக்கொண்டே இருப்பது

இவற்றை நம் சிந்தையில் ஏந்தி தானே
வாழ்வின் பெரும்பகுதி
களிக்கிறோம்,
கழிக்கிறோம்.

எனது பார்வையில் என்று பார்க்க போனால் இத்தனையும் மாயை.

அழகு: வரையறுக்க முடியாதது...

ஒருவனுக்கு அழகாய் தெரிவது மற்றவனுக்கும் அப்படியே தெரியாது. இதில் அழகை எப்படி வரையறுப்பது? அழகை யார் வரையறுப்பது?

பசித்தவனுக்கு கஞ்சிதான் அழகாய் தெரியும்.

ஆக என்னை பொருத்தவரையில் அழகு வரையறுக்க முடியாதது. அட.... அதற்கு எல்லை இல்லாதது என்றும் ஒரு பொருள் வருகிறதே...!!!

காதல் - காவியமாவது, காவி கட்டி அலையவைப்பது.

இளம் விடலைகளுக்கு இதை உண்டு பண்ணுவது நாளமில்லா சுரப்பி. திரைப்பட இயக்குனர்களுக்கு இந்த வார்த்தையே அமுதசுரபி. இளம் இயக்குனர்கள் பலபேரு பல விதமா சொல்லி விட்டார்கள்... இருந்தாலும் நாமும் இயக்குனர்கள் பாணியிலே சொல்லிறேன்

காதல் ஒன்னும் "சைன்சு நோட்டு" இல்லைங்க....
ஒரு பக்கம் படமாவும்
மறுபக்கம் விளக்கமாவும் பதிய
அது "இரண்டு கோடு" நோட்டு....
காதலன், காதலி அப்படிங்குற இரண்டு கோடுகளையும்
வாழ்க்கைங்குற எழுத்தாலே இணைச்சி வாழணும்.


காதல் ஒன்னும் "கிராப் நோட்டு" இல்லைங்க..
நேற்று அப்படி இருந்துச்சி...
இன்னிக்கு இப்படி இருக்கு
நாளைக்கு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்ல
அது நித்தம் தேவைபடுற "ரூபா நோட்டு"
என்னிக்கும் இருக்கணும்,
ஒரே மதிப்பா இருக்கணும்.


காதல் ஒன்னும் சளி இல்லைங்க
எப்பவாவது வருகிறதுக்கு....
அது "ஒன்னுக்கு" மாதிரி
அடிக்கடி வரணும்,
நிதமும் வரணும்...


காதல் ஒன்னும் "குசு" இல்லிங்கோ...
ஒளிச்சு, நாசுக்காக விட்டு நார அடிக்க
அது "சுவாசம்" மாதிரி,
இருக்குறதே தெரிய கூடாது
ஆனா உசுரோட தொடர்பா இருக்கணும்

(குசு போட்டு... (விட்டு இல்லீங்க)எழுதுனாதான் "பின்" நவீனத்துவ எழுத்தாளர்னு.....)

போதும் நிறுத்திக்குவோம்...

அப்படின்னா அந்த கருமாந்திரம் பிடிச்ச காதல் பற்றி என்ன... சொல்ல...?
நல்ல காதல் கிடைத்தால் காவியம் படைக்கலாம், கேடு கெட்ட காதல் கிடைத்தால் காவி கட்டி அலைய வைக்கும்.

((இந்த காதல் பகுதியை, தம்பி லோகுவுக்கும் தம்பி அன்புக்கும் சமர்பிக்கிறேன்))

பணம்: படுத்தி எடுப்பது...

இருப்பவனும் தேடுகிறான் இல்லாதவனும் தேடுகிறான் நிம்மதியை.
மேலுள்ள ஒற்றை வரியே சொல்லுமே அதனுடைய முக்கியத்துவத்தை.

கடவுள் - கலகக்காரர்களின் கை இருப்பு.

நான் மட்டும் அல்ல... இந்த உலகமே தேடிக்கொண்டிருக்கும் ஒரு பயங்கர குற்றவாளி.
பணத்தின் மேல் பற்றுள்ளவன் பணத்தை மட்டுமே தேடுவான்.
பொன்னின் மேல் பிரியமாய் இருப்பவன் பொன்னை மட்டுமே தேடுவான்.
பெண்ணின் மேல் காமமாய் இருப்பவன் பெண்ணை மட்டுமே தேடுவான்.

ஆனால்... கடவுள் விசயத்தில்...
கடவுள் பற்று உள்ளவனும்,
கடவுள் பற்று இல்லாதவனும்
தேடுகிறார்கள்...
.
.
.
கடவுளை.

அடுத்து இந்த தொடரை இழுத்து செல்ல நான் அழைப்பது...

1. இவரு பதிவை படிக்க நல்லா இருக்கும் அவரு அருமை நண்பர் கீத் குமாரசாமி அவர்களை அழைக்கிறேன்.

2. பேரு சும்மா டெர்ரர் பேரு தான்... ஆள் முகம் பார்த்தீங்கன்னா... பிஞ்சு மூஞ்சை வச்சி இருப்பார்... கொழுக் மொழுக் என்று இருப்பார்...இவரு பதிவு பேரு தற்போதும் யூத்து பிள்ளைங்களை ஆடசெயும் பாடல் வரிதான். சரி அவரு வேற யாருமில்லை.. அவரு..... நண்பர் ஸ்டார்ஜன் (தெளிவா படிங்க புள்ளைங்களா... டார்ஜான் இல்லே ஸ்டார்ஜன்)அவர்களை அழைக்கிறேன்.

3. பகடி செய்து பதிவு போடுவது இவருக்கு கை வந்த கலை. அதுவும் சினிமான்னா... சொல்லவே வேண்டாம்... அப்புறம் சினிமாவிற்கு நடிக்க இவரு ஆளுங்களை எல்லாம் ரெகமண்டு பண்ணுவாரு... அருமை நண்பர்... இரும்புத்திரை அரவிந்து அவர்களை அழைக்கிறேன்.

4.இவரு ஒரு புகழ் பெற்ற "பாமக"காரர். இவரை பற்றி நான் சொன்னால் அது நல்லா இருக்காது... நீங்களே இவரோட வலை பதிவுகளை கண்டு அறிந்து கொள்ளுங்க.. அப்புறம் பெயர் கூட சொல்லாமே இருக்க முடியுங்களா... பெயர் திரு.அன்பு மணி அவர்கள்.

"அடங்கொயாலே... உனக்கு அவ்ளோ பெரிய ஆளுங்களை எல்லாம் தெரியுமா?" என்று வாயை பிளக்க வேண்டாம்.

"ஆம் தெரியும்" என்பதே எனது பதில்.

வாருங்கள் திரு குடந்தை அன்புமணி அவர்களே....
( யோவ்... வென்று... "பாமக" அன்பு மணின்னு சொன்னே... ஆமாங்க... இப்பவும் சொல்றேன்.. இவரும் "பாமக"தான்... பாசத்தால் க்களை ட்டியவர்)

5. அகில உலக "அதிரடி எலக்கியவாதி", "அரசியல் அனகொண்டா", விளம்பர உலக "விஜய்"(அதாங்க இளைய தளபதி(என்ன? கொஞ்சம் வயசு தான் கூட...)),ஆனால் தற்போது பதிவுலகின் "கவிதை காட்டேரி".... இப்படி அண்ணனின் பெருமையை மட்டுமே கூறினால் அதுவே ஒரு பெரிய தொடர்பதிவுக்கு "வலி" வகுக்கும் என்ற காரணத்தினால் இதோடு முடித்து கொண்டு அண்ணன் தண்டோரா அவர்களை தண்டோரா அல்ல... முரசு கொட்டி அழைக்கிறேன்...

Friday 11 September 2009

ABC... நீ வாசி எல்லாமே... SO... ஈசி..



சின்ன வயசிலே சைக்கிள் டயரு, இல்லே கயறு, ஒன்னும் இல்லன்னா முதுகு பின்னாடி சட்டைய, இல்லன்னா அரைஞான் கயிறையே பெல்ட்டு மாதிரி செட்டப் செஞ்சி போட்டிருந்த பட்டன் இல்லாத டவுசரை பிடிச்சிக்கிட்டு ரயிலு விட்டு.... போன ஆட்டம், இப்ப நல்ல டிரஸ் போட்டு பொட்டி தட்டியா, போட்டி தட்டியா ஆனா பிறகு, ஆட முடியாததாலே எந்த தேசத்து கனவானோ இல்லே யாரோட கணவனோ ஆரம்பிச்சி வச்ச இந்த ஆட்டம், இப்ப நண்பர் துபாய் ராஜா ( பயந்துறாதீங்க... பேருதான் துபாய் ராஜா. ஆனா நம்ம ஊரு காரர்தான் ) புண்ணியத்துலே என்கிட்டே வந்திருக்கு நான் கொஞ்சம் தள்ளிவிட்டு அப்புறம் தள்ளுறதுக்கு ஒரு நாலு பேரை கோர்துவிடனும்

சில விதிகள்

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..


ஸ்டார்ட் மீஜிக்....

1. A – Avatar (Blogger) Name / Original Name : நையாண்டி நைனா / விதி மூன்றின் படி A-வில் ஆரம்பமான கேள்வி மட்டுமே செல்லும்... (நாங்கல்லாம் ஒரு கொள்கை எடுத்து போட்டா அதை நாங்களே மீற மாட்டோம்.)

2. B – Best friend? : கேட்காம கடன் கொடுக்குறவங்களும், கொடுத்த கடனை கேட்காதவங்களும்

3. C – Cake or Pie? : கே-பை

4. D – Drink of choice? : இந்தியாவின் தேசிய பானம், ஆம் ஆத்மிக்கா சாய் தான் (தண்டோரா அண்ணன்.... ஓல்ட் மாங்குன்னு... சவுண்டு கொடுத்து என்னோட ப்ரீமியரை (நான் பிரஸ்டீஜெல்லாம் பார்குறவன் இல்லே ) கெடுக்க பார்ப்பாரு.... கண்டுக்காதீங்க...)

5. E – Essential item you use every day? : ஹி..ஹி...ஹி... ஐட்டம் அப்படின்னு சொல்லிட்டாலே அது எசன்சியல் தான்... (அப்படிதானே கேபிள் அண்ணே... ???) பிரியங்க சோப்ரா அண்ட் அனுஷ்கா அப்படின்னு சொல்லலாம், இருந்தாலும் சொல்றேன் நம்ம பொட்டிதாங்க

6. F – Favorite color? ரோஸ் (டைட்டாநிக்கி கீரோயினி பேரும் ரோசுதான்.... ஹி...ஹி...ஹி... )

7. G – Gummy Bears Or Worm? : நமகெல்லாம் நம்ம ஊரு "கல்கோனா" (அதாங்க உரல் முட்டாய்) முட்டாயும் கைலே வாட்சு மாதிரி கட்டுரை ஜவ்வு முட்டாயும் தான்.

8. H – Hometown? வீரத்தையும், விவேகத்தையும் விளைவிக்கும் ஊர்... "நெல்லை" தாங்க

9. I – Indulgence? மொக்கை போடுறதை தவிர நான் வேறை எதை சொன்னாலும் யாரும் நம்ப போறது இல்லே...

10. J – January or February? ஜனவரி தான் - அந்த மாசத்திலே தானே நாம "குடி"அரசு ஆனோம்.

11. K – Kids & their names? நானே ஒரு மீசை வச்ச......(சரி... சரி... சொல்லவில்லை....) அண்ணன் பிள்ளைகளும் அக்கா பிள்ளைங்களும் உண்டு.

12. L – Life is incomplete without? "E E E E E E E E E E E " அதாவது புன்னகை

13. M – Marriage date? அடப்பாவமே... ஆயுள் கைதிக்கு தீர்ப்பு வந்த நாளு மறந்து போகுமா? NOV-28

14. N – Number of siblings? அண்ணன் ஒன்னு அக்கா ஒன்னு

15. O – Oranges or Apples? ஆரஞ்சு, கூட்டணி தர்மத்திற்காக பிடிக்கும். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்ச்சி

16. P – Phobias/Fears? மொக்கை தான்... ( பின்னே நமக்கே ஒரு ஆள் போட்டியாக வந்தா ரசிக்க முடியுமா?)

17. Q – Quote for today?அதிர்ஷ்டம் தாங்க ஒருமுறை கதவை தட்டும் ஆனா நம்ம உழைப்பு நாம சோர்ந்து போற வரைக்கும் தட்டுங்க....(யாரும் சொல்லல்ல... ஒரு நைட்டு - ஒத்தை ஓல்ட் மங்கு - ஒரே பீளிங்க்சு - ஒன் லைன் தத்துவம் ரெடி)

18. R – Reason to smile? நான், அதாவது நையாண்டி நைனாவாகிய நான், ரொம்ப நல்லவன். ( இப்ப உங்க முகத்திலே புன்னகை வருது தானே..!!!)

19. S – Season? இதென்னங்க கொடுமையா இருக்கு.... நாலு ஜிகிடிங்க நம்ம பக்கம் இருந்தா எல்லா சீசனும் நல்ல சீசன் தான்.

20. T – Tag 4 People?-
அன்பு அண்ணன் ஜாக்கி சேகர் அவர்கள்,
அன்பு அண்ணன் அத்திரி அவர்கள்,
அன்பு அண்ணன் தராசு அவர்கள்,
அன்பு அக்கா ஹேமா அவர்கள்


21. U – Unknown fact about me?: நான் பொய் சொல்வதில்லை.

22. V – Vegetable you don't like? பாகற்காய்

23. W – Worst habit? சோம்பேறி,(வாங்க பொறுக்குறது... கலக்க பொறுக்காதது)

24. X – X-rays you've had? வேலைக்கு சேருமுன் மெடிகல் டெஸ்ட்க்காக எடுத்தது...

25. Y – Your favorite food? பரோட்டா - குருமா - பொறித்த கோழி - ஆம்லெட் - கொத்து பரோட்டா (கேபிள் அண்ணன் போடுவதும்...)

26. Z – Zodiac sign? அக்கபோர் கொடுக்கும் அக்குவாரியஸ்

******************************************************************

1. அன்புக்குரியவர்கள் : அம்மா அப்பா

2. ஆசைக்குரியவர் : ஆடை துறந்தவர் ( காந்தி இல்லிங்கோ )

3. இலவசமாய் கிடைப்பது : இம்சை

4. ஈதலில் சிறந்தது : ஈட்டி கொடுப்பது ( அதாவது சம்பாதித்து..)

5. உலகத்தில் பயப்படுவது : உடனிருந்து கெடுப்பவர்களை

6. ஊமை கண்ட கனவு : ஊரை ஆள்வது

7. எப்போதும் உடனிருப்பது : எண்ணும் எழுத்தும்

8. ஏன் இந்த பதிவு : ஏக்கத்தை சொல்ல

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐயமின்றி கற்பது

10.ஒரு ரகசியம் : ஒரு நாள் நானு....

11.ஓசையில் பிடித்தது : ஓசி சரக்கடித்து புலம்புது

12.ஔவை மொழி ஒன்று : ஔவியம் பேசேல்.

13.(அ)ஃறிணையில் பிடித்தது: அ(ஃ)க்கபோர்

Thursday 10 September 2009

பெரிய இடைவேளைக்கு பின்...



ஒரு 'மாதிரி' சரக்கு அங்கே...
ஆனா இது 'ஒரு மாதிரி' சரக்கு.

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


அந்த கணினி கேபினுக்கு
பக்கத்தில் கிடந்தான்
அவன்

தனக்குள் பேசியபடி
இல்லை... பிதற்றியபடி

ஏதோ உந்த அருகில்
சென்றேன்

அதிக வேலை போலும்
அருகில் இருந்த குறிப்புகளே
சாட்சியம்

உனக்கு ஒரு மாற்று
தருகிறேன் வருகிறாயா?
பின் நடந்தவைகள்
சற்று நீளமான சம்பவங்கள்

நாட்கள் சில
நகர்ந்து போயின

அவனை மீண்டும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது

ஆனால் நேரே காணும்
தைரியம் எனக்கில்லை

இம்முறையும்
தனக்குள் ஏதோ பிதற்றியபடி
இல்லை உளறியபடி

கணினியில் எவனையோ திட்டிக்கொண்டும்
கண்களை அகல விரித்து
யாருக்கோ பின்னூட்டி கொண்டும்...

இனி யாருக்கும் மாற்று
கொடுப்பதில்லை என்று முடிவு செய்தேன்

"ஒருவரோட" கணினியும் பிளாகர் தளமும்
விற்பனைக்கு என "தண்டோரா" போட்டேன்.

Tuesday 8 September 2009

மூன்று கவுஜைகள்


எதிர் வீட்டு ஸ்ரீக்கு இருபத்தி அஞ்சு வயசு..
வேலை இல்லாத வெட்டி ஆபீசர்...
இரு கைகளையும் குறுக்கே கட்டியவனாக
என் முன்னே வந்து நிற்கிறான்..
"மாமா.. உள்ளே என்ன இருக்கு
கண்டுபிடிங்க பார்ப்போம்.."
எத்தனை யோசித்தும் கண்டுபிடிக்காத
முடியாதவனாய் ஏதேதோ சொல்கிறேன்..
"நீயே சொல்லிருப்பா.."
கடைசியாய் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்..
"ஒன்ன்ன்ன்...னை கூட விடலியே"
என்று வாய் குவித்து
குற்றாலமாய் வாந்தி..
தோற்றுப் போனதற்காக
வாழ்க்கையில்
முதல் முறையாய்
தண்டனை அனுபவிக்கிறேன்,
நான்தான் வாந்தியை கழுவிவிடனுமாம்...!!!

***************

பாலத்தில் வரும்பொழுது விரூமென்று
என்னை தாண்டிப் போனது ஒரு வண்டி..
பலபேரு ஆரவாரமாய் செல்கிறார்கள்
கோஷங்கள் பலமாக...
தலையில் எதோ கொடியை கட்டியவாறே.....
எப்பாடு பட்டேனும் குவாட்டரும், பிரியாணியும்
பார்க்க வேண்டும் என்ற முடிவுடன்
துரத்தத் துவங்குகிறேன் நான்..
என்னுடைய வேகத்தை விட
அதிகமாய் இருக்கிறது முன்னால்
செல்லும் வண்டியின் வேகம்..
ஏதோவொரு வளைவில் சட்டெனத்
திரும்பி காணாமல் போனது..
ஓட்டிப் போன பரதேசியை
பொறாமையோடு திட்டியவாறே
என் பாதைக்கு திரும்புகிறேன்..
கடந்து போகிறது இன்னுமொரு வண்டி..
மற்றொரு கோஷ்டியை சுமந்தபடி..
மீண்டும் தொடங்குகிறது என் விரட்டல்..!!!

***************

வோல்ட் மங்க்
வோட்கா
மானிட்டர்
மாவா
M.C
VSOP
ஷகீலா
டகீலா
சாராயம்
கள்
டோப்பு
கஞ்சா
கொகேன்
உலகின் சந்தோஷம் அனைத்தும்
பார்த்து சலித்துப் போய் விட்டேன்..
என் போதை தெளிய வேண்டும்,
மனம் நொந்து, வாய் விட்டு
கதறி அழ சோகத்தைத் தா..
கடவுளின் முன் கூனிக்
குறுகியவனாக நின்று இருந்தான்
உலகத்தின் ஹைடெக் மனிதன்..
சிரித்துக் கொண்ட கடவுள்
கைகளைத் தட்டினார்..
"பதிவுலக கவிகள்" பிறந்தார்கள்...!!!