Monday 24 August 2009

ஸ்பெசல் மானி(ட்)டரை, வாழ்த்துப்பா வாழ்த்து பா..!





அண்ணன் தண்டோரா இனி "மணி"ஜி நாளைக்கு "ஹாரன்"ஜி நாளான்னிக்கு "சைரன்"ஜி, நூறை தொட்டதை வாழ்த்தும் ஆன்றோரே சான்றோரே.....

அண்ணன் ஒரே கல்ப்பில் நூற்றி எம்பதை அனாயாசமாய் தொடுவார் என்றும் மூச்சு விட்டு, மூச்சு விட்டு தொடர்வாறேயானால் முன்னூத்தி எழுபத்தி அஞ்சி என்ன??? எழுநூறே அவருக்கு சர்வ சாதாரணம் என்று இந்த மாமன்றத்திலே சொல்லி விடை பெறு.......

மன்னிக்க... அண்ணன் தொட்டது பதிவிலே நூறாம்... அதனாலே முந்திய பத்தியை உங்கள் நினைவில் இருந்து மழித்து எடுத்துவிட்டு.... தொடருங்கள்


பதிவினில் நூறுகண்ட, அண்ணன் மணிஜி என்றும் அழைக்கப்படும் தண்டோரா அவர்களுக்கு, இந்த வாழ்த்துப்பாவை சமர்பிக்கிறேன்...

(டிஸ்கி: இரண்டு முறை போட்டிருப்பது பிழை அல்ல, அது கவிதை கதைக்கும் கலை.)

ஸ்பெசல் மானி(ட்)டரை,
வாழ்த்துப்பா,
வாழ்த்துப்பா...
என்றே என்மனம்
கூவியதால்
வந்து விழுந்தது இந்த
வாழ்த்து பா
வந்து பிறந்தது இந்த
வாழ்த்து பா
இதையும் கொஞ்சம் நீ படிப்பா, நீ படிப்பா.


நிஜப் பேரோ விளம்பரக்காரன்- உண்மையில்
நீ பெருங் கோபக்காரன்.
நீ பெருங் "கோ"
நீ பெருங் கோ(உ)பகாரன்.

புனைப்பெயரோ தண்டோராஜி
ஆளுவோரை "புட்சி"
ஆக்குவாய் "டோரா புஜ்ஜி"
ஆளுவோரை "புட்சி"
ஆக்குவாய் "டோரா புஜ்ஜி"


உடன் பிறப்பே...

நூறு அடித்த உனது
வீரம் பரணி பாடற்குரியது.

சுவை பதிவில் நீ
அடித்தாய் "நூறு"

சுவை பதிவில் நீ
அடித்தாய் "நூறு"

கன்னியர் கைவிட்ட காதலர்
அடிப்பார் "தொண்ணூறு"

கன்னியர் கைவிட்ட காதலர்
அடிப்பார் "தொண்ணூறு"

இந்த உன் சாதனையை
பாடட்டும் "புறநானூறு"

இந்த உன் சாதனையை
பாடட்டும் "புறநானூறு"

மொக்கையிலுனை சீண்டுவோர்
தமிழுலகின் "வல்லூறு"

மொக்கையிலுனை சீண்டுவோர்
தமிழுலகின் "வல்லூறு"


உடன்பிறப்பே....


நூறு அடித்துவிட்டேன் என
இறுமாந்து இருந்துவிடாதே....
செம்மாந்து இருந்துவிடாதே...

அய்யன் தந்த
காமத்துப்பால் ஒரு
"ரெண்டரை நூறு"

அய்யன் தந்த
காமத்துப்பால் ஒரு
"ரெண்டரை நூறு"

இனிக்க, இனிக்க
நீ படித்திருப்பாய்
"அகநானூறு"

இனிக்க, இனிக்க
நீ படித்திருப்பாய்
"அகநானூறு"

மறக்காமல் கழக
வளர்ச்சிக்கு அனுப்பிவிடு
நிதி "நானூறு"

மறக்காமல் கழக
வளர்ச்சிக்கு அனுப்பிவிடு
நிதி "நானூறு"

இதன் மூலம் நீ
ஆக்குகிறாய் எதிரியின்
தலையை "சுக்கு நூறு"


உடன்பிறப்பே,

என்னவென்று சொல்வேன் உன் வீரத்தை, தீரத்தை....
என்னவென்று சொல்வேன் உன் வீரத்தை, தீரத்தை....
காதலுலகின் பாவலரேறு,
பாடட்டும் உன் வரலாறு.
காதலுலகின் பாவலரேறு,
பாடட்டும் உன் வரலாறு.

நையாண்டி நைனா என் பேரு
இதை பலரிடம் கொண்டு நீ சேரு


Thursday 20 August 2009

கலைஞர் பகுத்தறிவுவாதியா...!!!



தமிழகத்து அரசியலின்
பல்கலைகழகம்,
கலங்கரை விளக்கம்,
முத்தமிழ் அறிஞர்,
பல்துறை கலைஞர்
கலைஞர் அவர்களை...

விமர்சிக்கும் வித்தகர்கள்,
பகடிபாடும் பாணர்கள்,
விகடம்செய் விற்பன்னர்கள்,
நைச்சியமாக நையாண்டி
செய்திடும் நாரதமுனிகள்
என தரணியிலே
பல்லோருண்டு.

அத்தனைபேருக்கும்
அவரே பதிலடி
கொடுக்கும் அணுகுண்டு.

அவர், எதிர் நின்று
கேள்வி கேட்கும்
திறன் யாருக்குண்டு.

அத்தனை பேரும்
ஓடி காணாமல்
போவார் வெருண்டு.

இந்த சிறார்களை
மன்னிக்கும் மனமும்
அன்பும் அவருக்குண்டு.

பலதளங்கலிலே இருந்து
ஏகடியம் பேசும்
பலரும் வைப்பதுண்டு
ஒரு குற்றச்சாட்டுண்டு
அது
அவர் போட்டிருக்கும்
மஞ்சத்துண்டு.

மஞ்சள் அணிவது
ஒரு குறைபாடா?
பகுத்தறிவின் குறைபாடா?
அல்லது செழுமதியின்
செயல்பாடா

பகுத்தறிந்து பார்த்தால்
அது ஒரு குறியீடு.
அதனுண்மைக்கு எது ஈடு.

கலைஞர்,
பழுத்த அரசியல்வாதி,
பழுத்த தமிழறிஞர்,
பழுத்த சமூகவாதி,
பழுத்த ராஜதந்திரி,
பழுத்த என
சொல்லுங்கால்
எண்ணமதிலே
மஞ்சள் வரவில்லை
சொல்லுங்காள்
மக்களே சொல்லுங்காள்

உலகிற்கு ஒளி
கொடுப்பது இரண்டு
தனல் ஆதவனும்
தண் அம்புலியும்
இரண்டும் பழுப்புநிறம்
கொள்வதுண்டு.

அறியாமை இருள்
நீக்க வந்த இந்த
சூரியன் பழுப்பு நிறம்
கொள்வதிலே என்ன குற்றமுண்டு?

இன்னும் ஒரு
விளக்கம் கொடுத்து
ஒதுங்குகிறேன் என்
கை கொண்டு.

போக்குவரத்து சந்திகளிலே,
சந்திதிருப்பீர் மூவிளக்கு
செந்நிறத்திலே,
பசுந்நிறத்திலே
மதிசால் தலைவர்
சால்வை நிறத்திலே
ஒன்று,
என்று
மூன்று.

சிந்திப்பீர் மக்களே சிந்திப்பீர்
சிந்திக்கும் திறன் பெற்றோரே
சிந்திப்பீர்...

சிகப்பின் அடையாளம்
சிறைப்பட்டு நிற்பது,
பசுமையின் விளக்கம்
பாய்ந்து செல்வது...

இவையிரண்டுமே
வாழ்வை சிறப்பிக்குமா...
ஓரிடத்திலேயே அசையா
குட்டையாக இருப்பதும்,
விளைவை முன்பின்
யோசியாது
பாய்ந்தோடுவதும்
பயந்தோடுவதும்
வாழ்விலே சிறப்பினை
கொண்டுவராது...

எதுவாக இருந்தாலும்,
எந்த சூழலாக இருந்தாலும்,
பொறுமை காத்து
நின்று நிதானித்து,
கவனித்து செய்வதே
சிறப்பாகும்.

நின்று கவனி,
கவனித்து செல்.
அந்த கவனி
என்பதின் குறியீடே...
மஞ்சள் என்பதையும்
நான் உங்களுக்கு
சொல்லவும் வேண்டுமோ?




டிஸ்கி: அடுத்து வேறு ஏதாவது ஒரு பதிவர் நான் லேபில் வைத்து போலே வைக்க முயற்சி செய்தால், அதில் என் பெயரும் இடம் பெறவே இந்த முயற்சி.

இப்பவே ஒத்துகோங்க, நான் இலக்கியவாதி...

இல்லையெனில் இந்த "கலை"வெறி தொடரும்.


Monday 17 August 2009

பதிவர் அண்ணன் ஜாக்கி சேகரும் இளையதளபதியும்....



பதிவுலக சினிமா சுனாமி ஜாக்கி அவர்கள் பல படங்கள் முதல் பலான படங்கள் வரைக்குமான லிஸ்ட் வச்சி கலக்கிட்டு இருக்குற மேட்டர் எப்படியோ, நைனாவுக்கு மேல மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற இளைய தளபதிக்கு தெரிஞ்சு போயிட்டு... எப்படியும் அடுத்த படம் ஹிட்டு கொடுக்கணும், என்று ரகசிய (ரகசியா அல்ல) ஆளுங்க மூலமா அண்ணனை தூக்கிட்டு வர சொல்லிட்டார்....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அசிஸ்டன்ட்: தளபதி உங்களை மீட் பண்ணனுமாம்... வாறீங்களா?

ஜாக்கி : வரேனே, காரு அனுப்பி இருக்காரா...?

அசிஸ்டன்ட் : காரென்ன... டாட்டா சுமோவே அனுப்பி இருக்காரு... (என்று கூறியவாறே... அவரது கண்களை கட்டுகிறார்கள்.)

ஜாக்கி : டேய்.. வென்னைங்களா, கண்ணே எதுக்குடா கட்டுறீங்க...

அசிஸ்டன்ட் : ஹி... ஹி.... மாட்டிகிட்டியாடி.... கூப்பிட்டது...இளைய தளபதி... கதை டிஸ்கசனுக்குன்னு சொன்னா ஒரு பயலும் நம்ப மாட்டேங்குறானுவ, அவரு படத்துக்கு தேவையே இல்லாத விசயத்துக்கு எதுக்கு கூப்பிடுறீங்கன்னு அவன் அவன் எஸ்கேப்பாயிறான் அதான் இப்படி ஒரு பிட்டு...

ஜாக்கி : அட நாதாரிங்களா... என்னே ஏமாத்திட்டீங்களேடா... அது சரி, கண்ணை ஏன்டா கட்டுறீங்க...

அசிஸ்டன்ட் : ஹுக்கும்... நீ பாட்டுக்கு போற வழியிலே இருக்குற லேண்ட் மார்க்கை எல்லாம் படம் புடிச்சி போட்டுட்டேன்னா.... அப்புறம் நாங்க வேற ஆளை, வேறை ஏதாவது பிட்டு போட்டு தூக்கிட்டு போவோம், அப்போ அதை பார்த்து அவன் உசாராயிர மாட்டான்...

ஜாக்கி : அட வெண்ணை வெட்டிங்களா.... இந்த உசார்தனத்தை உங்க பாசை கதை செலக்ட் பண்ணுறதுலே காட்ட சொல்ல வேண்டியதுதானடா....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஜாக்கி: டேய்.. என்ன எளவு இடம்டா இது.... நல்ல என்விரான்மன்டை பார்த்தா தான் நான் பொதுவா படம் எடுப்பேன்... இது என்ன எளவு இடமடா... வாந்தி கூட எடுக்க முடியாத மாதிரி.............. ஏற்கனவே இங்கே பலபேரு வாந்தி எடுத்திருப்பானுங்க போல இருக்கே......

அசிஸ்டன்ட்: சும்மா இருங்க, இது எங்க இளைய தளபதி கதை டிஸ்கஸ் பண்ணுற இடம்...

ஜாக்கி: ஒ... அதான் பலபேரு எடுத்த வாந்தியா கிடக்குதா....????

[விஜய் என்ட்ரி...]

விஜய் : வணக்கங்ண்ணா.....

ஜாக்கி : வணக்கம்.

விஜய் : வால்கைங்குறது (எழுத்துப்பிழை அல்ல) ஒரு வட்டம்... அதுலே இன்னிக்கு கல்லெறிஞ்சா ஓடுற நாயி... நாளைக்கு உன்னை வெரட்டுனா நீ ஓடுவே...

ஜாக்கி : (கடுபேத்தாதே... மவனே.. நாயி ஓடுற மேட்டரெல்லாம் உனக்கு நல்லாத்தான் தெரிஞ்சிருக்கு ஆனா.. உன் படம் ஓடுற மேட்டர்தான் யாருக்கும் தெரிய மாட்டேங்குது.....என்று எண்ணியவாறே...) இப்ப எதுக்கு இதை என்கிட்டே சொல்றீங்க...(பரிதாபமாக...)

விஜய் :என்னங்ண்ணா.. செய்றது... இப்படி மொக்கையா வசனத்தை கொடுத்து கொடுத்தே... என்னை நாரடிசிட்டாங்கங்ண்ணா........

ஜாக்கி : சீக்கிரம் உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னீங்கனா...

விஜய் :ஒன்னும் இல்லீங்கண்ணா.... நீங்க தான் இப்போ பதிவுலகத்திலே... சினிமாவை லிஸ்டு போட்டு பட்டைய கெளப்புறீங்கண்ணா...

ஜாக்கி: இருக்கலாம்... நான் என்ன பண்ணவேண்டும்...

விஜய் : ரீ-மேக் செய்ய வேண்டிய படங்கள், ரீ- மேக் செய்தே தீர வேண்டிய படங்கள் அப்படின்னு எனக்கு ரெண்டு லிஸ்ட்டு வேணும்...

ஜாக்கி :அந்த லிஸ்ட்டை நீங்க ஏற்கனவே வச்சிருப்பீங்க்ளே... அதை வச்சி காலம் தள்ளுற உங்களுக்கே நான் அந்த லிஸ்டை கொடுத்தா, கேபிளுக்கே கொத்து பரோட்டா கொடுக்குற மாதிரி ஆகாது...

விஜய் : அவர் பாய்ஸ், ரொம்ப மோசங்கண்ணா, இன்டர்நேஷனல் கதை சொல்லுறேம்னு சொல்லி ஹைதராபாத்தை தாண்ட மாட்டேங்குரனுங்கண்ணா...

ஜாக்கி : எண்ணிட்டே பல லேங்குவேஜிலே இருந்து லேங்குவேஜே தேவை படாத பிட்டு வரைக்கும் இருக்கு.... அதனாலே நீங்க உங்க லிஸ்ட்டை கொடுத்தீங்கன்னா.. எனக்கும் வேலை சுளுவா முடிஞ்சிரும்...

விஜய் : அப்படிங்களாண்ணா... சரிங்கண்ணா..... ஹே.... பாய்ஸ்... நம்ம லிஸ்ட்டை கொண்டுவாங்க....

(ஜாக்கி அந்த லிஸ்ட்டை பொறுமையாக படிக்கிறார்.... )

அசிஸ்டன்ட் : (அலறுகிறார்) சா........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

விஜய் :சைலன்ஸ்.... பேசிக்கிட்டு இருக்கோம்லோ........(கத்துகிறார் டென்சன்னோடு)

(இதற்கிடையில், லிஸ்ட்டை படித்த ஜாக்கி அண்ணன்... மயங்கி விழுந்து... மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறார்... )

அசிஸ்டன்ட் : இல்லே சார் லிஸ்ட்டு மாறி போச்சு சார்...

விஜய் : என்னடா... மனுஷன் கோமா ஸ்டேஜிர்க்கே போய்ட்டான்...நான் நடித்த படங்கள்லே..., ஓட்ட வேண்டிய படங்கள், ஒட்டியே தீர வேண்டிய படங்கள்...ன்குற லிஸ்ட்ட கொடுதுட்டீங்கலாடா....

அசிஸ்டன்ட் : இல்....லே சார்....

விஜய் : அப்படின்னா.. என்ன கருமத்தைடா... கொடுத்தீங்க....

(இந்த அசிஸ்டன்சை வச்சி ஆளை பிடிச்சி கதை பிடிச்சி முடிக்குறதுக்குள்ளே... என்னே கொல கேசுலே பிடிச்சி உள்ளே வச்சிருவானுங்க போல இருக்கே... என்று பதறியவாறே... மயங்கி விழுந்திருக்கும் அண்ணன் ஜாக்கி கையில் இருக்கும் லிஸ்ட்டை பிடுங்கி, எஸ்கேப்பாகி ஓடுகிறார்...)

விஜய் : அப்படி என்ன லிஸ்டை பார்த்து இவரு மயங்கி விளுந்தாருன்னு பார்ப்போமே.. என்று பார்கிறார்....ஒரு மறைவான இடத்தில இருந்து....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
லிஸ்ட் 1.சோப்பு போட வேண்டியவர்கள்.
லிஸ்ட் 2.சோப்பு போட்டே தீரவேன்டியவர்கள்.


Friday 14 August 2009

யூத்து பதிவராக...எளிய வழி.



இந்த பதிவருங்க கிட்டே நல்ல பதிவரு அப்படின்னு பேரு எடுக்குறது ரொம்ப குஷ்டமப்பா... ஆமா... கையிலே குஷ்டம் பிடிச்சி தேயிற மாதிரி மாங்கு மாங்குன்னு பதிவை அடிச்சி போட்டா கண்டுக்க கூட மாட்டேங்குறாங்க... சரி அதை, இதை போட்டு கூட பேரு வாங்கிரலாம்ன்னு வச்சிக்கோங்களேன்... இந்த பதிவருங்க கிட்டே யூத்து பதிவருன்னு பேரு வாங்குறது கஷ்டமோ கஷ்டம்.

சும்மாவா....!!! முப்பது லைனு பதிவுலே இருபது லைனுலே தான் யூத்து, யூத்துன்னு கதறனும், அப்புறம் மூனுலைனுலே "சில்வண்டு" பொண்ணுங்களை தான் சைட்டு அடிசேம்ன்னு அடிச்சு விடனும்... அதுக்கும் அப்புறம் "பெப்சி கேன்" மாதிரி ஆண்டிங்க தன்னை சைட்டு அடிச்சாங்கன்னு பீலாவை பீளிங்ஷா ஊத்தணும் மீதி இருக்குற நாலு லைனுலே சொல்லவந்த மேட்டரை சொன்னா தான் யூத்து பதிவருன்னு ஒத்துகுறாங்க... இல்லாங்காட்டி... சூ.. சூ.. சூ.. சூ.. சூதானமா பார்த்து பதிவு போடுய்யான்னு டெர்ரர் ஆக்குறாங்க.

இதை பற்றிய மேலதிக தகவல்களுக்கு தமிழகத்தின் நிரந்தர (நயன்தாரா அல்ல) யூத்து அண்ணன் கேபிள் சங்கரை அணுகவும்.அவர் மிக அருமையாக விளக்குவார், அவரு முப்பது லைனு பேசுனாருன்னா... வேண்டாம் விட்டுருங்க... அதான் இதுக்கு முந்திய பத்திய நீங்க நல்லா தெளிவா படிசிட்டீங்கல்லோ....

நாளொரு படமும் பொழுதொரு பதிவுமா இருந்த யூத்து அண்ணன் கேபிள், பதிவு போட்டு, பதிவு போட்டு யூத்துங்கறதை நிலை நாட்டுறது எளிய வழி அல்லன்னு கண்டு, மெலிய வழி தேடலானார்.

வாக்கிங், ஜாக்கிங் மட்டுமில்லாமல் ஹாக்கிங் கூட செய்து பார்த்திட்டார், ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகலை...

ஒரு நாள் இப்படி பீளிங்ஸொட அண்ணன் "ஜலக்கிரீடையிலே" இருக்கும்போது அண்ணன் கண்ணுலே ஒரு வெளம்பரம் பட்டது.... அன்றைய நாளிதல்லே...



இதை பார்த்த வொடனே கேபிள் அண்ணனுக்கு கையும் ஓடலை காலும் ஓடலே... ஐஸ்வர்யா ராய் கால்ஷீட்டு கெடச்ச ரஜினி மாதிரி, டாக்டர் பட்டம் வாங்குன விஜய் மாதிரி, வெற்றி படம் கொடுத்த அஜீத்து மாதிரி அவருக்கே கொஞ்ச நேரம், அவரையும் அந்த பொழுதையும் நம்ப முடியலே...

அன்னிக்கு நைட்டே போனை போட்டு "நான் சீக்கிரம் ஸ்லிம் ஆகணும், இதுக்கே பலபேரு பதிவு போட்டு அத்திரி பாச்சா ஆடுறாங்க, அதனாலே அந்த 5 நாளிலே 5 கிலோ குறைக்கிற 5000 ரூபாய் கோல்டு ப்ளான்லே நான் இப்பவே சேர்ந்துக்கறேன்" என்று சொல்லி ஆன்லைனிலே பணம் கட்டிட்டாரு.

கொஞ்ச நேரத்திலேயே "உங்கள் 'ரெஜிஸ்ற்றேசன்' உறுதி செய்யப்பட்டது, நாளை காலை ஆறு மணி முதல் உங்கள் 'கோர்ஸ்' ஆரம்பமாகும், வாழ்த்துக்கள்." என குறுஞ்செய்தியும் வந்து சேர்ந்தது...இதை கண்டவுடனே... பரமசிவன் படத்திலே வருகிற அஜீத்து மாதிரி தானும் ஸ்லிம் ஆகிட்டா மாதிரி, ஆனா லைலாவை விரட்டி விட்டுட்டு (ஏன்னு கேட்டா அது ஓல்டு பீஸாம்....) ஜெனீலியா கூட கனவுலே டூயட்டும் ஆடி முடிச்சி தூங்கி போனார்.

மறுநாள் காலை ஆறு மணி, "டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...

திறந்து பார்த்தால், அவரது பதிவுலே, ஹாட் ஸ்பாட்லே போட்டு பெரு மூச்சி விட்டாரே.... அனுஷ்கா. அந்த அனுஷ்கா மாதிரியே ஒரு பொண்ணு மிக குறைவா உடையுடன்... ஆனா கழுத்துலே ஒரு டாலர், அதை தன் கையில் பிடித்தவாறே ஒயிலாக போஸ் கொடுத்து நிற்க, அண்ணன் கேபிள் அப்படியே மெய் மறந்து நிற்க, "ஹே... ராசாத்தி... ரோசாப்பூ... வா... வா...." என்று பேக்-கிரவுண்ட்ல் மீசிக் மட்டுந்தான் பாக்கி......

அந்த பெண் தன் கைலே பிடிச்சிருந்த அந்த டாலரை அவரது முகத்துக்கு நேரா காட்டி, முடியுமா உன்னாலே??? என்று சவாலாக ஒரு கிறக்க பார்வை பார்க்க அந்த டாலர்லே "என்னை பிடித்தால் நான் உன்னவள், எங்கே.. பிடி பார்ப்போம்" என்று இருக்க. சைகையால் அவரை சுண்டி இழுத்து ஓட்டம் பிடித்தாள் அந்த பெண். அண்ணனும் தொடர்ந்து ஓடினார்...ஆனால் அவள் ஓடியே மறைந்தாள். இப்படி அஞ்சி நாள் போச்சி... அஞ்சு நாளும் ஓட்டம் தான் பெருசாச்சே தவிர... வேற ஒன்னும் நடக்கலே... ஆனா ஆச்சரியப்பட தக்க வகையிலே அவரும் அஞ்சு கிலோ குறைஞ்சி போனாரு.

அஞ்சு நாலு கழிச்சி... இது சரி பட்டு வராது, நாம பத்து கிலோ குறையனும்னு சொல்லி 10 நாளிலே 10 கிலோ குறையிற 9,000 ரூபாய் ப்ளான் எடுத்துக்கறேன் என்று சொல்லி பணமும் கட்டுனாரு.. இதுக்கும் வழக்கம் போல குறுஞ்செய்தியும் எல்லாம் வந்துச்சு... இவருக்குத்தான் இப்ப மேட்டர் எல்லாம் புரிஞ்சு போச்சே... நாளைக்கு பாவனா, கார்த்திகா மாதிரி எவளாவது வருவா... வந்து... பார்க்கட்டுமே... நாளைக்கு எப்படியும் 'மேட்டரை' முடிச்சிறனும் என்று முடிவோட இருந்தாரு...

மறுநாள் காலை ஆறு மணி;
"டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...

திறந்து பார்த்தால், ஏஞ்சலினா ஜூலி, நவோமி கேம்பல் மாதிரி சும்மா செம அல்ட்ரா மாடர்ன் பாரின் கேர்ல்ஸ் ரெண்டு பேரு வந்திருந்தாங்க...இவங்க கிட்டேயும் அதே மாதிரி அறிவிப்பு உள்ள டாலர், சீண்டல்....



அண்ணன்...ஆகா... இன்னிக்கு செம வேட்டை தான் எப்படியும் ரெண்டுல ஒன்னை பாத்திரலாம்னு வெரட்ட ஆரம்பிச்சாரு... ஆனா ஒன்னத்தையும், ஒன்னும் பண்ண முடியலே... ஏன் தொட்டு கூட பார்க்க முடியலை.... இப்படியே பத்து நாளும் போயிட்டு, ஒன்னும் வேலைக்கு ஆகலை, இவரு 10 கிலோ கொரஞ்சதை தவிர.

அண்ணன் திருப்பியும் அந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உங்க பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு. நான் 3 நாளிலே 30 கிலோ குறைக்கிற 30,000 ருபாய் பிளாட்டினம் பிளானை எடுத்துக்க விரும்புகிறேன் என்று சொன்னார்.

அதுக்கு அடுத்த முனையிலே இருந்து, நீங்க ஒரு முறைக்கு, இரு முறை யோசிச்சு முடிவு பண்ணுங்க இது கொஞ்சம் தீவிரமா இருக்கும் அப்படின்னு சொல்ல... அதுக்கு நம்ம அண்ணன்... இந்த "ஸ்ட்ராங் வீர் மகா வீருக்கு எல்லா பீருமே சர்பத்து தாண்டா புக்கு பண்ணுறா அந்த பிளாட்டினம் பிளானை" என்று கர்ஜித்து போனை துண்டித்தார்.

அண்ணன் அப்படியே படுக்கையிலே கிடந்து கற்பனை பண்ண ஆரம்பிச்சார். நாளைக்கு எப்படியும்... எப்படியும்... குறைஞ்சது மூணு பேராவது வருவாளுங்க... ஆபீஸ்லே வேற இது தீவிர ப்ளானுன்னு சொன்னானுங்க... அய்யய்யோ... அய்யய்யோ... நம்ம கொத்து பரோட்டாவிலே எழுதுவோமே அதுமாதிரி எதுவும் நடக்குமோ.. என்று தனக்கு தானே பேசிகிட்டே கனவு கண்டே தூங்கி போனார்.

மறுநாள் அதிவிரைவா எழுந்து கொஞ்சம் "வார்ம் அப்" பண்ணிக்கிட்டு சும்மா படுத்திருக்கிற மாதிரி பாவ்லா காட்டிகிட்டு இருந்தார்...

அவரு ஆவலுடன் எதிர் பார்த்து கிட்டு இருந்த அந்த ஒலி..."டக்..டக்.." கதவை தட்டும் ஓசை...

மிக ஆவலுடன் திறந்து பார்த்தால்......., சும்மா சிக்ஸ் பேக்குடன் அஜானபாகுவான தோற்றத்திலே, இந்த "ரெஸ்லிங்க்கு" வருவாங்கல்லோ கரு கரு தேகத்துடன், அந்த மாதிரி நாலு முரட்டு ஆசாமிங்க கையிலே டாலருடன்....

அந்த டாலரிலே "மவனே என்னாண்டே மாட்னே, நீ எனக்கு தாண்டா... முடிஞ்சா தப்பிச்சு ஓடு"ன்னு இருந்துச்சு.... அதை படிச்சப்புறம் அண்ணன் ஏன் அங்கே நிற்க போகிறார்??????

அப்ப ஓடி போனவருதான் இப்ப வரைக்கும் காணோம்...



ஆனா இப்ப இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணாமே பழைய மாதிரியே நான் யூத்து... நான் யூத்துன்னு பதிவுக்கு பதிவு, பக்கத்துக்கு பக்கம்.... கூவிகிட்டு இருக்கா மாதிரி ஒரு தகவல் வந்தது..... இவரு கெட்டது போதாதுன்னு... இன்னும் பலபேரை.....

யாராவது பார்த்தீங்கன்னா.. தகவல் கொடுங்க... பிளீஸ்....

ஏன்னு கேட்குறீங்களா?

அவருகிட்டே இருந்து நான் தப்பிச்சு ஓடத்தான் கேட்குறேன்...

Thursday 13 August 2009

உதவுங்கள் தோழர்களே, சக பதிவர் செந்தில்நாதனுக்கு...





அன்பு உள்ளம் கொண்ட சகோதரர்களே..., தோழர்களே...

சக பதிவர் சிங்கை நாதன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற, அன்பு நண்பர் செந்தில்நாதனுக்கு தற்சமயம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்திட உங்களால் ஆன உதவிகளை மனமுவந்து செய்யுங்கள்.

உயிர் காப்பான் தோழன் - பொன் மொழி

மிக உயர்ந்த தொகைதான் 33 லட்சம் என்பது... இருப்பினும் 8848 அடி உடைய இமயத்தையும் தன காலடியால் வென்ற டென்சிங் செர்ப்பா மற்றும் எட்மண்ட் ஹில்லாரி ஆரம்பத்தில் வைத்த சிறிய அடிகளே அவர்கள் அந்த பெருமலைய வெல்ல காரணம் என்றால் அது மிகை அல்ல... ஆகவே தோழர்களே..உங்களால் இயன்றதை செய்யுங்கள்...செய்யுங்கள்.

காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தில் மாலப் பெரிது


என்பது வள்ளுவன் வாக்கு, ஆகவே என்னோட நூறு ரூபாயோ, முன்னூறு ரூபாயோ அவர் உயிரை காக்குமா என்று பட்டி நடத்த வேண்டாம். அது உங்கள் அன்பை காக்கும், வள்ளுவன் வாய் மொழியை காக்கும் தமிழில் கூறப்பட்டுள்ளது உண்மை என ஊருக்கே பறை சாற்றி நம் இனபெருமை காக்கும், அனைத்திற்கும் மேலாய் மனித நேயம் காக்கும் ஆகவே கண்டிப்பாய் நண்பர் உயிரையும் காக்கும்.

தயங்காதீர்கள் சகோதரர்களே, தோழர்களே... கை கோர்ப்போம் வாருங்கள்.

இதனை பற்றி மேலதிக விவரங்கள் கொடுக்கிறேன். இது சக பதிவர் K.V.RAJA அவர்கள், தன் பதிவில் இட்டிருந்தது.... [இதனை நீங்கள் இங்கும் காணலாம்.]

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்

எனது செல்பேசி எண்: +966 508296293
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261


சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.


Monday 10 August 2009

படையப்பா இப்போ மொக்கையப்பா...




நீங்களே இந்த பதிவை / பாடலை "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்ற பாடல் மெட்டில் சற்று வாய்விட்டு பாடி பாருங்கள்...
பொருந்தி வருகிறதா இல்லையா என்பதை
உங்கள் கருத்தை பின்னூட்டதிலே சொல்லுங்க.





மொக்கை களை எழுதி பதிவினில் போடு...அடே..யப்பா.....
பதிவினை போட்டால் கமண்டதை போடு...அடே..யப்பா.....

மொக்கை களை எழுதி பதிவினில் போடு...
பதிவினை போட்டால் கமண்டதை போடு
என் பேரு மொக்கையப்பா... காஞ்சி போன சக்கையப்பா...
என்னோட உள்ளதெல்லாம் ஊத்திகிட்டு மட்டையப்பா....

நெஞ்சில் பீடி புகையப்பா... பின்னால் நூறு பகையப்பா...
பந்திக் கென்று வருகையில் பத்துவிரல் படையப்பா
மொக்கையுள்ள பதிவனப்பா... நான் பதிவு வச்ச அனானியப்பா...

என்றும் கும்மியடிப்பேன் நானப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா

பத்துபக்கம் படிக்கிற மொத்த சோகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதிவும் வேண்டாம்
ஓட்டுகள் இடவேண்டாம் நல்ல பரிந்துரையும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே

என் ஒரு பக்க மொக்கைக்கு இரு பக்க கமண்டை கொடுத்தது தமிழல்லவா
என் உடல்பொருள் ஆவியை தமிழிஷுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா

உன் பதிவை எம்பி உயர்த்திட பாரு
உனக்கென கெளப்பு ஒரு தகராறு
உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுப வேளை நாளை மாலை சூடிடு

அட எவனுக்குள்ளே எப்ப சண்டை எவனுக்கு என்ன இழப்பு கண்டதில்லை ஒருவருமே
ஒரு மொக்கைகுள்ளே அடைப்பட்ட நல்பதிவு சூடாகும் அதுவரை தமிழ்மணமே...


Thursday 6 August 2009

அழகுக்கு எதிர்பெயர் நீதானே...



உன்னை பார்த்த தேவர்கள் எல்லாம்
பிரம்மனை சேவிக்கிறார்கள்..
நல்ல வேளை இப்படி ஒருத்தியை
தேவலோகத்தில் படைக்கவில்லையென...

*********

நீ சோம்பி தூங்கும்
அவலத்தை பார்த்தே தினம்
உக்கிரமாய் தகிக்கிறான்
சூரியன்.

*****

இறந்த பிணம் தான்
பேயாக வருமாம்..
நீ நகம் கொறிக்கையில்
இறந்த பேய்களும் மிரண்டோடுகிறன..

*****

இந்தியாவின் இருண்டகாலம்
தற்போது தானாம்..
இருக்காதா பின்னே
நீ பிறந்தது பிப்ரவரி 19/91.


*****

என் கண்ணில்
விழுந்த தூசியை ஊதினாய் நீ..
தாளாமையால் அழுகிறது
என் நாசி..

******

இறுதி கவிதைக்கு பதில் அந்த கவிஞருக்கு ஒரு குறிப்பு:
இந்த கவிதைக்கு சொந்தமான கவிஞரே... உங்கள் ஐய்யம் தீர்ந்ததா... ஆனாலும் நீர் புத்திசாலி கண்டுபிடித்து விட்டீரே... சரி... சரி... அந்த ரகசியத்தை காப்பாற்றி வையும் உங்களுக்கு புண்ணியமா போகும்...Please...


*******
காதலுடன்???

Wednesday 5 August 2009

பதிவுலக ஆத்திசூடி




அக்கபோர் விரும்பு

ஆற்றுவது ஹிட்சு

இடுகையது நீக்கேல்

ஈயடிக்கிற பதிவு போடேல்

உடையது ஜட்டியே

ஊக்க மது கைவிடேல்

எந்த பதிவையும் இகழேல்

ஏற்பது பின்னூட்டம்

ஐய என ஓடேல்.

ஒப்பேற்றுவது மொக்கை

ஓட்டுவது ஒழியேல்.

ஒளவியம் ரசி.


Tuesday 4 August 2009

சரக்கின் மாண்பு



நல்ல சரக்கு அங்கே, அதை தழுவி காச்சிய நல்ல சரக்கு இங்கே.

குடி போற்றுதும் குடி போற்றுதும்
என்னைத் திட்டும் சாக்கில்
ஏன் குடியை இழிவு படுத்துறீர்
குடி வளர்ப்பதை விடவும்
அதிக அக்கறையுடன்தானே
குடி வளர்க்கிறீர்

ஏழுவித சரக்கு
எட்டுவித மார்கட்டிங்
பதிமூன்று சைடு டிஸு
இருபது வகை கடைகள்
என குடி வளர்த்துவிட்டு
ஏன் போதையிலரட்டுகிறீர்கள்
கட்டாந் தரையிலும்
ஊரல் போடும்
நவீன முறை தேடித்தானே
சிண்டைப் பிய்த்துக் கொள்கிறீர்

என் உளரலைத் திட்டுங்கள்
காரி உமிழுங்கள்
இயன்றால்
எதிருளறல் எழுதுங்கள்
முடிந்தால்
குவாட்டர் விட்டுட்டு
குப்புரப்படுங்கள்

நாட்டு வருமானத்தில்
எழுபது சதவீதம்
குடியாலென்று அறிவீரோ
குடி போற்றுதும் குடி போற்றுதும்


அனுமதி வழங்கிய அண்ணன் ஜ்யோராம்ஜி அவர்களுக்கு நன்றி.

ஒலகப்படமும், வாலுவும் நானும்.



நம்ம அண்ணன் பைத்தியக்காரன் அண்ணாத்தே அல்லாருக்கும் ஒலக அறிவும் வளரட்டும்னு ஒலகப்படம் போட்டு காமிக்குறாறு, அதை பார்க்க பல பேரு போனாங்க, போறாங்க. அப்படி போனவாரம் போட்ட படத்தை பார்க்கை நம்ம வால் பைய்யனும், நைனாவும் போனாங்க, அப்படி போன இடத்திலே......................................

"ஹே....நைனா என்ன படம்யா இது...!!!"

"என்ன படமா லெமன் ட்ரீ படம்ண்ணே"

"அது தெரியுது... லெமன் எதுக்குயா ஆகும்?"

"என்ன இப்படி கேட்டுடீங்க, லெமன் எல்லாத்துக்கும் ஆகும்ண்ணே"

"என்ன எல்லாத்துக்கும் ஆகும்?"

"எல்லாதுக்கும்னா?"

"எல்லாத்துக்கும் தான்"

"தெளிவா சொல்லுய்யா...."

"வாலண்ணே... சரக்கு நெறைய அடிக்கனும்னா ஊறுகா வேணும், அந்த ஊறுகா செய்ய லெமன் வேணும், அந்த லெமன் ஊறுகா வச்சி சரக்கு அடிச்சி ஓவரா போய்ட்டா அந்த போதைய இறக்க லெமன் வேணும், அதனாலே போதைய ஏத்தனும்னாலும் லெமன் வேணும் ஏறுன போதைய எறக்கனும்னாலும் லெமன் வேணும், இப்படி தெளிவா சுளுவா இருக்க மேட்டரை நம்ம நமிதாவை வச்சி வெளக்கமா சொல்லுவாங்கன்னு வந்தா... இங்கே வெவரமே வேறா இருக்கே... இது ஆவுறதில்லை...."

"அதனாலே தான் நா ஒரு ஐடியாவோடதான் வந்திருக்கேன்... ரெண்டு லெமன் ஊறுகா வாங்கிட்டு வா நாம நைசா கழண்டு போய் மூணு ரவுண்டு ஏத்திட்டு அப்பிடியே எஸ்கேப்பாயிருவோம்"

"என்னய்யா ரெண்டு பேரும் எதோ மாதிரி இருக்கீங்க... இங்கே ஒரு போலீஸ்காரன் நான் இருக்கேன், என்னை கூட மதிக்காமே....."

"நீங்க இப்படி அதிகாரமா உரையாடினா....நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்...."(கோரசாக)

"அடிங்... எங்கே போயிட்டு வாறீங்க...."

"ரெண்டு பேரும் ஒலகப்படம் பார்த்துட்டு வாறோம்..."

"என்னாது ஒலகப்படமா... அப்பிடின்னா என்னா???"

"சார் ஒலகப்படம்னா, படார்னு, பளிச்சின்னு காட்டாமே எல்லாத்தையும் கம்மியா காமிச்சி... பிரம்மாண்டத்தை, வீரியத்தை, உணர்ச்சி கொந்தளித்து எழுவதை மக்கள் மனதிலே கற்பனைல உருவாக்குறது..."

"வாலண்ணே... நீங்க சொல்றது நமீதா படம்னே... சார் கேக்குறது ஒலகப்படம்...!!!"

"யோவ்.. நைனா... பேசாமே மூடிகிட்டு இரு, நான் சமாளிச்சிகுறேன், சார்.... ஒலகப்படம்னா இங்கிலீசு படம் சார்"

"ஒ.. நீ இங்கிலீசு படம்லாம் பார்குற ஆளா...இங்கிலீசுலே பெரிய ஆளா... அப்படின்னா நான் கேக்குறதை சொல்லிட்டு இங்கே இருந்து போ... Green, Pink, Yellow, இது மூணும் வர்றா மாதிரி ஒரு வாக்கியம் சொல்லு."

இந்தா சொல்றேன் சார்..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”

இதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொன்னா அது தமிழ் பட கிளைமாக்ஸ்... நீங்களே கெஸ் பண்ணிகோங்க... அதுதான் இங்கிலீசு பட கிளைமாக்ஸ்.... சாரி ஒலகப்பட கிளைமாக்ஸ்.