Thursday 26 February 2009

A.R.ரகுமான் விருது வாங்க நானே காரணம்...

இன்று A.R.ரகுமானை வைத்து பலபேரு பல விதமா எழுதுறாங்க. சில பேரு பாராட்டி எழுதுறாங்க, சொல்றாங்க, சில பேரு எதோ சொல்லனுமே, எழுதனுமே என்று. இது அவரை வைத்து ஒரு மலிவான விளம்பரம் தேடும் முயற்சியே. இப்படி ஆளாளுக்கு ஆதாரம் இல்லாமல் எதேதோ சொல்லிகொண்டிருக்கும் இந்த வேளையிலே ரகுமானின் வளர்ச்சிக்கு உண்மையிலே கை கொடுத்து உதவிய நான் சொல்லிக் கொள்ள கூடாதா?

அன்று ஒரு அருமையான நாள், ஆம்! சென்னையின் இரத்த ஓட்டம் போன்று இயங்கும் பல்லவன் பேருந்து இயங்கி கொண்டிருக்க, நான் வழக்கம் போல பள்ளி செல்ல காத்திருந்தேன். பேருந்து நிறுத்தத்தில். அன்று ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடக்க போகிறது என்று எனக்கு தெரியாத காரணத்தால் அது எந்த பேருந்து நிலையம்? எந்த பேருந்து? என்று நான் நினைவில் நிறுத்த மறந்து விட்டேன்.

வந்தாரய்யா... நம்ம பல்லவனாரும், மக்கள் கூட்டத்தை நிரப்பி கொண்டு. நானும் முண்டியடித்து கொண்டு ஏறி படியில் நின்று கொண்டேன். அப்போது ஒரு சிறுவன் தன் கையில் கீ-போர்டு வைத்து கொண்டு, விரைவாக பேருந்தை பிடிக்க வந்தான், அவன் கண்ணிலே அப்போது ஒரு கூர்மை இருந்தது, காலிலே வேகம் இருந்தது, கைகளிலே பரபரப்பு இருந்தது, பேருந்தோ புறப்பட்டு சிறிது, சிறிதாக வேகம் பிடித்து கொண்டிருந்தது, அந்த சிறுவனோ விடுவதாக இல்லை, ஒரு கையில் கீ-போர்டை வைத்து கொண்டு மறு கையை நீட்டியவாறே பேருந்தை பிடிக்க முயன்று ஓடி வந்தான்.

இந்த சமயத்தில் நான் என் கையை நீட்டி அவன் கரத்தை பற்றி இழுத்து அவனை மேலே வர செய்தேன் அவனும் மேலே வந்து படியில் நின்று கொண்டு பயணம் செய்தான். அப்போது அவனிடம் இருந்த படபடப்பு காரணமாயும், அப்போது எனக்கு அது தேவையும் இல்லாத காரணத்தினால் அவனுடைய பெயரை கேட்க மறந்து போனேன்.இன்று நாளிதழை கண்ட போதுதான் அன்று நான் கைதூக்கி விட்ட சிறுவனே இந்த A.R.ரகுமான் என்று தெரிகிறது. ஆகவே இன்று A.R.ரகுமான் ஆஸ்கார் வாங்க நானே காரணம் என்று பெருமையுடன் கூறி கொள்கிறேன்.

அன்று மட்டும் அந்த சிறுவனுக்கு நான் கை கொடுக்க வில்லை என்றால், அவனுக்கு அன்று இசைப்பள்ளியில் அட்மிசன் தவறி போய் இருக்கும். பின்னே எப்படி? இன்று ஆஸ்கார் வாங்க முடியும். ஆகவே ரகுமான் ஆஸ்கார் வாங்க நானே காரணம் என்று மீண்டும் கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன் போன்ற பதிவுகளையும், செய்திகளையும், படிக்காமலும், எழுதாமலும், நேரத்தை விரையம் செய்யாமல் திறமையை நம்பி உங்கள் வேலையை செய்தால், உங்களுக்கும் உங்கள் துறை சார்ந்த விருது கிடைக்கும், அப்போது இந்த மொக்கை பதிவை நான் மீள் பதிவு செய்து நீங்கள் விருது வாங்க நானே காரணம் என்று பதிவு செய்வேன். நன்றி வணக்கம்.


* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Tuesday 24 February 2009

"பொங்கு பீர் வாழ்க்கை" -'shake'கிழார்.

நைனா, விவசாயி, போண்டா, நாட்டமை, குச்சி, ஆத்தா, அழுக்கு, கொல்ட்டி, தல, விஜயகாந்து மன்சூர்அலிகான் அனைவரும் அங்கே ஆஜர். இதெல்லாம் படிச்ச உடனே அதை எதோ அரச மரத்தடி, ஊர்கூட்டம் என்று நினைக்க வேண்டாம். இவர்கள் எல்லாம், ஜாவா, ஆரகில், டாட் நெட், டெஸ்டிங், டேட்டா, டேட்டா பேஸ், டேட்டா வேரௌசிங், நெட்வொர்கிங், அட்மின் என அந்த அந்த டெக்னாலஜியில் கொட்டை தின்னு பழம் போட்டவங்க.

வேற வேற ஊரிலே இருந்து வந்திருந்தாலும், இன்று அனைவரும் ஒன்று. குச்சிக்கு சுகமில்லை என்றால் ஆத்தாவும், நைனாவும் லீவு போட்டு விட்டு இருந்து சரக்கடித்து கொண்டே கவனித்து கொள்வார்கள், விஜயகாந்து பிகர் மடிக்க மன்சூர்அலிகான் உதவி செய்து அடியும் வாங்குவார், விவசாயி சாப்பிட நாட்டாமையும், கொல்டியும் பணம் போட்டு சாப்பாடு வாங்கி வருவார்கள், இப்படி பல சொல்ல முடியும் என்றால் அந்த பாசப்பிணைப்பை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


சனிக்கிழமை மாலை, 'ரம்'மடித்து, ரம்மி ஆடும் 'ரம்மி'யமான பொழுது...

"ஹே மாப்ஸ் ... இன்னைக்கு நம்ம 'அழுக்கோட' ஆளு அவனுக்கு பல்பு கொடுத்துட்டு போய்ட்டா...அதனாலே மச்சான் ரொம்ப பீலிங் ஆவுறான்...அவனோட சந்தோசமோ துக்கமோ நாம பங்கெடுக்கணும் இல்லையா... அதனாலே இன்னைக்கு கச்சேரி வச்சிருக்கு, இங்கே உள்ள குடிமகன்களெல்லாம் வருகை தந்து விழாவை சிறப்பித்து தரும்படி கேட்டு கொள்ளபடுகிறார்கள்.."

"ஹுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........"

"நா....ட்ட்ட்டாமை... லோகேசன் எங்கேடா? மௌர்யாவா? இக்னைட்டா? இல்லே சமத்துவபுரமா?" என இரைந்தான் கொல்டி

"எதுவும் இல்லை, நம்ம ரூம்தான்"

"நாட்ட்ட்ட்ட்டா...........மை தீர்ப்பை மாத்தி சொல்லு.... " என அனைவரும் இரைந்தார்கள்

"டே, கொல்டி நீ ஆத்தா கூடபோய் சரக்கு வாங்கிட்டு வா பஸ்ட்டு, அதுக்கப்புறம் அதை இங்கே வச்சிட்டு போய் பெப்சி, சோடா எல்லாம் வாங்கிட்டு வாங்க. நைனாவும், விவசாயியும் போய் பழம், மிச்சர், காரசேவு, சிக்கென் அயிட்டம் எல்லாம் வாங்கிட்டு வந்திருங்க, விஜயகாந்தும், மன்சூரலிகானும் போய் சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு வந்திருங்க அப்புறமா போன் பண்றோம் அப்ப கொடுத்து அனுப்புங்க என்று சொல்லிட்டு வந்திருங்க, நானு, போண்டா அழுக்கு எல்லாரும் ரூமை ரெடி பண்றோம், ஹே.... தல, நீ நம்ம டீ கடைக்கு போய், மாஸ்டர் கணபதி கிட்டே நான் கேட்டேன்னு அவர் வச்சிருக்கிற சோகப்பாட்டு, குத்து பாட்டு ரெண்டையும் வாங்கிட்டு, அக்கௌன்ட்லெ சிகரட்டும் வாங்கிட்டு வந்துரு யாராருக்கு என்ன பிராண்டுன்னு உனக்கு தெரியுமில்லே...."

சங்க காலத்திற்கு முன்னிருந்தே இருக்கும் பழக்கங்கள் பல அதில். பேதைகளை கண்டு போதைகளை ஏற்றும் கலையும், பின்னர் போதை ஏற்றி பேதைகளை மறக்க முயற்சி செய்யும் கலையும், அன்றும் இன்றும் என்றும் மாறாதது. அதனாலே இங்கே சுவாரசியத்திற்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் பஞ்சமிருக்காது.


"... டே....ய் நைனா எது எதுல்லாமோ சொல்லுவியே, நம்மளோட, அழுக்கோட இந்த சிச்சுவேசனுக்கு ஒன்னு சொல்லு பார்போம்?" , என்று தொடங்கினான் குச்சி.

"டேய் குச்சி, உனக்கு எவனையாவது கொடையலன்னா, தூக்கமே வராதே" இது போண்டாவின் நக்கல் வார்த்தைகள்.

"ஏன்டா.... ஆரம்பிக்கிறதுக்கு முன்னேயே நீங்க ஆரம்பிசிட்டீங்கலாடா...???" என்று ஆவேசமான ஆத்தாவை "ஆத்த்த்த்த்தா, அவன் தெரியாம செஞ்சிட்டான், அதுக்காக நீ ஆரம்பிசிராதே ஆத்த்த்தா....ஆஆஆ" என்று சமாதான படுத்தினான் தல

அனைவரும் வட்டமாக அமர்ந்து கொண்டார்கள், 'கொல்டி', 'நாட்டாமை', 'குச்சி' மூவரும் பியரோட காத்திருக்க, மற்றவர்கள் தங்கள் கிளாசை 'விவசாயி' முன்னாடி வைத்தார்கள் 'தண்ணி'பாச்ச. நைனாவை எடு பிடி வேலைக்கும், யாரவது வந்தால் பதில் சொல்வதற்கும், யாருக்காவது போன் வந்தால் பதில் சொல்வதற்கும் இடையில் ஏதேனும் தேவை பட்டால் வாங்கி வருவதற்கும், சைடு டிஷை காலி பண்ணுவதற்கும் வைத்து கொண்டார்கள். கச்சேரி ஆரம்பிச்சு கண ஜோரா மூணு ரவுண்டு போச்சி...

"டேய்.... ங்கொய்யாலே நைனா இப்போ சொல்லுற உன் பாட்டை.... " - குச்சி.

"நான் சொல்லவில்லை 'shake'கிழார் பெருமான் சொன்ன பாட்டு ஒன்னு இருக்கு புடிச்சிக்கோ ...."

இந்தா அந்த பாட்டு:

"பொங்கு பீர் வாழ்க்கை அன் சிறை
தம்பிநாமும் தப்பாது குடிப்பது ஒழியுமோ
பாரிலியது செழீஇய நட்பின் மயலியல்
ஏறி கயிற்று தருவை கூந்தல்லில்
களியவும் உளதோ நீ மடிக்கும் பிகரே"


"என்னடா.... இவன் ஏறுன போதைய இறக்கிருவான் போல இருக்கே......?, இப்ப நீ என்னதான் சொல்ல வரேடா....?" என்று எரிச்சலடைந்தான் தல.

"அவன் இவன் என்று ஏக வசனம் தேவை இல்லை, அவை அடக்கத்துடன் கேட்கா விட்டால் தக்க "பதிலடி" கொடுக்கப்படும்" -விஜயகாந்து.

"மன்சூர் அலிகானிடம் வாங்கின அடிய என்கிட்டே கொடுக்கலாம்னு பாக்குறியா? அது இங்கே நடக்கதுடீ....." என வெறுப்பேற்றினான், தல.

நாட்டாமை களத்திலே வந்து " இங்கே பாரு நைனா, எங்க தமிழ் வாத்தியார், தேவ கசாயம்....., சார்ர்ர்ர்ரிப்பா தேவ சகாயம் மாதிரி அறுக்காம பட்டுன்னு மேட்டரை சொல்லு"

"இதப்பாருரா, சங்க புலவர்கல்லாம் ஒன்னா சேர்ந்திடுசி...", என்று சொல்லி கொண்டே விவசாயி, அழுக்கு, கொல்ட்டி, விஜயகாந்து மன்சூர்அலிகான் எல்லாம் ஒரு சிறு குழுவாகி சவுண்டு விட ஆரம்பித்தார்கள்.

"குடிகாரர்களே..! சாந்தமாக உரையாடுங்கள்" - நாட்டாமை

"சண்டையும், சத்தமும் குடிகாரர்களின் பரம்பரை சொத்து, அதை மாத்த யாராலும் முடியாது." இது நைனா.

"ஏ ... யப்பா ... நைனா, உம் பாட்டுக்கு வெலக்கத்தை சொல்லு" என்று போதையில் வெறித்தான் குச்சி.

"பொங்கி வரும் பீர் போன்றது வாழ்கை. அன்பு சிறையில் கட்டுப்பட்டுள்ள தம்பீ... நாமும் வாரம் தவறாது குடிப்பது ஒழியுமோ? பாரில் உண்டான நட்பு, அதாவது பார் என்று நாம சரக்கடிக்கிற பாரையும் சொல்லலாம், எல்லாருக்கும் வாழ இடம் கொடுத்திருக்கிற இந்த உலகத்தையும் சொல்லலாம். பாரில் உண்டான நட்பு, பிரியம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டது, நீ கயிறு கட்டி சொந்தம் ஆக்கி கொள்ள விழையும் பெண்ணின் கூந்தலில் உள்ள மணத்திலும் விஞ்சி விடுமோ? நட்பின் மணத்தினால் நாம் கொண்ட நட்பு"

"இதன் மூலம், நைனா... நீ அழுக்குக்கு கூறும் கருத்து?" - குச்சி.

"கவலை படாத சகோதரா, உன் பிகர் கைவிட்டாலும், கைவிடாது நாங்கள் நண்பர்கள் இருப்போம்" என்று சொல்கிறார்.

"எய்யா நைனா, சாமி.... போதும்டா ..உன்னோட ... வெளக்கம்..." என்று எல்லாரும் கோரசாக சொல்லி தீர்த்தமாடி மட்டையானார்கள்.

'shake'கிழார் பெருமான் தந்த அருமையான பாடலை அசை போட்டபடி, நைனாவும் தூங்கிப்போனான், வாழ்க 'shake'கிழார் என்று முனு முனுத்தவாறே......

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அறிவிப்பு : இது யாரையும் புண் படுத்தும் நோக்குடன் எழுதப்பட்ட பதிவல்ல. நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.

Friday 20 February 2009

கல்யாணமான நண்பர்களை பார்த்து, கல்யாணமாகாத நண்பர்கள்...

இப்ப பத்து கேள்விகள் கேட்கும் சீசன் போல இருக்கு, அதனாலே நானும் என் பங்கு கேள்விகளை கேட்டு வச்சிறேன். இதை நான் இப்ப மிஸ் பண்ணிடேம்னா, அப்போ நாளைக்கு நான் இல்லை, யா..ரும் பீல் பண்ண கூடாது பாருங்க அதுக்கு தான்,


சரி..... கேள்விக்கு போகலாமா?


1. பால் காச்சுறது, வெந்நீர் அளவா சுட வைக்க தெரியாத நீங்கல்லாம் கல்யாணம் செய்துக்க ஆசை பட்டது ஏன்?

2. உங்க வீட்லே நடக்கிற கல்யாணம், உங்க கல்யாணம் எல்லாத்துக்கும் வந்து நாங்க வேலை பார்க்கிறோம், சரக்கடிகிறோம். ஆனா நாங்க ஒரு பார்ட்டி வைச்சு கூப்பிட்டா கரெக்டா அன்னைக்கு மட்டும் உங்க மேனேஜர் உங்களுக்கு முக்கியமான வேலை கொடுத்திடுறாரே எப்படி?

3. உங்களோட ஓல்டு பிராண்டோ, இல்லை உங்க வைப்போட ஒன்னு விட்ட சித்தப்பா வந்தால் எங்களை ஸ்டேசனுக்கு அனுப்பி ரிசீவ் பண்ண சொல்ற நீங்க உங்க மச்சினிச்சி வந்தா நீங்களே போய் ரிசீவ் பண்றீங்களே எப்படி?

4. மச்சினிச்சிக்கு காலேஜ் பீஸ் கட்டுறது, மச்சினிச்சி ரெசுயூம் பார்வர்ட் பண்றது எல்லாம் கரீட்டா மனசுலே வச்சி பண்றீங்க, ஆனா எங்க ரெசுயூம் பார்வர்ட் பண்ணவோ, ஒரு அம்பது நூறு கடன் கேட்டா, என்ன? பண்ணினாலும் உங்க மனசுலே நிக்க மாட்டேங்குதே அது ஏன்?

5. உங்க மாமியார், மாமனார் பொறந்தா நாளெல்லாம் தெரிஞ்சி வச்சிகிட்டு அர்த்த ராத்திரிலே விஷ் பண்ணுறீங்க, எங்க பொறந்த நாளெல்லாம் தெரிஞ்சிருந்தாலும் மறந்து போறீங்களே அது எப்படி?

6. மற்ற நாளெல்லாம் சும்மா இருக்க, உங்க வீடு ஷிப்ட்டு பண்ணினாலோ, இல்லை வெள்ளை அடித்தாலோ வேலை நேரத்தில் மட்டும் எங்க நியாபகம் வருதே அது எப்படி?

7. மற்ற நாளெல்லாம் நேரா வீட்டுக்கு போய் விடுகிற நீங்க, உங்க மனைவி ஊரிலே இல்லாதப்ப மட்டும் எங்க ரூமுக்கோ, மேன்சனுக்கோ வந்து தண்ணி அடிக்க வா, சீட்டாடவா என்று படுத்தி எடுக்குறீங்களே ஏன்?

8. நாங்க ஏதாவது சொல்லிட்டா 'ரட்சகன்' நாகர்ஜுன மாதிரி வருகிற நீங்க, உங்க மனைவி கிட்டே மட்டும் எந்த ரியாக்சனும் காட்டாமே 'பாட்சா' மாணிக்கம் மாதிரி கைய தலைக்கு பின்னாலே கட்டிக்கிட்டு, படுத்துகிடந்து, என்ன திட்டுனாலும் வாங்குறீங்க, அது எப்படி?

9. உங்க கல்யாணத்தை மட்டும் சீக்கிரம், சீக்கிரம் என்று அவசர பட்டு குதிச்சி கல்யாணம் முடிசிகிட்ட நீங்க, நாங்க கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னா மட்டும் அட்வைஸ் சொல்லி அறுக்குறீங்களே ஏன்?

10. அப்புறம் எல்லாத்துக்கும் மேல, நீங்க பெரிய ஒழுக்க சீலன் மாதிரியும், நாங்க தான் கேடு கெட்ட குப்பன் மாதிரியும் உங்க மனைவிகிட்டே இமேஜ் பில்டப் கொடுக்குறீங்களே, அது ஏன்?

நான் நம்ம தரப்பு கேள்விகளை வச்சிருக்கேன், காளைகளே உங்க ஆதரவை பின்னூடத்திலே சொல்லிட்டு போங்க. அணி திரள்வீர் அண்ணன் நையாண்டியின் கரத்தை வலுப்படுத்த...

Tuesday 17 February 2009

லெட் அஸ் சீ

"டே சுதாகர், இன்னைக்கு வந்த அப்பர்ச்சூநிடீஸ் பேப்பரை எங்கேடா?" என்று கேட்டவாறே வந்தான் விமல்.

"அந்த செல்பிலே கீழே இருக்கும் பாரு" என்று பதில் கொடுத்து, தான் படித்து கொண்டிருந்த புத்தகத்திலே மூழ்கினான் மீண்டும்.

பேப்பர் பார்த்த விமல் முகத்திலே மலர்ச்சி, "டேய் மச்சி.... இன்னைக்கு டீ. டீ. கன்சல்டன்சி செர்விசெஸ் விளம்பரம் கொடுத்திருக்கிறான் பார்த்தியா"

"ஆ...மா. அவன்தான் வாராவாரம் கொடுக்கிறானே." என்றான் சலிப்புடனே சுதாகர்.

"இல்லைடா, இந்த வாரம் நம்ம டெக்னாலஜியும் கேட்டு இருக்கான்டா"

"அப்படியா....!" என்று வேகமாக புததகத்தை கீழே வைத்து விட்டு வந்து பார்த்தான் சுதாகர்.

அங்கே பார்த்து கொண்டிருக்க இங்கே படபடத்து கொண்டிருந்தது, அவன் வைத்து விட்டு சென்ற " வாங்க மாடு மேய்க்கலாம்" By நேசொவந் கண்ணாடிகாரர்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

நல்லா இல்லன்னா காண்டாகிறாதீங்க. இது என்னோட கன்னி முயற்சி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Thursday 12 February 2009

இடைத் தேர்தல்... கடைக்கண் பார்வை..அழகியல்! கும்பர்...

"அவள பார்த்தியா,என்னா திமிர் இருந்தா அப்பிடி ஒரு கேள்வி குதர்க்கமா கேட்பா?"

"யாரு கமலா? என்ன கேட்டா?"

"அந்த ராஜிதான்...என்ன இப்ப செளக்கியமானு கேட்குறா?"

"அதுல என்ன தப்பு..சாதாரணமா கேட்குறதுதானே?"

"ம்ஹூம்..அதுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கு..எனக்கா தெரியாது? என் அப்பா இந்த தொகுதி M.L.A. அவரை போட்டு தள்ளி இந்த தொகுதிலே இடை தேர்தல் வர வச்சதே அவங்க ஆளுங்க தான்.. எங்க வீட்லே வேற ஆண் வாரிசு இல்லை அப்படிங்குறத தைரியத்துலே கேட்குறா?"

"நீயா வேற அர்த்தம் எடுத்துக்கிட்டா யாரு என்ன பண்ணமுடியும்?? அட்லீஸ்ட் நல்ல சுவாரயஸ்யமான மேட்டர்லயாவது இந்த மாதிரி கற்பனையா நிறைய அர்த்தம் எடுத்தாலும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.. இப்பிடி ஒன்னுமே இல்லாத மேட்டருக்கு இந்த ரியாக்ஷன் தேவையா?"

"என்னோட இந்த ரியாக்ஷன விடு.. வர்ற இடை தேர்தல்லே நானே நின்னு எங்கப்பா இடத்தை பிடிக்கலே என் பேரு கமலா இல்லை"

* * * * *
அவளோட காதலன் அழகன் கிட்டே கமலா " தேர்தல எப்படி கையாளனுமோ, கையாண்டுக்கோ ஆனா நான் ஜெயிக்கணும்".என்று சொல்லி ஜெயித்து விட்டாள். நடந்த காட்சிகளை கும்பன் விவரிக்கிறான்...

அழகன், எலேச்சன் டையதிலே ஊத்து, கூத்துன்னு பல கைங்கர்யங்கள் செய்து, பூத்து கைப்பற்றுதல், பணத்தை வாரி இறைத்தல், மிரட்ட வேண்டிய ஆளுங்களை மிரட்டி உரைத்தும் ஒரு வழியா ஜெயிக்க லைன் கிளியர் பண்ணி, இப்போ பதவி ஏற்பு விழாவும் ஏற்பாடாயிருச்சு. அழகான அழகன் இன்னும் அழகா வந்தாச்சு..இப்போ கமலா, அழகன், அழக பார்க்கணும்.. என்ன? தான் இந்த காலத்து பொண்ணா இருந்தாலும், அரசியல்வாதி பொண்ண இருந்தாலும், காதலனை பல பேரு முன்னே பார்க்க கூச்சமாய் தான் இருக்கிறது அவளுக்கு.

ஆனாலும் அவங்க கண்ல மண்ண தூவிட்டு அழகன் அழக பார்த்தே ஆகணும், அதனால சிம்பிளா தன்னோட கையாலே, நெற்றி, சிகை மற்றும் அந்த சிறிய அளவிலான முக அலங்காரம் ஆகியவற்றை சரி செய்யும் சாக்கில் ஒரு பார்வ‌ பாக்குறா கமலா..

அப்போது அவளுக்கு அவனை பற்றி பல எண்ணங்கள்? எப்போதும் சரி, பார்க்க சாதுவா இருக்கும் இவனா நமக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தேடி தந்தவன். இவன் உண்மையிலேயே சாதுவா இல்லை நம் மேல் பயித்தியமாய் இருக்கும் சேதுவா என்று எண்ணி, சந்தேகம் கொண்டு பார்க்கிறாள்.

* * * * *

"இது எல்லோரும் பண்றது தானே.."

"எது?"

"காதலனை காதலி பார்ப்பது, மற்றும் இன்ன பிற... செயல்கள். "

" O.k.. தான் ஆனா இந்த பாட்டிலே... ஏன் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை சரி பண்றமாதிரின்னு கும்பர் எழுதியிருக்கணும்?"

"ஏன்?"

"எல்லா பெண்களும், தான் அழகோ இல்லையோ, அடுத்தவ அழகா? என்று காணுவதிலேயே பெரும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். அந்த சைக்காலஜியை பயன்படுத்தி, பிற பெண்களின் பார்வையை அவன் மேல் விழாதவாறு தன் பக்கம் திருப்பி, தன் காதலனை காணுகிறாள். இது ஒரு கோணமா?"

"பெண்களுக்கு, ஆபரணங்களை விட அவளை சுமங்கலியாய் அறிவிக்கும் நெற்றிக் குங்குமம், மற்றும் சூடும் பூ மேலேயே அலாதி பிரியம் இருக்கும். ஸோ..இவ நெற்றி, சிகை, சரிசெய்யுற மாதிரி, இன்று வெற்றி திலகம் தாங்கும் இந்த நெற்றி, நாளை உன்னுடைய மங்கள திலகத்தையும் தாங்கும் என்றும், இன்று வெற்றி மகுடம் சூட்டப்படும் இந்த சிரசு நாளை உன் கையால் பூ முடித்து தாங்கும் என்றும் உணர்த்துபவளாக அந்த செய்கையை செய்கிறாள் என்று கும்பர் நமக்கு உணர்த்து கிறார். "
"இது ஒரு கோணமா??

அதனால்தான் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை திருத்துபவளாக காட்டினான் கும்பன்.. ஓக்கேயா??"

அந்த பாடல்..
உடைய பூத் வளைத்ததும் இறைத்ததும் உரைத்தும்,
இடைய தேர்தல் இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
பையனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
சிகை தலை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்..

(எல்லோரும் இருக்கும் இடமாதலால், அன்று நமக்காக பூத்து கைப்பற்றுதல், பணத்தை வாரி இறைத்தல், மிரட்ட வேண்டிய ஆளுங்களை மிரட்டி உரைத்தல் போன்ற வேலைகளை செய்து இன்று சாதுவாய், பையன் போல, ஏதும் அறியா சிறுவன் போல நிற்கும் இவனா? அவன். என் அழகன். என்ற ஐயம் நீங்க, தன் நெற்றி, சிகை, முக அலங்காரம் ஆகியவற்றை திருத்துவது போல் என் நெற்றியில் எந்த திலகமும் உன்னால் தான், நான் சூடுவது கல்யாணமாலையாய் இருந்தாலும் உன்னால் தான் என்று குறிப்பாய் உணர்த்தி கடைக் கண்ணால் பார்த்தாள்)

எது எப்படியோ.. மிக தற்காலத்தில் தேர்தல் நடக்கும் அழகான காட்சியையும், கமலாவின் வெட்கம் கலந்த கடைக்கண் பார்வையும் கண்முன் நிறுத்தும் என்ன! ஒரு அழகான பாடல்...

கும்பர் வாழ்க‌.

Wednesday 11 February 2009

G.H-ச்சும், Jail-லும் ஒன்று?

நம்ம சென்ட்ரல் ஜெயிலே இடிச்சிட்டு, அங்கே வேற ஏதாவது கட்ட போறாங்களாம். "வேற ஏதாவது ஒண்ணு" அப்படிங்றதிலெ பல திட்டங்கள் இருக்கும் போல இருக்கு. இரயில் நிலையம் விரிவாக்கம், அரசு மருத்துவமனை என்று. அப்போது எனக்கு சில விடயங்கள் தோன்றியது, மருத்துவமனையும், ஜெயிலும் ஒன்று, ஒரு சில ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளுடன் என்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவு.

Jail: இங்கே யூநிஃபார்ம் உண்டு. வார்டும் உண்டு.
G.H: இங்கேயும் யூநிஃபார்ம் உண்டு. வார்டும் உண்டு.

Jail: இங்கே கொடுக்கும் துட்டுக்கு(லஞ்சம்) ஏற்றவாறு கவனிப்பு உண்டு.
G.H: இங்கேயும் கொடுக்கும் துட்டுக்கு(லஞ்சம்) ஏற்றவாறு கவனிப்பு உண்டு.

Jail: இங்கே ஸ்பெஷலிஸ்ட் உண்டு. ( என்ன? என்பதை சென்று வந்தவர்களை. கேளுங்கள் )
G.H: இங்கேயும் ஸ்பெஷலிஸ்ட் உண்டு. ( என்ன? என்பதை சென்று வந்தவர்களை...!? கேளுங்கள் )

Jail: சின்ன திருடனா உள்ளே போவான், வரும்போது பெரிய பக்கா திருடனா வருவான் இல்லெ பொணமா வருவான்.
G.H: சின்ன வியாதியா போவான், வரும்போது பெரும் வியாதிக்காரணா வருவான் இல்லெ பொணமா வருவான்.

Jail: உடல் சார்ந்த சித்திரவதை மட்டும் இருக்கும்.
G.H: உடல் மற்றும் மனம் சார்ந்த சித்திரவதை இருக்கும்.

Jail: அடைத்து, காவலும் இருக்கும் ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கும்.
G.H:கதவே இருக்காது, காவலும் இருக்காது ஆனாலும் உள்ளே இருப்பவனுக்கு மருந்துக்கும் எதுவும் கிடைக்காது.

Jail:சில நேரம் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் வருவாங்க.
G.H:சில நேரம் டாக்டர் பட்டம் பெறாதவங்களும் வந்திருவாங்க.

Jail: செத்தோம்டா... நம்ம ஆயுசு இங்கேயே. முடிஞ்சிரும், என்று வருவார்கள், சில பேரின் கருணையால் பிழைத்து கொள்வார்கள்.
G.H:அப்பாடா... இங்கே வந்துட்டோம்டா ... இனி பிழைத்து விடலாம் என்று நினைப்பார்கள், சில பேரின் கருணை இன்மையால் செத்து விடுவார்கள்.

last but not the least:
சாதாரண மக்கள், தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா Jail-க்கு வந்து அங்கே பண்ற சித்திரவத்தைக்கு தப்பித்து, ஆறுதலுக்காக G.H. வருவாங்க.சாதாரணமா அரசியல்வாதி தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா G.H வந்தும், இங்கே இருக்கிற சித்திரவதை தாங்காம, ஆறுதலுக்காக Jail-க்கு வருவாங்க.